Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நியூயார்க் டைம்ஸில் இருந்து விலகினார் ’கறார் விமர்சகர்’ மிச்சிக்கோ காக்குடானி!

Featured Replies

நியூயார்க் டைம்ஸில் இருந்து விலகினார் ’கறார் விமர்சகர்’ மிச்சிக்கோ காக்குடானி!

 

ஆங்கில நாவலாசிரியர்களுக்கு ஒரு நற்செய்தி கிடைத்துள்ளது. ஆம் 'மிச்சிக்கோ காக்குடானி நியூயார்க் டைம்ஸில் இருந்து விலகியுள்ளார்' என்பதே அது.  1955-ம் ஆண்டில் அமெரிக்காவின் கனெக்ட்டிகெட் நகரில் பிறந்த மிச்சி கல்லூரி முடித்தவுடன் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் செய்தியாளராக வேலைக்குச் சேர்ந்தார். அதன் பின்னர் 1977-ல் 'டைம்' பத்திரிக்கையில் சேர்ந்தார். இரண்டாண்டுகள் அங்கு இருந்த மிச்சி 79ல் நியுயார்க் டைம்ஸில் சேர்கிறார். அதன் பின் நேற்று இரவு வரை அதில்தான் வேலை செய்தார். 83-ம் ஆண்டுவரை செய்தியாளராக இருந்த அவர் அதன் பின் புத்தக விமர்சகராக பதவியளிக்கப்பட்டார். 

நியூயார்க் டைம்ஸ் மிச்சி

நிறைய வாசிப்பு இருந்தால் மட்டுமே தேர்ந்த விமர்சகராக எழுத்துலகில் இருக்க முடியும் என்று மிச்சிக்கோவிற்கு தெரியும். அவர் தேடித் தேடி படித்தார். ஒவ்வொரு புத்தகத்துக்குள் வேற்று நாட்டு மொழியில் எழுதப்பட்ட நாவலில் இருந்து ஒரு வரியோ சம்பவமோ மேற்கோள் காட்டப்பட்டிருந்தால், அந்த நாவலையும் ஒரு வரி மேற்கோளுக்காகத் தேடிப்பிடித்து  வாங்கிப் படித்துவிடுவார் மிச்சி. தேவையற்ற பாசாங்கினையும், வாசகனை ஏமாற்றும் மொழிவிளையாட்டுகளையும் தொடர்ந்து தன் விமர்சனங்களில் அம்பலப்படுத்தி வந்தவர் மிச்சி. உண்மையில் மிக உயர்ந்த இடத்தில் இருந்த எழுத்தாளர்கள் கூட மிச்சியின் கைகளின் தன் புத்தகங்கள் சிக்கிவிடக்கூடாது என்றுதான் விரும்பினார்கள். தன் விமர்சனம் என்பது பக்கச்சார்புகள் அற்றதாகவும், எந்தச் சூழலிலும் போற்ற வேண்டிய எழுத்துக்களைத் தவிர்த்துவிட்டு போய்விடக்கூடாது என்று அவர் எண்ணம் கொண்டவராக இருந்தார். ஐயான் மெக் இயான், மேரி கார், மார்டின் அமிஸ், ஸாடி ஸ்மித் போன்ற எழுத்தாளர்களை வாசகர்களுக்கு அடையாளம் காட்டியது அவரின் நியூயார்க் டைம்ஸ் நூல் விமர்சனங்கள். 

"தனிப்பட்ட விரக்தி என்பதை நம்மால் முழுமையாக இழந்து விட முடியாது'  என்று தன் முதல் நாவலில் புக்கர் பரிசு வென்ற இந்திய எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய மேற்கோளைக் கொண்டு அவரின் புதிய நாவலுக்கு தன் விமர்சனத்தைத் துவங்குகிறார்  மிச்சி. அந்த நாவல் வெளியாகி 20 ஆண்டுகள் ஆகிறது. அருந்ததிராயின் வாசகர்கள் கூட அந்த மேற்கோளை நினைவில் வைத்திருப்பார்களா என்பது சந்தேகமே. "இந்தியாவின் குழப்பங்களை லட்சியப்பார்வையில் பார்க்கும் நாவல்" என்று அவரின் இரண்டாவது நாவலான "உச்ச மகிழ்ச்சியின் அரசு" நாவலின் விமர்சனத்துக்குத் தலைப்பிட்டிருந்தார்.

