Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச விசாரணைக்கான எதிர்ப்பே என்னை இலக்கு வைக்க காரணம் .!

Featured Replies

சர்­வ­தேச விசா­ர­ணைக்கான எதிர்ப்பே என்னை இலக்கு வைக்க காரணம் .!

 

 

நாட்டின் 70 ஆண்­டு­கால தனிக்­கட்சி அர­சி­யலில் செய்ய முடி­யா­ததை தேசிய அர­சாங்­கத்தில் முன்­னெ­டுக்­கவே கூட்­டாட்சி அர­சாங்­கத்தை அமைத்தோம். எனினும் தேசிய அர­சாங்­கத்­திலும் எதிர்­பார்த்­ததை செய்ய முடி­ய­வில்லை. சர்­வ­தேச தேவைக்­கா­கவே இந்த அர­சாங்­கமும் இயங்­கு­கின்­றது என நீதி அமைச்சர் விஜே­தாஸ ராஜபக் ஷ தெரி­வித்தார். 

சர்­வ­தேச விசா­ர­ணைக்கு நான் தடை­யாக உள்­ள­தா­லேயே என்னை இலக்கு வைத்­துள்­ளனர். ஆனால் நாட்டை சரி­யான திசை யில் திருப்பும் தேவைக்­காக அர­சியல் மாற்­றத்தை செய்து நாட்டை மீட்­டெ­டுக்க ஒரு­போதும் பின்­னிற்க மாட்டோம்.

 அதில் மாநா­யக்க தேரர்­களின் பங்­க­ளிப்­பையே எதிர்­பார்ப்­ப­தா­கவும் அவர் குறிப்­பிட்டார். 

அமைச்சர் விஜ­ய­தாச ராஜ­பக்ஷ நேற்று முன்­தினம்  திரு­கோ­ண­ம­லையில் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் இதனைக் குறிப்­பிட்டார். 

இது குறித்து அவர்  மேலும் உரை­யாற்­று­கையில் 

இந்த நாட்டின் பிரச்­சி­னை­களை தீர்க்க சர்­வ­தேச நீதி­ப­தி­களை வர­வ­ழைக்க வேண்டும் என கூறு­கின்­றனர். சிலர் தேசிய வாதம் பேசிக்­கொண்டு ஜெனிவா சென்று அங்கு எமது நட­வ­டிக்­கை­களை காட்­டி­கொ­டுத்­துள்­ளனர். சர்­வ­தேச நீதி­ப­தி­களை அனுப்­புங்கள் இலங்­கையில் சகல அனு­ம­தி­க­ளையும் வழங்­கு­கின்றோம் என இவர்கள் கூரு­கி­னனர். 

இந்த அனு­ம­தியை அடுத்தே சர்­வ­தேச விசா­ர­ணை­யா­ளர்கள் இலங்­கைக்கு வந்­தனர். என்­னி­டமும் வந்­தனர். ஆனால் நான் அவர்­களின் கார­ணி­களை காதில் கேட்­க­வில்லை. அவர்­களை விரட்­டி­விட்டேன். எமது இரா­ணு­வத்தை தண்­டிக்க நினைக்கும் சர்­வ­தேச தரப்­பி­ன­ருக்கு இட­ம­ளிக்க முடி­யாது என நான் கூறும்­போது ஐந்து நட்­சத்­திர ஹோட்­டல்­களில் இருந்து கொண்டு அர­சியல் செய்யும்  அர­சி­யல்­வா­திகள் என்னை இன­வா­தி­யாக சித்­த­ரிக்­கின்­றனர். சர்­வ­தேச விசா­ர­ணைக்கு நான் தடை­யாக உள்­ள­தா­லேயே என்னை இலக்கு வைத்து விமர்­சித்து வரு­கின்­றனர். 

மேலும் நீதி­மன்ற  சுயா­தீ­னத்தில் அர­சியல் தலை­யீ­டுகள் இருக்க கூடாது அதற்கு நீதி அமைச்சு அனு­ம­திக்­காது என நான் கூறும்­போதும் நான் இன­வாதி என கூரு­கி­னனர்.  சிங்­கள மக்கள் தொடர்பில் அவர்­களின் உரி­மை­களை பற்றி பேசும்­போது நாம் இன­வாதி ஆகின்றோம். பெளத்த சாச­னத்தை பாது­காக்க குரல் எழுப்பும் நபர்­களை இன­வாதி என சித்­த­ரிக்க பழ­கி­யுள்­ளனர். ஆனால் இவ்­வாறு எம்மை சித்­த­ரிக்கும் நபர்­களை பொறுத்­த­வ­ரையில் நாம் இன­வா­தி­க­ளாக இருக்­கின்றோம் ஆனால் எமக்­கான கட­மை­களை நாம் சரி­யாக செய்­கின்றோம். அதில் ஏற்­படும் முரண்­பா­டு­களை சகல வகை­யிலும் எதிர்­கொள்ள நாம் தயா­ராக உள்ளோம். 

