Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

’’திருடர்கள் நீக்கப்படுவார்கள்’’

Featured Replies

’’திருடர்கள் நீக்கப்படுவார்கள்’’
 

(எஸ்.கணேசன், மு.இராமச்சந்திரன், ஆர்.ரமேஷ்)

ஐக்கிய தேசிய கட்சி திருடர்களின் கட்சியல்ல. திருடர்கள் இருப்பார்களாயின் நீக்கப்படுவார்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கை நிறைவையொட்டி வரவேற்பு நிகழ்வு ஹட்டனில் இன்று (06) இடம்பெற்றது. அதன் பின்னர் ஹட்டன் டி.கே.டபிள்யு மண்டபத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்பாட்டாளர்கள் மத்தியில் பிரதமர் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஊழல் புரிவதற்கு யாருக்கும் இடமளிக்கப் போவதில்லை. கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல்களை நாம் இனங்கண்டுள்ளோம்.

இன்று அமைச்சர் ஒருவரை அழைத்து நீதிபதி ஒருவர் கேள்வி கேட்கும் வகையில் காலம் மாறியிருக்கிறது. கடந்த ஆட்சிக் காலத்தில் அவ்வாறு நடந்ததா?

நான் இச்சந்தர்ப்பத்தில் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். எமது அரசாங்கம் திருடர்களை பாதுகாக்காது. ஏதாவது தகவல் வெளிப்படுமாயின் அந்த அறிக்கையின் அடிப்படையில் தேடிப்பார்த்து நடவடிக்கை எடுக்கப்படும். இது திருடர்களின் கட்சியல்ல. திருடர்கள் இருப்பார்களாயின் நீக்கப்படுவார்கள் என்றார்

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/திருடர்கள்-நீக்கப்படுவார்கள்/150-201896

15 hours ago, நவீனன் said:

ஐக்கிய தேசிய கட்சி திருடர்களின் கட்சியல்ல. திருடர்கள் இருப்பார்களாயின் நீக்கப்படுவார்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

முக்கிய திருடனே இதைக் கூறுவது வேடிக்கை!

அர்ஜுனா மகேந்திரனை வைத்து பணம் கொள்ளையடித்தது  ரணில் என்பது இப்போது தெளிவான உண்மை.
கொள்ளையடித்த பணம் சொந்த தேவைக்கோ கட்சிக்கோ பயன்படுத்தப்படுகிறது என்பது முக்கியம் இல்லை.

கொள்ளை கொள்ளை தான்.

  • தொடங்கியவர்

திருடர்கள் கண்டுபிடிக்கப்படின் கட்சியிலிருந்து நீக்குவோம்

Published by RasmilaD on 2017-08-07 09:09:12

 

Ranil.jpg

நாட்டில் நாம் அனை­வரும் ஒன்­றி­ணைந்து   ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஒரு பொது வேட்­பா­ள­ராக நிறுத்தி நல்­லாட்சி அர­சாங்கம் ஒன்றை உரு­வாக்­கி­யது  மக்­களின் எதிர்­பார்ப்­புக்­களை  நடை­மு­றைப்­ப­டுத்திக் கொள்­வ­தற்­கா­க­வே­யாகும். அந்­த­வ­கையில்  கடந்த காலங்­களில்  நாட்டில் நிலவி வந்த சுதந்­தி­ர­மற்ற நிலை தற்­பொ­ழுது இல்லை. மக்கள் சுதந்­தி­ர­மா­கவே செயற்­ப­டு­கின்­றனர். இதனை உரு­வாக்­கி­யது நல்­லாட்சி அர­சாங்­க­மே­யாகும் என்று  பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

மேலும் எமது அரசாங்கம் திருடர்களை ஒரு போதும் பாதுகாக்கப் போவதில்லை. ஏதாவது ஒரு விடயம் வெ ளிப்படுத்தப்பட்டால் விசாரணை அறிக்கையின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும். ஐக்கிய தேசியக் கட்சி திருடர்களின் கட்சி அல்ல. திருடர்கள் இருந்தால் வெளியேற்றுவோம். 

40 ஆண்டு பாரா­ளு­மன்ற அர­சியல் பிர­வே­சத்தின்   நிறை­வை­யொட்டி  ஏற்­பாடு செய்­யப்­பட்ட வர­வேற்பு நிகழ்வு ஒன்­றுக்கு ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­வரும், நாட்டின் பிர­த­ம­ரு­மான  ரணில் விக்கி­ர­ம ­சிங்க நேற்று  அட்டன் நக­ருக்கு விஜ­ய த்தை மேற்­கொண்டார்.  அங்கு  டீ.கே.டபிள்யூ கலா­சார மண்­ட­பத்தில் இடம்­பெற்ற மக்கள் சந்­திப்பு கூட்­டத்தில் பிர­தம அதி­தி­யாக கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே  இவ்­வாறு தெரி­வித்தார்.

