Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆளுநருடன் சந்திப்பு: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்!

Featured Replies

ஆளுநருடன் சந்திப்பு: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்!

 
 

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேருக்கு, சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

தனபால்


அ.தி.மு.க-வில் ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இணைந்த உடன், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ஆளுநரைச் சந்தித்தனர். அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் வாங்குவதாக கடிதம் வழங்கிய அவர்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்றவும் ஆளுநரிடம் கோரிக்கை வைத்தனர்.  இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேரையும் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் தனபாலுக்கு, அரசு கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்திருந்தார். இ

 


இந்நிலையில், ராஜேந்திரன் பரிந்துரை தொடர்பாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேருக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆளுநரைச் சந்தித்தது தொடர்பாக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ஒரு வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது. இதனால், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/100262-tamilnadu-assembly-speaker-dhanapal-issued-notice-to-dinakaran-team-mlas.html

 

 

 

’செல்லாது செல்லாது...!’ - கொறடாவுக்கு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் பதில்

 

கொறடாவின் பரிந்துரை மிரட்டும் வகையில் உள்ளதாகவே நினைக்கிறேன் என்று டிடிவி ஆதரவு எம்எல்ஏ-க்கள் வெற்றிவேல் மற்றும் தங்க தமிழ்செல்வன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.  

vetrivel

எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் அணி இணைந்ததையடுத்து, டி.டி.வி. தினகரன் தரப்பு எம்.எல்.ஏ-க்கள் இணைந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்படத் தொடங்கிவிட்டனர். ’பழனிசாமி தலைமையிலான அரசுக்கு அளித்துவந்த ஆதரவை திரும்பப்பெறுவதாக’ தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ஆளுநருக்கு கடிதம் அளித்தனர்.  தற்போது 19 பேரும் புதுச்சேரியில் உள்ள விண்ட் ஃபிளவர் ரிசார்ட்டில் தங்கியுள்ளனர். 

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அரசுக் கொறடா ராஜேந்திரன், ’முதல்வருக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்ற 19 எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு பரிந்துரைத்துள்ளேன். 19 எம்.எல்.ஏ-க்களும் தகுதி நீக்கம் செய்யப்படுவர். கட்சித் தாவல் தடைச்சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

கொறாடா அனுமதி இல்லாமல் ஆளுநரைச் சந்தித்து கட்சிக்கு எதிரான ஒரு செயல். எனது பரிந்துரையை சபாநாயகர் ஏற்கும் பட்சத்தில், விரைவில் 19 எம்.எல்.ஏ-க்களும் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். இந்த விஷயத்தில் சபாநாயகர்தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும் " என்று கூறினார். 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் ’கொறடாவின் பரிந்துரை எம்.எல்.ஏ-க்களை மிரட்டும் வகையில் உள்ளதாகவே நினைக்கிறேன். அவரின் பரிந்துரை சட்டபடி செல்லாது’ என்று குறிப்பிட்டுள்ளார்

புதுச்சேரி ரிசார்ட்டில் தங்கியுள்ள டி.டி.வி. எம்.எல்.ஏ-க்கள், தங்க தமிழ்செல்வன் தலைமையில் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது, “அரசு கொறடாவின் செயல்பாடு உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறியது. அதனால் அவர் மீது வழக்கு தொடர திட்டமிட்டிருக்கிறோம். அரசு கொறடா உத்தரவை மீறி நாங்கள் சட்டப்பேரவையில் செயல்பட்டிருந்தாலோ அல்லது மாறி வாக்களித்தாலோதான் அவரால் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கமுடியும். இதற்கு எப்படி அவர்களால் நடவடிக்கை எடுக்க முடியும்? நாங்கள் 19 எம்.எல்.ஏக்கள் இணைந்திருப்பதையே அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் ஸ்லீப்பர் செல் போலஅந்த பக்கம் 50 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர். அவர்கள் எங்களுடன் சேரக்கூடாது என்ற குருட்டு சிந்தனையில் பகிரங்கமாக மிரட்டிப் பார்க்கிறார்கள். மேலும், நாங்கள் அ.தி.மு.க-வில்தான் இருக்கிறோம்.

