Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விஜயதாஸ ராஜபக் ஷவுக்கு எதிராக பிரேரணை கொண்டுவந்தால் அரசாங்கத்தை எதிர்ப்போம்

Featured Replies

விஜயதாஸ ராஜபக் ஷவுக்கு எதிராக பிரேரணை கொண்டுவந்தால் அரசாங்கத்தை எதிர்ப்போம்

(ஆர்.யசி)

நீதி அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜபக் ஷவிற்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்­டு­வந்தால் தாம் அர­சாங்­கத்தை எதிர்க்க வேண்டிய நிலை ஏற்படும் என்று மூன்று பெளத்த பீடங்­களின் அனு­நா­யக்க தேரர்கள் தெரி­வித்­துள்­ளனர். நாட்­டையும் பௌத்­தத்­aதையும் அழிக்கும் சர்­வ­தேச சக்­தி­களும் அதற்கு துணை­போகும் இந்­நாட்டு சக்­தி­க­ளுமே இதற்கு பின்­ன­ணியில் உள்­ளன எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அகில இலங்கை பெளத்த

ஆலோ­சனை சங்­கத்தில் நேற்று இடம்­பெற்ற விசேட செய்­தி­யாளர் சந்­திப்பில் அவர்கள் இதனைக் குறிப்­பிட்­டனர். அஸ்­கி­ரிய பீடத்தின் அனு­நா­யக்க தேரர் ஆன­ம­டுவே தம்­ம­திஸ்ஸ தேரர், மல்­வத்து பீடத்தின் அனு­நா­யக தேரர் திவில்­கு­புற விம­ல­தம்ம தேரர், அம­ர­புர பீடத்தின் அனு­நா­யக தேரர் ஆகியோர் இந்த சந்­திப்பில் கலந்­து­கொண்­டனர். இது குறித்து அவர்கள் மேலும் கூறி­ய­தா­வது,

இந்த நாட்டில் உள்ள சொத்­துக்­க­ளான விமா­ன­நி­லையம், துறை­மு­கங்கள், தேசிய வளங்கள், தேசிய சொத்­துக்கள் அனைத்தும் வெளி­நா­டு­க­ளுக்கு விற்­கப்­ப­டு­வது, குத்­த­கைக்கு வழங்­கப்­ப­டு­வது என்ற அர­சாங்­கதின் வேலை­திட்­டத்­திற்கு நீதி அமைச்சர் விஜ­ய­தாச ராஜபக் ஷ தனது எதிர்ப்பை தெரி­வித்து வரு­கின்றார். இந்த செயற்­பா­டு­க­ளுக்கு பெளத்த தலை­மை­க­ளான நாமும் முழு­மை­யான எதிர்ப்பை தெரி­விக்­கின்றோம்.

அர­சாங்கம் முன்­னைய ஆட்­சி­யா­ளர்­களை விமர்­சித்து, அவர்கள் நாட்டை சீர­ழித்­தனர் என குற்றம் சுமத்­தி­யுள்ள நிலையில் இவர்­களும் அதே தவறை செய்­கின்­றமை எந்த விதத்­திலும் நியா­ய­மானதாக அமை­யாது. நாம் இந்த நாட்டில் உள்ள சகல மக்­க­ளையும் பாது­காக்கும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்டும். மாறாக இந்த நாட்டில் எமது மக்கள் வாழ முடி­யாது போகும் நிலை­மை­களை உரு­வாக்கக் கூடாது. ஆனால் இன்­றைய ஆட்­சி­யா­ளர்கள் இந்த நாட்டில் எமது அடை­யா­ளங்­களை அழிக்கும் செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். இதனை நாம் கடு­மை­யாக கண்­டிக்­கின்றோம்.

