Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முடிவின்றி இழுபறிப்படும் வட மாகாண சபை சிக்கல்கள்

Featured Replies

முடிவின்றி இழுபறிப்படும் வட மாகாண சபை சிக்கல்கள்

 

கூட்­ட­மைப்­பின் தலை­வர் மற்­றும் வட மாகாண முத­ல­மைச்­சர் ஆகி­யோ­ரு­டன் கூட்­ட­மைப்­பில் அங்­கம் வகிக்­கும் சகல கட்­சித் தலை­வர்­க­ளும் முத­ல­மைச்­சர் இல்­லத்­தில் கூடிக் கலைந்­தமை, கூட்­ட­மைப்­பின் ஒற்­று­மைக்கு வழி கோலி­யது என்­ப­தற்­கும் அப்­பால், கூட்­ட­மை­ப­பிற்­குள் நில­விய பனிப்­போர் மேடை­யேற்­றப்­ப­டு­வ­தற்­கான ஓர் சந்­தர்ப்­ப­மா­க­வும் அமைந்­த­தா­கக் கொள்­ளமு­டி­யும்.

குறித்த கலந்­து­ரை­யா­டல், தொடக்­கம் முதல் இறு­தி­வரை, அதி உச்ச சச்­ச­ர­வா­கவே காணப்­பட்­ட­போ­தி­லும், இறு­தி­யில் என்­னமோ, வள்­ளு­வ­ரின் இரு­வ­ரிக் குற­ளைத் தாண்டி மூன்­று­வ­ரித் தீர்­மா­ன­ மாக வெளி­யா­னது.

மாலை 6 மணிக்குக் கூடி, இரவு 9.30 மணிக்கு முடி­வ­டைந்த கூட்டத் தின் தொகுப்பு மூன்­று­வ­ரித் தீர்­மா­னம் மட்­டுமே என்­றால், அந்த மூன்றரை மணித்­தி­யால நேரம் உள்ளே என்­ன­தான் நடந்­தது? அதா­வது தமிழ்த்­தே­சி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், கட்­சி­க­ளின் தலை­வர்­க­ளும், முத­ல­மைச்­ச­ரும் தமிழ்­மக்­க­ளின் நலன்­க­ருதி மேற்­கொண்­ட­ தீர்­மா­ன­ங்களாக முன்­வைக் கப்­பட்ட தீர்­மா­னங்­கள் சர்ச்­சை­யைக் குறைக்­குமா? அல்­லது மேலும் வலுக்­கச் செய்­யுமா? என்­பதே தற்­போ­தைய பெரும் கேள்­வி­யாகத் தலை­தூக்­கி­யுள்­ளது.

முத­ல­மைச்­சர் தனக்­கி­ருக்­கும் சட்­ட­ரீ­தி­யான தற்­து­ணிபு அதி­கா­ரங்­க­ளைப் பயன்­ப­டுத்தி அமைச்­
ச­ரவை மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தவோ, திருத்தி அமைப்­ப­தற்கோ அங்­கத்­து­வக் கட்­சி­கள் சம்­ம­தத்தை வெளிப்­ப­டுத்­து­கின்­றன. அமைச்­சர்­கள் மாற்­றப்­பட்­டால், அது, குறித்த அமைச்­சர் எந்த ஒரு குற்­றச்­சாட்­டை­யும் இழைத்­த­தாக அர்த்­தப்­ப­டாது.

அமைச்­ச­ரவை நிய­ம­னங்­களைப் பொறுத்தமட்­டில் அங்­கத்­து­வக்­கட்­சி­க­ளின் ஆலோ­ச­னை­க­ளை­யும் கருத்­தில் எடுத்து, அவை மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்­டும், எனத் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

முத­ல­மைச்­ச­ரது நிலைப்­பாட்டை  ஏற்க மறுக்கின்றனர்
உறுப்­பி­னர்­கள்

 

இறு­தி­யில் இவ்­வா­றா­ன­தொரு இணக்­கம் எட்­டப்­பட்­ட போதி­லும் முத­ல­மைச்­ச­ரின் நிலைப் பாட்­டுக்குச் சில கட்­சி­க­ளின் தலை­வர்­கள் கடும் எதிர்ப்­புத் தெரி­வித்­த­னர். வேறு வழி­யில்­லா­மல் அந்த இடத்­தில் அவர்­கள் இணங்­கிப் போயி­ருந்­தா­லும், முழு­ம­ன­ தோடு அவர்­கள் இணங் கி­னார்­கள் என்று சொல்­வ­தற்­கில்லை.