எமது சொத்­துக்­களை நாம்  பாது­காக்க வேண்டும். நாம் ஐந்து ஆண்­டு­க­ளுக்கு ஆட்­சியை கையில் எடுத்­துள்ளோம். எனவே இந்த காலத்தில் எவ்­வாறு ஆட்சி செய்ய வேண்டும், எமது நிலங்­களை எவ்­வாறு பாது­காக்க வேண்டும் என்­பதை அறிந்­து­கொள்ள வேண்டும்.  இன்று நாம் மிகவும் இறுக்­க­மான காலத்தில் வாழ்ந்­து­கொண்டு உள்ளோம். நாட்­டையும் தேசி­யத்­தையும் பாது­காக்க பெளத்த சங்­கத்­தினர் முன்­வ­ர­வேண்­டிய காலம் வந்­துள்­ளது. பெளத்த மாநா­ய­கர்கள் தலைமை ஏற்­க­வேண்­டிய காலம் வந்­துள்­ளது. எமக்குள் பிரச்­சி­னைகள் உள்­ளன, அர­சியல் குழப்­பங்கள் உள்­ளன. ஆனால் நாம்  அவற்றை தீர்க்க வேண்டும். இந்த நாட்டின் அர­சியல் தலை­வர்­க­ளுக்கு மிக முக்­கி­ய­மான பொறுப்­புகள் உள்­ளன.  நாட்டின் உண்­மை­யான தேசிய அர­சியல் வாதிகள் யார் என்­பதை இவர்கள் அடை­யாளம் காண­வேண்டும். நாட்டை நேசிக்கும் நபர்கள் யார் என்­பதை அடை­யாளம் காண­வேண்டும். மாறாக எவ­ரதும் தனிப்­பட்ட தேவை­களை அர­சியல் நோக்­க­மாக மாற்­றக்­கூ­டாது. 

  நாட்டில் டெங்கு நோய் அனை­வ­ரையும் பாதித்து அதிக உயி­ரி­ழப்­புகள், லட்சக் கணக்­கான மக்கள் பாதி­கப்­பட்ட போதிலும் சுகா­தார அமைச்­ச­ருக்கு  சைட்டம் நிறு­வ­னத்தை காப்­பாற்ற வேண்டும் என்­பதே   பிர­தான நோக்­க­மாகும்.நாட்டில் கற்ற சமூகம் வளர்ச்சி காணா­விட்­டாலும் பர­வா­யில்லை சைட்டம் பாது­காக்­கப்­பட வேண்டும் என்ற தனிப்­பட்ட கார­ணி­களை அவர் சிந்­திக்­கின்றார்.  இன்று சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்­தையும், நீதி  மன்­றத்­தையும் சுகா­தார அமைச்சர் கட்­டு­ப­டுத்த முயற்­சிக்­கின்றார். அப்­ப­டி­யாயின் சுகா­தார அமைச்சின் வேலை­களை யார் செய்­வது? 

70  ஆண்­டு­கா­ல­மாக கட்சி அர­சி­யலில் செய்ய முடி­யா­ததை தேசிய அர­சாங்­கத்தில் செய்­யவே இரண்டு கட்­சி­களும் இணைந்து ஆட்சி அமைத்­தன. ஆனால் தேசிய அர­சாங்­கத்தில் நாட்­டுக்கு தேவை­யான நகர்­வுகள் இடம்­பெ­ற­வில்லை. ஆகவே அதற்­கான மாற்று நகர்­வுகள் என்­ன­வென்­பதை இந்த நாட்டின் மாநா­யக தேரர்கள் தீர்­மா­னிக்க வேண்டும். இந்த நாட்டு மக்­களும் சரி­யான அர­சியல் பாதையை தெரி­வு­செய்ய வேண்டும். ஆளத் தெரியாதவர்கள் ஆட்சியை கையில் எடுத்தால் நாடு சீரழியும் என்ற பழைய கருத்துக்கு அமைவாக இன்றும் ஆட்சி நடத்து வருகின்றது. அதற்கான தண்டனையை இன்றும் நாம் அறிந்து வருகின்றோம். ஆகவே இந்த காலத்தில் மீண்டும் அரசியல் மாற்றத்தை செய்து நாட்டை மீட்டெடுக்க ஒருபோதும் பின்னிற்க மாட்டோம். அரசியலில் நியாயமான வகையில் நான் ஈடுபட்டு வருகிறேன். எவரது தனிப்பட்ட தேவைக்காக என்னால் அரசியல் செய்ய முடியாது  என்றார்.  

