Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பார்சிலோனாவில் இருந்து வெளியேறும் நெய்மருக்கு மெஸ்சி பிரியாவிடை செய்தி

Featured Replies

பார்சிலோனாவில் இருந்து வெளியேறும் நெய்மருக்கு மெஸ்சி பிரியாவிடை செய்தி

 

பார்சிலோனாவில் இருந்து வெளியேறும் நெய்மருக்கு, மெஸ்சி வீடியோ மூலம் பிரியாவிடை செய்தி அனுப்பியுள்ளார்.

 
பார்சிலோனாவில் இருந்து வெளியேறும் நெய்மருக்கு மெஸ்சி பிரியாவிடை செய்தி
 
பிரேசில் நாட்டின் தலைசிறந்த கால்பந்து வீரராக திகழ்ந்து வருபவர் நெய்மர். இவரை கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார். மெஸ்சி, சுவாரஸ் மற்றும் நெய்மர் ஆகியோரின் சிறந்த ஆட்டத்தால் பார்சிலோனா வெற்றிமேல் வெற்றிகளை குவித்து வருகிறது.

201708031804137855_1_6-neymar2-s._L_styv

மெஸ்சி மற்றும் சுவாரஸ் ஆகியோர் கோல் அடிக்க நெய்மரின் ஆட்டம் உறுதுணையாக இருக்கும். சிறந்த வீரரான நெய்மரை மற்ற அணிகள் பலகோடி ரூபாய் கொடுத்து வாங்க தயாராக இருந்தது. கடந்த வருடமே மற்ற அணிகளுடன் ஏஜென்ட் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் பார்சிலோனா அணி, நெய்மருடன் புதிய ஓப்பந்தம் போட்டது. அதன்படி 2021-ம் ஆண்டு வரை பார்சிலோனா அணிக்காக விளையாடுவேன் என்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

201708031804137855_2_6-neymar12-s._L_sty

இந்நிலையில், இந்த வருடம் தற்போது டிரான்ஸ்பர் பணி நடந்து வருகிறது. பிரான்ஸ் நாட்டின் முன்னணி கிளப்பான பாரிஸ் செயன்ட்-ஜெர்மைன், நெய்மரை வாங்க ஆசைப்பட்டது. நெய்மருக்கு அதிக அளவில் சம்பளம் தருவதாக ஆசைவார்த்தை கூறியது. இதனால் நெய்மர் பார்சிலோனா அணியில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளார். இதுகுறித்து பார்சிலோனா அணி நிர்வாகத்திடம் தெரிவித்துவிட்டார்.

201708031804137855_3_6-neymar-s._L_styvp

இந்நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக தன்னுடன் விளையாடி வந்த நெய்மர் அணியில் இருந்து பிரிந்து செல்வது மெஸ்சிக்கு கடினமாக உள்ளது. அவருக்கு வீடியோ மூலம் பிரியாவிடை செய்தி அனுப்பியுள்ளார். அந்த செய்தியில் ‘‘நண்பா நெய்மர், உன்னுடன் விளையாடிய வருடங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதிக அதிர்ஷ்டம் பெற்று உன்னுடைய வாழ்க்கை அடுத்த நிலைக்கு உயர வாழ்த்துக்கள். மீண்டும் சந்திப்போம்’’ என தெரிவித்துள்ளார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/08/03180408/1100308/Messi-Bids-Farewell-to-Neymar-in-an-Emotional-Video.vpf

  • தொடங்கியவர்

கால்பந்து உலகை மிரளவைக்கும் நெய்மர் விலை!

 
 

பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்த பிரேசில் வீரர் நெய்மரை ஒப்பந்தம் செய்ய பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் அணி 1,666 கோடி (buyout clause 198  மில்லியன் பவுண்ட்) வழங்கியுள்ளது. இந்தத் தொகையை ஏற்க லலீகா தரப்பு  மறுத்துள்ளது. ஃபிஃபா இந்த விஷயத்தில் தலையிட வேண்டுமென பி.எஸ்.ஜி அணி கோரிக்கை விடுத்துள்ளது. கால்பந்து உலகில் இதுதான் வீரர் ஒருவரின் டிரான்ஸ்பருக்காக வழங்கப்பட்ட அதிகப்பட்சத் தொகை இதுவாகும். ஐந்து ஆண்டுகளுக்காக இந்த ஒப்பந்தத்தில் நெய்மருக்கு வாரம் நாலரைக் கோடி சம்பளம் வழங்கப்படும். 

பி.எஸ்.ஜி அணியில் நெய்மர்

பி.எஸ்.ஜி கத்தார் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர்  நாசர் அல் கெலஃபிக்குச் சொந்தமானது. 2011-ம் ஆண்டு இந்த அணியை வாங்கிய அவர் அதிகளவில் முதலீடு செய்து வருகிறார். ஸ்லாட்டன் இப்ரோஹிம்விச், எடிசன் கவானி, தியாகோ சில்வா, ஏஞ்சல் டி மரியா, ஜேவியர் பஸ்டர் போன்ற முன்னணி வீரர்களை வாங்கி பி.எஸ்.ஜி அணியைப் பலப்படுத்தி வந்தார். 

