Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழரின் துன்பியல்கள் ஜூலைகளில் வெற்றிகளும் இல்லாமலில்லை

Featured Replies

ஈழத் தமிழரின் துன்பியல்கள் ஜூலைகளில்

வெற்றிகளும் இல்லாமலில்லை

 

இலங்­கைத் தீவில் ஆட்சி அதி­கா­ரத்­தில் இருப்­ப­வர்­கள் மாற­லாம். கட்­சி­கள் காலத்­துக்கு ஏற்­ற­வாறு கொள்கை நிலைப்­பாட்டை மாற்­றிக் கொள்­ள­லாம். சிங்­கள அர­சுகள் தமி­ழி­னத்­துக்­கான தீர்வை வழங்­கு­வ­தற்குப் பின்­ன­டிக்­க­லாம்.

ஆனா­லும் ஐக்­கி­ய­தே­சி­யக் கட்சி, சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி என்­பவை மாறி­மாறி நாட்டை 70 ஆண்­டு­க­ளாக ஆண்டு கொண்­டி­ருந்த காலப்­ப­கு­தி­க­ளில் தமி­ழி­னத்­துக்­கெ­தி­ராக இடம்பெற்ற படு­கொ­லை­கள், அரா­ஜ­கங்­கள், இன வன்­மு­றை­கள் பெரும்­பா­லும் ஜூலை மாதங்­க­ளி­லேயே நடந்­தே­றி­யி­ருக்­கின்­றன.

ஆயு­தப் போராட்­டம் இடம்­பெற்ற கால­கட்­டத்­தில் உல­ கத் தமி­ழர்­களை மெய் சி­லிர்க்க வைக்­கின்ற பல நிகழ்­வு­க­ளும் ஜூலை மாதங்­க­ளில் அரங்­கேறிய வர­லா­று­க­ளுமுண்டு. பல ஜூலை மாதங்­கள் ஆட்­சி­யா­ளர்­க­ளுக்­கும் ஈழத்­த­மி­ழர்­க­ளுக்­கும் பல திருப்­பங்­க­ளைத் தந்­தி­ருக்­கின்­றன.

தமிழ் இளைஞர்களை சிந்திக்க வைத்த கறுப்பு ஜூலை

1983 ஆம் ஆண்­டின் ஜூலை மாத­மா­னது, விடு­த­லைப் போராட்ட வர­லாற்­றில் புதிய திருப்­பு­மு­னை­யை­ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. தமி­ழர்­க­ளுக்கு பேர­ழிவை ஏற்­ப­டுத்­து­வோம், இந்த அழி­வு­கள் மூலம் தமி­ழீ­ழக் கொள்­கை­யும் தமி­ழர்­க­ளும் அழிந்து போகட்­டும் என்ற முனைப்­போடு பௌத்த சிங்­கள அரசு, கறுப்பு ஜூலை மாதத்­தில் விதைத்த வினை­யின் விளைவை, அன்­றைய அரசு தொடக்­கம் இன்­றைய அர­சு­வரை அனு­ப­வித்­துக் கொண்­டி­ருக்­கின்­றன.

இனப் பிரச்­சி­னை­யும், தமி­ழர் விரோ­தச் செயல்­க­ளும் 1967 ஜூலை­யி­லி­ருந்து 2017 ஜூலை வரை தொடர்­க­தை­தான் என்­பதை உண­ரக் கூடி­ய­வாறு சம்­ப­வங்­கள் அமைந்­து­விட்­டுள்­ளன. சிங்­கள வன்­மு­றை­யா­ளர்­க­ளது வன்­செ­யல்­க­ளால் தமி­ழர்­க­ளின் குருதி இலங்கை மண்­ணில் கொட்­டிக் கொண்­டி­ருக்­கை­யில், அதன் கார­ண­மான விடு­த­லை­யு­ணர்­வும், தமிழ் இளை­ஞர்­கள் மத்­தி­யில் அதி­க­ரித்­துக் கொண்­டி­ருந்­த­மைக்­கும் ஜூலை மாதங்­கள் சாட்­சி­ய­மாக அமைந்து விட்­டுள்­ளன.

