Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசாங்க படிவங்களை மும்மொழியில்

Featured Replies

அர­சாங்க படி­வங்களை மும்­மொ­ழியில்

P12-0a58d222d819c76cd28a99b4c58b5502e6f4af00.jpg

 

அமைச்சர் மனோ ஆரம்­பித்து வைத்தார்  
(க.கமலநாதன்)

இலங்­கையின் மொழிக்­கொள்கை, மும்­மொ­ழிக் ­கொள்கை ஆகும். மொழிச்­சட்டம், மும்­மொழி சட்­ட­மாகும். ஆகவே அனைத்து அர­சாங்க அலு­வ­லக படி­வங்­க­ளிலும் மூன்று மொழி­களும் இடம்­பெற வேண்டும். ஆனால், இது­பற்றி தொடர்ச்­சி­யான அறி­வு­றுத்­தல்கள் வழங்­கியும் மும்­மொ­ழி­க­ளிலும் அனைத்து அர­சாங்க அலு­வ­லக படி­வங்கள் அமை­வ­தில்லை. குறிப்­பாக தமிழ் மொழிக்கு உரிய இடம் வழங்­கப்­ப­டு­வது இல்லை. இதை இனி அனு­ம­திக்க முடி­யாது. தமிழ் மொழி இப்­படி 

 கைவி­டப்­பட முடி­யாது. மும்­மொழி மொழிச்­சட்டம் மீறப்­ப­டவும் முடி­யாது. எந்த ஒரு அதி­கா­ரியும் மொழிச்­சட்டம் தனக்கு தெரி­யாது எனக்­கூ­றவும் முடி­யாது என ஜன­நா­யக மக்கள் முன்­ன­ணி-­தமிழ் முற்­போக்கு கூட்­டணி தலை­வரும், தேசிய சக­வாழ்வு கலந்­து­ரை­யாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்­ச­ரு­மான மனோ கணேசன் கூறி­யுள்ளார்.

தேசிய சக­வாழ்வு கலந்­து­ரை­யாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சு கூடத்தில் நேற்று நடை­பெற்ற பொது­மக்கள் பாவ­னைக்­குள்ள அர­சாங்க படி­வங்கள் மும்­மொ­ழியில் மொழி­பெ­யர்க்கும் பணியை ஆரம்­பித்து வைக்கும் நிகழ்வில் உரை­யாற்­றிய அமைச்சர் மனோ கணேசன் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்

இன்று இலங்கை முழுக்க உள்ள 882 அரச அலு­வ­ல­கங்­க­ளி­லி­ருந்து மூன்று மொழி­க­ளிலும் இல்­லாத முறை­யற்ற படி­வங்­களை நாம் பெற்று, அவற்றை மூன்று மொழி­க­ளுக்கும் மொழி பெயர்க்கும் பணியை ஆரம்­பிக்­கிறோம். இதற்குள், 429 பிர­தேச செய­லக மற்றும் அத­னுடன் இணைந்த அரச காரி­யா­ல­யங்­களும், 256 மாகாண மற்றும் பிர­தேச சபை அலு­வ­ல­கங்­களும், 197 ஏனைய அலு­வ­ல­கங்­களும் இருக்­கின்­றன. மொழி­பெ­யர்த்த பிறகு புதிய மும்­மொழி படி­வங்கள் எனது அமைச்­சினால் அச்­ச­டிக்­கப்­பட்டு சம்­பந்­தப்­பட்ட அலு­வ­ல­கங்­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­படும். அத்­துடன் அந்த படி­வங்­களின் மென்­பொருள் பதிவு செய்­யப்­பட்ட இறு­வெட்டும் அந்த அலு­வ­ல­கங்­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­படும். அதை பயன்­ப­டுத்தி மேல­திக மும்­மொழி படி­வங்­களை சம்­பந்­தப்­பட்ட அலு­வ­ல­கங்கள் அச்­ச­டித்­துக்­கொள்­ளலாம். இதன்­மூலம் தமிழ் பேசும் மக்கள் இந்­நாட்டில் சிங்­கள மொழி­யுடன், தமிழ் மொழியும் ஒரு ஆட்சி மொழி, ஆங்­கில மொழி இணைப்பு என்ற உரி­மையை அனு­ப­விப்­பதில் ஒரு படி முன்­னே­றுவர்

நான் பதவி ஏற்கும் போது, இந்த நாட்டில் அர­சாங்க அதி­கா­ரி­க­ளுக்கு கூட இந்­நாட்டின் மொழிச்­சட்டம் பற்­றிய தெளிவு இருக்­க­வில்லை என்­பதை கண்டு பிடித்தேன். இப்­போது நான் மருத்­துவர் ஆகி­யுள்ளேன். அதா­வது, மொழி மருத்­துவர் ஆகி­விட்டேன். மொழி அமு­லாக்கல் செய்­யாமை ஒரு தேசிய நோய் ஆகும். எங்கே நோய் இருக்­கி­றது என கண்டு பிடித்து விட்டேன். என்ன மருந்து என்­ப­தையும் கண்டு பிடித்து விட்டேன். தலை­வ­லிக்கு, வயிற்­று­வலி மருந்து கொடுக்க முடி­யாது. வயிற்­று­வ­லிக்கு தலை­வலி மாத்­திரை கொடுக்­கவும் முடி­யாது. ஆகவே இன்று மொழி அமு­லாக்கல் செய்­யாமை நோயை தீர்க்க மருந்து கொடுக்க ஆரம்­பித்து விட்டேன்.

இதற்­காக இன்று மத்­திய மொழிப்­பெ­யர்ப்­பாளர் பிரிவு ஒன்றை நாம் எனது அமைச்சில் அமைத்து உள்ளோம். இவர்கள் இந்த பணியை இன்று ஆரம்­பிக்­கின்­றனர். இது வெறும் தொழில் அல்ல. ஒரு தேசிய சேவை ஆகும். மொழிக்­கொள்­கையை தீர்த்தால், அது தேசிய இனப்­பி­ரச்­சி­னையில் சரி­பா­தியை தீர்ப்­பது ஆகும். மிகுதி பாதியை அதி­கார பகிர்வு தீர்க்க வேண்டும்.

இந்த படி­வங்கள் மும்­மொ­ழி­களில் இருப்­பது ஒரு தேவை. பெயர் பல­கைகள் மூன்று மொழி­களில் இருப்­பது இன்னோர் தேவை. அதையும் செய்­கிறோம். அடுத்த வருடம் சுமார் 3,000 இரு­மொழி, மும்­மொழி அலு­வ­ல­கர்­களை அத்­தி­யா­வ­சி­ய­மான அரச அலு­வ­ல­கங்­களில் நிய­மிக்க முயற்சி எடுத்து வரு­கிறேன். இவர்கள் இரு­மொழி அறிந்த, கணணி அறிவு கொண்ட அரச அலுவலகர்களாக பணி புரிவர். அப்போது இந்நாட்டு குடிமக்கள் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுத்து மூலமான பதில்களை பெரும் உரிமையை நடைமுறையில் பெறுவர். இப்போது இந்த உரிமை அரசியலமைப்பில் மட்டுமே உள்ளது. அனைத்தையும் நான் படிப்படியாக செய்கிறேன்.    

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-08-15#page-1

 

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.