இதில் கட்சித் தாவல் எங்கே இருந்து வந்தது. சட்டப்பேரவையில் தனியாக பிரிந்து செயல்பட்டு, ஊழல் அரசு என்று விமர்சித்த ஓ.பி.எஸ் அணி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்ட கொறடா மீது வழக்கு தொடருவோம். அரசுக்கு எதிராக ஊழல் புகார் கூறி செயல்பட்டு பிரிந்து சென்ற ஓபிஎஸ்ஸை அழைத்து துணை முதல்வர் பதவியைத் தருகின்றனர். நாங்கள் இழந்த உரிமைகளை மீட்கக் காத்திருக்கிறோம். கொறடா அளித்த நோட்டீஸ் குறித்து எங்களுக்கு கவலையில்லை. வெறும் ஒன்பது எம்.எல்.ஏக்களை மட்டும்தான்ஓ.பி.எஸ் வைத்திருந்தார். அதனால்தான் 19 எம்.எல்.ஏக்களை வைத்திருக்கும் எங்கள் தரப்பைப் பார்த்து அவர்கள் கண்ணை உறுத்துகிறது" என்றார்.

 

http://www.vikatan.com/news/tamilnadu/100263-ttv-dinakaran-team-mlas-slams-admk-whip.html

 

 

’கட்சிதான் முக்கியமே தவிர… ஆட்சி முக்கியமல்ல!’ - தினகரன் தரப்பு அதிரடி

 

”ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி இருவருக்கும் எதிரானக் கருத்துக்களைத் தெரிவிப்பதால் நாங்கள் விருப்பப்பட்ட இடங்களுக்குச்செல்லக் கூடாதா? மேலும் நாங்கள் 19 பேரும் அவர்கள் எதிரில் செத்துவிட வேண்டுமா ?” என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களில் ஒருவரான பூந்தமல்லி தொகுதி எம்.எல்.ஏ ஏழுமலை அதிரடியாகப் பேசியிருக்கிறார்.

elumalai

 

அதிமுகவில் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் அணிகள் இணைந்ததையடுத்து தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதையடுத்து டிடிவி தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேரும் கூவத்தூர் பாணியில் புதுச்சேரி தனியார் பீச் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்நிலையில் அதில் ஒருவரான பூந்தமல்லி தொகுதியின் எம்.எல்.ஏ ஏழுமலை பத்திரையாளர்களை சந்தித்தார். அப்போது, “புதுச்சேரி ரிசார்ட்டில் தங்கியிருக்கும் நாங்கள் அனைத்து எம்.எல்.ஏக்களும் டிடிவி தினகரனின் விசுவாசிகள் என்பது அனைவருக்கும் தெரியும். எங்கள் தொகுதியின் முன்னால் எம்.எல்.ஏ மணிமாறன் ஓபிஎஸ் அணிக்குத் தாவியவர். அவர் எனது வீட்டின் முன்பு சில பேரை அழைத்து வந்து கற்களை வீசி, தரக்குறைவாகப் பேசியதோடு தாக்குதலும் நடத்தியிருக்கிறார்கள்.

இது அப்பட்டமான மனித உரிமை மீறல். ஏற்கனவே அவர் மீதிருந்த பல்வேறு புகார்களால்தான் ஜெயலலிதா அவரை ஒதுக்கிவிட்டு எனக்கு வாய்ப்பு கொடுத்தார். ஓபிஎஸ்-இபிஎஸ் இருவருக்கும் எதிரானக் கருத்துக்களைத் தெரிவிப்பதால் நாங்கள் விருப்பபட்ட இடங்களுக்குச்செல்லக் கூடாதா ? மேலும் நாங்கள் 19 பேரும் அவர்கள் எதிரில் செத்துவிட வேண்டுமா ? ஓபிஎஸ் இபிஎஸ் செய்வது நியாயமா ? கட்சியால்தான் ஆட்சி நடைபெறுகிறது.

இன்று எனக்கு நடந்தது தமிழக மக்களுக்கும் நடக்கும். இந்த விவகாரத்தில் தமிழக மக்கள்தான் நியாயம் சொல்ல வேண்டும். எங்களுக்கு கட்சிதான் முக்கியமே தவிர ஆட்சி முக்கியமல்ல. டிடிவி என்ன சொல்கிறாறோ அதைத்தான் நாங்கள் செய்வோம். எடப்பாடியிடம் பேச்சு வார்த்தை நடத்திவிட்டு வந்து தினகரன் எங்களை அழைத்து செல்வார். எங்களுக்கு கட்சிதான் முக்கியம். கட்சியில் இருக்கும் தொண்டர்கள் வேலை செய்ததால்தான் நாங்கள் ஆட்சிக்கு வந்திருக்கிறோம். அதே சமயம் ஆட்சியை கலைக்க மாட்டோம். எந்த விவகாரமும் பேசினால் முடிவுக்கு வரும்” என்று ஆவேசமாக தெரிவித்தார்.

http://www.vikatan.com/news/tamilnadu/100264-admk-party-is-more-important-than-power-says-dinakaran-team-mlas.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.