Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ தனியரசை அங்கீகரிக்க புலம் பெயர் தமிழர்கள் குரல் கொடுக்க வேண்டும் - ஜெயானந்தமூர்த்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ தனியரசை அங்கீகரிக்க புலம் பெயர் தமிழர்கள் குரல் கொடுக்க வேண்டும் - ஜெயானந்தமூர்த்தி

போர் நிறுத்த உடன்படிக்கை ஐந்து வருடத்தை நிறைவு செய்துள்ள இந்நிலையில் தமிழீழ தனியரசு அமைப்பதற்கான அங்கீகாரத்தை சர்வதேச சமுகம் வழங்க முன்வர வேண்டும். அதற்காக புலம்பெயர்ந்து வாழும் மக்கள் குரல் கொடுக்க வேண்டும் என தமிழ்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி புலம்பெயர்ந்து வாழும் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலண்டன் லூசியம் பகுதியில் புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்காக நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் உரையாற்றும்போது மேலும் தெரிவித்துள்ளதாவது தமிழ் மக்களின் உரிமைக்காக விடுதலைப்புலிகள் இரத்தம் சிந்திப்போராடி வருகின்றனர். அவர்கள் மாத்திரமே தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளாக விடுதலை புலிகள் உள்ள நிலையில் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் பேச்சு வார்த்தையின் மூலம் தீர்வைப் பெறும் வகையில் போர் நிறுத்த உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது. ஆனால் அந்த உடன்படிக்கையின் கீழ் நடைபெற்ற எந்தவொரு பேச்சு வார்த்தையோ அல்லது அதன் மூலம் காணப்பட்ட உடன்பாடுகளையோ சிறிலங்கா அரசு நிறைவேற்றாமல் தட்டிக் கழித்து வந்தது. அது மாத்திரமின்றி பேச்சு வார்த்தைக்கு அனுசரணையாளர்களாக இருந்து வந்த நோர்வே மற்றும் சர்வதேச சமுகம் என்பன சிறிலங்கா அரசுக்கு எந்தவித அழுத்தத்தையும் கொடுக்கவில்லை. இவ்வாறு அழுத்தம் எதுவும் கொடுக்காது இத்தரப்புகள் பொறுமையாக இருந்து வந்ததாலேயே சிறிலங்கா அரசு கடந்த காலங்களில் தமிழ் மக்கள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டதுடன் மிக மோசமான மனித உரிமை மீறல்களையும் செய்து வந்துள்ளது.

சிறிலங்கா அரசு பல ஆத்திரமூட்டும் சம்பவங்களையும் ஆக்கிரமிப்புப் போரையும் செய்து வந்தபோதிலும் விடுதலைப்புலிகள் சர்வதேச சமுகத்திற்கு மதிப்புக் கொடுத்து எந்தவித தாக்குதல்களையும் நடத்தாது இருந்து வந்தனர். இந்த பொறுமையை சிறிலங்கா அரசோ அன்றில் சர்வதேச சமுகமோ குறைவாக எடைபோட்டுவிடக்கூடாது. சிறிலங்கா அரசின் இராணுவ அடக்குமுறை மற்றும் மனித உரிமை மீறல்களால் சமாதானக் காலத்தில் மாத்திரம் நாலாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர். ஒரு இலட்சம் வரையிலான மக்கள் அகதிகளாயியுள்ளனர். இந்நிலையில் தமிழ் மக்கள் பொறுமையிழந்தவர்களாகவும் நோர்வே மற்றும் சர்வதேசத்தில் நம்பிக்கையிழந்தவர்களாகவும் உள்ளனர்.

எமது போராட்டம் நீண்டகால வரலாற்றைக் கொண்டது. பலர் உயிர்த்தியாகம் செய்த போராட்டம். பல கரடுமுரடான பாதையைக் கடந்து வந்தபோராட்டம். இன்று அது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. அதனால் இன்று தாயகத்தில் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ள நிலையில் புலம் பெயர்ந்து வாழும் மக்களும் ஓரணியில் திரண்டுள்ளனர். எனினும் நாம் எமது உரிமையை வென்றெடுக்க வேண்டுமானால் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.