http://www.virakesari.lk/article/23377

 

 

விஜேதாஸ குறித்து இன்று தீர்மானம்

 

 

அமைச்சர் விஜே­தாஸ ராஜபக் ஷ தொடர்பான சர்ச்சைகளை ஆராய்­வ­தற்­காக ஐக்­கிய தேசியக் கட்­சியின் மத்­திய செயற்­கு­ழுவால் நிய­மிக்­கப்­பட்ட  மங்­கள சம­ர­வீர, மலிக் சம­ர­விக்­கி­ரம மற்றும் ரவீந்­திர சம­ர­வீர ஆகிய மூன்று எம்.பி.க்கள் அடங்­கிய குழுவின் அறிக்கை இன்­றை­ய­தினம்  கூட­வுள்ள ஐ.தே.க.வின் பாரா­ளு­மன்றக் குழு­வி­டத்தில் கைய­ளிக்­கப்­ப­ட­வுள்ள நிலையில் அமைச்சர் விஜே­தாஸ தொடர்பில் இன்­றைய தினம் தீர்க்­க­மான தீர்­மானம் எடுக்­கப்­ப­ட­வுள்­ள­தாக அறி­ய­மு­டி­கின்­றது. பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க தலை­மையில் கூட­வுள்ள  இன்­றைய பாரா­ளு­மன்றக் குழுக் கூட்­டத்தில்  இது தொடர்பில்  விசே­ட­மாக  ஆரா­யப்­பட்டு  இறுதி முடிவு எடுக்­கப்­படும் என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.  

நீதி அமைச்­சரும் புத்த சாசன அமைச்­ச­ரு­மான விஜே­தாஸ ராஜ­பக்ஷ குறித்த பத­வியில் இருக்கும் வரையில் முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷ­வுக்கு எதி­ரான விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்­ப­தற்கு தடை­யாக இருப்பார் என்றும்   அம்­பாந்­தோட்டை துறை­முக ஒப்­பந்தம் தொடர்­பாக நீதி அமைச்சர் விஜே­தாஸ ராஜ­பக்ஷ வெளி­யிட்­டுள்ள கருத்­துக்கள் கட்­சியின் கொள்­கைக்கு நேரெ­தி­ராக காணப்­ப­டு­கின்­றன எனவும்  அண்­மையில்  ஐக்­கிய தேசியக் கட்­சியின் பின்­வ­ரிசைப் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­தனர்.  

ஆகவே அமைச்சர்  வெளிப்­ப­டுத்­திய கருத்­துக்­களை பகி­ரங்­க­மாக மீளப்­பெற்­றுக்­கொள்ள வேண்டும் எனக் குறிப்­பிட்டு ஐக்­கிய தேசியக் கட்­சியின் பின்­வ­ரிசைப் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள்  நீதி அமைச்­ச­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா தீர்­மா­னத்­தினை எடுத்­தி­ருந்­தனர். இது குறித்து கட்­சியின் தலை­வரும், பிர­த­ம­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வி­டத்­திலும் கலந்­து­ரை­யா­டி­யி­ருந்­தனர்.

அதன்­பி­ர­காரம் கடந்த புதன்­கி­ழமை ஐக்­கிய தேசியக் கட்­சியின் மத்­திய செயற்­குழு கூட்டம் நடை­பெற்­றி­ருந்­தது. இக்­கூட்­டத்தில் அமைச்சர் விஜே­தா­ஸ­வுக்கு எதி­ராக கடு­மை­யான விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்­டன. குறிப்­பாக அவர் நீதி அமைச்­சுப்­ப­த­வி­யி­லி­ருந்து இரா­ஜி­னாமச் செய்ய வேண்டும் என்று பல உறுப்­பி­னர்­களால் வலி­யு­றுத்­தப்­பட்­டன. 