1956ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5ஆம் திகதி தமி­ழர்­க­ளது மொழி­யு­ரி­மை­யைப் பறிக்­கும் தனிச்­சிங்­க­ளச் சட்­டம் அப்­போ­தைய தலைமை அமைச்­ச­ரான எஸ்.டபிள்யூ. ஆர்.டி பண்­டா­ர­நா­யக்­கா­வால் நாடா­ளு­மன்­றத்­தில் கொண்­டு­வந்து நிறை­வேற்­றப்­பட்­டது. இதனை எதிர்த்துத் தமி­ழ் அர சுக் கட்­சி­யி­னர் சாத்­வி­கப் போராட் டங்­களை நடத்­தி­யி­ருந்­த­னர். போரா­டிய தமிழ்த் தலை­வர்­க­ளும் தொண்­டர்­க­ளும் சிங்­க­ளக் காடை­யர்­க­ளால் தாக்­கப்­பட்­ட­னர்.

1957 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் திகதி தமி­ழி­னத்­த­லை­வ­ரான தந்­தை­செல்­வ­நா­ய­கத்­துக்­கும் தலைமை அமைச்­ச­ரான பண்­டா­ர­நா­யக்­கா­வுக்­கு­மி­டை­யில் தமிழ்­மொழி உப­யோ­கம் தொடர்­பான ஒப்­பந்­த­மொன்று கைச்­சாத்­தா­னது. ஆனால் அத னைச் சிங்­க­ளக் கடுங்­கோட் பாளர்­க­ளது எதிர்ப்­பால் பண்­டா­ர­நா­ய­கா­வால் நடை­மு­றைப் படுத்த முடி­யாது போயிற்று.

இது மட்­டு­மன்றி அதை­யொட்டி 1958ஆம் ஆண்­டில் நாட்­டில் தமிழ் மக்­க­ளுக்கு எதி­ரான இனக் கல­வ­ர­மும் இடம்­பெற்­றமை வர­லாறு.

1960 ஆம் ஆண்டு ஜூலை­ மா­தம் நாட்­டில் நடை­பெற்ற பொதுத் தேர்­த­லில் வடக்கு கிழக்கு மாகா­ணங்­க­ளில் தமிழ் ­அர­சுக் கட்சி போட்­டி­யிட்­டி­ருந்­தது. 21 தொகு­தி­க­ளில் போட்­டி­யிட்ட தமி­ழ் அர­சுக் கட்சி 16 இடங்­க­ளில் வெற்­றி­பெற்றுச் சாத­னை­ ப­டைத்­தது.

1958ஆம் ஆண்டு பண்­டார நாயக்­கா­வால் சிங்­கள சிறி­சட்­டம் கொண்டு வரப்­பட்­டது. 1961 ஆம் ஆண்டு அவ­சரகாலச் சட் டம் நாடா­ளு­மன்­றத்­தில் நிறை­வேற்­றப்­பட்டு அதன் மூலம் தமிழ்த் தலை­வர்­கள், தொண்­டர்­கள் சிறை­யில் தடுத்­து­வைக்­கப்­பட்­ட­னர்.

1973 இல் தரப்­ப­டுத்­தல் முறை ஸ்ரீமாவோ அர­சி­னால் கொண்­டு­வ­ரப்­பட்டு, தமிழ் மாண­வர்­கள் உயர் கல்­வியை இழக்­கும் நிலை­யேற்­பட்­டது. 1974 ஆம் ஆண்டு யாழ்ப்­பா­ணத்­தில் நடை­பெற்ற உல­கத் த­மி­ழ­ராய்ச்சி மாநாட்­டில் பொலி­ஸார் மின்­கம்­பி­ களை துப்­பாக்­கி­யால் சுட்டு வீழ்த்­தி­ய­தில் ஒன்­பது தமிழ் மக்­கள் துடி­ து­டிக்கப் படு­கொலை செய் யப்­பட்­ட­னர். அது திட்­ட­மிட்டு அர­சின் படை­யி­ன­ரால் நடத்­தப்­பட்­ட­தொன்­றா­கும்.

