Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுஸ்திரேலியா – மனஸ் தீவில் இடம்பெற்ற வேறுவேறு வன்முறைசம்பவங்களில் மூன்று அகதிகள் காயம்

Featured Replies

அவுஸ்திரேலியா – மனஸ் தீவில் இடம்பெற்ற வேறுவேறு வன்முறைசம்பவங்களில் மூன்று அகதிகள் காயம்

 

Manas.jpg
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மனஸ் தீவில் இடம்பெற்ற வன்முறைசம்பவங்களில் மூன்று அகதிகள் காயமடைந்துள்ளனர். வார இறுதியில் இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவுஸ்திரேலியாவினால் பலவந்தமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள  அகதிகளே இவ்வாறு தாக்குதலிற்கு உள்ளாகியுள்ளனர். மனஸ்தீவின் நகரப்பகுதியில் சூடானை சேர்ந்த அகதி தங்கியிருந்த பகுதிக்குள் நுழைந்த நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் அந்த அகதியின் காலில் கடும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற கொள்ளை சம்பவத்தின் போது ஈரானிய அகதியின் கையை நபர் ஒருவர்  வெட்டி காயப்படுத்தியுள்ளார். ஈரானிய அகதிக்கு ஏற்பட்டள்ள மோசமான காயங்களை காண்பிக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன

அது பழிவாங்கும் தாக்குதல் போன்று காணப்பட்டது  எனவும் அவர்கள் அந்த அகதியை கொல்ல முயற்சித்தனர் எனவும்  சம்பவத்தை நேரில் பார்த்த மற்றுமொரு அகதி தெரிவித்துள்ளார்.

அதேவேளை ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தானை சேர்ந்த அகதி ஒருவர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ள இனந்தெரியாத நபர்கள் அவரிடமிருந்து பணத்தை திருடிச்சென்றுள்ளனர்.

கடந்த சில நாட்களில் இடம்பெற்றுள்ள இந்த சம்பவங்கள் காரணமாக தங்களை மனஸ்தீவு முகாமிலிருந்து தொலைதூரத்தில் உள்ள முகாமிற்கு மாற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் முயற்சியை அகதிகள் கடுமையாக எதிர்க்ககூடும் என அகதிகளின் நலன் சார்ந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.

http://globaltamilnews.net/archives/34927

  • தொடங்கியவர்

மனஸ் தீவு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

 
auss33.jpg

அவுஸ்திரேலியாவினால் மனஸ் தீவு  முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் தங்களை அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்

சுமார் 800ற்கும் மேற்பட்டவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள மனஸ்தீவு முகாமின் சில பகுதிகளிற்கான  மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகத்தினை அதிகாரிகள் நிறுத்தியுள்ள நிலையிலேயே  அகதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

மனஸ்தீவு முகாமின் பாதுகாப்பு வேலிகளிற்கு வெளியே எங்களிற்கு பாதுகாப்பில்லை அதேவேளை அவுஸ்திரேலியாவின் குடிவரவு துறையினர் முகாமிற்குள் நாங்கள் வாழ முடியாத சூழலை ஏற்படுத்தி வருகின்றனர் 2013 முதல் முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள குர்திஸ் பத்திரிகையாளர் ஓருவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் எங்கள் மனித உரிமைகளிற்காகவும் அகதிகளிற்கு பாதுகாப்பை அளிப்பது என்ற தனது  உறுதிமொழியை அவுஸ்திரேலியா நிறைவேற்றவேண்டும் என கோரியுமே நாங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அகதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதை காண்பிக்கும் வீடியோக்களும் வெளியாகியுள்ளன அந்த வீடியோக்களில் மீண்டும் மின்சாரத்தை வழங்குங்கள்,எங்களை இங்கே கொலைசெய்யாதீர்கள் என அகதிகள் கூச்சலிடுவதை அவதானிக்க முடிகின்றது.

manus.jpg

manus2.jpg

http://globaltamilnews.net/archives/35203

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.