தமிழீழத்திற்கான ஆணையை மக்கள் 1976 ஆம் ஆண்டில் மாத்திரமின்றி 2004 ஆம் ஆண்டில் இரண்டாவது தடவையாகவும் வழங்கியுள்ளனர். 2004 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 2 ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் தேசியத் தலைமை, தமிழ் தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித் தமிழீழம் போன்றவற்றை தமி;ழ் மக்கள் ஏற்று வாக்களிக்குமாறு கேட்டதன் பேரில் வடகிழக்கில் மக்கள் அதனை ஏற்று 96.4 வீதம் வாக்களித்து தமிழீழத்திற்கான ஆணையை அவர்கள் வழங்கியிருந்தனர். எனவே இதனை சர்வதேச சமுகம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனினும் பேச்சு வார்த்தையின் மூலம் தீர்வைப் பெறும் வகையில் விடுதலைப்புலிகள் போர் நிறுத்த உடன்படிக்கை செய்திருந்தபோதிலும் கடந்த காலங்களில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களுக்கு சிறிலங்கா ஆட்சியாளர்கள் செய்த கைங்கரியமே இவ்வுடன்படிக்கைக்கும் இடம் பெற்றுள்ளது.

எனினும் விடுதலைப்புலிகள் பொறுமை காத்தே வந்துள்ளனர். எனினும் தேசியத் தலைவர் கடந்த வருட தனது மாவீரர் தின உரையில் கூறியுள்ளவாறு தமிழீழ தனியரவு அமைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பதையும் அதற்கு சர்வதேச சமுகம் அங்கீகாரம் வழங்க வேண்டும் எனவும் கூறியிருப்பதை நாம் கவனிக்க வேண்டும். அவ்வாறான நிலையே இந்த வருடத்தில் ஏற்படப்போவதையும் பாரிய மாற்றங்கள் எமது தாயகத்தில் இடம் பெறப்போவதையும் நாம் காணலாம்.

எனினும் புலம்பெயர்ந்து வாழும் மக்களாகிய நீங்கள் எதிர்வரும் காலங்களில் எமது உரிமைக்காகவும் தமிழீழ தனியரசுக்காகவும் அதற்கான அங்கீகாரத்திற்காகவும் சர்வதேச சமுகத்திற்கு குரல் கொடுக்க வேண்டும் என்று nஐயானந்தமூர்த்தி எம்.பி. தெரிவித்துள்ளார்.

-பதிவு

குரள்வளைகள் நசுக்கப்பட்டுக்கொண்டிருக்க

  • கருத்துக்கள உறவுகள்

'' போர் நிறுத்த உடன்படிக்கை ஐந்து வருடத்தை நிறைவு செய்துள்ள இந்நிலையில் தமிழீழ தனியரசு அமைப்பதற்கான அங்கீகாரத்தை சர்வதேச சமுகம் வழங்க முன்வர வேண்டும். அதற்காக புலம்பெயர்ந்து வாழும் மக்கள் குரல் கொடுக்க வேண்டும்"

மதிப்பிற்குரிய ஜெயானந்தமூர்த்தி அவர்கள் இன்று லண்டனின் இருந்து முக்கியமான அறைகூவல் ஒன்றை விடுத்திருக்கிறார். இந்த அறைகூவலுக்கும் இது வரைகாலமும் மற்றவர்களினால் விடுக்கப்பட்ட அறை கூவலுக்கும் நிறைய வித்தியாசங்களும் முக்கியத்துவமும் இருக்கின்றன என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

இவரின் இன்றைய இந்த கூற்றுக்கும் விடுதலைப்புலிகளினால் இன்று மும்முரமாகவும் அமைதியாகவும் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசியல் நகர்த்தல்களிற்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருப்பதை எல்லோரினாலும் இலகுவாக அறியக்கூடியாதாக இருக்கும் என்பதில் சந்தேகமேதுமில்லை.