அனைத்து விமர்­ச­னங்­க­ளையும், எதிர்ப்­புக்­க­ளையும் அமை­தி­யாக கேட்­டுக்­கொண்­டி­ருந்த அமைச்சர் விஜே­தாஸ தனது நிலைப்­பாடு தவ­றா­னது அல்ல என்­ப­தைய மையப்­ப­டுத்தும் வகையில் திட்­ட­வட்­ட­மாக கருத்­துக்­களை முன்­வைத்­தி­ருந்தார். இதனால் கட்­சி­யினுள் வாதங்கள் வலுத்­தி­ருந்த நிலையில் பிர­தமர் ரணிலின் பணிப்­பு­ரைக்கு அமை­வா­கவும் உறுப்­பி­னர்­களின் இணக்­கப்­பாட்­டு­டனும் நீதி அமைச்சர் தொடர்­பான விட­யங்­களை ஆராய்­வ­தற்­காக அமைச்­சர்­க­ளான மங்­கள சம­ர­வீர, மலிக் சம­ர­விக்­கி­ரம, மற்றும் ரவீந்­திர சம­ர­வீர எம்.பி ஆகியோர் அடங்­கிய குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­தது. 

அக்­கு­ழு­வா­னது அமைச்சர் விஜே­தாஸ குறித்து மூன்று நாட்­க­ளாக ஆராய்ந்த விட­யங்­களை அறிக்­கை­யாக இன்­றை­ய­தினம் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் நடை­பெறும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்றக் குழு கூட்­டத்­தின்­போது சமர்ப்­பிக்­க­வுள்­ளது.  இத­னை­ய­டுத்து தீர்க்­க­மான தீர்­மா­ன­மொன்று ஐக்­கிய தேசியக் கட்­சி­யினால் எடுக்­கப்­படும் என அறி­ய­மு­கின்­றது.

நிலைப்­பாட்டில் மாற்­ற­மில்லை

எவ்­வா­றா­யினும் அமைச்சர் விஜே­தாஸ தனது நிலைப்­பாட்­டினை மாற்றிக் கொண்­ட­தாக இல்லை. அத்­துடன் தனது மனச்­சாட்­சிப்­ப­டியும் நாட்டின் எதிர்­காலம் கரு­தி­யுமே குரல்­கொ­டுப்­ப­தா­கவும் கடந்த தினங்­களில் பௌத்த மத­கு­ருமார் உட்­பட பொது­மக்­க­ளி­டத்­திலும் சுட்­டிக்­காட்­டி­யுள்ள அவர் சட்­டமா அதிபர், திணைக்­களம், நீதித்­துறை ஆகி­ய­வற்­றினுள் தலை­யீ­டு­களைச் செய்த ஆட்­சி­யா­ளர்கள் சம்­ராஜ்­யத்­தினை இழந்­ததே இலங்கை வர­லாறு என்றும் காட்­ட­மாக குறிப்­பிட்­டுள்ளார்.

ஜனா­தி­ப­தி­யு­ட­னான சந்­திப்­பிலும் 

கவனம் செலுத்­தப்­ப­டலாம்

இதே­வேளை இன்று திங்­கட்­கி­ழமை இரவு ஒன்­பது மணிக்கு ஐக்­கிய மக்கள் முன்­ன­ணியில் உள்ள கட்­சி­களின் தலை­வர்­க­ளுக்கும், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் முக்­கிய சந்­திப்­பொன்று இடம்­பெ­ற­வுள்­ளது. இச்­சந்­திப்­புக்கு  தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் அழைக்­கப்­பட்­டுள்­ளது.

கிழக்கு, சப்­ர­க­முவ, வட­மத்­திய மாகா­ணங்­க­ளுக்­கான ஆயுட்­காலம் நிறை­வுக்­கு­வ­ர­வுள்ள நிலையில் அவற்றின் காலத்­தினை நீட்டி அனைத்து மாகா­ணங்­க­ளுக்கும் ஒரே தட­வையில் தேர்­தலை நடத்­து­வ­தற்­காக அர­சி­ய­ல­மைப்பில் 20ஆவது திருத்­த­மொன்றை மேற்­கொள்­வ­தென ஐக்­கிய தேசியக் கட்சி எடுத்­துள்ள தீர்­மானம்,  ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி மத்­திய குழு அத்­தீர்­மா­னத்­தினை ஆத­ரிப்­ப­தில்­லை­யென  தீர்­மா­னித்­துள்­ளமை மற்றும்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், தமிழ் முற்­போக்கு கூட்­டணி ஆகி­ய­னவும் அத்­தீர்­மா­னத்­துக்­கான இணக்­கப்­பாட்­டினை தெரி­விக்­காமை   தொடர்பில் ஜனா­தி­ப­தி­யு­ட­னான சந்­திப்­பின்­போது  கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது.  