முன்னதாக நெய்மர் தரப்பிலிருந்து ஒருவர் மாட்ரிட்டில் உள்ள லா லீகா தலைமையகத்துக்கு டெபாஸிட் தொகை செலுத்த செக்குடன் வந்தார்.  ஆனால், லாலீகா தரப்பில் டெபாஸிட் தொகை ஏற்ப மறுக்கப்பட்டது. லா லீகா தலைவர் ஜேவியர் டேபாஸ் கூறுகையில் , ''buyout clause மற்றும் வீரருக்கான சம்பளம் எல்லாம் சேர்த்து இந்த ஒப்பந்தம் 450 மில்லியன் பவுண்ட் மதிப்பு கொண்டதாக இருக்கிறது. இவ்வளவு பணம் அந்த அணிக்கு எங்கேயிருந்து வருகிறது. பி.எஸ்.ஜி அணி நிதி முறைகேட்டில் ஈடுபடுகிறது'' எனக் குற்றம் சாட்டியுள்ளார். 

 

எனினும் நெய்மர் பி.எஸ்.ஜி அணியில் இணைவதில் உறுதியாக இருக்கிறார். அவருக்கு டீம் மேட் மெஸ்ஸி, சுவாரஸ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

http://www.vikatan.com/news/tamilnadu/97943-neymar-pledges-to-‘conquer-the-titles’-for-psg-after-world-record-£198m-move.html

  • தொடங்கியவர்

உலகின் விலை உயர்ந்த வீரரானார் நெய்மர்

Neymar JR Photo Credit: Goal
sl-v-ind-2017-live-score-728.jpg

பிரேஸில் கால்பந்து அணியின் முன்கள வீரர் நெய்மர் டி சில்வாவை உலக சாதனை தொகையான 222 மில்லியன் யூரோக்களுக்கு (262 மில்லியன் டொலர்) பார்சிலோனா அணியிலிருந்து பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

இதன்மூலம் உலகில் அதிக தொகைக்கு ஒப்பந்தமான வீரராக நெய்மர் புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் போல் பொக்பா 2016ஆம் அண்டு ஓகஸ்டில் ஜுவான்டஸ் அணியில் இருந்து மன்செஸ்டர் யுனைடட் அணிக்கு திரும்ப 111 மில்லியன் டொலர்கள் ஒப்பந்தம் செய்துகொண்டதே அதிகமாக தொகையாக இருந்தது. நெய்மரின் ஒப்பந்தம் இதில் இரட்டிப்பை விட அதிக மடங்காகும்.

இதன்படி நெய்மர் ஆண்டொன்றுக்கு 45 மில்லியன் யூரோக்களை (8,200 மில்லியன் ரூபாய்) ஈட்டவிருப்பதோடு, வாரத்திற்கு 865,000 யூரோக்களை (155 மில்லியன் ரூபாய்) பெறுவார். எனினும் இது அவரது ஐந்து ஆண்டு ஒப்பந்தத்தின் வரிக்கு முந்தைய தொகையாகும்.

நெய்மரின் ஒப்பந்தக் காலம் 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை நீடிக்கவிருப்பதாக பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி அறிவித்துள்ளது. இந்நிலையில் தான் ஐரோப்பாவின் இலட்சியம் கொண்ட கழகங்களில் ஒன்றில் இணைந்ததாக நெய்மர் அறிவித்துள்ளார்.

பாரிஸ் செயின்ட் ஜெர்மைனின் இலட்சியத்துடன் ஆர்வம் மற்றும் ஆற்றல் அந்த கழகத்தில் என்னை கவர்ந்திழுத்தது. நான் சவாலை ஏற்க தயாராகிவிட்டேன் என உணர்கிறேன். இன்று தொடக்கம் எனது புதிய அணியினருக்காக உதவ என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்று நெய்மர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் இந்த பிரான்ஸ் அணி நெய்மரின் விடயம் தொடர்பில் விளக்கமளிக்க வெள்ளிக்கிழமை மாலை அளவில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தவுள்ளது. பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி இந்த பருவகாலத்தில் தனது முதல் போட்டியில் அமியென்ஸ் அணியை எதிர்த்து நாளை சனிக்கிழமை விளையாடவுள்ளது. இதன்போது நெய்மர் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளார்.

நெய்மரின் எதிர்காலம் குறித்து பல வாரங்கள் சந்தேகம் இருந்து வந்த நிலையில் கடந்த புதன்கிழமை பார்சிலோனா பயிற்சிக்கு தனது தந்தையுடன் வந்த அவர், தாம் ஸ்பானிய அணியில் இருந்து வெளியேறப்போவதாக குறிப்பிட்டார்.

இதனை அடுத்து நெய்மர் வெளியேறி தனது எதிர்காலம் பற்றி தீர்மானிக்க பார்சிலோனா முகாமையாளர் எர்னெஸ்டோ வெல்வர்டோ அனுமதி அளித்தார். இதனைத் தொடர்ந்து ஒப்பந்த விவகாரத்தில் கடந்த ஒருசில தினங்களாக இழுபறி நீடித்த நிலையில் நெய்மர் பார்சிலோனா அணியிலிருந்து விலகுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.  

பார்சிலோனா அணியின்பிக்–3’ என அழைக்கப்படும் அர்ஜென்டினாவின் மெஸ்சி, உருகுவேயின் சுவாரஸுடன் பிரேசிலின் நெய்மர் இருந்தார். இதில், நெய்மர் அந்த அணிக்கு 105 கோல்களை பெற்றுள்ளார். தற்போது அந்தபிக்-3’ கூட்டு உடைந்துள்ளது.  

தனது 18 வயதில் சர்வதேச போட்டியில் அறிமுகமான நெய்மர் பிரேசில் அணிக்கு 77 போட்டிகளில் விளையாடி 52 கோல்களை பெற்றுக்கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

http://www.thepapare.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.