Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எப்போதும் இல்லாத ஆபத்தை நோக்கி நகர்கிறது வடகொரியா: சிஐஏ இயக்குநர்

Featured Replies

அமெரிக்காவுடனான போரை கிம் தூண்டுகிறாரா?

 

 
NORTHKOREAajpg

கோப்புப் படம்: வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்

அமெரிக்கா மற்றும் வடகொரியாவுக்கிடையேயான சண்டைகள் எப்போது அதிவேகமாக எழுகிறதோ, அதே வேகத்தில் மீண்டும் வீழ்ச்சியடைந்துவிடும்.

இதுதான் பல காலக் கட்டங்களாக நடந்து கொண்டிருக்கிறது.

ஆனால் இம்முறை இரு நாட்டுக்கு இடையேயான சண்டை அவ்வளவு எளிதில் மங்கி விடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதற்கான காரணங்களும் வலுவாகவே அமைந்துள்ளன என்றுதான் கூற வேண்டும்.

இதற்கிடையில் அமெரிக்காவில் தொடர்ந்து நடந்து வரும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை, வடகொரியா மீதான கோபத்தை குறைக்கக்கூடும் சூழலும் உருவாகியுள்ளது.

ஆனால் வடகொரியாவோ இதற்கு சற்றும் எதிர்மாறான செயலில் ஈடுபட்டு வருகிறது. பசிபிக் பகுதியிலுள்ள அமெரிக்காவின் ராணுவ தளவாட பகுதியான குவாம் தீவை தாக்குவதற்கு அனைத்து திட்டங்களும் தயார், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் ஆணைக்காகவே காத்திருப்பதாக கொரியா ராணுவத்தினர் சமீபத்தில் கூறியிருந்தனர்.

ட்ரம்ப் நிர்பந்திக்கப்படுவாரா?

வடகொரிய அதிபர் கிம்மை பொறுத்தவரை அமெரிக்கவுடனான போருக்கு அவர் ஓப்புதல் வழங்கினால் அது மிக ஆபத்தானது என்று அவருக்கு நன்கு தெரியும். அதுமட்டுமில்லாது கிம் இதற்கு ஒப்புதல் அளித்தாலும், அளிக்கவிட்டாலும், இரு நாடுகளுக்கும் இடையே நடைபெறும் கடுமையான வார்த்தை மோதல்கள் ட்ரம்ப் இந்த விவகாரத்தை கையில் எடுக்க நிர்பந்திக்கப்படுவாரா? என்ற கேள்வி எழுவதற்கான சூழலும் எழுந்துள்ளது.

எனினும் இதனை கணிக்க முடியாதவையாகவே தற்போதைய நிலைமை உள்ளது.

யார் முதலில் தொடங்க போகிறார்கள் என்பதுதான் இரு நாடுகளும் வெளிப்படையாக வெளியே சொல்லிக் கொள்ளாத போர் யுத்தியாகும்.

இதற்கு சிறந்த உதாரணம், வடகொரியா குவாம் தீவை தாக்க போவதாக முதலில் கூறியிருப்பது உண்மையில் அது வடகொரியாவின் பாசாங்கு நடவடிக்கையே.  ஏனெனில் வடகொரியாவுக்கு நன்கு தெரியும் இந்தப் போர் நிச்சயம் பேரழிவைத்தான் தரும் என்பது. வடகொரியா இந்தச் சண்டையை தானாக தொடங்க விரும்பவில்லை. அதனால்தான் அவர்கள் அமெரிக்காவுக்காக காத்து கொண்டிருக்கிறார்கள்.

விடுதலை நாள்

ஆக்ஸ்ட் 15 இரண்டாவது உலகப் போர் முடிவடைந்த தினமாகும். மேலும் ஜப்பானின் காலனித்துவ ஆட்சியின் விடுதலை பெற்ற நாளும் கூட.

இந்த தினத்தில் வடகொரியவின் ராணுவ நடவடிக்கை குறித்த அறிக்கையை வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எடுத்துக்காட்டுக்கு அமெரிக்காவின் சுதந்திர தினத்தில் வடகொரிய நடத்திய ஏவுகணை சோதனை போன்று இது இருக்கலாம்.

போர் விளையாட்டுகள்

அமெரிக்கா தென் கொரியாவுடன் இணைந்து வடகொரியாவுக்கு எதிராக ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி போர் பயிற்சியில் ஈடுபட இருக்கிறது. அமெரிக்காவின் இந்தப் போர் பயிற்சிகள் வடகொரியா ஒரு ஒத்திகையாகவே பார்க்கிறது.

அமெரிக்காவை தடுத்து நிறுத்துவது என்பது வடகொரியாவின் நீண்ட கால திட்டமாகும். அதற்கான திட்டமாகவே இந்த போர் விளையாட்டுகள்  நடந்து கொண்டிருக்கின்றன.

http://tamil.thehindu.com/world/article19490657.ece

  • தொடங்கியவர்

எப்போதும் இல்லாத ஆபத்தை நோக்கி நகர்கிறது வடகொரியா: சிஐஏ இயக்குநர்

 
அமெரிக்கா வட கொரியா இடையே அணு ஆயுத போர்படத்தின் காப்புரிமைAFP

அமெரிக்கா - வடகொரியா இடையே பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், வடகொரியாவுடன் உடனடியாக அணு ஆயுத போர் ஏற்படுவதற்கான அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை என அமெரிக்க அரசின் உளவு நிறுவனத்தின் (சிஐஏ) இயக்குநர் கூறியுள்ளார்.

வடகொரியா தனது அணு ஆயுத திட்டத்தால் `எப்போதும் இல்லாத ஆபத்தை` நோக்கி நகர்வதாக சிஐஏ இயக்குநர் மைக் பாம்பேயோ கூறியுள்ளார்,

வட கொரியா மற்றொரு ஏவுகணை சோதனையை நடத்தினாலும் ஆச்சரிப்படுவதற்கு இல்லை என ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த நேர்காணலில் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் `பொறுமை` இனி நீடிக்காது என்றும் வட கொரியாவை அவர் எச்சரித்தார்.

வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன், நாட்டின் ஆயுத திட்டத்தை அபிவிருத்தி செய்ய தொடர்ந்து முயற்சிப்பார் என்பதில் தான் `மிகவும் நம்பிக்கையுடன்` இருப்பதாக மைக் கூறுகிறார்.

அமெரிக்கா வட கொரியா இடையே அணு ஆயுத போர்படத்தின் காப்புரிமைAFP Image captionசிஐஏ இயக்குநர் மைக் பாம்பேயோ

அமெரிக்காவைத் தாக்கும் ஒரு அணு ஆயுதத்தை, அமெரிக்காவுக்கு எவ்வளவு நெருக்கமாக வட கொரியாவால் வைக்க முடியும் எனக் கேட்கப்பட்டதற்கு,`அவர்கள் நெருக்கமாக உள்ளனர்` என தெரிவித்துள்ளார்.

ஆனால், உடனடியாக அணு ஆயுத போர் ஏற்படுவதற்கான ஆபத்துகள் இருப்பதாகக் கூறப்படுவதை அவர் மறுத்துள்ளார்.

`` எல்லோரும் ஒரு அணு ஆயுதப் போர் பற்றி பேசுவதைப் பற்றி நான் அறிவேன். ஆனால், அணு ஆயுதப் போர் இப்போதே நடக்கும் வாய்ப்புகள் இருப்பதாக உளவுத்துறை அறிக்கை கூறவில்லை`` என்கிறார் மைக்.

http://www.bbc.com/tamil/global-40924443

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.