Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

25 தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களும் நாளை ஆதரவை வாபஸ் பெற்றால்.. ?

Featured Replies

25 தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களும் நாளை ஆதரவை வாபஸ் பெற்றால்.. ?

 

 சென்னை: தினகரன் ஆதரவு 25 அதிமுக எம்.எல்.ஏக்கள் நாளை ஆளுநரை சந்திக்க உள்ளனர். இச்சந்திப்பின் போது ஆதரவை வாபஸ் பெறுவதாக தெரிவித்தால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு கவிழும் அபாயம் உள்ளது.

அதிமுகவின் ஓபிஎஸ் அணி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியும் இணைந்துவிட்டன. இதற்கு தினகரன் ஆதரவு 25 எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த 25 எம்.எல்.ஏக்களும் இன்று ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று தியானம் செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஆளுநர் வித்யாசாகர் ராவை நாளை சந்திக்க உள்ளதாக தெரிவித்தனர்.

ஆதரவு வாபஸ்?

ஆளுநருடனான இச்சந்திப்பின் போது எடப்பாடி அரசுக்கான ஆதரவை தாங்கள் வாபஸ் பெறுவதாக தெரிவிக்க வாய்ப்புண்டு. இந்த முடிவில் தினகரன் ஆதரவு 25 எம்.எல்.ஏக்களும் உறுதியாக இருந்தால் முறைப்படி ஆளுநரிடம் கடிதம் கொடுக்க வேண்டும்.

 

ஆளுநர் உத்தரவிடலாம்

இதையடுத்து அதிகபட்சம் 15 நாட்களுக்குள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடுவார். தற்போதைய நிலையில் சட்டசபையில் அதிமுகவுக்கு மொத்தம் 135 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.

 

பெரும்பான்மைக்கு 117

இதில் 25 பேர் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள். சட்டசபையில் பெரும்பான்மைக்கு தேவை 118 எம்.எல்.ஏக்கள். ஜெயலலிதா மறைவால் 117 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தாலே போதும்.


ஆட்சி கவிழும் அபாயம்

ஆனால் 25 எம்.எல்.ஏக்கள் எடப்பாடி அரசுக்கான ஆதரவை விலக்கினால் 110 எம்.எல்.ஏக்கள் ஆதரவுதான் கிடைக்கும். ஆகையால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் கவிழும் நிலையே உருவாகும்.


Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/dinakaran-camp-mlas-withdraw-support-edappadi-palanisamy-govt-293429.html

  • தொடங்கியவர்

இது இணைப்பே இல்லை,வணிக ரீதியான உடன்படிக்கை: தினகரன் குற்றச்சாட்டு

 

சென்னை: இன்று நடந்தது இணைப்பே இல்லை எனவும், இது வணிக ரீதியான உடன்படிக்கை என தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் இரு அணிகளும் இன்று இணைந்து பன்னீர் செல்வம் துணை முதல்வராக பதவியேற்ற நிலையில் இது குறித்து தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில் :‛‛ இன்று நடந்தது இணைப்பே அல்ல. சில நபர்களின் சுயலாபத்திற்காகவும் பதவி ஆசைக்காகவும் பதவியை காப்பாற்றிக் கொள்வதற்குமான வணிக ரீதியான உடன்படிக்கை. இந்த உடன்படிக்கை எவ்வளவு நாள் நீடிக்கும் என்பது எல்லாம் வல்ல இறைவனுக்கே வெளிச்சம்.
1989ல் தொண்டர்களின் விருப்பத்திற்கு இணங்க, அம்மா அவர்களை பொதுச்செயலாளராக ஏற்றுக் கொண்டு, அவர் தலைமையில் ஒன்றிணைந்தார்கள். இன்றோ, இவர்களாலேயே ஏற்று கொள்ளப்பட்ட பொதுச்செயலாளரை நீக்குவோம் என்ற அறிவிப்போடு ஏற்பட்டுள்ள உடன்படிக்கை தொண்டனால் ஜீரணிக்க முடியாத துரோகம் .
அம்மா அவர்களின் மறைவுக்கு பின் திரு பன்னீர்செல்வத்தையும் பின் திரு பழனிச்சாமியையும் முதல்வராக்கிய பொதுச்செயலாளருக்கு துரோகம் செய்த நபர்களை கழக தொண்டர்கள் மட்டுமல்லாமல் பொது மக்களும் மன்னிக்க மாட்டார்கள் இரட்டை இலை முடங்குவதற்கு காரணமான பன்னீரோடு கைகோர்க்கும் அளவிற்கு சிலரது பதவி வெறி கண்ணை மறைக்கிறதென்றால் எப்படி தொண்டர்கள் ஏற்று கொள்வார்கள்?.
இந்த துரோகிகளால் எப்படி இரட்டை இலையை மீட்க முடியும்?, நேற்று வரை ஊழல் ஆட்சி நடைபெறுவதாக சொன்ன பன்னீர்செல்வத்தோடு எப்படி தான் இவர்களால் இன்றைக்கு கைக்கோர்க்க முடிகிறதோ? இந்த துரோகிகளால் ஏற்பட்டுள்ள களங்கத்தை போக்குவதற்காகவே, கோடான கோடி கழக தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று எனது அரசியல் பயணம் தொடரும். துரோகங்கள் ஒரு போதும் வென்றதாக வரலாறு இல்லை! துரோகத்தை வேரறுப்போம்! கழகத்தை காப்போம்!!'' என கூறியுள்ளார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1838744

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

25 தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களும் நாளை ஆதரவை வாபஸ் பெற்றால்.. ?

DHv0_HHWAAIQoNj.jpg

நாங்கள் தான்...:grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.