எனவே இந்­தப் பிரச்­சினை இத்­தோடு முடிந்­து­ விடும் என்று கூறி­விட இய­லாது. அது தொடர்­வ­தற்­கான வாய்ப்­பு­களே அதி­கம் இருக்­கின்­றன. ரெலோ அமைப்­பி­னர், தமது கட்­சி­யின் சார்­பில் அமைச்­ச­ர­வை­யில் அங்­கம் வகிக்­கின்ற பா.டெனீஸ்­வ­ரனை நீக்க வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­னர்.

அதே­போன்று அமைச்­ச­ரவை மாற்­றம் தொடர்­பில் பேசப்­பட்­ட­போது, விசா­ர­ணைக் குழு விடு­வித்த இரு அமைச்­சர்­க­ளை­யும் நீக்கி விட்டு, டெனீஸ்­வ­ர­னுக்­குப் பதி­லாக ரெலோ அமைப்பு பிரே­ரிப்­ப­வ­ருக்­கும், மற்­றைய அமைச்­சுப் பத­வியை புளொட் கட்­சிக்­கும் வழங்­கும் முடிவை முத­ல­மைச்­சர் முன்­வைத்­தார்.

இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் தலை­வர் மாவை சேனா­தி­ராசா இதற்­குக் கடும் எதிர்ப்பு வெளி­யிட்­டுள்­ளார். தமது கட்­சி­யின் அமைச்­ச­ர­வைப் பிர­தி­ நிதித்­து­வத்தை மாற்றி வழங்­கு­வ­தற்கு அவர் எதிர்ப்பு வெளி­யிட்­டார்.

மாகாண சபை­யில் 15 உறுப்­பி­னர்­கள் தமிழ் அர­சுக் கட்­சி­யைச் சேர்ந்­த­வர்­க­ளாக இருக்­கும்­போது, அந்­தக் கட்­சிக்கு அமைச்­சர் பதவியொன்றை வழங்­கா­மல் விடு­வது மேலும் பிரச்­சி­னையைச் சிக்­க­லாக்­கும் என்று புளொட் கட்­சி­யின் தலை­வர் நேர­டி­யா­கவே கூறி­னார்.

தமி­ழ் அரசுக் கட்­சிக்­குள்­ளேயே
தொட­ர்கின்றன
கருத்து முரண்­பா­டு­கள்

இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சித் தலை­வர் மாவை.சேனா­தி­ராசா, திரு­மதி அனந்தி சசி­த­ரனைத் தமது கட்­சி­யின் அங்­கத்­த­வ­ராக இப்­போது கருத வேண்­டாம் என்­றும் கூறி­யுள்­ளார். எங்­கள் கட்சி சார்­பாக எவரை அமைச்­சர் பத­விக்­குப் பிரே­ரிப்­போம் என்­பதை வெளிப்­ப­டுத்­து­வோம் என்று கூறி­ய­போது, அந்த ஐவ­ரில் எவ­ரது பெய­ரைப் பிரே­ரித்­தா­லும் (மாகா­ண­ச­பை­யில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் அணி என்று அடை­யா­ளப்­ப­டுத்­தப்­ப­டு­ப­வர்­கள்) அவர்களில் எவரையும் அமைச்சர் பதவிக்கு நிய­மிக்­கவே மாட்­டேன்.

எனக்­கெ­தி­ராக நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­பட்ட போது 43 குற்­றச்­சாட்­டுக்­கள் முன்­வைக்­கப்­பட்­டன. 43 கேள்­வி­க­ளுக்கு என்­றல்ல 400 கேள்­வி­க­ளுக்கு வேண்­டு­மா­னா­லும் என்­னால் பதி­ல­ளிக்க முடி­யும்.

தற்­போ­தைய நிலை­யில் வட­மா­காண சபை­யில் தமிழ் அரசுக் கட்சி சார்­பான உறுப்­பி­னர்­கள் 16 பேர் இருப்­ப­தால், எனக்­கெ­தி­ராக நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ரணை கொண்­டு­ வந்து நிறைவேற்­ற­ வும் தமிழ் அரசுக் கட்சி யால் முடி­யும். ஆனா­லும் அவ்­வா­றான சவால் எத­னை­யும் சந்­திக்க நான் தயார் என்­றார் முத­ல­மைச்­சர்.

இவ்­வாறு உள்­ளுக்­குள் உச்­சக்­கட்ட மோத­லில் ஈடு­பட்ட பின்பு, வெளி­யில் வந்து வள்­ளு­வ­ரின் குறள்­போன்ற இரு­வ­ரி­க­ளில் 3 தீர்­மா­னங்­களை வெளி­யிட்­டா­லும் அது ஒரு­நாள்­கூட நீடித்­த­தாகத் தெரி­ய­வில்லை.