ஆகவே இதுவரை காலமும் புலம்பெயர்ந்து வாழும் எங்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களிற்கும் இவரால் அறைகூவப்பட்ட இந்த போராட்டத்திற்கும் இடையில் நிறைய வித்தியாசம் இருக்கின்றன. நாம் பலகாலமாக எடுத்து வந்த முயற்சிகள் வெற்றியளிக்கவேண்டுமென்றால் இப்பொழுது எங்களால் மேற்கொள்ளப்படவிருக்கும் இந்த போராட்டத்தில் தான் தங்கியிருக்கிறது.

இதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து நாங்க வசிக்கும் நாடுகளில் இருக்கும் எங்கள் அமைப்பின் பொறுப்பாளர்களுடன் தொடர்பு கொண்டு வேகமாக செயலில் இறங்கவேனும் என்று கூறி தற்காலிகமாக விடைபெறுகிறேன்.

Edited by Valvai Mainthan

தமிழ் மக்கள் செறிந்து வாழும் லண்டன் நகரில் புலிகளினை தடை செய்ய காரணமாக இருந்த சிங்கள படித்த கூட்டம் அவர்களுக்கிடப்பட்ட கட்டளைகளுக்கமைய விவேகமாக தொழிற்பட்டதால் அவர்களுக்கு வெற்றி கிடைத்தது. அங்கு உள்ள பெரும்பாலான மக்கள் எல்லோரும் தமிழீழ மக்களுக்காக தோள்நின்று உழைப்பவர்கள். அந்த குகைக்குள் இருந்து கொண்டே தடையினை எதிர்க்க முடியாமல் போனது ஏன்? அப்ப இங்க அமெரிக்காவின் சிங்களமக்களின் சார்புகொள்கை கைகொடுக்கின்றது. நாம் என்ன அமெரிக்காவின் ஏகாதியபத்திற்காகவாகவா போராட தொடங்கினோம். தெரிந்தோ தெரியாமலோ செப் இன பின் போராடும், ஆயுதவழிகளில் நம்பிக்கை கொண்ட அத்தனை பேரையும் இவர்கள் பயங்கரவாதிகளாக கருதிய ஒரு காரணத்தின் நிமித்தம் நாங்களும் மாட்டுப்பட்டோம். ஆகவே இந்த நேரத்தில் சதுரங்கப்போட்டி நடைபெருகிறது. சிங்களவன் தான் நினைச்சதினை சாதித்துக்கொண்டு வீறு நடை போடுகின்றான். இப்போது அவுஸ்திரேலிய அரச்சாங்கம் அகதிகளை இரங்கவிடாது கச்சிதமாக திருப்பி கொண்டு போகிறது. ஆக எல்லோரும் திறமையாக வேலை செய்யும் போது நாங்கள் மட்டும் திரமையில்லாமலா இவ்வளவு காலமும் இந்த சுழற்காற்றினூடு கப்பல் ஓட்டினோம். எங்கே எங்கள் வியூகங்கள். ஏன் இந்த பிளேன் இரங்கும் போது செல் அடிக்கப்பட்டது. ஆகவே புலிகள் தெரியாமல் செய்தவர்கள் என்று சொல்வதினை ஒருவரும் எனி கேட்கப்போவதில்லை. சும்மா இருந்த சரத்தினை போட யாரோ பிளான் பண்ணி இன்று ஆமி வீறு நடை போடுகின்ரது. அப்படி இது ஒரு வம்பில மாட்டிவிடும் செயல் என்றால் யாரும் ஏற்றுக்கொள்வார்களா. இதுவே காணும் எனி உலக நாடுகள் புலிகளினை, தமிழர்கள் எல்லோரும் பயங்கரவாதிகள் என்று சொல்ல. ஆகவே நாங்கள் சொல்லப்போவது வேறு விதமாக இருக்கவேன்டும். அப்படியென்ரால் தான் அங்கு இருக்கும் அப்பாவி தமிழருக்கு ஏதாவது விடிவினை ஏற்படுத்திக்கொடுக்க முடியும். இங்க யாருக்கோ ச்ண்டை பிடித்து சன்ம் சாகோணும் எண்று விரும்புறீனம். ஆனா தனிய அடிபடாம அமெரிக்காவுடன் செர்ந்து நாசப்படுத்தப்போறான். ஏன் இதுகளை பெரிது படுத்தி நாம் வீதிகளில் இறங்கக்கூடாது. ஆக இளம்பிரையன் மறுப்பறிக்கை விட்டால் ஒருவரும் கவனிக்க போரதில்லை. நாம் தமிழர்கள் இந்த அரசின் நரி விளயாட்டுகலை வெளிநாடுகளில் தெரியப்படுத்தி அங்குள்ல