Jump to content

கவிதைகள்


Recommended Posts

வார்த்தைப்பூக்கள்


 

 

tamil-poem-world-poetry-day
 

புல் வெளியில் இடைவெளியுடன் அமர்ந்திருக்கிறோம்,

புற்கள் யாவிலும் வார்த்தைகள் பூத்துக்கிடக்கின்றன

எடுக்கவா...கோர்க்கவா என்பது போல்

என்னைப்பார்க்கிறாய் ,

வேண்டாம் ..,

புதுப்பூக்கள் உன் பார்வைக்கு தெரிவதில்லை ,

வாடி வதங்கிய பழைய நினைவுகளை

வார்த்தைப்பூக்களாய் தேர்வு செய்கிறாய்,

நீ அவ்வப்போது போட்ட

இப்பூக்கள் மாலையாகக் கழுத்தில் கனக்கின்றன

பார்....

என் தலை கூடக் குனிந்தே தான் போய்விட்டது,

பாரத்தால் ......

இருக்கட்டும் ......

நீ இவற்றை  மனதில் சுமந்து வேதனைப்பட்டிருப்பாய் ,

ஆனால் என்ன செய்வது ...

மீண்டும் கஷ்டப்பட்டுத் தேடி ,

பொறுக்கி எடுத்து

மனதில் பொறுத்ததியபடிதான் இருக்கிறாய்...

சிதறிய வார்த்தைகளை..

விட்டுவிடு

வார்த்தைகள் கீழேயே கிடக்கட்டும்

வாடியபடி.

- லதா ரகுநாதன்

http://www.kamadenu.in/

Link to comment
Share on other sites

  • Replies 212
  • Created
  • Last Reply

கலாய் கவிதைகள்!

 

 

எதைப்பற்றியும் என்ன வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் எழுதுவதே கலாய் கவிதைகள். இதை அனுபவிக்கணும், தேவையில்லாம ஆராயக்கூடாது!

p94a_1522151521.jpg

ருள்மணியை விட்டுவிட்டு.வெற்றிமணியைக் காதலித்தாள்...
மணி ட்ரான்ஸ்ஃபர்!

- கலைவாணன்


p94b_1522151536.jpg

சிரிப்பூட்டும் வாயு
நைட்ரஸ் ஆக்ஸைடு...
அப்ப...
மீத்தேன், ஹைட்ரோகார்பன்,
ஷேல் கேஸ்...?
சரி... சரி...
இருக்கவே இருக்கு
கேஸ் ட்ரபுளுக்கு பூண்டு லேகியம்...
தண்ணியக் குடி... தண்ணியக் குடி..!

- கே.லக்‌ஷ்மணன்


p94c_1522151553.jpg

நெப்போலியனை
உள்ளே அனுப்பினால்
அரிச்சந்திரன் வெளியே வந்துவிடுவார்!

- எஸ்.ஜெயகாந்தி


p94d_1522151566.jpg

மாதக்கடைசி தேதி
வாஸ்து மீன் ஆனாலும்
வறுவலுக்கு  ஆகும்!

- ‘சீர்காழி’ வி.வெங்கட்


p94e_1522151588.jpg

ம்மா சீரியல்
அப்பா கம்ப்யூட்டர்
பெரியவன் கேம்ஸ்
சிறியவன் ரைம்ஸ் வீடியோ
பார்த்துச் சிரித்துக்கொண்டது
குடும்பப் போட்டோ

- ரா.அருண் பிரகாஷ்


p94f_1522151686.jpg

ண்ணாடி முன் நின்றபோது,
கண்ணாடி அழகாய்த் தெரிந்தது.

- வே.புனிதா வேளாங்கண்ணி


p94g_1522151699.jpg

ரத்தை வெட்டியவன் மீதும்
மழை கொட்டிக்கொண்டிருந்தது.

-  ரா.அருண் பிரகாஷ்


p94h_1522151712.jpg

னைவியிடம் இத்தனை வருடமாய் குப்பை கொட்ட இரண்டே வார்த்தைகள்
‘சரிம்மா’, ‘ஸாரிம்மா..!’
 
-  சீர்காழி வி.வெங்கட்

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

கால மாற்றம்

முன்பெல்லாம்
தாத்தா
இடைவிடாமல்
இருமிக்கொண்டே இருப்பார்
பாவமாய் இருக்கும்
இப்போது
அப்பா இரும
ஆரம்பித்திருக்கிறார்
பயமாய் இருக்கிறது.

- இளந்தென்றல் திரவியம்

5.jpg
நீதி


நீதிமன்ற புங்கை நிழல்
உன் நரையில் கவிழ்ந்து
மடியில் நிறைகின்றது
இம்முறையும் அழுது
தீர்த்தவளாய்
கண்ணாடியுயர்த்தி
முந்தானையில்
கண்களைத் துடைத்த
வண்ணம் வெளியேறுகிறாய்
படர்ந்திருக்கும் அந்தக்
கண்ணீரின் ஈரமோ
புங்கை நிழலில் கொஞ்சம்
மரம் விட்டு இறங்கி
உன் சேலையைப்
பற்றிக்கொண்டு
உன்னோடே
போவதாய்த் தெரிகிறது
நிழலைப் போல் இல்லைதானே
ஏழைகளுக்கான நீதி.

- நிலாகண்ணன்

http://www.kungumam.co.in

Link to comment
Share on other sites

நமக்கு ஒரு வழிதான் இருக்கிறது.. நிர்வாணமாக மைதானத்தை நோக்கி ஓடுவது: மனுஷ்யபுத்திரனின் ஐபிஎல் கவிதை


 

 

manushyaputhran-poem

 

ஐபிஎல் ஆடுகளம் இதுவரை கோலாகலமாக மட்டுமே இருந்திருக்கிறது. ஆனால், இன்று தமிழகத்தில் அது போராட்டக்களமாக மாறியிருக்கிறது. காவிரிக்காக சர்வதேச கவனத்தை ஈர்க்க ஐபிஎல் அரங்கை முற்றுகையிட்டும் மைதானத்துக்குள் ஏதாவது போராட்டம் நடத்தவும் அமைப்புகள் உறுதியாக இருக்க எப்படியாவது விளையாட்டை வெற்றிகரமாக நடத்திவிட ஒருங்கிணைப்பாளர்கள் இரட்டை உறுதியுடன் இருக்கின்றனர். காவல்துறை அவர்கள் பக்கம் இருக்கிறது.
இந்நிலையில், ஐபிஎல் போட்டியைக் குறித்து கவிஞர் மனுஷ்யபுத்திரன் எழுதியுள்ள கவிதை இணையத்தில் வைரலாகி வருகிறது.
நமக்கும் ஒரு வழிதான் இருக்கிறது.. நிர்வாணமாக மைதானத்தை நோக்கி ஓடுவது என மிகவும் காட்டமாக ஒரு கவிதையை அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

இதோ அந்தக் கவிதை..

பந்தையப் பார்வையாளர்கள் 
கறுப்பு ஆடைகள் அணிய தடை
பந்தயத்திற்கு வரும் 
சாலைகளில் தடை
பாதாகைகளுக்கு தடை
கொடிகளுக்கு தடை
செல்போன்களுக்கு தடை
கார் சாவிகளுக்கு தடை

தடைகளின் பட்டியல் நீண்டது
தடைகளின் அதிகாரம் நீண்டது

தண்ணீர் பாட்டில்களுக்கு தடை
தண்ணீருக்குத்தடை
தண்ணீருக்குத் தடை
தண்ணீருக்குத் தடை
அதுதான் பிரச்சினை
அதற்காகத்தான் தண்ணீர் பாட்டில்களுக்கு தடை

பந்தய மைதானத்தின் மேல்
பறவைகள் பறக்கத்தடை
பந்தய புல்வெளியில்
வெட்டுகிளிகள் அமர தடை
காற்றுக்குத்தடை
வெளிச்சத்திற்குத் தடை

ஐந்து அடுக்குப் பாதுகாப்பில்
பந்தய குதிரைகள்
அரசனைப்போல அழைத்துச் செல்லப்படுகின்றன
அல்லது 
ஒரு பயங்கரவாதியைப்போல 
அழைத்து செல்லப்படுகின்றன

தடைகளின் கோமாளி அரசன்
வெற்றிப்புன்னகை புரிகிறான்
ஆனால் அவனது கண்களில் 
அச்சம் படர்கிறது
மைதானத்தை சூழ்ந்திருக்கும்
ஒவ்வொருவர் முகத்தையும் கண்டு
பயப்படுகிறான்
அவர்களது அடையாள அட்டையை
அச்சத்துடன் சோதிக்கிறான்
எங்கெங்கும் துப்பாகி ஏந்திய காவலர்கள்
தயாராக இருக்கும் தடிகள்
கண்ணீர் புகைக் குண்டுகள்

