Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்கள் மீது குடும்பச் சுமையை சுமத்திய போர் எனும் பேயாட்டம்

Featured Replies

பெண்கள் மீது குடும்பச் சுமையை சுமத்திய போர் எனும் பேயாட்டம்

 
 
பெண்கள் மீது குடும்பச் சுமையை சுமத்திய போர் எனும் பேயாட்டம்
 

இலங்­கைத் தீவில் நடை பெற்ற ஆயுதப் போர் 2009 ஆம் ஆண்டு முடி­வுக்கு வந்­தா­லும், அது நாட்­டு­மக்­கள் மத்­தி­யில் ஏற்­ப­டுத்தி வைத்­துள்ள ஆழ­மான வடுக்­கள் என்­றும் மறை­யா­தவை.

பொரு­ளா­தார, உள­வி­யல் மற்­றும் சமூக ரீதி­யாக என்று பல்­வேறு நெருக்­க­டி­க­ளின் மத்­தி­யி­லேயே போரால் வித­வை­க­ளாக்­கப்­பட்­ட­வர்­கள் இன்று வாழ்­கின்­ற­னர்.

போர், வன்­முறை, அசா­தா­ரண கார­ணங்­கள், இயற்கை இடர்கள் என்­ப­வற்­றால் உல­கம் முழு­வ­தும் கோடிக்­க­ணக்­கான பெண்­கள் கண­வன்­மாரை இழந்து குடும்­பப் பொறுப்பை ஏற்­றுள்­ள­னர். இலங்­கை­யும் இதற்கு விதி­வி­லக்­கல்ல!

குறித்த பிரி­வுக்­குள் அடங்­கும் இந்­தப் பெண்­க­ளின் இன்­னல்­க­ளைத் துடைக்­கும் நோக்­கில், குடும்­பங்­க­ளுக்கு தலைமை தாங்­கும் பெண்­கள் எதிர்­நோக்­கும் பிரச்சினை­கள் மற்­றும் அவர்­க­ளது ஆற்­றலை மேம்­ப­டுத்­தல் தொடர்­பாக தனி­யார் துறை, ஊட­கம் மற்­றும் சிவில் சமூ­கம், பாலி­னம் ஆகி­ய­வற்­றின் ஊடாக அர­ சி­டம் கோரிக்­கை­களை முன்­வைக்­கும் வகை­யில், போர் இடம்­பெற்ற பிர­தே­சங்­க­ளில் 10 ஆண்­டு­க­ளுக்கு மேல் தள மேம்­பாட்­டுப் பயிற்­சி­யா­ள­ரா­கச் செயற்­பட்ட அனு­ப­வம் கொண்ட ஆய்­வா­ள­ராக ராதிகா ஹெட்­டி­யா­ராச்சி திகழ்­கி­றார். ஆயி­ரக்­க­ணக்­கான வித­வைப் பெண்­களை நேர­டி­யாக சந்­தித்து அவர்­க­ளது பிரச்­சி­னை­க­ளை­யும் வௌிக்­கொண்டு வந்­துள்­ளார்.

மலைக்க வைக்கும் விதவைகள் எண்ணிக்கை

போரால் 90ஆயிரம் பெண்­கள் வித­வை­கள் ஆக்­கப்­பட்­டுள்­ள­னர் என்று மக­ளிர் விவ­கார அமைச்சு குறிப்­பிட்­டுள்­ளது. கிழக்­கில் சுமார் 49ஆயிரம் பெண்­கள் வித­வை­க­ளாக்­கப்­பட்­டுள்­ள­து­டன் வடக்­கில் சுமார் 40ஆயிரம் பேர் வித­வை­க­ளாக்­கப்­பட்­டுள்­ள­னர்.

போர்ப் பாதிப்­பால் வித­வை­க­ளாக்­கப்­பட்ட இந்­தப் பெண்­க­ளில் 12ஆயிரம் பேர் 40 வயதை அண்­மித்­த­வர்­கள் என்­ப­தும், 8ஆயிரம் பேருக்கு மூன்று வயது பிள்­ளை­கள் இருப்­ப­தும் அர­சின் கணக்­கெ­டுப்பு மூலம் தெரிய வந்­துள்­ளது.

90 ஆயி­ரம் வித­வைப் பெண்­கள் தமது விவ­ரங்­களை அர­சி­டம் பதிவு செய்­தி­ருக்­கின்­ற­னர். இது­த­விர பதிவு செய்­யாத வித­வை­க­ளும் உள்­ள­னர். பெரும்­பா­லான சிறு­வர்­கள் மற்­றும் இளை­ஞர்­கள், தற்­போது உயர்­கல்­விக்கு வழி­யின்­றித் தடு­மா­று­கின்­ற­னர்.