பிர­தமர்  மேலும் தெரி­விக்­கையில்,

நாடு பொரு­ளா­தார சிக்­கல்­களை எதிர்­கொண்­டுள்­ளது. இதனால் தீர்­மா­னிக்­கப்­பட்ட பல வேலைத்­திட்­டங்கள் மக்­க­ளுக்கு சென்­ற­டை­வதில் தாமதம் ஏற்­ப­டு­கின்­றது. கடந்த காலத்தில் நமது நாட்டில் முன்­னெ­டுக்­கப்­பட்ட திட்­ட­மி­டப்­ப­டாத வேலைத்­திட்­டங்­க­ளுக்கு அதி­க­ளவு நிதி  செலவு செய்­யப்­பட்­டுள்­ளது. இத­ன­டிப்­ப­டையில் உமா­ஓயா பல்­நோக்கு திட்டம், அம்­பாந்­தோட்டை துறை­முக அபி­வி­ருத்தி என்­ப­ன­வற்­றுக்கு  அதிக பணம் செலவு செய்­யப்­பட்­டுள்­ளது. இதனால் இத்­திட்­டங்­களின் ஊடாக நாட்­டுக்கு கிடைக்க வேண்­டிய பொரு­ளா­தார வளர்ச்சி பின்­ன­டைவை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. உமா­ஓயா திட்­டத்­திற்கு என 135 பில்­லி­யனும், அம்­பாந்­தோட்­டைக்கு என 46 பில்­லி­ய­னு­மாக, 181 பில்­லியன்  நாட்டின் வரு­வா­யி­லி­ருந்து இழக்­கப்­பட்­டுள்­ளது. இந்த பணம் இன்று இருந்­தி­ருந்தால் அபி­வி­ருத்தி ஒரு அளவில் முன்­னேற்­ற­ம­டைந்­தி­ருக்கும்.

அத்­தோடு மலை­யக மக்­க­ளுக்கும் வீடுகள் பல அமைத்துக் கொடுக்­கப்­பட்­டி­ருக்கும்.  ஒன்­றரை வரு­ட­மாக பேசப்­பட்டு வரு­கின்ற கல்வி கலாச்­சா­லை­களும் பூர்த்­தி­யா­கி­யி­ருந்­தி­ருக்கும். இந்த வகையில் இந்­திய பிர­தமர் மோடி  மலை­யக மக்­க­ளுக்கு பத்­தா­யிரம் வீடு­களை தரு­வ­தாக உறு­தி­ய­ளித்­த­மைக்கு  நன்றி தெரி­விக்­கின்றேன்.  கடந்த அர­சாங்க காலப்­ப­கு­தியில் மக்கள் சுதந்­தி­ர­மாக நட­மாட முடி­யாத நிலை காணப்­பட்­டது.

பல்­வேறு குற்ற செயல்கள், ஊழல்கள் என நடந்­தே­றின. இவை­களை விசா­ரணை செய்­வ­தற்­காக மற்றும் ஆராய்ந்து பார்ப்­ப­தற்­காக நீதி­மன்றம் தொடக்கம் பாரா­ளு­மன்றம் வரை­யி­லான பல ஆணைக்­கு­ழுக்­களை நிய­மிக்க வேண்­டிய சூழ்­நிலை காணப்­பட்­டது.

அவ்­வாறு ஒவ்­வொரு காரி­யங்­க­ளுக்கும் ஆணைக்­கு­ழுக்­களை நிய­மித்து குற்­றங்கள் ஆரா­யப்­ப­டு­கின்­றன.    மக்­களின் அபி­வி­ருத்­திக்­கான பணங்கள் பல சூறை­யா­டப்­பட்ட நிலையில் இத்­த­கைய செயற்­பா­டு­களை செய்து வந்­த­வர்கள் நல்­லாட்­சியை வீட்­டுக்கு அனுப்ப முயன்று வரு­கின்­றனர்.

இது எந்­த­வ­கையில் நியா­ய­மாகும்?   கடந்த காலங்­களில் இடம்­பெற்ற ஊழல்கள் தொடர்பில்  வெளிச்­சத்­திற்கு கொண்டு வர துணிந்த ஊட­க­வி­ய­லா­ளர்­களை  கொலை செய்தனர். அந்த விசாரணைகளும் நடை பெற்று வருகின்றன. இந்த நிலையில் இன்னும் பல ஊடகங்கள் ஊழல்கள் மற்றும் குற்றச்செயல்கள் இடம்பெறுவதை கண்டு கொள்ளாமல்   கடை வியாபாரம் போல் கொண்டு செய்கின்றனர். இவ் வாறான சூழ்நிலையில் நாட்டை கட்டி யெழுப்புவதில் நாம் நல்லாட்சி அரசாங் கத்தின் ஊடாக பல அர்ப்பணிப்புடனான செயற்பாடுகளை செய்து வருகின்றோம் என்றார்.

http://www.virakesari.lk/article/22812

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.