Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீள்குடியேற்ற அமைச்சருடன் கேப்பாப்பிலவு மக்கள் கலந்துரையாடல்

Featured Replies

மீள்குடியேற்ற அமைச்சருடன் கேப்பாப்பிலவு மக்கள் கலந்துரையாடல்

 

 

மீள்குடியேற்ற அமைச்சருடன் கேப்பாப்பிலவு மக்கள் கலந்துரையாடல்
 

முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு மக்கள் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனை அவரது அலுவலகத்தில் இன்று சந்தித்துக் கலந்துரையாடினர்.

கேப்பாப்பிலவில் படையினர் வசமிருந்த 189 ஏக்கர் காணி விடுவிக்கப்படுவதாக கடந்த 19 ஆம் திகதி மீள்குடியேற்ற அமைச்சு அறிவித்திருந்தது.

எனினும், இந்த காணி வௌிமாவட்டங்களைச் சேர்ந்த ஆறு பேருக்கு நடுத்தர தொழில் முயற்சிக்காக வழங்கப்பட்டது எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் காணிகள் அதில் உள்வாங்கப்படவில்லை எனவும் மக்கள் தமது எதிர்ப்பினை வௌியிட்டிருந்தனர்.

குறித்த தினம் காணி விடுவிப்பதில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்திருந்தன.

இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்கு மீள்குடியேற்ற அமைச்சில் இன்று விடேச கூட்டம் இடம்பெற்றது.

இதன்போது, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் , எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், கேப்பாப்பிலவு மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

 

http://newsfirst.lk/tamil/2017/07/மீள்குடியேற்ற-அமைச்சருட/

  • கருத்துக்கள உறவுகள்

இவரு பெரிய நரி.....தமிழனின் பரம எதிரி......

 

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அமைச்சர் காசு கொடுக்க வேண்டும்? இது தமிழ்மக்களின் காணி....அதையும் மீறி இலங்கை அரசுக்குறியது அப்படியிருக்க ஏன் இராணுத்திற்கு பணம் கொடுக்க வேண்டும்?

3 hours ago, alvayan said:

இவரு பெரிய நரி.....தமிழனின் பரம எதிரி......

 

இப்ப நரியாக இருந்தால் தான் கொஞ்ச காணிகளையாவது நாம் பெற்றுகொள்ளலாம்.....புலியாக இருந்து பலவ்ற்றை இழந்துவிட்டோம்.

  • தொடங்கியவர்

கேப்பாப்பிலவு மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பான பிரச்சினைக்கு 10 நாட்களில் உரிய பதில் – இரா.சம்பந்தன்:-

கேப்பாப்பிலவு மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பான பிரச்சினைக்கு இன்னும் 10 நாட்களில் உரிய பதில் வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மீள்குடியேற்ற அமைச்சில் நேற்றையதினம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, கேப்பாப்பிலவு மக்கள் பிரதிநிதிகளிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த காணிகளில் நிலைகொண்டுள்ள ராணுவம் அங்கிருந்து செல்ல இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், அதற்கான நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை கால அவகாசம் வழங்குமாறும் இச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கோரிக்கை விடுத்திருந்தார்.

எனினும், மக்கள் பிரதிநிதிகள் அதனை ஏற்றுக்கொள்ளாத நிலையில், இன்னும் 10 நாட்களில் உரிய பதிலை வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

DM-Sam1.jpg

DM-Sam3-1.jpg

 

DM-Sam2.jpg

DM-Sam.jpg

https://globaltamilnews.net/archives/34423

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, alvayan said:

இவரு பெரிய நரி.....தமிழனின் பரம எதிரி......

 

நரிகளில் எல்லாம் பெரிய நரி 10நாள் தவணை கேட்டிருக்கு. மகிந்தாவின் பெளர்னமித் தவணை முடிய இன்னமும் 10நாள் இருக்கிறது. :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.