ஆனாலும்
அவர்களுக்கு நிம்மதியில்லை
யாராவது ஒருவன் 
யாராவது ஒருத்தி 
கருப்பு உள்ளாடையை உருவி
உயர்த்தக் கூடும் என்று பயப்படுகிறார்கள்
பந்தயம் ஆரம்பமாகவிருக்கிறது
உள்ளாடைகளுக்குள் கையை விட்டு
சோதிக்கிறார்கள் 
மெட்டல் டிடக்டர் மூலம்
கருப்பு உள்ளாடைகளைத்தேடுகிறார்கள்

அசம்பாவிதம் நடக்கக் கூடும்
எதிர்ப்பவர்கள் ஒரு ரகசிய திட்டத்துடன் அங்கு வரகூடும்
பாதுகாப்பு ஏற்பாடுகளை
உறுதிப்படுத்த ஒரு வழிதான் இருக்கிறது
அது 
எல்லோரையும் நிர்வாணமாக
கேலரிகளை நோக்கி அனுப்புவது 
அதற்கும் தயாராகத்தான் 
மக்கள் வரிசையில் நிற்கிறார்கள்
நமக்கு கேளிக்கைகள் முக்கியம்
தண்ணீரை விடவும்
தண்ணீர் பாட்டில்களை விடவும் 
நம் நிர்வாணத்தை விடவும்

பல்லாயிரக்கணக்கானோர்
நிர்வாணமாக அமர்ந்து 
ஒரு பந்தயத்தை காணும் காட்சியை
இதுவரை உலகம் கண்டதில்லை 
நிர்வாணமாக தூக்கில் தொங்கும்
விவசாயிகளின் உடல்களைத்தான்
இதுவரைக் கண்டிருக்கிறோம்
இது ஒரு அரிதினும் அரிய காட்சியாக இருக்கும்

நமக்கும் ஒரு வழிதான் இருக்கிறது

அது 
நிர்வாணமாக
மைதானத்தை நோக்கி ஓடுவது

http://www.kamadenu.in/

Link to comment
Share on other sites

அஞ்சலி

 

 
shutterstock320040041

அந்திவானுக்குக் கீழ்

படைக்குருவிகள்

அதற்கும் கீழ்

ஒட மரம்

மரத்தைச் சுற்றி

ஆடுகள்

ஆடுகளைச் சுற்றி நைலான் வலை

வலைக்குள்ளே புழுக்கைப் புழுதி

இடையன் பெருக்குகிறான்

ஆடுகளுடன் பழக்கம் பேசுகிறான்

செம்மறியாடுகள் கூர்ந்து கவனிக்கின்றன

வெள்ளாடுகள் கும்மரிச்சம் போடுகின்றன

தண்டனைகளை நினைவூட்டுகிறான்

எக்காளம் போடுகின்றன வெள்ளாடுகள்

இடையன் துரத்துகிறான்

மரத்தைச் சுற்றிச் சுற்றி ஓடுகின்றன

அகப்பட்ட ஆட்டுக்கு முன்னங்கால்கள்

சில ஆடுகளுக்குக் கழுத்தும் காலும்

கட்டிப்போடுகிறான்

தப்பித்த ஆடுகளை வெலத்துடன் துரத்துகிறான்

மந்தை புழுதிக் காடாகிறது

இடையனின் சட்டம் அறியாத

புத்தம் குட்டியாடொன்று

துள்ளி வலைக்கு வெளியே குதிக்கிறது

இடையனும் குதிக்கிறான்

பிடிபடுகிறது குட்டியாடு

கழுத்து நரம்புகள் தென்னித் திமிற

குரவளை நெரிந்தது

முனகல்கூட வெளிவரவில்லை

அத்துவானக் காட்டின் இந்தக் காட்சியை

கறுப்புத் துணியால் மூடுகிறது

பொழுது

- மண்குதிரை

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

p30a_1523264744.jpg

புளியம்பழ வாழ்க்கை 
                            
ஊரு சாமிக்கு விசேஷம்
சித்திரையில வரத் தவறினாலும் தவறும்,
ஹைவேஸ் புளியமரக் குத்தகைய எடுக்குற
அய்யாவுத் தாத்தாவுக்கு
சித்திரை பிறந்ததுமே
‘புளியம்பழம் உலுக்குகிற’ விசேஷம் தொடங்கிடும்.
பன்னெண்டாளுக வெச்சு புளியம்பழங்களை உலுக்குவாரு.
சலசலன்னு மண்ணாங்கட்டி மழை பொழிஞ்சாப்புல
தூரலாட்டம் விழுகிற புளியம்பழங்களை
சீல காடாத்துணி கட்டித் திரட்டுவாரு.
விழுகிற முதல் படி புளியம்பழத்தை
பத்ரகாளியாத்தாவுக்குப் புளியோதரை படைக்க
அப்பாயிகிட்ட தனியா குடுத்திடுவாரு.
விழுந்த பழத்தைத் தட்டிப்பார்த்தே
புளிப்போட அடர்த்தியைத் துல்லியமா சொல்லிடுவாரு.
பெரிய பெரியப்பா, சின்ன பெரியப்பா
ரெண்டுபேத்தையும் தூரத்துல நிறுத்தி
சிவப்புக்கொடி காட்டி வண்டிகளுக்கு வழிகாட்டச் சொல்லுவாரு.
தனலட்சுமி அத்தைக்கும்,
முத்து பெரியம்மாவுக்கும்
முருகேசன் அண்ணனுக்கும்
கீழே ஒரு பழம் விடாம கூட்டி எடுக்கிறதுதான் வேலை.
பழம் உலுக்கி முடிஞ்சதும்
வேட்டிய மடிச்சுக் கட்டிக்கிட்டு
தனியா ஒரு நடை நடந்து
புளியங்காய்களையும்
உடைஞ்சுபோன பிஞ்சுகளையும்
ஒண்ணுவிடாம பொறுக்கி எடுத்து
வேட்டிக்குள்ள போட்டுக்கிட்டுதான் வருவாரு.
புளியம்பழத்தைக் கொத்தோடயும்,
கிளையோடயும் புடுங்கிட்டாப்போச்சு
நாண்டுக்கிறாப்புல பேசி,
ருத்ரதாண்டவம் ஆடுற தாத்தா...
புருஷனை உதறிட்டு ஒத்தையா நின்ன
கருணாம்பிகை அக்காகூட மட்டும்
சாகறவரைக்கும்
ஒரு வார்த்தை பேசவே இல்ல!

- ஸ்ரீநிவாஸ் பிரபு

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

காவிரி

கீழே வெறுமை...  
வாகன இரைச்சல்களால்
முன்பைவிட அதிகமாகவே
எதிரொலித்தது காவிரிப் பாலம்.

நீர்த்துகில்களை இழந்த
பாலத்தூண்களெல்லாம்
தன் நிர்வாணத்தை ஒருசில முட்புதர்களால்
மூடிக்கொண்டன.

அத்தூண்களின்
துகில்களெல்லாம் 
வேற்று மாநிலத் தூண்களைத் தத்தம்
இரண்டாம் உடுப்புகளாய்
அணிந்துகொண்டன.

என்றோ செத்தழுகிய
நதிப்பாம்பை இன்று வரை நோண்டித் தின்றவாறே
இருக்கும் மஞ்சள் எறும்புகள்
சாரைசாரையாய்
இங்குமங்கும் உலாவுவது
ஒரு கண்கொல்லும் காட்சி.

எதிரெதிர் படித்துறைகளில்
ஏறி இறங்கியும்,  ஆற்றின்
நீள அகலங்களில் ஓடியாடியும்
குதூகலித்தாடிய வெறுமை
கடைசியாக மூச்சிரைத்து 
ஏழைகளின் வயிற்றுப் பகுதியில் தஞ்சம் புகுந்தது.

கனத்த நெஞ்சுடன்
மணலாற்றைப் பார்க்கின்றேன்...

இரு கரைகளிலும் காய்ந்து தலை சாய்த்து
மண்டியிட்டு மன்னிப்பு கோரும் மனிதர்களைப்போல்...
கோரைப்புற்கள்.

- ஆனந்த்

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

விக்ரமாதித்யன் கவிதைகள்

கவிதை: விக்ரமாதித்யன், ஓவியம்: வேலு

 

இடரினும் தளரினும்

அறியாப்பருவத்தில்
இழைத்து இழைத்துப் போட்ட கோலம்
அறிந்த பிறகு
கைக்கு வந்தது.
கோலத்தைக் கடந்துவிட்டாள்
பிராட்டி

எப்பொழுதும்

தொடங்கத் தெரிகிறது
முடிக்கத் தெரியவில்லை
ஒருபொழுதும்.
நடுவில்
நாலுபேர்
இடையே
இரண்டு பேர்
வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தால்
பொழுதுபோவதே கொண்டாட்டம்தான்

p42a_1523272747.jpg

நிறை

எடுத்தால்
தீர்ந்துவிடும்
கொடுத்தால்
நிறைந்துவிடும்
எடுத்தும்
கொடுத்தும்.