மேலும் அண்­மையில் ஐக்­கிய நாடுகள் சபையின் பிர­தி­நிதி ஒருவர் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்டு இந்த நாட்டின் சட்டம், இரா­ணுவம், தேசிய செயற்­பா­டு­களை மோச­மாக விமர்­சித்தார். அவர் முன்­வைத்த சகல கார­ணி­க­ளையும் நீதி அமைச்சர் விஜ­ய­தாச ராஜபக் ஷ கண்­டித்­த­துடன், இலங்­கைக்கு பொருத்­த­மில்­லாத எந்த சர்­வ­தேச நகர்­வுக்கும் தான் இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்லை என்­பதை அவர் வெளிப்­ப­டை­யாக தெரி­வித்தார். இந்த கார­ணி­களின் பின்­னரே நீதி அமைச்சர் மீதான தவ­றான பார்வை ஏற்­பட்­டுள்­ளது, ஆனால் அவர் மிகச்­ச­ரி­யாக தனது கட­மையை முன்­னெ­டுத்து செல்­கின்றார். அதேபோல் அமைச்­ச­ரவை இர­க­சி­யங்­களை நீதி அமைச்சர் விஜ­ய­தாச ராஜபக் ஷ வெளி­யிட்டார் என்ற குற்­றச்­சாட்டை முன்­வைத்து அவ­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை ஒன்றை கொண்­டு­வர முயற்­சிகள் எடுக்­கப்­பட்டு வரு­வ­தாக செய்­தி­களின் மூல­மாக அறிய முடி­கின்­றது. அவ்­வாறு நீதி அமைச்சர் விஜ­ய­தாச ராஜபக் ஷவிற்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­ப­டு­மாயின் இலங்­கையின் பிர­தான பெளத்த பீடங்கள் மூன்றும் இந்த செயற்­பாட்டை கண்­டிக்கும். அர­சாங்­கத்­திற்கு எதி­ராக எமது கடு­மை­யான எதிர்ப்பை வெளிப்­ப­டுத்த வேண்­டி­வரும்.

மேலும் அவர் தனது கட­மையை சரி­யாக செய்து வரு­கின்றார். இந்த நாட்டு மக்­க­ளுக்­கான சரி­யான பாதையை அவர் உரு­வாக்கிக் கொடுக்­கின்றார். அவ்­வா­றான ஒரு­வர் தனது கட­மை­களை செய்ய விடாது தடுக்­கப்­ப­டு­மாயின், அவ­ருக்கு மன­த­ளவில் அழுத்தம் கொடுக்­கப்­ப­டு­மாயின், அவ­ரது அமைச்சுப் பத­வியை பறிக்கும் செயற்­பா­டுகள் ஏதேனும் முன்­னெ­டுக்­கப்­ப­டு­மாயின் அந்த கார­ணி­களை தடுக்க பெளத்த பீடங்கள் முன்­வரும். அதேபோல் இந்த செயற்­பா­டுகள் இலங்கை சிங்­கள மக்­க­ளுக்கு எதி­ராக உள்­நாட்­டிலும், வெளி­நாட்­டிலும் முன்னெடுக்கப்படும் சதித்தம் என்றே நாம் கருத்துகின்றோம்.

கட்சியில் அவரது கருத்துக்களை சுதந்திரமாக முன்வைக்க தலைமைத்துவம் இடமளித்துள்ளது. இந்த கருத்துக்களை தடுக்கும் வகையில் எவரேனும் செயற்படுவார்கள் என்றால் அந்த சக்திகள் சர்வதேச தேவைக்காகவும் பௌத்தத்தை அழிக்கும் சக்திகளாகவே இருக்க வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.  

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-08-15#page-1

  • தொடங்கியவர்

விஜயதாஸவுக்கு எதிராக அவசர தீர்மானம் தேவை

01-10e8ca1771de9e3a10489a2602b74b8df0f72c9f.jpg

 

ஐ.தே.க. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் சம்பிக்க
(ஆர்.யசி)

நீதி அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜபக் ஷ அர­சாங்­கத்தில் இருக்க வேண்­டுமா, அமைச்­ச­ர­வையில் இருக்க வேண்­டுமா என்­பதை ஐக்­கிய தேசியக் கட்­சியே தீர்­மா­னிக்க வேண்டும். இந்த விடயம் தொடர்பில் ஐக்­கிய தேசியக் கட்சி விரைவில் தீர்­மானம் எடுக்கும் என்று அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார். கடந்த கால ஊழல் மோச­டிகள் குறித்தும் உட­ன­டி­யாக விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க வேண்டும். குற்­ற­வா­ளிகள் தப்­பிக்க இட­ம­ளிக்க முடி­யாது எனவும் அவர் குறிப்­பிட்டார்.