அதா­வது மறு­நாளே தமி­ழ் அர சுக் கட்­சி­யின் வட மாகாண சபை உறுப்­பி­னர்­கள் ஒன்­று­ கூடி, புதிய அமைச் சர­வை­யில் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களில் எவ­ரும் பங்­கு­ கொள்­வ­தில்லை என்ற தீர்­மா­ னத்தை எட்­டி­யுள்­ள­னர், அதே­வேளை வட மாகாண சபை உரு­வாக்­கத்­தின் பின்­னர் மத்­திய அர­சி­ட­மி­ருந்து 2014, 2015 , 2016, 2017 ஆகிய 4 ஆண்­டு­க­ளி­லும் மாகாண சபைக்கு அபி­வி­ருத்தி நிதி­யாக வழங்­கப்­பட்ட மொத்த நிதி­யி­லும் பார்க்க சுகா­தார அமைச்­சர் தனி ஒரு அமைச்­ச­ராக மாகா­ணத்­திற்குத் தேடிக் கொடுத்த வரு­மா­னம் அதி­கம்.

ஆளை ஆள் குற்­றம்­சாட்டி
விமர்­சிக்­கும் தரப்­புக்­கள்

வட மாகாண சபை­யா­னது எந்­த­வொரு பெரிய அபி­வி­ருத்­தித் திட்­டத்­தை­யும் முன்­னெ­டுக்­கவோ அல்­லது அதற்கு ஒத்­து­ழைக்­கவோ கூடாது என்ற நிலைப்­பாட்­டில் இயங்­கு­வ­தாக சுமத்­தப்­ப­டும் குற்­றச்­சாட்டு வரி­சை­யில், தற்­போது சத்­தி­ய­லிங்­கத்­தின் பெயரும் பட்டியலில் இணைந்­து­கொள்­கின்­றது.

இந்­தக் கொள்­கை­யி­லேயே வட மாகாண முத­ல­மைச்­சர் இயங்­கு­கின்­றார் என குற்­றச்­சாட்டை முன்­வைப்­ப­ வர்­கள் அடுக்­கும் குற்றச்சாட்டுக்களின் பட்­டி­யலோ நீண்­டது. அந்­தப் பட்­டி­ய­லில் ஐ.நாவால் வழங்­கப்­ப­ட­வி­ருந்த ஆயிரத்து 500 மில்­லி­யன் யு. எஸ் டொலர் நிதியை வேண்­டாம் எனத் தெரி­வித்­தமை, முல்­லைத்­தீ­வில் இந்­தி­யத் துணைத் தூதர­கம் அமைக்க முன்­வந்த தொழில் நுட்­பக் கல்­லூ­ரிக்­கான காணியை வழங்­காது வேண்­டு­ மென்றே தடுத்து நிறுத்­தி­யமை, சாவ­கச்­சே­ரிப் பகு­தி­யில் அமைக்க உத்தே சித்த உப்­ப­ளத்துக்கான திட்டத்தை தடுத்­தமை , பலாலி விமான நிலைய விஸ்­த­ரிப் புக்கு முட்­டுக் கட்டை போட்­டமை என அந்­தப் பட்­டி­யல் நீள்­கின்­றது.

அவர் ஆனால் இதற்­குப் பதி­லாக இவ்­வா­றான பெரிய திட்­டங்­கள் எவற்­றை­யா­வது முத­ல­மைச்­ச­ரின் இந்த 4 ஆண்­டு­கள் கால நிர்வாகத்துக்குள் வட மாகா­ணத்துக்குள் கொண்டு வர முயற்­சித்­தாரா என்­றால் அதற்கு இல்லை என்­பதே பதி­லா­கும்.

அத்­தோடு காரிய நிதி­யீட்­டல்­க­ளைப் பெற்றுவரும் மற்­று­மோர் பெரிய நிதி­யாக 11 ஆயி­ரத்து 600 மில்­லி­யன் ரூபா நிதியை கிடைக்­கச் செய்ய அனைத்து ஒப்­பந்­தங்­க­ளும் பூர்த்தி செய்­யப்­பட்டு, அந்த நிதியை வழங்­கும் டென்­மார்க் அர­சும் மத்­திய அர­சும் அனு­ம­தி­யும் வழங்­கி­விட்ட நிலையில் கதா­நா­ய­க­னாக விளங்­கும் வட மாகாண சுகா­தார அமைச்­சர் வடக்­கில் பெரிய திட்­டங்­களை ஆரம்­பித்­தால் அரசு வட­மா­கா­ணத்தை அபி­வி­ருத்தி செய்­கின்­றது என்ற குற்­றச்­சாட்டு வந்­து­வி­டும் என்ற ஒரே நோக் கத்­திற்­கா­கவே அவ­ரது அமைச்­சிற்­கும் ஆப்பு வைக்­கப்­ப­டு­வ­தாக தற்­போது கூறப்­ப­டு­கின்­றது.