அழை

பெண்ணே
பெண்ணே
எங்கே
இருக்கிறாய்
எப்போது புறப்பட்டு
வருவாய்
வரும்பொழுது
பௌர்ணமியாக இருக்கட்டும்

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

குற்றப்பத்திரிகை

கவிதை: யவனிகா ஸ்ரீராம்

 

p38a_1523268478.jpg

மிகச்சுருக்கமாகக் கேட்கப்படுகிறது
ஒருவரியில்
உங்கள் கல்லறை வாசகம் அல்லது முழுவாழ்வின் செய்தி யாவும்.
யாரைப்பிடிக்கும் எனக் குழந்தைகளிடம் கேட்கும்போதே
பெற்றோர்கள் இறந்துவிடுகிறார்கள்.
எனது தேசம் என நெஞ்சுயர்த்திப் பெருமிதம்கொள்ளும் ஒருவர்தான்
‘ஆனால், அதில் ஒரு விஷயம்...’ என அச்சம் தெரிவிக்கிறார்.
எவ்வளவு நேசித்தேன் என்று கண்ணீர் சிந்தியவர்தான் கொலையாளியாகிவிட்டார்
துவரைப்பருப்புகள் காதலிசை கடவுளின் கடைக்கண்பார்வை
நாய் குரைக்கும் ஓலம் போன்றவை சுருக்கமானவைதாம்.
பல பக்கக் குற்றப்பத்திரிகையில் நீதிபதி
செக்ஷனுக்குள் வரும் வாக்கியங்களின் கீழ் அடிக்கோடிடுவது, மேலும்
வெகுநாள்களாய் பெண்களிடம் ஆண்கள்
`உனக்கு என்னதான்மா வேண்டும்’ எனக் கேட்பது போன்றவை
மிகச் சுருக்கமான கதறல்கள் எனலாம்.
குற்றமும் தண்டனையும் என்ற பெரும்பிரதி
வேட்டையாடுதலுக்கும் விவசாயத்துக்குமான
வெறும் சுருக்கம் என்பாரும் உண்டு.
என்ன செய்வது, பரிதாபம்தான்!
எதையும் சுருக்கமாகச் சொல்லத் திராணியற்றவர்கள் 
பலகாலம் நீளும் வரிசையில் மயங்கித் தரை விழுந்துவிடுகிறார்கள்தாம்.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

நீர்ப்பிடிப்பு நிலம்

நகரமென எழுந்துகொண்டிருக்கிறது
முன்பொரு நாளின் நீர்ப்பிடிப்பு நிலம்
புதிய வீட்டை  சிரத்தையோடு வடிவமைத்துக்கொண்டிருக்கும்
பொறியாளனின் நனவில்
எழுந்து சரிகிறது அவனது கனவு வீடு
சாந்து சுமக்கும் சித்தாள் பெண்
முதல் சாமத்தில் அரங்கேறிய இரண்டாம் கலவியை நினைந்து தானே நகைக்கிறாள்
கட்டடக் காவலாளி இரவில் ‘தேன்கிண்ணம்’ கேட்கும்பொருட்டு பகலில் பண்டுவம் பார்க்கிறான் பண்பலைப் பெட்டியை
வேறிடம்  கிட்டாத இளஞ்சோடிகள்
பூசப்படாத வீட்டுக்குள் காதலிக்கச் செல்கிறார்கள்
தூக்கச்சடவில் கிடாயை நோக்கிக் கம்பெறிகிறான்
தூரத்தில் ஆடுமேய்ப்பவன் 
திருஷ்டியாய் நிற்கும் ஒற்றைப் பனையில் தொங்குகிறது தூரதேசம் போய்விட்ட தூக்கணாங்குருவியின் வீடு
சூரிய தீபம் சோர்கிற பொழுதில்
மகிழுந்துகளில் வந்திறங்கி
குத்துக்கற்களின் குறுக்கும்மறுக்குமாய் நின்று
நீளம் அகலம்  பட்டா சிட்டா
அடங்கலென நீட்டிமுழக்குவார்கள்
யானைகட்டிப் போரடித்த மூதாதையரின்
திணை திரிந்த வழித்தோன்றல்கள்.

- ஸ்ரீதர்பாரதி  

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

தற்கொலையாகும் திட்டுகள்...

எத்தனை முறை திட்டிவைத்தாலும்
உதிரும் முடிகளை எடுத்து குப்பையில்
போடுவதில்லை தங்கை
என் திட்டுகளைப்போலவே
அம்முடிகள் கற்றையாகத் திரண்டு
உருண்டு ஒரு மூலையில்
இறந்துவிட்ட கரப்பான்பூச்சியின்
சிதறிய உடல்
கத்தரிக்கப்பட்ட துணியிலிருந்து
விழுந்த ஓரச் சிதைவு
காய்ந்துபோன சருகுகள்
மற்றும்
மிட்டாய் சுற்றியிருந்த
கண்ணாடி உறையோடு
சுருளச் சுருளக் கிடக்கின்றது
கொஞ்சம் பலமாகக் காற்றடித்தாலும்
மூலையில் ஒரு முழத்துக்குக்
கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும்
கொச்சைக் கயிற்றைக் கவ்வித்
தொங்குவதைத் தவிரவும் வேறு வழியில்லை
எடுத்துப் போடுவதற்கு.

- க.சி.அம்பிகாவர்ஷினி

https://www.vikatan.com/

Link to comment
Share on other sites

மாற்றுப்பாதை

சற்றுமுன் போயிருந்த
இறுதி ஊர்வலத்தின்
மரணத்தின் வாசம் வீசும்
பூக்கள் இறைந்து கிடக்கும்
பாதையில் பயணிக்கும்போது
மனம் சற்றே
பயணித்துப் பார்க்கிறது
தன்னையும்
ஓர் ஊர்வலத்தில் வைத்து
6.jpg
 

- ரவி கிருஷ்


ஒத்திகை

தின்று களித்துப்
பெருத்துக் கொழுத்த
கூழாங்கல்லொன்று
கொஞ்ச தூரம்
நதியின் திசையை
மாற்றிக்கொண்டிருக்கிறது.
 

- திரு வெங்கட்

http://www.kungumam.co.in/

Link to comment
Share on other sites

கோடைச் சித்திரம்

கொடுவெயிலில்
தகதகக்கும் நெடுஞ்சாலைகளெங்கும்
எழும்பும் தொடர் அலைகளோடு
ஓடத் துவங்கிவிட்டது கானல்நீர்.
பாதுகைகளற்றப் பாதங்களைப்
பார்ப்பதையும்
அரிதாக்கிவிட்டது கோடை.
கடைசி இலையையும் உதிர்த்துவிட்டு
வாட்டத்தோடு நிற்கின்றன மரங்கள்.
எதிர்படும் பெண்களின்
கைக்காம்புகளில் புதிதாய்
இதழ் விரிக்கத் துவங்கிவிட்டன
குடைப்பூக்கள்.
தரை வெடித்த குளத்தில்
தட்டாங்கல்லை இரையாக்கவியலாமல்
மேகங்களைச் சபித்தபடி
தேடலோடு கடக்கின்றன நாரைகள்.
கோடைச் சித்திரத்தின் ஆடை நனைத்து
சுடச்சுடச் சொட்டிக்கொண்டிருக்கிறது
புழுக்கும் வியர்வை.

- பாப்பனப்பட்டு வ.முருகன்

https://www.vikatan.com

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

p20a_1524462694.jpg



நூலறுந்த பட்டம்

இரை தேவையற்ற
பேச்சிழந்த பறவையொன்று
பறப்பதான பாவனையில்
அந்தரத்தில் அலைகிறது
நூலறுந்த பட்டமொன்று.
தனிமை விரும்பியின்
மோனத் தவத்தைப்போலவே
சிக்கும் தடைகளில்
சற்றே மௌனித்தமர்ந்து
பின் விடுபட்டு வேற்றிடம் ஏகுகிறது.
மேனி வண்ணங்களில்
அறுபடும்முன் சேகரித்த
சிறுவனின் நுரை ததும்பும் மகிழ்வை
என்ன செய்வதென்ற குழப்பத்தில்
பித்துப் பிடித்தாற்போல் யோசிக்கிறது.
தடுமாறும் கணமொன்றில்
விரையும் ரயிலின் மேற்கூரையில்
சாதுவாய்ச் சாய்ந்து
காற்று விரட்டும் வரை
ஓய்வெடுத்துக்கொள்கிறது.
மின்கம்பிக்கு இடம்பெயர்ந்து
படபடப்பாய் தொங்குகையில்
சிறுவனைப் பிரிந்த வேதனையில்
துடிப்பதான ஏக்கத்தை
வெளிச்சமிடுகிறது.
இறுதியில்
அரூப அழுகைக்குப் பரிகாரமாய்
நீரில் நனைந்தோ
வேலியில் கிழிந்தோ
சுயமாய்த் தண்டித்துக்கொள்கிறது.