1975ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் திகதி விடு­த­லைப் புலி­க­ளின் ஆயுத வழித்­தாக்­கு­த­லில் யாழ். மாந­கர முதல் வ­ரான அல்­பி­ரட்­து­ரை­யப்பா சுட்­டுக் கொல்­லப்­பட்­டார். 1971 ஆம் ஆண்டு திரு­கோ­ண­மலை மற்­றும் யாழ்ப்­பா­ணம் ஆகிய இடங்­க­ளில் அர­சுப்­ப­டை­யி­னர் நடத்­திய அரா­ஜக வெறி­யாட்­டத்­தில் 60 இக்கு மேற்­பட்ட தமி­ழர்­கள் கொல்­லப்­பட்­ட­னர்.

1977 பொதுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி சாதனை படைப்பு

1977 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடை­பெற்ற பொதுத் தேர்­த­லில் தமி­ழர் பிரச்­சி­ னைக்கு தீர்­வைப் பெறும் நோக்­கில் ஒன்­று­பட்ட கூட்டு அமைப்­பாக தமி­ழர் விடு­த­லைக் கூட்­டணி தமி­ழீ­ழக் கொள்­கையை முன்­வைத்து வடக்­குக் கிழக்கு மாகா­ணங்­க­ளில் போட்­டி­யிட்­ட­போது 18 தொகு­தி­க­ளில் வெற்றி பெற்று நாட்­டின் இரண்­டா­வது பெரி­ய­கட்­சி­யாக ஆன­தோடு, எதிர்க்­கட்­சித் தலை­மை­யை­யும் கைப்­பற்­றிச் சாதனை படைத்­தி­ருந்­தது.

ஆறில் ஐந்து பெரும்­பான்மைப் பலத்­தைப் பெற்று பத­விக்கு வந்த ஐக்­கிய தேசி­யக் கட்சி, தமி­ழி­னத்­தின் ஒற்­று­மை­யைக் கண்டு வியந்­தது. தமி­ழீ­ழக் கொள்­கைக்கு தமிழ் மக்­க­ளின் ஆதரவு ஆணை­யா­கக் கிடைத்­த­மை ­யால் ஐ.தே.க. அரசு தனது இனக் குரோத வெளிப்­பாட்டை தமி­ழர்­கள் மீது பகி­ரங்­க­மா­கக் காட்­டிக் கொண்­டது.

1977ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் அப் போதைய சிங்கள அரசு நாட்­டில் இனக் கல­வ­ரத்­தைக் கட்­ட­விழ்த்து விட்­டி­ருந் தது. தமி­ழர்­கள் பல நூற்­றுக்­க­ணக்­கா­ன­வர்­கள் படு­கொலை செய்­யப்­பட்­ட­னர். சொத்­துக்­கள் அழிக்கப்­பட்­டன. சிங்கள அரசு இனக்­க­ல­வ­ரத்­தைத் திட்­ட­மிட்டு மேற்­கொண்­ட­மை நிரூபண மாயிற்று.

பயங்கரவாதத் தடைச் சட்டம் படையினருக்கு அழிப்புக்காக வழங்கிய அங்கீகாரம்

தமி­ழி­னத்­தின் ஒற்­று­மை­யும், விடு­த­லைக்­கான போராட்­ட­வே­கம் தமிழ் இளை­ஞர்­க­ளி­டையே வேரூன்­றி­யி­ருந்­த­த­னா­லும், தமிழ்த் தலை­மை­யை­யும், விடு­த­லை­வேட்­கை­ யை­யும் அழிப்­ப­தற்கு பயங்­க­ர­வா­தச் தடைச் சட்­டத்தை ஜே.ஆரின் ஐ.தே.கட்சி அரசு நாடா­ளு­மன்­றத்­தில் கொண்டு வந்து நிறை­வேற்­றிக் கொண்­டது.

தமிழ் இளை­ஞர்­க­ளைத் தேடி அழிப்­ப­தற்கே இந்­தச் சட்­டம் 1977ஆம் ஆண்டு ஜூலை மாதத்­தில் கொண்டு வரப்­பட்­ட­தா­கும். இந்­தச் சட்­டத்­தின் துணை­யு­டன் அரச தலைவர் ஜே.ஆர். அதற்­கான படைப்­பி­ரிவை யாழ்ப்­பா­ணத்­துக்கு அனுப்பி வைத்­தி­ருந்­தார். இளை­ஞர்­களை வீடுவீடா­கத் தேடிச் சென்ற படை­யி­னர், வெளியே இழுத்து வந்து கொடூ­ர­மா­கச் சித்­தி­ர­வதை செய்து சுட்­டுக் கொன்­றி­ருந்­த­னர்.

