Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெய்ப்பாதுகாவலரின் பிள்ளைகளை தத்தெடுத்தார் நீதிபதி இளஞ்செழியன்

Featured Replies

மெய்ப்பாதுகாவலரின் பிள்ளைகளை தத்தெடுத்தார் நீதிபதி இளஞ்செழியன்

 

 

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த தனது மெய்ப்பாதுகாவலரான சரத் ஹேமச்சந்திரவின் இரு பிள்ளைகளையும் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தத்தெடுத்துக் கொள்வதாக உறுதியளித்துள்ளார்.

ilanchalliyan.jpg

தனது மெய்ப்பாதுகாவலராக 15 வருட காலமாக பணியாற்றிய உப பொலிஸ் பரிசோதகரின் இறுதிக் கிரியை இன்று புதன்கிழமை அவரது சொந்த ஊரான சிலாபத்தில் இடம்பெற்றது.

குறித்த இறுதிக் கிரியையில் கலந்துகொண்டுவிட்டு கருத்து வெளியிடுகையிலேயே யாழ்மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எனது உயிரைக் காப்பாற்றுவதற்காக தன்னுயிரை நீத்த எனது மெய்ப்பாதுகாவலருக்கு செய்யும் கடமையாக நான் இதனை கருதுகிறேன்.

அந்த வகையில், குறித்த இரு பிள்ளைகளையும் தனது சொந்த பிள்ளைகளைப் போல பராமரித்து, அன்பு செலுத்தி, கல்வியை போதித்து, தான் இறக்கும்வரை அவர்களது எதிர்காலத்திற்கு தேவையான சகல விடயங்களையும் ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து செய்வேன் என இதன் நீதிபதி இளஞ்செழியன் மேலும் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/22369

  • தொடங்கியவர்

உயிர் இருக்கும் வரை என்னாலான உதவிகளை ஹேமசந்திரவின் பிள்ளைகளுக்கு வழங்குவேன்

 

 

துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த என்னுடைய மெய்ப்பாதுகாவலர் பொலிஸ் சார்ஜன்ட் ஹேமசந்திரவின் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் , அவர்களது எதிர்கால நலன்  குறித்த விடயங்களில்  என் உயிர் இருக்கும் வரை என்னாலான அனைத்து உதவிகளையும்  வழங்குவேன் என நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். 

இது பற்றி அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

எனக்கு இரண்டு ஆண் குழந்தைகள். ஆனால், இன்று முதல் மூன்று ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் என  நான்கு பிள்ளைகள் எனக்கு. ஹேமச்சந்திர 15 ஆண்டுகள் வவுனியாவில் மிக கொடூரமான யுத்தகாலத்தில் என்னுடைய உயிரை காப்பாற்றியவர். தொடர்ச்சியாக என்னுடனேயே இருந்தார்.   நான் யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம் பெற்று வந்தபோது என்னுடனேயே வரவேண்டும் என்று வந்தார். என்னுயிரை காப்பாற்றி தன்னுயிரை மாய்த்துக்கொண்டவர். 

அவரது இரண்டு பிள்ளைகளும் தந்தையின் அன்புக்கும், பாசத்திற்கும் உரியவர்கள். தந்தையில்லாத மனநிலை எப்படி இருக்கும் என்று நான் அறிவேன். அவரது மகளை   நான் மூன்று வயதில் கண்டேன் அதன் பின் ஐந்து வயதில் கண்டேன். ஆனால், இப்போது சாதாரண தரம் படிக்கின்றாள்.  இன்று முதல் அவர்களுடைய கல்வி அவர்களது எதிர்கால வாழ்க்கையை நான்  கட்டாயம் பார்ப்பேன். இதனை அவர்களது முன்பே சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். 

என்னால் அந்த குழந்தைகளுக்கு ஆறுதல் கூற முடியும். தந்தையின் அரவணைப்பை இழந்திருப்பது எப்படி என்பதையும் என்னால் உணரமுடியும். அவர்களை கரைசேர்ப்பதற்கு உயிருள்ளவரை  உதவி செய்வேன். 

இலங்கை வரலாற்றில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு சுடரேற்றி யாழில், யாழ். பல்கலைக் கழகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்ட நிகழ்வுகள்  நடந்தேறியுள்ளன.   யாழ். கிளிநொச்சி, அம்பாறை, முல்லைத்தீவு, வவுனியா திருமலை, மட்டு. ஆகிய   மாவட்டங்களில்  அஞ்சலி நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளன.  சட்டத்தரணிகளும் தமது எதிர்ப்பை வெளிகாட்டியுள்ளனர் என்றும் கூறினார். 

http://www.virakesari.lk/article/22373

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.