- கண்ணன்

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

காத்திருப்பு

ஜன்னல் திறந்து
கம்பிகளில் முகம் அழுந்த
கதவு ஒருக்களித்து வைத்து
அணைக்கொடுத்த நாற்காலியில்
அமர்ந்தபடி
மொட்டைமாடி உலாவலில்
அவ்வப்போது எட்டிப் பார்த்து
எட்டு பேருந்து நிறுத்தம் வரை
சென்றுவிட்டு
இப்படி
யாருக்காவது ஒருநாள் காத்திருக்க வேண்டும்!

- கவிஜி

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

 
 
E_1524811217.jpeg
 

நன்றி சொல்ல ஒருநாள்!

உலகிற்கு நன்றி சொல்ல
நாம் மறந்திருக்கலாம்...
ஆனால், உலகம் நமக்கு
நன்றி சொல்லும் நாளே
உழைப்பாளர் தினம்!

காடு மேடாய்
கட்டாந்தரையாய் கிடந்த நிலத்தை
பொன் விளையச் செய்த கரங்களை
பூமித்தாய் முத்தமிடும் நாளே
உழைப்பாளர் தினம்!

தறிகெட்டு ஓடிய
ஆறுகளுக்கு அணை கட்டி
வீரியம் கொண்டு
விழும் அருவிகளில்
மின்சாரம் எடுத்து
இருள் துடைத்து, ஒளிரச் செய்த
கரங்களை கவுரவிக்கும் நாளே
உழைப்பாளர் தினம்!

உப்பிட்டவரை
உள்ளளவும் நினைக்க
வியர்வை உப்பை
விதைத்த உழைப்பாளிக்கு
வெற்றியை விருதாக்கி
உலகம் எடுக்கும் விழாவே
உழைப்பாளர் தினம்!

பூமியின்
இன்றைய வளர்ச்சிக்கும்
மலர்ச்சிக்கும்
உழைப்பாளிகளின் உழைப்பே
உரமாய் இருந்திருக்கிறது
அதற்கான அங்கீகாரமே
உழைப்பாளர் தினம்!

வான் மண்டலத்தில்
கனவு காட்சிகளாய்
வலம் வந்த கோள்களுக்கு
செயற்கைக்கோள் அனுப்பிய
செயலுக்கான அடையாளம்
உழைப்பாளர் தினம்!

பணிச் சுமைக்கு மத்தியில்
நினைக்க மறந்துவிட்ட
உழைப்பாளியை
நினைவூட்ட வருகிறது
உழைப்பாளர் தினம்
இந்த நாள்...
உழைப்பாளருக்கு
நன்றி சொல்லவொரு திருநாள்!

உலகம் போற்றும்
உழைப்பாளர் தினத்தில்
வியர்வை சிந்தும் விரல்களை பிடித்து
நன்றியோடு நலம் விசாரிப்போம்...
ஏனெனில்
உழைப்பு
தனி மனித பிழைப்பிற்கான
வேலை அல்ல
தரணியின் செழிப்பிற்கான சேவை!

மீரா மணாளன், நெல்லை.

http://www.dinamalar.com

Link to comment
Share on other sites

ஏழு மலைகள், ஏழு கடல்களைத் தாண்டி!
 
ஏழு மலைகள் ஏழு கடல்களைத் தாண்டி
இளைப்பாறாமல் பயணித்து வந்த பறவை ஒன்று
என் வீட்டு மாடியில் வந்திறங்கியது
அதன் களைப்பு உணர்ந்த நான்
பாத்திரம் நிரம்பத் தண்ணீர் வைத்தேன்
அருந்தியது
கைப்பிடி அளவு தானியம் இட்டேன்
தின்றது
`இன்றிரவு ஓய்வெடுத்துவிட்டு நாளை போகலாமே!’ என்றேன்
விடைபெற்றுப் போகவேண்டிய
கட்டாயத்தை உணர்த்தியது
தொடர்ந்து விடைபெறும் முன்
அது இட்ட எச்சத்தில்
ஏழு கடல்கள் ஏழு மலைகளின்
உஷ்ணம் இருந்தது.


- கோவிந்த் பகவான்

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

மேகங்களை ரசிப்பவள்

கோடை விடுமுறையில் லாவண் குட்டி வந்திருந்தாள்
அந்தி சாயும் சாம்பல் பொழுதுகளில்
மடியில் அமர்ந்தபடி
மேகங்களை ரசிப்பது அவள் விருப்பம்
வெள்ளை வெளேர் என்றிருந்த
மேகத்தைக் காட்டி
முயல்குட்டி என்றாள்
அடர் கறுப்பில் திரண்ட மேகத்தைக் காட்டி
யானை என்றாள்
நீள்சுருள் மேகத்தைக் காட்டி
கடற்குதிரை என்றாள்
நாள்தோறும்
தேவதை, தேர், சிங்கம், முதலை, டெடிபேர் என
அறிமுகம் செய்தவள்
விடுமுறை முடிந்து புறப்பட்டாள்.
இப்போது காணும் மேகங்களில் எல்லாம்
லாவண் குட்டியின் முகமே தெரிகின்றன.


- கோவிந்த் பகவான்

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

வெளிச்சத்தை தொலைத்தவர்கள்

மௌனத்தாலான
பூட்டால் பூட்டப்பட்டு
இறுக்கமுற்று
நிற்கிறது அந்த வீடு.
வாழ்ந்து கெட்டதற்கான
அத்துணை அறிகுறிகள்  
கொட்டிக் கிடக்கும்
அவ்வீட்டில்
எந்தவித எதிர்ப்புமின்றி  
சாவித்துவாரத்தினுள்   
நுழைந்த வெளிச்சம்
பூனையெனப் பதுங்கி
பரவவிடுகிறது தன் பார்வையை.  
காரணத்தை அறிய
பொழுதெல்லாம்
தேடிச் சலித்தபின்
சோம்பல் முறித்து
வெளியேறும் அதனிடம்
இந்த வீட்டினர்
உன்னைத்
தொலைத்ததுதான் காரணம்
என்பதை எப்படிச் சொல்லும்
அந்தப் பூட்டு.

- மகிவனி

2.jpg
குறுங் கவிதைகள்

* காலுக்கு அடியில்
கடல் அலை நழுவியதும்
மணலில் பதியும் மனம்.

* கடிகாரம் உடைந்த பிறகும்
ஓடிக்கொண்டே இருந்தது
காலம்!

- கி.ரவிக்குமார்

http://www.kungumam.co.in

Link to comment
Share on other sites

அப்பா...

அப்பா எப்போது
வெளியில் போய்
வீடு வந்தாலும்
ஆடு மாடுகள்
அத்தனையும்
பாசத்தில் கத்த ஆரம்பிக்கும்.
நாய் ஆசையோடு
வாலாட்டி வந்து அருகில் நிற்கும்.
நாங்கள் சத்தம் தவிர்த்து
வீட்டை
வலிந்து நிசப்தமாக்கிக்கொள்வோம்.


- சாமி கிரிஷ்

ரெகுலரோடு புலத்தல்

மனிதவாசம் பார்த்திராத
வனங்களுக்கு நடுவே
கூடாரம் போட்டு அதில் ஒளிந்துகொள்கிறார்கள்
 
பாராசூட்டைக் கட்டிக்கொண்டு
மலையுச்சியில் இருந்து
குதித்துவிடுகிறார்கள்

பாஷை புரியாத தேசங்களுக்கெல்லாம்
பரதேசியைப்போல சுற்றித்திரிகிறார்கள்
 
ரெகுலரிடம் இருந்து தப்பிக்க
இத்தனை பிரயத்தனங்கள் செய்தும்
தோற்றுப்போன மனிதர்கள்
திங்கள்கிழமையானதும்
ரெகுலரை மாட்டிக்கொண்டு ஆபீஸுக்குக் கிளம்புகிறார்கள்.

அவர்களின் முதுகில் `ரெகுலர்’
ஒரு சிலுவைபோல தொற்றிக்கொண்டிருக்கிறது.


- தி.விக்னேஷ்

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

திணைப்பாடல் - கவிதை

 

முத்துக்குமார் இருளப்பன் - படம்: பா.காளிமுத்து

 

ன் உடல் முழுவதும்
அப்பிக் கிடக்கிறது
குறிஞ்சியின் வாசம்.