இந்­தக் கொடிய குரூ­ர­மான காட்­சி­க­ளைக் பார்த்த தமிழ் இளை­ஞர்­கள் பலர் விடு­த­லைக்­குப் போரா­டிய இயக்­கங்­க­ளில் இணைந்து கொண்­ட­னர்.

தமி­ழீழ விடு­த­லை­ இயக்­கம் 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திக­தி­யன்று திரு­நெல்­வேலி தபாற்­பெட்டி சந்­தி­யில் இரவு நேரம் பலா­லி­யி­லி­ருந்து பலாலி வீதி­யில் வந்து கொண்­டி­ருந்த படை­யி­ன­ரின் வாக­னத்­தின் மீது கண்ணி வெடித்­தாக்­கு­தல் நடத்­தி­ய­தில் அந்த இடத்­தில் 13 படை­யி­னர் கொல்­லப்­பட்­ட­னர். அந்­தச் சம்­ப­வம் இலங்கை அர­சைப் பெரும் அதிர்ச்­சிக்கு உள்­ளாக்கி வைத்­தது.

ஜூலை 24ஆம் திக­தி­யன்று விடு­த­லைப்­பு­லி­க­ளது திரு­நெல்­வே­லி­த் தாக்­கு­த­லுக்­குப் பழி­வாங்­கும் நட­வ­டிக்­கை­யா­கப் படை­யி­னர் யாழ்ப்­பா­ணத்­தில் பல இடங்­க­ளில் 51 தமிழ் மக்­களை சுட்­டுக் கொன்­ற­னர். இதே­வேளை அன்­றைய தினம் ெதன் பகுதியில் ஜே.ஆர்.அரசு திட்­ட­மிட்­ட­வாறு சிங்­கள வன் மு­றை­யா­ளர்­களை ஒன்று திரட்டி படை­யி­ன­ரின் ஆத­ர­வு­டன் கொடூ­ர­மான இனக்­க­ல­வ­ரத்தை ஆரம்­பித்து வைத்து ஒரு வாரம் வரை­யில் தமி­ழி­னப்­ப­டு­கொ­லையை அரங்­கேற்­றிக் கொண்­டி­ருந்­தது.

மனி­த­கு­லம் நினைத்­துப் பார்க்க முடி­யாத வகை­யில் தமிழ் மக்­கள் மீது சிங்­க­ளக் காடை­யர்­கள் தாக்­கு­தல்­களை மேற்­கொண்டு பல தமி­ழர்­க­ளைப் படு­கொலை செய்­தும், தமி­ழர்­க­ளது சொத்­துக்­க­ளைச் சூறை­யா­டி­யும் பெரும் சேதம் விளை­வித்­த­னர்.

ஜூலை 30,31ஆம் திக­தி­க­ளில் படிப்­ப­டி­யாக வன்­மு­றை­கள் குறை­யத் தொடங்­கின. அந்த அதர்­மம் நிறைந்த அநா­க­ரிக நிகழ்வு உலக அரங்­கில் சிங்­கள இனத்­துக்கு பெருந் தலைகுனிவை ஏற்­ப­டுத்­தி­யது. இத்­த­கை­ய­தொரு நிகழ்வு வர­லாற்­றில் இனி ஒரு போதும் இடம்­பெ­றாது என சிங்கள அர­சி­யல்­வா­தி­க­ளும் அதி­கா­ரி­க­ளும் அந் தச் சம்பவத்துக்கு சமா தானம் கூறிக் கொண்டனர்.

கறுப்பு ஜூலை கலவரமே அரசுக்கெதிரான போருக்கு வழி வகுத்தது

இலங்­கைக்குக் கறை­ப­டிந்­த­தொரு வர­லா­றாக அந்­தக் கறுப்பு ஜூலை அமைந்து விட்­டது. இதன் பின்­னர் அது வேறு வடி­வங்­க­ளில் தீவி­ர­மா­ன­தாக, நிறு­வ­ன­ம­யப் ப­டுத்­தப்­பட்­ட­தாக, சட்­ட­பூர்­வ­மா­ன­ ஒரு போராக விரி­வாக்­கம் பெற்­றது. தமி­ழர்­க­ளி்ன் தாய­கத்­துக்­குள் போர் திணிக்­கப்­பட்­டது. அது தமி­ழர்­க­ளின் வாழ்­வில் கொடு­மை­யா­ன­தாகத் தொடர்ந்தது. இதற்­கி­டைப்­பட்ட பல ஜூலை மாதங்­கள் இலங்கை அர­சி­யல் வர­லாற்­றில் பல சம்­ப­வங்­களை வர­லா­றா­க­வும் பதிவு செய்­துள்­ளன.

