Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பனாமா ஊழல் வழக்கு: பிரதமர் பதவியிலிருந்து நவாஷ் ஷெரீப் தகுதி நீக்கம்- பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அதிரடி

Featured Replies

பனாமா ஊழல் வழக்கு: பிரதமர் பதவியிலிருந்து நவாஷ் ஷெரீப் தகுதி நீக்கம்- பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அதிரடி

 

 
nawaz%20sharif

பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப்பை தகுதி நீக்கம் செய்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பனாமா பேப்பர்ஸ் ஊழல் விவகாரத்தில், அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) தீர்பளித்ததுள்ளது.

அதில், பனாமா ஊழல் வழக்கல் பாகிஸ்தான் பிரதமர் நாவாஷ் ஷெரீப் சொத்து குவித்தது நிரூபணமானதால் அவரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் நவாஷ் ஷெரீப் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்ததவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

பனாமா நாட்டின் மொசாக் பொன்சேகா சட்ட நிறுவனத்தின் உதவியுடன், பல்வேறு நாடுகளின் முக்கிய பிரமுகர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் சட்ட விரோதமாக முதலீடு செய்துள்ளனர். இது தொடர்பான ஆவணங்கள், பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபின் பெயரும் இருந்தது. இவர் 1990-களில் பிரதமராக இருந்தபோது லண்டனில் சட்டவிரோதமாக சொத்து வாங்கியதாகவும், சில நிறுவனங்களை அவரது மகன்கள் நிர்வகித்து வருவதாகவும் தகவல் வெளியானது.

இதையடுத்து, நவாஸ் ஷெரீபை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் இம்ரான் கான் உள்ளிட்ட சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கின் விசாரணை பல கட்டமாக நடைபெற்றது வந்தது.

மத்திய புலனாய்வு அமைப்பு (எப்ஐஏ), உளவு அமைப்பு (ஐஎஸ்ஐ), ராணுவ உளவு அமைப்பு உள்ளிட்ட 6 அமைப்புகளின் உயர் அதிகாரிகள் கொண்ட குழுவின் முன்பு ஜூன் 15-ம் தேதி நவாஸ் ஷெரீப் ஆஜராக வேண்டும் என்று விசாரணைக் குழுவின் தலைவர் வாஜித் ஜியா சம்மன் அனுப்பியது.

கடந்த ஜூன் 15-ம் தேதி பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப் நேரில் ஆஜரானார்.

இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் நாவாஷ் ஷெரீபை பிரதமர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து நவாஷ் ஷெரீப் தனது பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

http://tamil.thehindu.com/world/article19377080.ece?homepage=true

  • தொடங்கியவர்

அடாவடி ஆட்சி முடிவுக்கு வந்தது: நவாஸ் தகுதி நீக்கத்தை கொண்டாடும் இம்ரான் கான்

k

கோப்புப் படம்: நவாஷ் ஷெரீப் (இடது), இம்ரான் கான் (வலது)

பாகிஸ்தானில் அடாவடி ஆட்சி முடிவுக்கு வந்தது என்று நவாஸ் ஷெரீப்பின் தகுதி நீக்கம் குறித்து பாகிஸ்தானின் முக்கிய எதிர்கட்சியான இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கருத்து தெரிவித்துள்ளது.

பனாமா ஊழல் வழக்கல் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் சொத்து குவித்தது நிரூபணமானதால் அவரை தகுதி நீக்கம் செய்து இன்று (வெள்ளிக்கிழமை) அந்நாட்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

இதனைத் தொடர்ந்து தனது பதவியை நவாஸ் ஷெரீப் ராஜினாமா செய்துள்ளார்.

பனாமா ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீபுக்கு தொடர்பிருப்பதாக தொடர்ந்து குரல் கொடுத்து அதனை நீதிமன்றத்துக்கு கொண்டு சென்ற இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சிக்கு பாகிஸ்தானின் பிற கட்சிகள் பாராட்டு தெரிவித்துள்ளன.

பனாமா பேப்பர்ஸ் வழக்கில் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், “உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம். பாகிஸ்தானில் அடாவடி ஆட்சி முடிவுக்கு வந்தது நல்லது. உண்மைக்கும் நீதிக்கும் வெற்றி கிடைத்துள்ளது” என்று பதிவிட்டுள்ளது.

தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் துணைத் தலைவர் ஷா மெக்மூத், “இது ஒரு வரலாற்று வெற்றி. இந்த வெற்றி பாகிஸ்தானை மேலும் வலுப்படுத்தும். இனி நாட்டிலுள்ள பயங்கரவாதத்தை அகற்றுவோம். ஆயுதப் படையினர், போலீஸார், சட்ட அமலாக்க துறையினர் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோன் “என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் சமான் கைரா கூறும்போது, ”நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு எதிர்பாரதது. அனைத்து எதிர் கட்சிகளும் இந்த விவகாரத்தில் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் இந்த வழக்கை நீதிமன்றம் வரை கொண்டுச் சென்று போராடிய இம்ரான் கானின் கட்சிகே இந்த வெற்றி சேரும்” என்றார்.

http://tamil.thehindu.com/world/article19377669.ece?homepage=true

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.