யாசகம் கேட்டுக் கையேந்தும்
பாணன் ஒருவன்
என் மதுக்குடுவையைத்
திணைப் பாடல்களால் நிரப்புகிறான்

செங்காந்தள் மலரின் இதழ்களுக்கு
என்னை முழுவதும்
ஒப்புக்கொடுத்துவிட்டேன்

98p1_1525693012.jpg

பள்ளத்தாக்கில்
மேய்ந்து கொண்டிருக்கும்
மேகங்கள் எல்லாம்
ஈரிதழ்ப்  பூவின்
சுவை அறிந்திருக்கின்றன

பெருமரங்களை ஆரத் தழுவி
முத்தங்களால் உன் பெயரைச்
செதுக்குகையில்
என் மீசையெல்லாம்
பச்சைப் பாசிகள் ஒட்டிக்கொண்டன

மலை உண்டியலில்
சூரியக்காசைச்
சேமிக்கிறது வானம்

அகண்ட புல்வெளிகளில்
வானம் பார்த்துக் கிடக்கையில்
எண்ணிய நட்சத்திரங்களெல்லாம்
ஆலங்கட்டி மழையாய்ப் பொழிகின்றன.

மலை இறங்குகையில் வரும்
குமட்டல் உணர்வை
சேகரித்த ஆலங்கட்டிகளைச்
சுவைத்து விரட்டுகிறேன்.

தலையில் உருமாவோடு
மீசையை முறுக்கி
ஒரு கையில் அரிவாள் ஏந்திய
கோட்டைமலைக் கருப்பச்சாமி
படையலை வெறித்து நோக்கும்போது அவரது உடலை
ஒரு கூடை நியூட்ரினோக்கள்
ஊடுருவிச் செல்கின்றன.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

மரணத்தின் வெம்மை

கோடையின் வெம்மையில்
ஆவியாகிப்போவதில்லை
மரணத்தின் வாடை.

ஒரு விடுமுறையின்போது
பலமணிநேரம் பயணித்து
தடவிப்பார்த்த
தற்கொலை செய்துகொண்ட 
நண்பனின் விரல்கள்
விடுதியின் கடைசி நாளில்
கட்டியணைத்து
விடை கொடுத்தவை.

அழவும் அவகாசமின்றி
இறந்த இரண்டே மணி நேரத்தில் தெருவெங்கும்
தண்ணீர் தெளித்து
ஊரே வழியனுப்ப
அவசரமாய் அடக்கமானார்
உத்திரத்தன்று இறந்துபோன மாமா.

 

நேற்றைய தினசரியில்
தண்ணீர் கேட்டுப்
போராடியதாய்ச் சொல்லப்பட்ட
மக்களில் இரண்டாவது வரிசையில்
மூன்றாவதாய்
இருந்தவருக்கு
மகன்களால் கைவிடப்பட்டு
கூழ் வார்க்கும் திருவிழாவில் நெரிசலில் மூர்ச்சையாகி
இறந்த மாணிக்கம் பெரியப்பாவின் சாயல் .

உலர்ந்த காற்று உட்புக
ஆளுயரத்தில்
சாவு நிகழ்ந்த வீட்டின்
வாசலில் அலைவுறும்
மாலை வாங்கிவந்த
நெகிழிப்பையென
அலைவுறுகிறது
அகல மறுக்கும்
கோடையின் மரணங்கள்.

-  கே.ஸ்டாலின்

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

கடந்தகால ஒளிப்படம்

டன் படித்தவர்களோடு
எப்போதோ எடுத்துக்கொண்ட
குழு ஒளிப்படத்தை
எதேச்சையாகப் பார்க்க நேரிடுகிறது.
கணத்துளியும் தாமதியாமல்
சட்டென இறக்கை பூட்டிக்கொண்டு
கடந்தகாலம் ஏகுகிறேன் அரூபமாய்.
இன்று பூத்துக் குலுங்கும்
வாழ்வு விருட்சத்துக்கு
அன்றே விதையூன்றிய ஒருத்தியைத் தொட்டு
பிரியங்கள் வழிய
நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்.
அசாதாரண சந்தர்ப்பங்களை
அச்சமின்றித் துணிவோடு எதிர்கொள்ள
தன் அனுபவங்கள் வழி
ஆற்றுப்படுத்தியவளைப் பார்த்துப்
பெருமிதத்தை வெளிப்படுத்துகிறேன்.
எதற்கும் வருத்தமின்றி
எப்போதும் சிரித்து உற்சாகமூட்டியவள்
இப்போதும் புன்னகைக்கத் தூண்டுகிறாள்.
அப்போது நிழல்போல உடனிருந்து
அகால மரணமடைந்தவள்
பார்வையிலிருந்தே மறைகிறாள்
திரையிடும் கண்ணீரால்.

- தி.சிவசங்கரி

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

அழைப்புகள்

அழைப்புகள் என்றுமே
எதையோ உணர்த்திக்கொண்டே இருக்கும்
சில நேரங்களில் விடுபட்ட அழைப்புகள்
சில நேரங்களில் தவறிய அழைப்புகள்
பல நேரங்களில் துண்டிக்கப்பட்ட அழைப்புகள்

என்றென்றைக்கும் அழைப்புகளால்
நமக்குத் தக்கவைக்கப்படும் உணர்வுகள்
எதை நமக்கு உணர்த்துகின்றன?

முகம் மறந்து
குரல் நினைவு மட்டும்
முகம் தெரிந்து
குரலுக்காக மட்டும்

நாம் என்றுமே
ஏதோ ஓர் அழைப்புக்காகக்
காத்துக்கொண்டேதான் இருக்கிறோம்!

ஈசலுக்காக மின்கம்பிகளில்
காத்திருக்கும் டைலான்போல...

 - ஜீவா


64p1_1526378603.jpg

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

சாமானியனின் அச்சம்

ஒரு தேநீர் பருகச் செல்லும் முன்பே
பாலில் கலப்படம்
தேநீர்த் தூளில் கலப்படம்
வெள்ளைச் சர்க்கரை ஆகாது
இஞ்சியைத் தோல் நீக்கி உபயோகி என
அத்தனை அச்சம் விழிக்கிறது.
கண்களை மூடிக்கொண்டு
ஒரு தேநீர் பருகவேண்டிய நிர்பந்தம்
சாமானியனுக்கு.
ஒரு கீரைக்கட்டு வாங்கப் போகும்போதும்
இயற்கை உரம், கெமிக்கல் பூச்சிக்கொல்லி
இப்படியான அச்சம்.
அமாவாசைக்கு வேறென்ன வாங்க?
ஞாயிறுக்கும் அப்படியே...
பிராய்லர் கறி, வளர்ப்பு நாட்டுக்கோழி,
ஹைபிரிட் மீன் அச்சம்,
கார்ப்பைட் கல் மாம்பழம்
செறிவூட்டிய தக்காளி என
அச்சம்... அச்சம்...
பிறகு எதைத்தான் அச்சமின்றித் தின்பது?
ஒரு கோப்பை மது?
அங்கும் தொங்கிய பிள்ளை
பேரச்சமாய் இருக்கிறது சாமானியனுக்கு.
சாமானியனை ஏன் இப்படி
அச்சப்படுத்த வேண்டும்?
சாமானியர்கள் அச்சத்தோடு இருப்பதில்
சுழல்கிறதா இரவும் பகலும்?
யார் இரவு அது?
அங்கே அச்சமின்றி
உழைப்பதும் உறங்குவதும் யார்?