1985 ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் திகதி அர­சுக்­கும் ஆயு­தக் குழுக்­க­ளுக்­கும் இடை­யி­லான முத­லா­வது கட்­டச் சமா­தா­னப் பேச்சு திம்­பு­வில் ஆரம்­ப­மா­கி­யது. 1986 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஜே.ஆர். அர­சு­டன் தமி­ழர் விடு­த­லைக் கூட்­டணி பேச்­சு­வார்த்தை நடத்­தி­யது. ஆனால் அது எது­வித பல­னு­மின்றி ஏமாற்­றத்­தில் முடிந்­தது.

1987 ஜுலை 5ஆம் திக­தியை நெல்­லி­ய­டி­யில் முகா­மிட்­டி­ருந்த இரா­ணு­வத்­தி­ன­ருக்கு ஒரு கறுப்பு ஜூலை­யாக விடு­த­லைப்­பு­லி­கள் ஆக்­கி­யி­ருந்­த­னர். விடு­த­லைப்­பு­லி­க­ளின் கரும்­பு­லி­க­ளால் நடத்­தப்­பட்ட நெல்­லி­யடி முகாம் மீதான தாக்­கு­தல், தற்­கொ­டைப்­போ­ரா­ளி­யால் நிர்­மூ­ல­மா­கப்­பட்ட அதிர்ச்­சிச் செய்தி சிங்­கள அர சைத் தடு­மா­றச் செய்­தது. அத­ னை­ய­டுத்து ஜே.ஆர்.அரசு யாழ்.குடாவை அழிக்க வேண்­டு­மெ­னத்­திட்­டம் தீட்­டி­யது.

1987 ஜூலை மாதம் 27ஆம் திகதி இந்தியத் தலைமை அமைச்சருக்கும், இலங்கை அரச தலைவருக்கும் இடையே இலங்கை இந்­திய ஒப்­பந்­தம் கைச்­சாத்­தி­டப்­பட்­டது. இந்த ஒப்­பந்­தத்­தி­னால் இந்­திய அரசு அமை­திப்­படை என்ற பெய­ரில் இந்­தியப் படை­யி­னரை இலங்­கைக்கு அனுப்­பி­யது. தமிழ் மக்­க­ளின் பாது­காப்­புக் கருதி இந்­திய அமை­திப் ப­டை­யி­னர் வடக்கு கிழக்கு மாகா­ணங்­க­ளில் நிலை கொள்ள வைக்­கப்­பட்­ட­னர் என்று கூறப்­பட்­டா­லும், ஈழத்­த­மி­ழ­ருக்­கான அக்­கி­ர­மப்­ப­டை­யாக வந்து, விடு­த­லைப் புலி­க­ளி­டம் பலத்த அடி வாங்­கிய பின்பு அமை­திப்­படை இந்­தியா திரும்­பிச் சென்­றது.

இலங்­கை­யின் இரண்­டா­வது நிறை­வேற்று அரச தலை­வ­ரான ரண­சிங்க பிரே­ம­தா­ச­வுக்கு எதி­ராக நாடா­ளு­மன்­றத்­தில் குற்­ற­வி­யல் பிரே­ர­ணையொன் றைச் சமர்ப்­பிக்­கும் திட்­டத்தை, தமி­ழி­னத்தை அழிப்­ப­தில் திட்­ட­மிட்­டுச் செயல்­பட்ட, காலம் சென்ற அமைச்­சர்­க­ளான காமி­னி­தி­ச­நா­யக்கா, லலித் அத்­து­லத் முதலி ஆகி­யோர் முன்­வைத்­த­தும் ஒரு ஜூலை மாதத்­தி­லேயே ஆகும்.