கிளி­நொச்சி மாவட்­டத்­தின்

கிளி­நொச்சி மாவட் டத்­தில் மீள்­கு­டி­ யே­றி­யுள்ள 43 ஆயி­ரம் வரை­யான குடும்­பங்­க­ளில் போர் கார­ண­மாக வித­வை­க­ளாக்­கப்­பட்ட ஆயிரத்து 717 பேரும், போர் தவிர்ந்த கார­ணங்­க­ளால் 4 ஆயிரத்து 445 பேர் வித­வை­க­ளா­க­வும் காணப்­ப­டு­கின்­ற­னர் என மாவட்­டச் செய­ல­கப் புள்ளி விவ­ ரத்­தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்­க­மைய, கரைச்­சிப்­பி­ர­தேச செய­லா­ளர் பிரி­வின் கீழ் 951 வித­வை­க­ளும், கண்­டா­வளை பிர­தேச செய­லா­ளர் பிரி­வின் கீழ் 349 வித­வை­க­ளும் புந­கரி பிர­தேச செய­லா­ளர் பிரி­வின் கீழ் 199 வித­வை­க­ளும் பச்­சி­லைப்­பள்ளி பிர­தேச செய­லா­ளர் பிரி­வின் கீழ் 218 வித­வை­க­ளும் காணப்­ப­டு­கின்­ற­னர்.

இது­த­விர, கரைச்சி, கண்­டா­வளை, பச்­சி­லைப்­பள்ளி மற்­றும் புந­கரி ஆகிய நான்கு பிர­தேச செய­லா­ளர் பிரி­வு­க­ளி­லும் போர் தவிர்ந்த கார­ணங்­க­ளால் 4 ஆயிரத்து 455 வித­வை­கள் காணப்­ப­டு­கின்­ற­னர் என மாவட்ட செய­ல­கப்­புள்ளி விவ­ரத்­தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் புள்ளி விவ­ரங்­கள்

முல்­லைத்­தீவு மாவட்­டம், மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள், வித­வை­கள் மற்­றும் போசாக்­குக் குறை­பாடு உள்­ள­வர்­கள் அதி­க­மாக வாழும் மாவட்­டம் என ஐக்­கிய நாடு­கள் சபை அடை­யா­ளம் கண்­டுள்­ளது.

ஐக்­கிய நாடு­கள் சபை உலக வங்­கி­யு­டன் இணைந்து மேற்­கொண்ட ஆய்­வின் பின்­னர் வௌியிட்­டுள்ள அறிக்­கை­யில் இந்த தக­வல் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. குறித்த அறிக்கை இலங்கை அர­சி­டம் கைய­ளிக்­கப்­பட உள்­ளது.

வடக்கு கிழக்­கில் நடந்த போரில் வரை முல்­லைத்­தீவு மாவட்­டமே அதி­க­ள­வில் பாதிக்­கப்­பட்­டது என்பது வெளிப்படை போர் கார­ண­மாக அதி­க­ள­வில் கொல்­லப்­பட்ட ஆண்­க­ளும் சிறு­வர்­க­ளும் முல்­லைத்­தீவு மாவட்­டத்தை சேர்ந்­த­வர்­கள் எனக் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

குடும்ப தலை­வ­ராக ஆண் இல்­லாமை, பெண்­கள் குடும்­பத்­திற்கு தலைமை தாங்­கிச் செயற்­பட்டு வரு­வது, வாழ்­வா­தா­ரப் பிரச்­சினை என்­பவை கார­ண­மாக முல் லைத்­தீவு மக்­கள் பெரும் வறுமை நிலையை எதிர்­நோக்கி வரு­கின்­ற­னர்.

இதன் கார­ண­மா­கவே அங்கு போசாக்­கின்­மை­யும் அதி­க­ரித்­துள்­ள­தாக தொண்டு நிறு­வ­னங்­கள் கூறு­கின்­றன.

இலங்கையில் தமிழர்கள் சிறு­பான்­மை­ யி­ன­ராக இருக்­கும் அதே­வேளை, பெரும்­பான்­மை­யான வித­வை­கள் தமிழர்களாக இருப்­ப­தைக் காட்­டும் புள்­ளி ­வி­வரங்­கள் எண்ணற்ற செய்­தி­களை அழுத்­த­மாக எடுத்­து­ரைக்­கின்­றன.

பிரிட்டன் வௌியு­றவு மற்­றும் பொது­ந­ல­வா­யப்  பணி­ய­கத்­தின் அறிக்கை!