உண்மையான் போர்சூழ் நிலைகளை தெட்டத்திளிவாக அமெரிக்க மக்களின் கவனத்திற்கு கொண்டு வரவேன்டிய கட்டாயத்தில் நாங்கள் எல்லோரும் இன்று உள்ளோம். அல்லாவிடில் எல்லோரும் பெயரளவில் பயங்கரவாதியாக வேன்டியதுதான். இருக்கிர யாழ் சன்மும் தமிழ கதைப்பதையே விட்டுவிடுங்கள். இருந்து பாருங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் மக்கள் செறிந்து வாழும் லண்டன் நகரில் புலிகளினை தடை செய்ய காரணமாக இருந்த சிங்கள படித்த கூட்டம் அவர்களுக்கிடப்பட்ட கட்டளைகளுக்கமைய விவேகமாக தொழிற்பட்டதால் அவர்களுக்கு வெற்றி கிடைத்தது. அங்கு உள்ள பெரும்பாலான மக்கள் எல்லோரும் தமிழீழ மக்களுக்காக தோள்நின்று உழைப்பவர்கள். அந்த குகைக்குள் இருந்து கொண்டே தடையினை எதிர்க்க முடியாமல் போனது ஏன்? அப்ப இங்க அமெரிக்காவின் சிங்களமக்களின் சார்புகொள்கை கைகொடுக்கின்றது. நாம் என்ன அமெரிக்காவின் ஏகாதியபத்திற்காகவாகவா போராட தொடங்கினோம். தெரிந்தோ தெரியாமலோ செப் இன பின் போராடும், ஆயுதவழிகளில் நம்பிக்கை கொண்ட அத்தனை பேரையும் இவர்கள் பயங்கரவாதிகளாக கருதிய ஒரு காரணத்தின் நிமித்தம் நாங்களும் மாட்டுப்பட்டோம். ஆகவே இந்த நேரத்தில் சதுரங்கப்போட்டி நடைபெருகிறது. சிங்களவன் தான் நினைச்சதினை சாதித்துக்கொண்டு வீறு நடை போடுகின்றான். இப்போது அவுஸ்திரேலிய அரச்சாங்கம் அகதிகளை இரங்கவிடாது கச்சிதமாக திருப்பி கொண்டு போகிறது. ஆக எல்லோரும் திறமையாக வேலை செய்யும் போது நாங்கள் மட்டும் திரமையில்லாமலா இவ்வளவு காலமும் இந்த சுழற்காற்றினூடு கப்பல் ஓட்டினோம். எங்கே எங்கள் வியூகங்கள். ஏன் இந்த பிளேன் இரங்கும் போது செல் அடிக்கப்பட்டது. ஆகவே புலிகள் தெரியாமல் செய்தவர்கள் என்று சொல்வதினை ஒருவரும் எனி கேட்கப்போவதில்லை. சும்மா இருந்த சரத்தினை போட யாரோ பிளான் பண்ணி இன்று ஆமி வீறு நடை போடுகின்ரது. அப்படி இது ஒரு வம்பில மாட்டிவிடும் செயல் என்றால் யாரும் ஏற்றுக்கொள்வார்களா. இதுவே காணும் எனி உலக நாடுகள் புலிகளினை, தமிழர்கள் எல்லோரும் பயங்கரவாதிகள் என்று சொல்ல. ஆகவே நாங்கள் சொல்லப்போவது வேறு விதமாக இருக்கவேன்டும். அப்படியென்ரால் தான் அங்கு இருக்கும் அப்பாவி தமிழருக்கு ஏதாவது விடிவினை ஏற்படுத்திக்கொடுக்க முடியும். இங்க யாருக்கோ ச்ண்டை பிடித்து சன்ம் சாகோணும் எண்று விரும்புறீனம். ஆனா தனிய அடிபடாம அமெரிக்காவுடன் செர்ந்து நாசப்படுத்தப்போறான். ஏன் இதுகளை பெரிது படுத்தி நாம் வீதிகளில் இறங்கக்கூடாது. ஆக இளம்பிரையன் மறுப்பறிக்கை விட்டால் ஒருவரும் கவனிக்க போரதில்லை. நாம் தமிழர்கள் இந்த அரசின் நரி விளயாட்டுகலை வெளிநாடுகளில் தெரியப்படுத்தி அங்குள்ல உண்மையான் போர்சூழ் நிலைகளை தெட்டத்திளிவாக அமெரிக்க மக்களின் கவனத்திற்கு கொண்டு வரவேன்டிய கட்டாயத்தில் நாங்கள் எல்லோரும் இன்று உள்ளோம். அல்லாவிடில் எல்லோரும் பெயரளவில் பயங்கரவாதியாக வேன்டியதுதான். இருக்கிர யாழ் சன்மும் தமிழ கதைப்பதையே விட்டுவிடுங்கள். இருந்து பாருங்கள்.