- கோகுலா

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 26 APR, 2024 | 07:19 PM   கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களுக்கென சகல வசதிகளும் கொண்ட புதிய கட்டடத் தொகுதி இன்று (26) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திருகோணமலையில் திறந்துவைக்கப்பட்டு, அரச உத்தியோகத்தர்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.  இந்த கட்டடம் செந்தில் தொண்டமானின் 241 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.  கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்கள் தங்களின் பணிகளை உரிய முறையில் முன்னெடுக்க தங்களுக்கு போதுமான இட வசதிகள் இல்லை எனவும், தங்களுக்கு தளபாட வசதிகளுடன் கூடியதொரு கட்டடத்தொகுதியை கட்டமைக்கும் பணிகள் பொருளாதார நெருக்கடியால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால்  அக்கட்டடத்தை நிர்மாணித்துத் தருமாறு  ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் கோரிக்கை முன்வைத்திருந்தனர். அக்கோரிக்கையின் பிரகாரம், ஆளுநர் செந்தில் தொண்டமானின் நிதி ஒதுக்கீட்டில் இந்த கட்டடம் நிர்மாணிக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.  https://www.virakesari.lk/article/182051
    • 26 APR, 2024 | 05:13 PM     சுமார் 300 பேரைப் பலியெடுத்து மேலும் 500க்கும் அதிகமானவர்களை படுகாயங்களுக்குள்ளாக்கிய அனர்த்தமிகு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் ஐந்தாவது வருட நினைவுகூரலை கடந்த ஏப்ரல் 21இல் இலங்கை அனுஷ்டித்தது. நீடித்து நிற்கும் அதன் விளைவுகளை நாம் மனதிற்கொள்ள வேண்டியது அவசியமாகும். வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஏற்பட்ட வீழ்ச்சியின் விளைவான பொருளாதார தாக்கங்கள் நாட்டை தொடர்ந்து அச்சுறுத்திக்கொண்டேயிருக்கின்றன. மக்கள் இன்று பெரும் பொருளாதாரச் சவால்களுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  மக்களின் அக்கறைக்குரியவையாக இருக்கும் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாததன் விளைவாக அரசாங்க தலைமைத்துவத்தின் மீதான நம்பிக்கை சிதைவடைந்திருப்பது குறித்து தேசிய சமாதானப் பேரவை கவலையடைகிறது.  இந்த நிலைமை துரதிர்ஷ்டவசமாக ஆட்சி முறைமையின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விரக்தியடையவும் மேலும் அநீதிகளுக்கும்  வழிவகுத்திருக்கிறது.  உத்தியோகபூர்வமான பல விசாரணைகள் நடத்தப்பட்ட போதிலும், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு வழிவகுத்த நிகழ்வுகள் தொடர்பிலான கேள்விகள் தொடரவே செய்கின்றன. பொறுப்பற்ற முறையில் தங்களது கடமையை செய்யத் தவறியவர்களில் சிலர் அதற்கான விளைவுகளைச் சந்தித்தபோதிலும், மூடிமறைப்புகள் இடம்பெற்றிருக்கின்றன என்ற உணர்வு மக்கள் மத்தியில் தொடரவே செய்கிறது. தகவல்கள் மறைத்து வைக்கப்பட்டதாக வெளிவருகின்ற கதைகள் உண்மையைக் கண்டறிவதற்கு புதிய உறுதிப்பாட்டுக்கான தேவையை மேலும் வலியுறுத்துகின்றன.  அடுத்தடுத்து பதவிக்கு வந்த இலங்கை அரசாங்கங்கள் உண்மையை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தவறியதன் காரணமாகவே ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை சான்றுகளைச் சேகரிக்கும் அதன் பிரிவை தொடர்ந்து செயற்படுத்தவேண்டும் என்ற நிலைப்பாடு நியாயப்படுத்தப்படுகிறது. ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் பலியானவர்களை புனிதர்களாக அல்லது தியாகிகளாக திருநிலைப்படுத்துவதற்கு நாட்டின் கத்தோலிக்க திருச்சபை மேற்கொள்கின்ற முயற்சியின் நோக்கம் படுகொலைகள் பற்றிய நினைவை தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் உயிர்த்துடிப்புடன் வைத்திருப்பதேயாகும். இதற்கு சர்வதேச முன்னுதாரணங்கள் இருக்கின்றன. 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் நிகழ்வுகளை நாம் சிந்தித்துப் பார்க்கின்றபோது இலங்கையின் வரலாற்றை கறைபடுத்திய வன்செயல் மற்றும் அநீதியின் பரந்த பின்புலத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். 1989ஆம் ஆண்டில் உச்சநிலைக்குச் சென்ற ஜே.வி.பி.யின் கிளர்ச்சி தொடக்கம் 2009 மே மாதம் கொடூரமான முறையில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட உள்நாட்டுப்போர் வரை மோதல்களினதும் வன்முறைகளினதும் காயங்கள் ஆழமானவையாக இருக்கின்றன. நல்லிணக்கத்துக்கான எமது தேடலில் எமது கடந்த காலத்தின் வேதனைமிகு உண்மைகளுக்கு முகங்கொடுத்து நீதி, பொறுப்புக்கூறல் மற்றும்  குணப்படுத்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தை கட்டியெழுப்பப் பாடுபடவேண்டும். முன்னோக்கிச் செல்ல வேண்டுமானால், நீதிக்கான தேடுதல் பக்கச்சார்பான நலன்களையும் தேர்தல் ஆணைகளையும் கடந்தவையாக இருக்கவேண்டியது அவசியமாகும். எதிர்வரும் தேர்தல்களும் அரசாங்க மாற்றமும் பொறுப்புக்கூறல் மற்றும்  நல்லிணக்கத்தை நோக்கிய முயற்சிகளுக்கு புதுச்சக்தியை கொடுப்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. தற்போதைய அரசாங்கத்தின் தலைமைத்துவமும் எதிர்கால அரசாங்கத்தின் தலைமைத்துவமும் சுயநலன்களின் நெருக்குதல்களில் இருந்து விடுபட்டு நீதிக்கும் வெளிப்படைத்தன்மைக்குமான தேடலுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும். https://www.virakesari.lk/article/182046
    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 05:02 PM   கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலைப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (26) கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்களுடன் கூடிய ஆடை ஒன்றும்  இனங்காணப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.  தொடர்ந்து பொலிசார் மாவட்ட நீதவானின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமில் இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்று குறித்த மனித எச்சங்கள் மற்றும் மனித எச்சம் இனங்காணப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். தொடர்ந்து குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் மூலம் கண்ணிவெடி அகற்றும் பணியை முன்னெடுக்குமாறும், கிடைக்கப் பெறுகின்ற எச்சங்கள் மற்றும் தடயங்கள் தொடர்பாக பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு  கொண்டு செல்லுமாறும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கிடைக்கப்பெற்ற மனித எச்சங்களை சட்ட வைத்திய அதிகாரி மூலம் பரிசோதனைக்கு உட்படுத்த அனுப்பி வைக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.  இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை சம்பவ இடத்தினை மீண்டும் சென்று பார்வையிடுவதாகவும் நீதவான் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182042