போரின் போது கண­வன்­மாரை இழந்த 90 ஆயி­ரம் வரை­யான பெண்­கள் இலங்­கை­யில் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளில் வாழ்கின்றனர் என்று பிரிட்டன் மற்­றும் பொது­ந­ல­வா­யப் பணி­ய­கத்­தால் வௌியி­டப்­பட்ட அறிக்­கை­ ஒன்றி்ல் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இலங்­கை­யில் காணா­மல் போன­வர்­கள், கடத்­தல் சம்­ப­வங்­கள் என்­பவை 2011ஆம் ஆண்­டின் இறு­தி­யில் அதி­க­ரித்­துக் காணப்­பட்­ட­தாக பிரிட்டன் அயலுறவுத்தறைச் செய­லர் வில்­லி­யம் ஹேக் அண்­மை­யில் வௌியிட்ட 2011 ஆம் ஆண்­டின் நில­வர அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளார்.

கடந்த டிசெம்­ப­ரில், இலங்­கை­யின் வடக்­குப் பகு­தி­யில் பய­ணித்­துக் கொண்­டி ­ருந்த அர­சி­யற் செயற்­பாட்­டா­ளர்­கள் இரு­வர் காணா­மல் போயுள்­ள­னர். அத்­து­டன் 2010 இல் காணா­மல் போன கேலிச் சித்­தி­ர­வ­டி­வ­மைப்­பா­ள­ரான பிர­கீத் எக்­னெ­லி­கொ­ட­வின் வழக்கு விசா­ரணை உள்­ள­டங்­க­லாக, கடந்த காலங்­க­ளில் காணா­மல்­போ­னோர் தொடர்­பாக எந்­த­வொரு விசா­ர­ணை­க­ளும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை.

இலங்கை அர­சால் நிய­மிக்­கப்­பட்ட கற்­றுக் கொண்ட பாடங்­கள் மற்­றும் நல்­லி­ணக்க ஆணைக்­குழு, யுத்த மீறல்­கள் தொடர்­பாக முழு­மை­யான விசா­ர­ணை­கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை எனச் சுட்­டிக்­காட்­டிய குறிப்­பிட்ட சில சம்­ப­வங்­கள் தொடர்­பாக, இலங்கை பொலி­ஸார் எந்­த­வொரு முறைப்­பாட்­டை­யும் பதிவு செய்ய மறுப்­ப­தா­க­வும் பிரிட்டன் அயலுறவுத் துறையால் வௌியி­டப்­பட்ட அந்த அறிக்­கை­யில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

இலங்­கை­யின் வடக்­குப் பகு­தி­யில் நிலை­கொண்­டுள்ள படை­யி­ன­ரின் நட­ மாட்­டம், அங்­குள்ள பெண் களின் பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லாக உள்­ள­தாக கற்­றுக் கொண்ட பாடங்­கள் தொடர்பில், நல்­லி­ணக்க ஆணைக்­குழு தனது அறிக்­கை­யில் குறிப்­பிட்­டுள்­ளது.

ஆனால், இலங்கை அரசு வடக்­கில் குவிக்­கப்­பட்­டுள்ள பாது­காப்­புப் படை­யி­ன­ரின் எண்­ணிக்­கை­யைக் குறைப்­பது தொடர்­பில் எந்­த­வொரு சிறு முன்­னேற்­றத்­தைக் கூடக் காண்­பிக்­க­வில்லை என அந்த அறிக்­கை­யில் மேலும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.
இலங்­கை­யின் வடக்கு மற்­றும் கிழக்­குப் பகு­தி­க­ளில் வாழும் பெண்­க­ளின் பாது­காப்பு தொடர்­பில் அனைத்­து­லக நெருக்­க­டி­கள் குழு­வும் தனது கவ­லையை வௌியிட்­டுள்­ளது.

இலங்­கை­யில் வாழும் பெண்­க­ளின் அபி­வி­ருத்தி தொடர்­பாக குறிப்­பிட்­டுள்ள பிரிட்டன் அறிக்கை, உலக பொரு­ளா­தார மன்­றத்­தால் மேற்­கொள்­ளப்­பட்ட பூகோள பால்­நி­லைச் சுட்­டி­யில் 16 ஆவது இடத்­தி­லி­ருந்த இலங்கை, தற்­போது 31 ஆவது இடத்­துக்­குப் பின்­தள்­ளப்­பட்­டுள்­ள­தா­க­வும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

இலங்­கை­யில் 2011 முழு­மை­யும் மனித உரி­மை­கள் செயற்­பாட்­டா­ளர்­க­ளுக்கு அச்­சு­றுத்­தல் விடுக்­கப்­பட்­ட­தா­க­வும், இலங்­கை­யில் மனித உரி­மை­யைப் பாது­காத்­தல் என்­பது கடந்த ஆண்­டில் கேள்­விக்­கு­றி­யா­கக் காணப்­பட்­ட­தா­க­வும் அந்த பிரிட்டன் அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

வாழ்­வா­தா­ரம் தொடர்­பான உண்மை நிலை

கடந்த 2009ஆம் ஆண்­டுக்கு முன்­னர் வடக்கு கிழக்கு பகு­தி­க­ளில் உக்­கி­ர­மாக நடந்த போர் கார­ண­மா­க­வும், மிதி வெடி­க­ளி­லும் சிக்­கி­யும் அதி­க­மான தமிழ் மக்­கள் தங்­கள் கால் கைகளை இழந்­தி­ருந்­த­னர்.