ஜாதிக ஹெல உறு­மைய கட்­சியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கொழும்பில் உள்ள கட்சி அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்,

கடந்த 2015 ஆம் ஆண்டு நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்­ப­டு­வ­தற்கு அப்­போது நாட்டில் இடம்­பெற்ற ஊழல் மோச­டிகள் மற்றும் அடக்­கு­முறை ஆட்­சியே கார­ண­மாகும். ஆட்சி மாற்­றப்­பட்­டதில் இருந்து கடந்த கால ஊழல்கள் தொடர்பில் நாம் தொடர்ச்­சி­யாக கருத்து வெளி­யிட்டு வந்தோம். ஆனால் ஆட்சி மாற்­றத்­திலும் ஊழல் ஆரம்­பிக்­கப்­பட்­டமை எமக்கும் மக்­க­ளுக்கும் மிகப்­பெ­ரிய ஏமாற்­ற­மாகும். குறிப்­பாக மத்­திய வங்கி பிணை­முறி தொடர்பில் நடை­பெற்ற ஊழல் மிகவும் மோச­மான ஒன்­றாகும். சாதா­ரண குற்­றங்­களை போல இதனை எம்மால் கருத முடி­யாது.

குறிப்­பாக ஆட்சி மாற்றம் பெற்ற பின்னர் 2015 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் 27 ஆம் திகதி மத்­திய வங்கி பிணை­முறி விவ­கா­ரத்தில் 10 பில்­லியன் ரூபாய் ஊழல் மோசடி இடம்­பெற்­றது. இந்த விடயம் தொடர்பில் பல்­வேறு கருத்­துக்கள் எழுந்த நிலையில் 2015 ஆம் ஆண்டு மீண்டும் மத்­திய வங்கி பிணை­முறி விட­யத்தில் 73 பில்­லியன் ரூபாய் ஊழல் இடம்­பெற்­ற­தாக கூறப்­பட்­டது.

இந்த இரண்டு விவ­கா­ரத்­திலும் குறித்த ஒரு நிறு­வனம் மட்­டுமே தொடர்­பு­பட்­டுள்­ளது. இந்த நிறு­வனம் ஆரம்­பிக்­கப்­பட்ட காலத்தில் 300 மில்­லியன் இலாபம் பெற்­ற­தாக கூறப்­பட்ட நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இன் நிறு­வ­னத்தின் இலாபம் 25 ஆயிரம் மில்­லி­ய­னையும் தாண்­டி­யுள்­ளது. இந்த தொகையில் அதி­க­மா­னவை திறை­சே­ரிக்கு உரிய நிதி­யாகும். இந்த விவ­காரம் இவ்­வாறு இருக்­கையில் யாரும் அறி­யாத இன்­னொரு பக்­கமும் இடம்­பெற்­றது. அதா­வது மத்­திய வங்கி பிணை­முறி விட­யத்தில் இது­வ­ரையில் கையாண்ட விதி­மு­றைகள் மாற்­றப்­பட்­டுள்­ளன. இதில் பிணை­மு­றிகள் விட­யத்தில் பிர­தான பங்கு வகித்த ஊழியர் சேம­லாப நிதியம், ஊழியர் நம்­பிக்கை நிதியம் ஆகிய இரண்டும் நிரா­க­ரிக்­கப்­பட்­டன. அடுத்த இடத்தில் இருந்த இலங்கை வங்­கியின் செயற்­பா­டு­களும் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. ஒரு­சி­ல­ரது தனிப்­பட்ட தேவை­களை கருதி இந்த நகர்­வுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. அதற்­கா­கவே மத்­திய வங்கி பிணை­முறி விட­யத்தில் புதிய நடை­மு­றைகள் கையா­ளப்­பட்­டுள்­ளன.