முதலில் நீர் எமக்கு புரியும்படி, தமிழ் எழுத காற்றுக்கொள்ளும் பின்னர் அமெரிக்க மக்களுக்கு புரிய வைக்கலாம். :o:o:D

அப்படியே அதுக்கென்ன செய்யுரோமுங்க. ஆனா ஒன்று உங்களுக்கு தெரியுமா தமிழீழம் ஒன்றே உருவாகிறதுக்கு ஒரு படிச்ச தமிழனுக்கும் விருப்பமில்லை. அனேகமான பெரிய காசுள்ளவர்கள் எல்லாம் சிங்கள அரசுக்குத்தான் சப்போட்டு. சும்மா இந்த அரைகுரை வெற்காடுகள் சும்மா வேலை வெட்டியில்லை படிச்ச தமிழனைக்கண்டு, காசுள்ள தமிழனைக்கண்டு அவையை விளுத்தி ஆட்சி செய்யலாம் எண்டு புறப்பட்டவை. இப்ப சத்தியத்திற்கு முன்னால சாட்சி சொல்ல ஏலாம தடுமாறிறீனம். பின்ன அந்த காலத்தில சென். ஜோன்ஸ் அதிபரை போட்ட ஆள் என்ன ஜாதி என்டு பெயரோட சொல்ல முடியும். ஆனாலும் மோகனுக்கு பெயர் சொல்லி இங்க எழுதினா பிடிக்காது. அதனால் விட்டுவிடுகிறேன். நேற்ரு இரவு ஒரு பதில் ஒண்டு உமக்கு எழுதினனான். அதை உவை எடுத்துப்போட்டீனம். அதில சாதி ஏன் உருவானது ஏன் உம்மைப்போன்றோர் இந்த உலகத்திற்கு கஸ்டப்பட்ட குடும்பத்தில பிரந்து அவ்திப்பட வேணும் எண்டு எழுதினனான். எனக்கு உங்க கன நல்ல சன்ங்கள் இருக்கிறதும் தெரியும் ஆகவே அவர்களை நோகப்படுத்த விரும்பவில்லை. நீர் வந்தீர் உமது கருத்தினை எழுதினீர் என்று இருந்தா நானும் அப்படி இருக்கலாம் தானே. பேந்து ஏன் சீண்டுறியள்.பறநாகம் பாய்ந்து பறந்து கொத்தும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படியே அதுக்கென்ன செய்யுரோமுங்க. ஆனா ஒன்று உங்களுக்கு தெரியுமா தமிழீழம் ஒன்றே உருவாகிறதுக்கு ஒரு படிச்ச தமிழனுக்கும் விருப்பமில்லை. அனேகமான பெரிய காசுள்ளவர்கள் எல்லாம் சிங்கள அரசுக்குத்தான் சப்போட்டு. சும்மா இந்த அரைகுரை வெற்காடுகள் சும்மா வேலை வெட்டியில்லை படிச்ச தமிழனைக்கண்டு, காசுள்ள தமிழனைக்கண்டு அவையை விளுத்தி ஆட்சி செய்யலாம் எண்டு புறப்பட்டவை. இப்ப சத்தியத்திற்கு முன்னால சாட்சி சொல்ல ஏலாம தடுமாறிறீனம். பின்ன அந்த காலத்தில சென். ஜோன்ஸ் அதிபரை போட்ட ஆள் என்ன ஜாதி என்டு பெயரோட சொல்ல முடியும். ஆனாலும் மோகனுக்கு பெயர் சொல்லி இங்க எழுதினா பிடிக்காது. அதனால் விட்டுவிடுகிறேன். நேற்ரு இரவு ஒரு பதில் ஒண்டு உமக்கு எழுதினனான். அதை உவை எடுத்துப்போட்டீனம். அதில சாதி ஏன் உருவானது ஏன் உம்மைப்போன்றோர் இந்த உலகத்திற்கு கஸ்டப்பட்ட குடும்பத்தில பிரந்து அவ்திப்பட வேணும் எண்டு எழுதினனான். எனக்கு உங்க கன நல்ல சன்ங்கள் இருக்கிறதும் தெரியும் ஆகவே அவர்களை நோகப்படுத்த விரும்பவில்லை. நீர் வந்தீர் உமது கருத்தினை எழுதினீர் என்று இருந்தா நானும் அப்படி இருக்கலாம் தானே. பேந்து ஏன் சீண்டுறியள்.பறநாகம் பாய்ந்து பறந்து கொத்தும்