    • ஐபிஎல் 2024: பேட்ஸ்மேன்களின் காட்டடியால் கலங்கும் பந்துவீச்சாளர்கள் - டி20இல் நிகழும் மாற்றங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இங்கிலாந்து அணியின் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் ஜோஸ் பட்லர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மூன்று இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்கள் அடித்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், அயாஸ் மேமன் பதவி, கிரிக்கெட் எழுத்தாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் பணக்கார கிரிக்கெட் போட்டியான இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) இந்த ஆண்டு பேட்டிங்கில் அபாரமான வாண வேடிக்கையைப் பார்க்க முடிகிறது. நாடு முழுவதும் உள்ள மைதானங்களில், பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையைக் காற்றில் பறக்க விடுகிறார்கள். இரக்கமின்றி பெரிய ஷாட்களை அடிக்கிறார்கள், கிட்டத்தட்ட ஒவ்வொரு போட்டியையும் சிக்ஸர் அடிக்கும் திருவிழாவாக மாற்றுகிறார்கள். இதனால், பந்துவீச்சாளர்கள் வெலவெலத்துப் போயுள்ளனர். டி20 கிரிக்கெட் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என நிபுணர்களும், ரசிகர்களும் குழம்பிப் போயுள்ளனர். நாம் இதுவரை பார்த்த அதிரடி பேட்டிங்கின் சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். செவ்வாய்க்கிழமை இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னெள சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான சீசனின் 39வது போட்டிக்குப் பிறகு, மொத்தம் 1,191 பவுண்டரிகள் மற்றும் 686 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் 2023இல் மொத்தம் 2,174 பவுண்டரிகள் மற்றும் 1,124 சிக்ஸர்கள் பதிவு செய்யப்பட்டன. நடப்பு சீசன் பாதிக்கு மேல் எஞ்சியுள்ள நிலையில் கடந்த ஆண்டின் புள்ளிவிவரங்கள் எளிதில் முறியடிக்கப்படும் என்று எதிர்பார்ப்பது நியாயமானதே. பவுண்டரிகள், சிக்ஸர்கள் அதிகரித்திருப்பது அணியின் ஸ்கோரையும் அதற்கேற்ப உயர்த்தியுள்ளது.   எளிதில் முறியடிக்கப்படும் சாதனைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டி20 வரலாற்றில் அதிக பவர்பிளே ஸ்கோரை பதிவு செய்ய டிராவிஸ் ஹெட் உதவினார். ஆரம்பக்கால ஐபிஎல் சீசன்களில், 150-160 ரன் என்பது சவால் கொடுக்கும் ஸ்கோராக கருதப்பட்டது. ஆனால் இன்று பெரும்பாலும் 10 போட்டிகளில் 8இல் இது போன்ற ஸ்கோர் அடித்த அணிகள் தோல்வியடைகின்றன. ஸ்கோரிங் முறைகளில் ஏற்பட்ட மாற்றத்தை விளக்குவதற்கு இந்த உதாரணத்தைப் பார்ப்போம். 2007ஆம் ஆண்டு தொடக்க டி20 உலகக் கோப்பையில் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் யுவராஜ் சிங் ஆறு சிக்ஸர்களை விளாசினார். அப்போது இந்தியா மொத்தம் 218 ரன்கள் எடுத்தது. அந்த நேரத்தில் இது ஒரு பெரிய சாதனை. இருப்பினும் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அணி 200 ரன்கள் அடிப்பது என்பது வாடிக்கையாகிவிட்டது. செவ்வாய்க்கிழமை வரை இந்த ஐபிஎல் சீசனில் நடந்து முடிந்துள்ள 39 ஆட்டங்களில் அணிகள் 19 முறை 200 ரன்களை கடந்துள்ளன. மொத்த ஸ்கோர் ஒன்பது முறை 400 ரன்களை தாண்டியது. வியக்க வைக்கும் வகையில் இரண்டு போட்டிகளில் இரு அணிகளின் மொத்த ஸ்கோர் 500 ரன்களை தாண்டியுள்ளது. சுவராஸ்யமான தகவல்கள் இன்னும் முடியவில்லை. இந்த சீசனில் சராசரி ரன் விகிதம் ஓவருக்கு 10. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சீசனின் தொடக்கத்தில் இருந்தே சாதனைகளை முறியடிக்கும் ஓவர் டிரைவில் உள்ளனர். டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான முதல் பவர்பிளேவில் (ஆறு ஓவர்கள்) முன் எப்போதும் இல்லாத வகையில் 125 ரன்களை குவித்தனர். இது ஒரு ஓவருக்கு 20.83 ரன்கள் என்ற வியக்க வைக்கும் சாதனை. இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணி, மூன்று முறை 250 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக 287 ரன்கள் எடுத்ததும் இதில் அடங்கும். இதுவொரு ஐபிஎல் சாதனை. இந்தப் போக்கு தொடருமானால் இந்த சீசனிலேயே 300 ரன்கள் என்ற சாதனை படைக்கப்படலாம். டி20 கிரிக்கெட், இயல்பிலேயே அதிரடி ஆட்டத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. பேட்டிங்கிற்கு நிலையான ஸ்ட்ரோக் ஆட்டம் தேவைப்படுகிறது. அங்கு ஒரு டாட் பால்கூட ஏற்றுக்கொள்ள முடியாதது. பேட்ஸ்மேன்கள் ஒவ்வொரு பந்திலும் அதிகபட்ச ரன் எடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆகவே மட்டையை வீச தடையற்ற சுதந்திரம் வழங்கப்படுகிறது. இந்த உத்தியால் ஆபத்துகள் இருந்தாலும், பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களால் உந்தப்பட்ட ரன் குவிப்பு இந்த சீசனில் ஒரு விதிவிலக்காகவே உள்ளது.   இத்தகைய அதிரடி பேட்டிங்கிற்கு காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் அஷூதோஷ் ஷர்மா 28 பந்துகளில் 61 ரன்கள் குவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். எளிதான ஆடுகளங்கள் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. உலகமெங்கும் ஒயிட்-பால் கிரிக்கெட், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20க்கான ஆடுகளங்கள் எளிதாக விளையாடக் கூடியதாகவே தயார் செய்யப்படுகின்றன. டி20 கண்கவர் ஆக்‌ஷன் வாக்குறுதியைக் கொண்டிருப்பதால், ரசிகர்கள், ஒளிபரப்பாளர்கள் மற்றும் ஸ்பான்சர்களுக்கு அதிரடி ஷாட்கள் முக்கிய அம்சமாகிவிட்டன. இதற்காகவே எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. மற்ற டி20 லீக்குகளை போல் அல்லாமல் ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு உகந்ததாக இருப்பதை ஐபிஎல் உறுதி செய்கிறது. இருப்பினும் ஃப்ளாட் பிட்சுகள் மட்டுமே பந்துவீச்சாளர்கள் எதிர்கொள்ளும் ஒரே தடை அல்ல. பேட்டர்கள் தற்போது நல்ல உடல் தகுதியுடனும், நல்ல வலுவுடனும், சாகசங்களுக்குத் துணிந்தவர்களாகவும் உள்ளனர். குறிப்பாக இளம் வீரர்கள் தங்கள் ஆரம்ப ஆண்டுகளிலேயே டி20இல் இழுக்கப்படுகின்றனர். அவர்கள் அதிக ரிஸ்குகளை எடுக்கின்றனர். போட்டிகளில் வெற்றிபெற, அற்புதமான சாதனைகளைப் படைக்க முயற்சி செய்கிறார்கள். போட்டியை எதிர்த்து சமாளிக்கவும், அதிக அங்கீகாரம் மற்றும் வெகுமதிக்காகவும் அவர்கள் இதைச் செய்கின்றனர். சில விதிமுறை மாற்றங்களும் பந்து வீச்சாளர்களின் முக்கியத்துவத்தைக் குறைப்பதில் பங்களித்துள்ளன. உதாரணமாக இந்த ஐபிஎல் சீசனில் இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட் அறிமுகமாகியுள்ளது. சரியான நேரத்தில் ஒரு குறிப்பிட்ட வீரரைக் கொண்டு வருவதற்கு பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டன்களுக்கு இது வாய்ப்பளித்துள்ளது. சூழலுக்கு ஏற்ப ஆட்டத்தை மாற்றிக்கொள்ள இதுவொரு சுவாரஸ்யமான வாய்ப்பைக் கொடுக்கிறது. மேலும் ஒரு பந்து வீச்சாளரைக்கூட இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட்டாக கொண்டு வர முடியும். ஆனால் இதுவரையிலான போக்கு பேட்டிங் வீரர்களுக்கு சாதகமாகவே உள்ளது. கிரிக்கெட் ஒரு பேட்டரின் விளையாட்டு என்று சொல்லப்படுகிறது. ஆனால், மட்டைக்கும் பந்துக்கும் இடையே அதிகரித்து வரும் இந்த இடைவெளி டி20க்கு நல்லதா என்பதுதான் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் நடக்கும் பரபரப்பான விவாதம். இந்தச் சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பேட்டிங் ஜாம்பவானுமான சுனில் கவாஸ்கர் பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவு அளித்துள்ளார். "இது இந்த அளவுக்கு ஒருதலைப்பட்சமாக இருந்தால் அது போட்டியின் மீதான ஆர்வத்தைக் குறைத்துவிடும்," என்று அவர் கூறுகிறார்.   பந்துவீச்சாளர்களுக்கு சவாலான நிலை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆண்ட்ரே ரசல் அடிக்கும் ஒரு ஷாட். வழக்கமான 75 கெஜத்தில் இருந்து 65 அல்லது அதற்கும் குறைவாக பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டது கவாஸ்கரின் கோபத்திற்கு முக்கிய காரணம். "ஒரு பந்து வீச்சாளர் தன் பந்து மூலம் பேட்ஸ்மேனை தவறு செய்யத் தூண்டுகிறார். ஆனால் பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டதால் அது பந்துவீச்சாளருக்கு எதிராகிவிடுகிறது. கேட்ச் ஆக மாற வேண்டிய பந்து சிக்ஸருக்கு சென்றுவிடுகிறது,” என்று அவர் கடுப்புடன் கூறினார். நவீன பேட்டுகளின் வல்லமை காரணமாகத் தவறாக அடிக்கப்படும் ஷாட்டுகளில்கூட பந்து கணிசமான தூரம் பயணிக்கிறது. இது கவாஸ்கரின் கவலையை நியாயப்படுத்துகிறது. முன்னாள் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன், பந்து வீச்சாளர்களின் திறமை மற்றும் மனோபாவத்திற்கு சவால் விடும் சூழ்நிலையாக இதைப் பார்க்கிறார். "பௌலர்கள் நான்கு ஓவர்களில் ஹீரோக்களாக மாறுவதற்கான வாய்ப்பும் ஊக்கமும் உள்ளது" என்கிறார் ஸ்டெய்ன். டி20 ஆட்டத்தின் மனநிலை மரபுவழியில் இருந்து வியத்தகு முறையில் மாறியுள்ளது. இந்த மாற்றம் தொடர்கிறது. எனவே கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் என்று அனைவருமே ஆற்றல்மிக்கவர்களாக, செயல்திறன் கொண்டவர்களாக, ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஆனால் கோல்ஃப் மற்றும் பேஸ்பாலின் சங்கமம் போல டி20 கிரிக்கெட் மாறாமல் இருக்க, பேட் மற்றும் பந்தின் சமநிலை பராமரிக்கப்பட வேண்டும். https://www.bbc.com/tamil/articles/c1038g85e13o