இந்த செயற்­பாடு கார­ண­மாக மத்­திய வங்­கியின் பிணை­முறி நகர்­வு­களின் வட்டி வீதம் அதி­க­ரித்­துள்­ளது. இந்த கார­ணமே நாட்டின் முத­லீ­டுகள் குறை­யவும் கார­ண­மாக அமைந்­தன. இதன் கார­ண­மாக இந்த ஆண்டில் பொரு­ளா­தார வளர்ச்சி வீத­மா­னது சரிவை சந்­தித்­துள்­ளது. இந்த ஆண்டு 3.8 வீத பொரு­ளா­தார வளர்ச்­சியே உள்­ளது. ஆனால் எமது வேலைத்­திட்­டங்­க­ளுக்கு அமைய இந்த வீதம் 6.5 வீதத்தை விடவும் அதிக வளர்ச்­சியை காட்ட வேண்டும். எமது அமைச்சு மூல­மாக முன்­னெ­டுக்­கப்­படும் கட்­டிட நிர்­மா­ணத்­து­றையில் மாத்­தி­ரமே 6.8 வீத வளர்ச்சி வீதம் காணப்­ப­டு­கின்­றது. ஏனைய துறைகள் வீழ்ச்சி கண்­டுள்­ளன. அதேபோல் மத்­திய வங்கி ஊழல் விவ­கா­ரத்தை அடுத்து சர்­வ­தேச வர்த்­தக சந்­தையில் எம்­மீ­தான நம்­பிக்கை வீழ்ச்சி கண்­டுள்­ளது. எம்­மீ­தான நம்­பிக்கை இழக்கும் வகையில் எமது செயற்­பா­டுகள் அமைந்­து­விட்­டன. அதேபோல் கடந்த கால செயற்­பா­டுகள் கார­ண­மாக சமூக நம்­பிக்கை இழக்­கப்­பட்­டுள்­ளது. அர­சாங்கம் மீது மக்கள் கொண்­டுள்ள நம்­பிக்கை குறை­வ­டையும் நிலைமை ஏற்­பட்­டுள்­ளது.

இந்த அர­சாங்கம் மஹிந்த ராஜபக் ஷவின் சர்­வா­தி­கார ஆட்­சியை இலக்கு வைத்து மாத்­திரம் ஆட்சி அமைக்­க­வில்லை. கடந்த ஆட்­சியில் மிகப்­பெ­ரிய அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. அதை மறுக்­கவே முடி­யாது. ஆனால் முன்­னெ­டுக்­கப்­பட்ட அனைத்து வேலைத்­திட்­டங்­களின் பின்­ன­ணி­யிலும் பாரிய ஊழல் மோச­டிகள் இருந்­தன. அதனை தடுக்­கவே ஆட்சி மாற்­றத்தை மக்கள் விரும்­பினர். ஊழலை தடுக்க வேண்டும் என்ற ஆட்சி மாற்­றத்தில் பங்­க­ளிப்பு செய்த மக்­களின் முதுகில் குத்தும் விதத்தில் இந்த அர­சாங்­கத்­திலும் ஊழல் இடம்­பெற்­று­விட்­டது. எனினும் இந்த விட­யத்தில் ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் செயற்­பட்ட விதம் வர­வேற்­கத்­தக்­கது. ஜனா­தி­பதி ஆணைக்­குழு அமைக்­கப்­பட்டு உட­ன­டி­யாக ஊழலை கண்­ட­றியும் நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் முன்­னெ­டுத்­தமை நல்­லாட்­சியின் எடுத்­துக்­காட்­டாகும்.

