Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மடு மாதாவின் ஆவணித் திருவிழா

Featured Replies

மடு மாதாவின் ஆவணித் திருவிழா
 

image_c1f806ab4f.jpgமன்னார், மடு திருத்தலத்தின் வருடாந்த ஆவணி திருவிழா, இன்று (15) காலை 6.15 மணிக்கு கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.

கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில், மன்னார்
மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை, கண்டி மறைமாவட்ட ஆயர் வியானி பெர்ணாண்டோ ஆண்டகை, காலி மறைமாவட்ட ஆயர் றேமன் விக்கிரமசிங்க ஆண்டகை, அநுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் அன்றாடி ஆண்டகை, கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் மெக்சஸ் சில்வா ஆண்டகை ஆகியோர் இணைந்து, திருநாள் திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.

திருப்பலியை தொடர்ந்து திருச்சொரூப பவனி இடம்பெற்று திருச்சொரூப ஆசிர்வாதத்துடன் நிறைவடைந்தது. இதில், நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 7 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டு மடு அன்னையின் ஆசியைப் பெற்றனர்.

இதன்போது மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.எமிலியானுஸ் பிள்ளை, அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள்,அரசியல் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

image_95ac3bfae1.jpgimage_63b9d5c619.jpgimage_b2526f409d.jpgimage_9cfe33cd49.jpgimage_31d85e63a5.jpgimage_527f9d751a.jpg

  •  

http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/மடு-மாதாவின்-ஆவணித்-திருவிழா/46-202404

  • தொடங்கியவர்

மடு அன்னையின் திருவிழா

 
 
மடு அன்னையின் திருவிழா
 

மன்னார் – மடுத் திருத்தலத்தின் திருவிழா இன்று காலை கொண்டாடப்பட்டது.

திருவிழாத் திருப்பலி இன்று காலை 6.15 மணியளவில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

கொழும்பு பேராயர் கருதினால் மல்கம் றஞ்சித் ஆண்டகை தலைமையில் மன்னார் மறை மாவட்ட அபோஸ்தலிக்க பரிபாலகர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை, அனுராதபுரம் மறை மாவட்ட ஆயர் நோபர்ட் அந்ராடி ஆண்டகை, யாழ் மறை மாவட்ட இளைப்பாறிய ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை மற்றும் காலி மறைமாவட்ட ஆயர் றேமன்ட் விக்கிரமசிங்க ஆண்டகை, கண்டி மறை மாவட்ட ஆயர் வியான்னி பெர்னான்டோ ஆண்டகை, ஆகியோரால் கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மடு அன்னையின் திருச்சொரூப பவனி இடம்பெற்று அன்னையின் ஆசிர்வாதமும் வழங்கப்பட்டது.

மடுத்திருப்பதியில் கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக ஆலயத்தில் சுற்று வளாகம் முழுவதும் வெள்ள நீர் தேங்கி நின்றதால் யாத்திரிகர்கள் பெரும் அசௌகரியத்துக்கு உள்ளாகினர்.

இதனால் பெருமளவான யாத்திரிகர்கள் நேற்றைய தினமே வீடுகளுக்குத் திரும்பியதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் இன்று திருவிழாவின்போது மழை இல்லை எனவும் திருப்பலி இடம்பெற்ற பகுதிகளில் வெள்ள நீர் வற்றி விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பெருமளவிலான குருக்கள் , அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள் மற்றும் 5 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் இம் முறை மடுத் திருவிழாவுக்கு வருகை தந்திருந்தனர். எனக் கூறப்படுகிறது.

hkyki.jpg

ilkj..jpg

iuykhh.jpg

j...jpg

kiuluu.jpg

kk.jpg

kkhkhj.jpg

kky.jpg

ljj.jpg

lkjl.jpg

lkl-2.jpg

uiollj.jpg

uiyiy.jpg

 

jhgjhg.jpg

jyjkuk.jpg

http://newuthayan.com/story/19623.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.