தமிழீழம் அமைவது படித்தவர்களுக்கு விருப்பமில்லை என்கிறீர் படித்த ஆட்கள் எல்லாரையும் நீர் என்ன கொன்றாக் எடுத்து இருக்கிறீரோ அவர்கள் சார்பாக கருத்து கூற? உமக்கு விருப்பமில்லை என்று தெரிகிறது, உமது தமிழை பார்த்தால் நீர் படிதவர் போல் தெரியவில்லையே :unsure::o:o சப்போட் பண்ணின பெரிய காசுக்காறர் எல்லாரையும்தானே 83இல் கொழும்பில் போட்டு கொழுத்திப்போட்டாங்கள். நீர் காசுக்காறர் என்று சொல்வது கோழிமுட்டை களவெடுத்த டக்கிளசையும், தமிழரின்ர காசை சுத்திக்கொண்டு ஓடின கரிநாயையும் என்றால் அது பற்றி சொல்ல ஒன்றுமில்லை:angry:. இந்த அரைகுறை வெக்காடுகள்தான் ஈழத்தில் இன்னமும் தமிழனின் இருப்பை உறுதிப்படுத்துகிறார்கள். :rolleyes:

எமது போராட்டம் சத்தியத்தின்பாதையில் நடைபெறும்போது நாம் எதுக்கப்பு சத்தியத்துக்கு சாட்சி சொல்லவேண்டும், சொல்லவேண்டியவர்கள் எல்லாம் போராட வெளிக்கிட்டி சத்தியத்தின் பாதையில் இருந்து விலகிய ஒட்டுக்குழுக்களும் நீரும்தான். :rolleyes::unsure::unsure:

சென்ஜோன்ஸ் அதிபர் என்னசெய்தார் என்று இங்கு பக்கம் பக்கமாக விவாதிக்கப்பட்டு இருக்கிறது, உமக்கு உண்மையை அறியும் ஆவல் இருந்தாபடித்து பாரும்.

நீர் எழுதிய அரிய கருத்தை என்னால் படிக்கமுடியவில்லை, ஒன்றைமட்டும் புரிந்து கொள்ளும் அழுக்குகள் யாழ்களத்தில் அனுமதிக்கப்டுவதில்லை என்று :o:o:o

பறநாகம் பறநாகம் எண்டுறீரே, உண்மையில் நீர் பறநாகத்தை பார்த்து இருக்கிறீரோ? பார்க்காத ஒன்றுக்கு நாம் பயப்படுவதில்லை. :P :P :P

Edited by சித்தன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.