எனினும் இந்த ஊழல் விவ­காரம் தொடர்பில் முன்­னெ­டுக்கும் வழக்கை 20 ஆண்­டு­க­ளுக்கு இழுத்­த­டிப்பு செய்து இந்த ஊழலில் இருந்து தப்­பித்­துக்­கொள்ள சிலர் முயற்­சித்து வரு­கின்­றனர். ஆனால் அதற்கு ஒரு­போதும் நாம் இட­ம­ளிக்க போவ­தில்லை. இந்த ஊழலில் தொடர்­பு­பட்ட முக்­கிய குற்­ற­வா­ளிகள் அனை­வ­ரையும் சட்­டத்தின் மூலம் தண்­டிக்க எம்­மா­லான அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுப்போம். அதேபோல் இன்றும் இவர்­க­ளிடம் பல கோடி ரூபாய் மக்­களின் நிதி பதுக்­கி­வைக்­கப்­பட்­டுள்­ளது. அவற்றை முழு­மை­யாக பறி­முதல் செய்து மக்­க­ளிடம் கொண்டு சேர்க்கும் நட­வ­டிக்­கையும் முன்­னெ­டுப்போம். இப்­போது அமைக்­க­பட்­டுள்ள ஜனா­தி­பதி ஆணைக்­குழு முன்­னைய ஆணைக்­கு­ழுக்கள் போன்­ற­தல்ல. இந்த ஆணைக்­கு­ழு­விற்கு சகல அதி­கா­ரங்­களும் உள்­ளன. இப்­போது மத்­திய வங்­கியில் இடம்­பெற்ற ஊழல் போன்று இனி­யொ­ரு­போதும் இடம்­பெற்­றாத வகை­யி­லான மாற்று நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க கூறவும் ஆணைக்­கு­ழு­விற்கு அதி­காரம் உள்­ளது. ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திக­தியில் இருந்து மத்­திய வங்கி பிணை­முறி விவ­கா­ரங்­களை கையாள்­வதில் மாற்று நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

மேலும் இந்த அர­சாங்கம் உரு­வாக்­கப்­பட முன்­னரும் மத்­திய வங்­கியில் ஊழல் இடம்­பெற்று வந்­துள்­ளது. இந்த விட­யங்கள் தொடர்பில் உட­ன­டி­யாக விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க வேண்டும். கடந்த ஆட்­சியில் இடம்­பெற்ற ஊழல் விட­யங்கள் தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்­பதில் தாமதம் உள்­ளது என்ற குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றது. இதை நாமும் ஏற்­றுக்­கொள்­கின்றோம். கடந்த காலத்தில் இடம்­பெற்ற ஊழல்கள் குறித்து விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்­பதில் கால­தா­மதம் ஏற்­பட்­டுள்­ளது.

ஆகவே விரைவில் இந்த விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க நீதி அமைச்சர் செயற்­பட வேண்டும். கடந்­த­கால குற்­றங்கள் தொடர்பில் பொலிஸ் , நீதி­மன்ற விசா­ர­ணை­களை துரித்­த­ப­டுத்த வேண்டும் என மக்கள் எதிர்ப்­பார்­கின்­றனர். ஆகவே உட­ன­டி­யாக விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க வேண்டும். இந்த ஆட்­சியில் நடந்த குற்­றங்கள் தொடர்பில் எந்த தடை­களும் இல்­லாது விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. அதேபோல் கடந்த கால ஊழல் மோச­டிகள் குறித்தும் உட­ன­டி­யாக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.

கடந்த கால குற்ற விசாரணைகளை முன்னெடுப்பதில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக் ஷ செயற்படும் விதம் அவர் முன்வைக்கும் கருத்துக்கள் முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ளன. அவர் அரசாங்கத்தில் இருந்துகொண்டு முரண்பட்டு செயற்பட முடியாது. எனவே அமைச்சர் விஜயதாச ராஜபக் ஷ அரசாங்கத்தில் இருக்க வேண்டுமா, அமைச்சரவையில் இருக்க வேண்டுமா என்பதை ஐக்கிய தேசியக் கட்சியே தீர்மானிக்க வேண்டும். இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி விரைவில் தீர்மானம் எடுக்கும். மேலும் ஊழல் குற்றவாளிகளை காப்பாற்ற எவரும் துணை போகக்கூடாது என்பதே நல்லாட்சியின் அடையாளம் எனவும் அவர் குறிப்பிட்டார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-08-15#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.