அதே­நேரம் அமைச்சர் விஜே­தாஸ சம்­பந்­த­மா­கவும் குறித்த சந்­திப்­பின்­போது கலந்­து­ரை­யா­டப்­ப­டலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தனால் இக்­கூட்டம் பல்­வேறு எதிர்­பார்­பு­க­ளுக்கு மத்­தியில் நடை­பெ­று­கின்­றது. 

  புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்­கையை வெளி­யி­டு­வதில் பிர­தான கட்­சி­யான சுதந்­தி­ரக்­கட்சி காட்டும் தாமதம் குறித்தும் கவனம் செலுத்­தப்­ப­ட­வுள்­ளது. 

குறிப்­பாக வழி­ந­டத்தல் குழவில் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பிர­தி­நி­திகள் ஜனா­தி­பதி முறைமை, நாட்டின் தன்மை குறித்து தமது கட்­சியின் நிலைப்­பாட்­டினை; இடைக்­கால அறிக்கை வரைபில் இணைத்­துக்­கொள்­வ­தற்கு தொடர்ச்­சி­யாக கால அவகாசத்தினைக் கோருகின்றபோதும் தற்போது வரையில் முன்மொழிவை சமர்ப்பிக்காத நிலைமை தொடர்கின்றது.

ஆகவே அதற்கான காரணங்கள் உள்ளிடவற்றை ஜனாதிபதியுடன் பரஸ்பரம் கலந்துரையாடி இறுதி முடிவொன்றை எட்டுவதற்கு கட்சித்தலைவர்கள் முனைப்புக்காட்டலாம் என தெரியவருகின்றது.

பதவிவிலகியே ஆகவேண்டும்

 அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ பதவி விலகியே ஆகவேண்டும் என்று வலியுறுத்தும் ஐ.தே.க. வின் பின்வரிசைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவ்வாறு அமைச்சர் பதவி விலகுவதற்கு மறுத்தால் அதற்கு எதிராக ஒருங்கிணைந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை நிச்சயம் எடுப்போம் எனவும் நம்பிக்கையில்லாப்பிரேரணையைக் கொண்டுவருவது தமது நோக்கமல்லவெனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

http://www.virakesari.lk/article/23381

 

 

அமைச்சர் விஜே­தாஸ ராஜ­பக்ஷ இராஜி­னாமா செய்யும் சாத்­தியம்?

 

 

நீதி மற்றும் புத்­த­சா­சன அமைச்சர் விஜேதாஸ ராஜ­பக்ஷ நாளை  தனது அமைச்சுப் பதவி­யி­லி­ருந்து இரா­ஜி­னாமா செய்யும் சாத்தியம் உள்­ள­தாக அர­சியல் வட்­டா­ரங்­க­ளி­லிருந்து தெரி­ய­வ­ரு­கின்­றது. ஒரு­வேளை அவ்­வாறு அமைச்சர் விஜே­தாஸ ராஜ­பக் ஷ தனது பத­வியை இரா­ஜி­னாமா செய்­யா­விடின்    ஜனா­தி­ப­தி­யினால் அவர் பதவி நீக்கம் செய்­யப்­ப­டலாம் என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

 அதா­வது  நீதி­ய­மைச்­ச­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையும்  கைவி­டப்­பட்­டுள்ள நிலையில்   அமைச்சர்    இரா­ஜி­னாமா  செய்வார் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.  

ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் இன்று மாலை  நடை­பெ­ற­வுள்ள  ஐக்­கிய தேசிய முன்­ன­ன­ணியின் கட்­சிகள் சுதந்­திரக் கட்சி   தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு கலந்­து­கொள்­ள­வுள்ள கூட்­டத்­திலும் விஜே­தாச ராஜ­ப­க்ஷவின் விவ­காரம்   தொடர்பில்  விரி­வாக  பேசப்­ப­ட­வுள்­ளது. 