குப்­பை­யைக் கிண்டக் கிண்ட
குப்­பையே வெளிப்­ப­டும்

அவ்­வாறு இல்லை எனச் சொன்­னா­லும் நிச்­ச­ய­மாக திட்­டத்தை தயா­ரித்து அத்­தனை முன்­ன­கர்வுகளையும் செய்­த­வர் அந்த இடத்­தில் இருந்து நக­ரும்­போது அங்கே நிச்­ச­ய­மாக ஓர் தடங்­கல் ஏற்­ப­டும் என்­ப­தில் சந்­தே­கம் இல்லை.
அதா­வது ஒரு கால­தா­ம­தம் ஏற்­ப­டு­மே­யன்றி நிதி திரும்­பிச் செல்­லாது. அந்­தக் கால­தா­மத எல்­லைக் காலத்­தில் வட மாகாண சபை­யின் ஆயுள்­கா­லம் நிறை­வு­பெற்­று­வி­டும்.

அப்­போ­தும் இதனை ஓர் அர­சி­யல் பேசு­பொ­ரு­ளாக, அதா­வது எவை­யுமே இடம்­பெ­ற­வில்லை எனச் சுட்­டிக்­காட்­டும் உத்தி என தற்­போது இனம் காட்­டப்­ப­டு­கின்­றது.

இதன் கார­ண­மா­கவே 4 ஆண்­டு­கால ஆட்­சி­யில் மத்­திய அரசு வழங்­கிய 24ஆயிரத்து 800 மில்­லி­யன் ரூபா­வை­விட, தனி அமைச்­ச­ராக அதிக வரு­மா­னத்தை தேடிக் கொடுத்த சுகா­தார அமைச்­ச­ரும் இலக்கு வைக்­கப்­பட்­டுள்­ளாரா? என்ற கேள்­விக்கு பதி­ல­ளிக்க முடி­யா­மல் உள்­ளது.

இந்த நிலை­யில் மாகாண சபை­யின் தமி­ழ் அரசுக் கட்சி உறுப்­பி­னர்­கள் சற்றே சீற்­றம் கொண்­டுள்ள நிலை­யில், தமி­ழ் அரசுக் கட்­சி­யின் மாகாண சபை உறுப்­பி­னர்­களை கொழும் புக்கு அழைத்­துள்­ளார் கூட்­ட­மைப் பின் தலை­வர் இரா.சம்­பந்­தன். இவ்­வாறு அழைக்­கப்­பட்ட இடத்­தில் என்ன தீர்­மா­னம் எட்­டப்­பட்­டது.

என்­ப­தன் அடிப்­ப­டை­யி­லும், எதிர்­கால சபை நட­வ­டிக்­கை­யி­லுமே மாகாண சபை­யின் தலை­விதி தீர்­மா­னிக்­கப்­ப­ட­ வுள்ள நிலை ­யில், முத­ல­மைச்­ச­ரின் போக்கே அதன் ஆயுள் காலத்தை தீர்­மா­னிக் கும் என்­ப­தில் மட்­டும் சந்­தே­கம் இல்லை.

இதே­வேளை மாகாண சபை­யில் அமைச்­சர்­கள் பிரச்­சி­னைக்கு விசா­ரணை என்­கின்ற கோரிக்­கையே கார­ண­மாக அமைந்­தது . அந்­தக் கோரிக்­கை­யைத் தமி­ழ் அரசுக்­கட்­சியே சபை­யில் முத­லில் கொண்­டு­வந்­த­தாக கூட்­ட­மைப்­பில் அங்­கம் வகிக்­கும் சுரேஸ் பிறே­மச்­சந்­தி­ரன் தொடக்கம் வேறு பல­ரும் தவ­றா­கவே கருத்­து­ரைத்து வரு­கின்­ற­னர்.

உண்­மை­யில் கடந்த ஆண்டு பெப்­ர­வரி மாதம் 9ஆம் திக­தி­யன்று வட மாகாண சபை­யின் 45 ஆவது அமர்­வில் புளட் அமைப்­பின் உறுப்­பி­னர் ஜி.ரி.லிங்­க­நா­தனே அமைச்­சர்­கள் மீதான விசா­ர­ணையை தீர்­மா­ன­ மா­கக் கொண்­டு­வந்­தார்.

இது சபை நட­வ­டிக்கை குறிப்­பேட்­டில் பதி­வில் இருக்­கும் என்­ப­தில் ஐயம் இல்லை. இவ்­வாறு ஆவண ரீதி­யா­க­வுள்ள ஓர் விட­யத்­தி­லேயே பொய் உரைப்­ப­தன் உள்­நோக்­கம் என்ன என்­ப­தும் தனியே ஆரா­யப்­பட வேண்­டிய விட­ய­மா­கக் கொள்­ளக்­கத்­தக்­கது.

ந.லோகதயாளன்

http://newuthayan.com/story/18221.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.