1991 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10 ஆம் திகதி ஆனை­யி­றவு முகாம் மீது விடு­த­லைப்­பு­லி­கள் வலிந்த தாக்­கு­த­லைத் தொடுத்­தி­ருந்­த­னர். படை­யி­ன­ரால் தாக்­கு­தலை எதிர்­கொள்ள முடி­யாத நிலை­யில் அதனை முறி­ய­டிப்­ப­ தற்­காக ஜூலை மாதம் 14ஆம் திகதி வெற்­றி­லைக் கேணி கட்­டைக்­காடு பகு­தி­க­ளில் கடல் வழி­யா­கத்­த­ரை­யி­றங்­கிய இரா­ணு­வத்­தி­னர் ஆனை­யி­றவு நோக்கி முன்­ன­கர்வை மேற்­கொண்டு அங்கு செல்­வ­தற்கு 26 நாள்­கள் எடுத்­தி­ருந்­த­னர்.

மரவு வழி இராணுவமாக வளர்ச்சி கண்ட விடுதலைப் புலிகள்
விடு­த­லைப்­பு­லி­கள் இயக்­கம் நடத்தி வந்த வழிமறிப்­புச்­ச­மர் பின்­னர் அவர்­கள் மரபுவழி இரா­ணு­வ­மாக பரி­ண­மிப்­ப­தற்கு வழி­வ­குத்­தி­ருந்­தது. 1993 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25ஆம் திகதி கறுப்பு ஜூலையை நினை­வு­ப­டுத்­து­வ­தற்­காக பத்­தா­வது ஆண்டு நினை­வு­நா­ளன்று மண­லாறு மண்­கிண்­டி­மலை இரா­ணு­வ­மு­காம்­மீது புலி­கள் வலிந்த தாக்­கு­த­லைத் தொடுத்­தி­ருந்­த­னர்.

1996 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18ஆம் திகதி ஓயாத அலை­கள் ஒன்று என்ற பெ­ ய­ ரில் விடு­த­லைப் புலி­கள் முல்­லைத்­தீவு முகாம்­மீது வலிந்த தாக்­கு­த­லொன்றை நடத்தி வெற்­றி கொண்­ட­னர். அப்­போ­தைய அரச தலை­வ­ரான சந்­தி­ரி­கா­வுக்கு அதன்­மூ­லம் அதிர்ச்­சி­யை­யும் வியப்­பை­யும் கொடுத்­தி­ருந்­த­னர்.

இலங்கை வர­லாற்­றில் ஜூலை மாதங்­கள் பல திருப்­பங்­க­ளைத் தந்­துள்ள நிலை­யில், இறு­தி­யில் மகிந்த ஆட்­சி­யா­னது 2006ஆம் ஆண்டு ஜூலை மாதம் திரு­கோ­ண­மலை மாவி­லா­றுப்­ப­கு­தி­யில் போரை ஆரம்­பித்து 2009 மே 18 இல் முள்­ளி ­வாய்க்­கா­லில் போரை முடித்து வைத்­தது. தமி­ழி­னத்தை அழிப்­ப­தற்­கான போரை 22 நாடு­க­ளி­னது ஆத­ர­வோடு இலங்கை அரசு அரங்­கேற்­றி­யி­ருந்­தது.

முன்­னே­றிப்­பாய்ச்­சல் இரா­ணுவ நட­வ­டிக்­கை­மூ­லம் 1995 ஜுலை மாதத்­தில் நவாலி தேவா­ல­யத்­தின் மீது குண்டு வீச்­சுத் தாக்­கு­தலை மேற்­கொண்டு விமா­னப் ப­டை­யி­னர் 147 அப்­பா­வித் தமிழ்­மக்­களை படு­கொலை செய்­தமை, இலங்­கை­யில் 70 ஆண்­டு­கள் கால அர­சி­யல் வர­லாற்­றில் சுழற்சி முறை­யில் வந்து சென்ற பல ஜூலை மாதங்­கள், தமி­ழி­னத்­திற்­கெ­தி­ராக படை­யி­னர் நடத்­திய படு­கொ­லை­க­ளுக்கு சாட்­சி­யங்­க­ளாக அமைந்­துள்­ளன.

http://uthayandaily.com/story/13860.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.