ஒரு மில்லினியம் சுழல் நிகழ்கையில் நூற்றாண்டு கால நவீன இலக்கியத்தின் மீது குறுக்கு வெட்டு பறப்பை மேற்கொண்ட பறவை என்று மிச்சிக்கோ ஓய்வு குறித்த அறிவிப்பில் நியுயார்க் டைம்ஸ் பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது. தொழில்நுட்பத்தினால் மாறும் நிலப்பரப்பும் அது வாசிப்பில் ஏற்படுத்தும் விளைவுகளையும் முன்னுணர்ந்தே இருந்தார் என்றும் அதனால்தான் போர் இயல் வரலாற்றில் புனைவின் தாக்கத்தை உட்புகுத்தியது என்று செப்டம்பர் 11 தாக்குதலைக் கூறினார் என்று அது தெரிவித்துள்ளது.  

மிச்சி தன் ஓய்வு குறித்து சொல்லும் போது " இன்னும் தீவிர அரசியலையும் இலக்கியத்தையும் எழுத வேண்டியிருப்பதால் இந்த ஓய்வு எனக்குத் தேவையாக இருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார். என் நாவல் குறித்து விமர்சனம் செய்ய இருக்கிறார் என்கிற செய்தி எட்டிய போது பயந்தாலும், அதன் மூலம் அற்புதமான வாசகர்களை நான் பெற்றேன் என்று 'காபூம்' நாவலை எழுதிய முன்னாள் போர்வீரர் மேட் காலேக்கர் தெரிவித்துள்ளார். 

எழுத்தாளர் ஜொனதன் ப்ரான்ஸன் மிச்சி குறித்து பல்கலைக்கழக மாணவர்களிடையே நடந்த உரையாடலில் "நியூயார்க் நகரத்தின் முட்டாள்" என்று குறிப்பிட்டார். அந்த அளவுக்கு பிரான்ஸனின் நாவலை விமர்சனம் செய்திருந்தார். அவரின் ஒட்டு மொத்த விமர்சன வாழ்க்கையில் மிச்சி அதிகம் கிழித்தது 'குமாரனுக்கான சுவிசேஷம்'  என்கிற நாவலைத்தான். எழுத்தாளர் நார்மன் மெயிலரின் நாவலான இது ஒரு பக்கம் சிலாகிக்கப்பட்டு வந்த வேளை  அடி நொறுக்கிவிட்டார் மிச்சி. "அவருக்கு வெள்ளை இன எழுத்தாளர்களைப் பிடிக்காது. அவர் ஒரு ஆசியர் மேலும் பெண்ணியவாதி இந்தக்காரணங்கள் போதாதா என்னை வெறுப்பதற்கு" என்று மெயிலர் பேட்டியெல்லாம் கொடுத்தார்.  நான் ஒடுக்கப்படுபவர்களின் பக்கம் நிற்கிறேன் என்று என்னை விமர்சிப்பவரே சொல்வதை அங்கிகாரமாக எடுத்துக்கொள்கிறேன் என்று பதில் சொன்னார் மிச்சி. 

 

ஆப்ரிக்க பெண் எழுத்தாளர்கள்,பின் காலனிய சூழலில் எழுத வந்த எழுத்தாளர்களின் எழுத்துக்கள் எனத் தேடித்தேடி ஆதரித்தது மிச்சி என்கிற பட்டாம்பூச்சி. இந்த விலகலின் மூலம் நியுயார்க் டைம்ஸ் என்கிற வீட்டை விட்டு வெளியே வந்துள்ளது ஆனால் அதற்குப் பரந்து விரிந்த சுதந்திர வானம் காத்திருக்கிறது.

http://www.vikatan.com/news/india/97194-michiko-kakutani-resigns-from-new-york-times.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.