    • டி.ஆர்.பாலுவை விமர்சித்த யூடியூபர் குடும்பத்துக்கு மிரட்டல் என குற்றச்சாட்டு - திமுக தரப்பு விளக்கம் என்ன? பட மூலாதாரம்,சிவராமகிருஷ்ணன் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஸ்ரீபெரும்புதூர் திமுக நிர்வாகி ராமலிங்கத்தின் மகன் சிவராமகிருஷ்ணன் ஜப்பானில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தனது சொந்த ஊரான ஸ்ரீபெரும்புதூரில், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வளர்ச்சித் திட்டங்கள் எதையும் நடைமுறைப்படுத்தவில்லை எனக் குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனால் அவருடைய குடும்பத்தாருக்கு திமுகவினரே‌ மிரட்டல் விடுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ் பிபிசி தமிழிடம் பேசியபோது, இந்த விவகாரம் குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என்றும் சிவராமகிருஷ்ணனின் தந்தை ராமலிங்கத்துடன் தனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது எனவும் விளக்கம் அளித்தார். என்ன நடந்தது? ஜப்பானில் பணியாற்றும் சிவராமகிருஷ்ணன் ஜப்பான் தமிழ் ப்ரோஸ் என்ற யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.‌ அதில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர், “அனைவரும் ஸ்ரீபெரும்புதூர் பிரம்மாண்டமாக வளர்ந்திருப்பதாக நினைக்கிறார்கள். வளர்ந்துள்ளது என்றால் என்ன‌ பொருள்? வேலை வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், மக்களுக்குத் தரமான வாழ்க்கை இருக்கிறதா? இத்தனை பேர் வாழும் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பூங்கா கிடையாது. சாலை போட இந்த அரசுக்குத் தெரியுமா? பத்து ஆண்டுகளாகப் பல நூறு கோடி செலவு செய்து பாதாள சாக்கடை கட்டப்பட்டு வருகிறது. அது செயல்முறைக்கு வரும்போதுதான், அந்தத் திட்டம் எப்படி இருக்கிறது என்று தெரியும். (டி.ஆர்‌.பாலு) ஸ்ரீபெரும்புதூரில் என்ன செய்து விட்டார் என்று இரண்டாவது முறையாக அவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரியவில்லை,” என்று பேசியிருந்தார். அவர் 3 லட்சம் பின் தொடர்பவர்கள் கொண்ட தனது யூ டியூப் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டார்.   பட மூலாதாரம்,திமுக ஸ்ரீபெரும்புதூர் வார்டு அவைத்தலைவர் ராமலிங்கம் இந்த வீடியோவை வெளியிட்டதற்காக திமுக நகரச் செயலாளரும், ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சித் தலைவர் சாந்தியின் கணவருமான சதீஷ் தன்னை மிரட்டியதாக, ஸ்ரீபெரும்புதூர் இரண்டாவது வார்டு அவைத் தலைவராக உள்ள ராமலிங்கம் கூறுகிறார். இந்த விவகாரம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “கடந்த 12 ஆண்டுகளாக பாதாள சாக்கடைப் பணிகள் நடைபெறுகின்றன. நானும் என் மனைவியும் ஒருமுறை தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து பலத்த காயமடைந்தோம். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, என் மகன் ரூ.8 லட்சம் சிகிச்சைக்காக செலவு செய்தான். பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள் எனப் பலரும் அதில் விழுகிறார்கள்," என்று கூறினார். மேலும், அந்த ஆதங்கத்தில் தனது மகன் வீடியோவை வெளியிட்டதாகவும் அதற்காக தாம் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டை இடித்துவிடுவதாக சதீஷ் மிரட்டியதாகவும் கூறினார். பட மூலாதாரம்,YOUTUBE நான்கு நாட்கள் முன்பு “DMK Sriperumbudur MP டி.ஆர் பாலு UPகள் மிரட்டல்” என்று மற்றொரு வீடியோவை வெளியிட்டிருந்தார். முதல் வீடியோவில் தாம் பேசியதற்காக ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி நகர திமுக செயலாளர் சதீஷ் தனது தந்தையை மிரட்டியதாக அதில் கூறியிருந்தார். அந்த வீடியோவில், “ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் என்ன பிரச்னைகள் இருக்கின்றன என்பது இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலுவின் காதுகளுக்கு எட்ட வேண்டும் என்றுதான் காணொளி வெளியிட்டிருந்தேன். அதற்காக எனது தந்தையை மிரட்டியுள்ளனர். நான் காணொளி வழியாக வெளிப்படுத்திய பிரச்னைகளை வருங்காலத்தில் நிவர்த்தி செய்வோம் என்று கூறியிருக்கலாம். ஆனால் அதை விட்டு, மிரட்டுவது எந்த விதத்தில் நியாயம்? இப்போது என்னை சீண்டிவிட்டார்கள், நான் சும்மா விடமாட்டேன்," எனப் பேசியுள்ளார். மேலும், "ஸ்ரீபெரும்புதூர் பஞ்சாயத்து கடந்த மூன்று ஆண்டுகளில் முறைகேடுகளைச் செய்துள்ளனர். இதுவரை என்னென்ன திட்டங்கள், எவ்வளவு செலவு செய்துள்ளனர் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் முழு தகவல்களையும் வெளியே கொண்டு வரப் போகிறேன். நான் எந்தக் கட்சி சார்பாகவும் பேசவில்லை. பெரிய கட்சிகள் என்று கூறுகிறார்கள், அவர்களின் முகத் திரைகள் கிழிக்கப்பட வேண்டும். நான் என்ன திமுகவுக்கு எதிரியா? நாளை பாஜக, அதிமுக, நாம் தமிழர் என யார் ஆட்சிக்கு வந்தாலும் கேள்வி கேட்கும் சாதாரண மனிதன். பெரிய தலைவர்கள் தங்களுக்குக் கீழ் உள்ளவர்களுக்குக் கடிவாளம் போடத் தவறுவதால்தான் திமுக மீது இவ்வளவு அவபெயர் ஏற்படுகிறது. அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் லஞ்சம் ஊழல் இருந்தது. ஆனால் அது மக்களை நேரடியாகப் பாதிக்கவில்லை. ஆனால், இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, கல், மண், ஜல்லி என எதைத் தொட்டாலும் லஞ்சம்,” என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார்.   பட மூலாதாரம்,YOUTUBE மேலும் அதே வீடியோவில் தனது தந்தை வீடியோ கால் மூலம் தன்னிடம் பேசியதை வெளியிட்டிருந்தார் சிவராமகிருஷ்ணன். அதில், “செயலாளர் சதீஷ் என்னை அழைத்து, 'எப்படி உன் மகன் இப்படி வீடியோ போடலாம், நீ எப்படி வீட்டு வரி, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு வாங்குவாய் எனப் பார்க்கிறேன். அனைத்துக்கும் என்னிடம்தான் வர வேண்டும், எப்படி வாங்குகிறாய் எனப் பார்க்கிறேன்' என்று கூறியதாக" ராமலிங்கம் பேசியிருந்தார். திமுக உட்பட எந்தக் கட்சியில்தான் இல்லை என்று கூறிய சிவராமகிருஷ்ணன் பிபிசி தமிழிடம் பேசியபோது, “ஸ்ரீபெரும்புதூரில் பல சுற்றுச்சூழல் பாதிப்புகள் உள்ளன. அங்குள்ள நெடுஞ்சாலையை நான்குவழிச் சாலையிலிருந்து ஆறு வழிச் சாலையாக மாற்றும் திட்டம் நடைபெறுகிறது. வயலுக்குச் செல்ல நாங்கள் இந்த நெடுஞ்சாலையைக் கடந்து செல்ல வேண்டும். எனவே ஒரு மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை கட்டித் தருமாறு கேட்டோம். அதை இன்னும் செய்யவில்லை. நான் காணொளியில் கூறியது என் கருத்து. ஆனால், எனது அப்பாவை மிரட்டியுள்ளனர். எங்களுக்கு நான்கு வீடுகள் உள்ளன. அதில் ஒன்றில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் கிடைக்காது என்றும், வீடுகளை இடித்து விடுவோம் என்றும் தொடர்ந்து பலரது முன்னிலையில் அவதூறாகப் பேசியுள்ளனர். இதனால் எனது தந்தை மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார்,” என்றார் சிவராமகிருஷ்ணன்.   பிபிசி தமிழிடம் பேசிய ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ், “இந்த விவகாரம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது, நண்பர்கள் கூறித்தான் அந்த வீடியோவையே பார்த்தேன். ராமலிங்கம் கட்சி உறுப்பினர்தான். இதே பகுதியில், செல்வபெருமாள் தெருவில்தான் வசிக்கிறார். ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்தார். வாக்குப்பதிவு நாளில் அவரை நான் பார்த்தபோது 'வாக்குப்பதிவு நன்றாக போய்க் கொண்டிருக்கிறது' என்று கூறினார். அவருடன் எனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது. அவர் நிலத்தில் அவர் வீடு கட்டினால் நான் என்ன செய்து தடுக்க முடியும்?” என்று விளக்கம் அளித்தார். https://www.bbc.com/tamil/articles/cw8qd458jjgo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.