Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விமர்சனங்களை கணக்கில் எடுக்காதீர்கள்: அரவிந்த ஆலோசனை

Featured Replies

விமர்சனங்களை கணக்கில் எடுக்காதீர்கள்: அரவிந்த ஆலோசனை
 

அண்மைக்காலமாகத் தோல்விகளைச் சந்தித்துவரும் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள், சமூக ஊடக இணையத்தளங்களிலும் ஏனைய இணையத்தளங்களிலும் வெளிவரும் கேலிகளைப் பொருட்படுத்தக் கூடாது என, அணியின் வழிகாட்டியும் முன்னாள் தலைவருமான அரவிந்த டி சில்வா, அவ்வீரர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

தொடர்ச்சியான தோல்விகளுக்கு மத்தியில், இந்தியாவுக்கெதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியிலும், இலங்கை அணி ஓர் இனிங்ஸ் மற்றும் 53 ஓட்டங்களால் தோல்வியடைந்திருந்தது. முதலாவது போட்டியில், 304 ஓட்டங்களால் தோல்வியடைந்திருந்தது.
இந்நிலையில், 3ஆவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதான கலந்துரையாடல் ஒன்று, இலங்கை கிரிக்கெட் சபையில், நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றது.

அதன்போது கருத்துத் தெரிவித்த அரவிந்த டி சில்வா, நம்பிக்கையுடன் காணப்பட வேண்டுமெனவும், தங்களுக்கான பலத்தின் அடிப்படையில் விளையாட வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

அத்தோடு, இளைய வீரர்களை, திறமையிலும் திறன்களிலும் கவனம் செலுத்துமாறும், சமூக ஊடக இணையத்தளங்கள் மூலமாகவும் “கொசிப்” இணையத்தளங்கள் மூலமாகவும் அவர்களை நம்பிக்கையிழக்கச் செய்யும் தரப்பினர் காரணமாக நம்பிக்கையிழக்க வேண்டாமெனவும் கூறினார்.
இது, அண்மைக்காலத்தில் இலங்கை அணி மீது அதிகரித்துள்ள அழுத்தத்தை வெளிக்காட்டுவதாக அமைந்திருந்தது.
குறிப்பாக, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா, இந்திய அணித் தலைவர் விராத் கோலியைச் சந்தித்த புகைப்படத்தைப் பகிர்ந்ததோடு, “அடுத்த டெஸ்டில், இலங்கை மீது சிறிது மென்மையாகச் செயற்படுமாறு, விராத் கோலியிடம் தெரிவித்தேன். 600 [ஓட்டங்கள்] என்பது சிறிது அதிகமானது” என்று குறிப்பிட்டிருந்ததார். இலங்கை அணிக்கெதிராக, இந்திய அணி, தொடர்ச்சியாக 600 ஓட்டங்களைப் பெற்று வருவதையே, அவர் அவ்வாறு சுட்டிக்காட்டினார்.

image_a15afb2169.jpg

அவர் அதை நகைச்சுவைக்காகவே பகிர்ந்திருந்தாலும், சமூக ஊடக இணையத்தளங்களில், இலங்கை அணி, எந்தளவுக்குக் கேலியை எதிர்கொள்கிறது என்பதை, அந்தப் பகிர்வு வெளிப்படுத்தியிருந்தது.

இந்நிலையில் தான், சமூக ஊடக இணையத்தளங்களைக் கணக்கிலெடுக்க வேண்டாம் என்ற அறிவுரை, வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/விமர்சனங்களை-கணக்கில்-எடுக்காதீர்கள்-அரவிந்த-ஆலோசனை/44-202088

  • தொடங்கியவர்
மன்னிப்புக் கோரினார் ஹர்ஷ
 

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.

பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா, அண்மையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லியை சந்தித்திருந்தார். அது தொடர்பில் அவர் டுவிட்டர் பதிவு ஒன்றையும் மேற்கொண்டிருந்தார்.

image_95c55885ee.jpg

 “அடுத்த டெஸ்டில், இலங்கை மீது சிறிது மென்மையாகச் செயற்படுமாறு, விராத் கோஹ்லியிடம் தெரிவித்தேன். 600 (ஓட்டங்கள்) என்பது சிறிது அதிகமானது” என்று குறிப்பிட்டிருந்ததார்.

இலங்கை அணிக்கெதிராக, இந்திய அணி, தொடர்ச்சியாக 600 ஓட்டங்களைப் பெற்று வருவதையே அவர் அவ்வாறு சுட்டிக்காட்டியிருந்தார்.

(தொடர்புடைய செய்தி : விமர்சனங்களை கணக்கில் எடுக்காதீர்கள்: அரவிந்த ஆலோசனை)

பிரதியமைச்சரின் இந்தப் பதிவுக்கு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தார்கள். அத்துடன் சமூக வலைத்தளங்களில் இந்த விடயம் பெரிதும் பரபரப்பாக பேசப்பட்டது.

இது தொடர்பில் டுவிட்டர் பதிவினை செய்துள்ள பிரதியமைச்சர், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் மன்னிப்புக் கோரியுள்ளார். அது, வெறும் கேலிக்கைக்காகவே தவிர எமது திறமையான வீரர்களை தைரியமிழக்கச் செய்யும் வகையில் பதிவிடப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

image_97733590c4.jpg


 

  •  

 

http://www.tamilmirror.lk/செய்திகள்/மன்னிப்புக்-கோரினார்-ஹர்ஷ/175-202187

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.