இதன்­போது  அமைச்சர் தொடர்பில் தீர்க்­க­மான முடிவு ஒன்று  கட்­சி­களின்  தலை­வர்­க­ளினால்  எடுக்­கப்­படும்  சாத்­தியம் அதிகம் உள்­ள­தாக  அர­சியல் கட்சி ஒன்றின்  தலைவர் கேச­ரிக்கு குறிப்­பிட்டார். 

கடந்த வியா­ழக்­கி­ழமை சிறி­கொத்­தாவில் நடை­பெற்ற ஐக்­கிய தேசிய கட்­சியின் செயற்­குழுக் கூட்­டத்­திலும்  அமைச்சர் விஜே­தாச   தொடர்­பாக  விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன.   எனினும்  திங்­கட்­கி­ழமை  தீர்க்­க­மான முடிவு எடுக்­கப்­படும்  என்ற   முடி­வுடன் அன்­றைய  செயற்­குழுக் கூட்டம்  முடிக்­கப்­பட்­டி­ருந்­தது.  

மேலும்  நேற்று முன்­தினம் அனு­ரா­த­பு­ரத்தில் நடை­பெற்ற  கூட்டம் ஒன்றில் கலந்­து­கொண்­டி­ருந்த  நீதி­ய­மைச்சர்  சுகா­தார அமைச்­சரை கடு­மை­யாக விமர்­சித்­தி­ருந்தார்.  அதா­வது நாட்டில் டெங்கு நோய் பிரச்­சினை  தலை­வி­ரித்­தா­டு­கின்ற நிலையில்  சுகா­தார  அமைச்சர்   சட்­டமா அதிபர் திணைக்­களம் குறித்து பேசிக்­கொண்­டி­ருப்­ப­தாக  நீதி­ய­மைச்சர் குற்றம் சுமத்­தி­யி­ருந்தார்.  

இந்­நி­லையில்  ஐக்­கிய தேசிய கட்­சியின் பின்­வ­ரிசை பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள்   அமைச்சர் விஜே­தாச ராஜ­ப­க்ஷவை  பதவி நீக்­கு­மாறு  கட்­சியின் தலை­வரும் பிர­த­ம­ரு­மான ரணில் விக்­ர­ம­சிங்­க­விடம்  வலி­யு­றுத்­தி­யுள்­ளனர்.    

இது தொடர்பில் முக்­கிய அர­சியல் கட்சி ஒன்றின் தலைவர் கேச­ரிக்கு  தகவல் தரு­கையில் 

அமைச்சர்  பதவி வில­க­வேண்­டிய நிர்ப்­பந்­தத்­துக்கு ஆளா­கி­யுள்ளார். அவர் பதவி வில­குவார். அல்­லது பதவி விலக்­கப்­ப­டுவார்.  அமைச்­ச­ரவை நிய­மிக்­கப்­ப­டும்­போது ஐக்­கிய தேசிய முன்­னணி மற்றும்  சிறி­லங்கா சுதந்­திர கட்சி ஆகிய கட்­சி­க­ளுக்கு இடையில்  புரிந்­து­ணர்வு ஏற்­ப­டுத்­தப்­பட்­டது.  அந்தவகையில் விஜேதாச ராஜபக்ஷ  ஐக்கிய தேசிய முன்னணி சார்பிலேயே அமைச்சராக இருக்கின்றார். எனவே  ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் அவரை பதவி நீக்குமாறு கோரினால் ஜனாதிபதி  அதனை செய்தாகவே வேண்டும். எனவே அமைச்சர் இராஜினாமா செய்யும் சாத்தியம் உள்ளது என்றார். 

http://www.virakesari.lk/article/23376

  • தொடங்கியவர்
''இராஜினாமா வேண்டாம்''
 

நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை, அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்ய வேண்டாம் என தேரர்கள் குழுவினர் இன்று (21) வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பௌத்த சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தேரர்கள் அடங்கிய குழுவினர் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சுக்கு இன்று காலை வருகை தந்திருந்தனர்.

அமைச்சரை சந்தித்து ஆசிர்வாதம் வழங்குவதற்காகவும் பதவியை இராஜினாமா செய்ய வேண்டாம் எனக் கோருவதற்காகவும் வருகை தந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், அமைச்சர் அங்கு வருகை தராத காரணத்தினால் அதிகாரிகளை சந்தித்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தொடர்ந்தும் பதவி வகிக்க வேண்டும். எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் இராஜினாமா செய்ய வேண்டாம் எனக் கோரிக்கை விடுப்பதாக, தேரர்கள் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/இராஜினாமா-வேண்டாம்/150-202590

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.