இந்த நிலை­யில் அவர்­கள் தங்­கள் வாழ்­வா­தா­ரத்தை முன்­னெ­டுத்­துச் செல்ல முடி­யாத அவல நிலைக்­குத் தள்­ளப்­பட்­டுள்­ளார். இது தவிர ஆண் துணை­யி­ழந்த பெண்­க­ளும், தங்­கள் குடும்­பத்­துக்­குத் தலை­மை­யேற்று நடத்­தும் நிலைக்­குத் தள்­ளப்­பட்­டுள்­ள­தால், வேலை­யில்­லாத் திண்­டாட்­டத்­தால் அவர்­கள் தவிக்­கின்­றார்­கள் என­வும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

போர் முடி­வுக்கு வந்து 8 வரு­டங்­கள் கடந்­தும், பாது­காப்பு, வாழ்­வா­தா­ர­மும் சமூக பாது­காப்­பும், சலு­கை­க­ளும் உத­வித் திட்­டங்­க­ளும், கல்வி, சுகா­தா­ர­மும் சத்­து­ண­வும், சமூக கலாச்­சார விட­யங்­கள் மற்­றும் காணா­மல் போனோர் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளோர் போன்ற விட­யங்­கள் மீதான விசேட செயற்­றிட்­டங்­கள் இன்­ன­மும் ஆமை வேகத்­தி­லேயே காணப்­ப­டு­கின்­றது என்­பது பல­ரது குற்­றச்­சாட்டு.

இலங்கை பெண்­கள் பணி­ய­கத்­தின் கீழ் செயற்­ப­டு­கின்ற வித­வை­கள் மற்­றும் பெண்­கள்தலைமை தாங்­கும் குடும்­பங்­களை பொரு­ளா­தார ரீதி­யில் வலு­ ட்­டு­வ­தற்­கான அவர்­க­ளது வாழ்­வா­தார வச­தி­களை மேம்­ப­டுத்த 2015 ஆம் ஆண்­டில் விசேட செயற்­றிட்­டத்­தின் கீழ் 50 மில்­லி­யன்­களை முத­லிட்டு சுமார் 2 ஆயிரம் பெண்­கள் பொரு­ளா­தார ரீதி­யில் வலு­வூட்­டப்­பட்­டுள்­ள­னர்.

இலங்கை பெண்­கள் பணி­ய­கத்­தி­னால் 2016 ஆண்­டில் பின்­வ­ரும் செயற்­றிட்­டங்­கள் வடக்கு கிழக்கு மாகா­ணங்­க­ளில் செயற்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. இலங்­கைத் தமி­ழர்­க­ளின் மறு­வாழ்­வுக்கு உத­வும் விதத்­தில் எவ்­வித நட­வ­ டிக்­கை­யை­யும் அரசு எடுக்­க­வில்லை.

பன்னாட்டுத் தொண்டு நிறு­வ­னங்­க­ளை­யும் உள்ளே விட அனு­மதி மறுக்­கின்­ற­னர் என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் மனம் திறந்து தங்­கள் குமு­றல்­களை வௌிப்­ப­டுத்­தி­னர். இலங்­கை­யில் தமி­ழர்­கள் சுதந்­தி­ரக் காற்­றைத் தற்­போது அனு­ப­வித்­தா­லும், அது உயி­ரோட்­ட­முள்ள பிரா­ண­வா­யுவே அல்ல என்­ப­து­தான் உண்மை.

கண­வரை இழந்த பெண்­கள் சமூ­கத்­தி­னால்
ஒதுக்­கப்­ப­டு­கின்­ற­னர்

கண­வரை இழந்த பெண்­கள் சமூ­கத்­தி­னால் ஒதுக்­கப்­ப­டு­கின்ற சந்­தர்ப்­பங்­கள் காணப்­ப­டு­கின்­றன. சில­ ச­ம­யங்­க­ளில் அவர்­க­ளது ஆடை­க­ளும் நடத்­தை­க­ளும் கூட விமர்­சிக்­கப்­ப­டு­கின்­றன.

மீண்­டும் மறு­மண குடும்ப பந்­தத்­தில் இணை­ய­வி­ரும்­பும் பெண்­கள் சமூ­கத்­தின் அவச்­சொல் குறித்து அஞ்­சும் நிலை இருக்­கின்­றது என்று ராதிகா ஹெட்­டி­யா­ராச்­சி­யின் மற்­றும் கடி­தங்­கள் மூலம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

http://newuthayan.com/story/17076.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.