Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

’எங்களின் எண்ணிக்கை விரைவில் 80-ஐ தாண்டும்!’ - தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் அதிரடி

Featured Replies

’எங்களின் எண்ணிக்கை விரைவில் 80-ஐ தாண்டும்!’ - தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் அதிரடி

 
 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும், முன்னால் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணைந்தது தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.

dinakaran

ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்த டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், முதல்வர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்க வேண்டும் என்றும், அவருக்கு அளித்துவந்த ஆதரவைத் தாங்கள் விலக்கிக் கொள்வதாகவும் மனு அளித்தனர். இந்நிலையில் டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேரையும் எதிரணியினர் வளைத்துவிடக் கூடாது என்பதற்காகக் கூவத்தூர் பாணியில் புதுச்சேரியில் தனியார் 'பீச் ரிசார்ட்டில்' தங்க வைக்கப்பட்டனர். அங்கு ஆன்லைன் மூலம் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து நான்காவது நாளான இன்று புதுச்சேரி 100 அடி சாலையில் உள்ள ‘தி சன் வே மேனர்’ தனியார் விடுதிக்கு 18 எம்.எல்.ஏ-க்களும் தங்கள் முகாமை மாற்றியிருக்கின்றனர்.

அதன்படி இன்று 12.50 மணிக்கு எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் கார்களில் சன் வே ஹோட்டலுக்கு சென்றனர். அப்போது புதுச்சேரி அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களில் ஒருவரான முதலியார்பேட்டைத் தொகுதியின் எம்.எல்.ஏ பாஸ்கரன் சால்வை அணிவித்து வரவேற்றார். இவர் தினகரன் அணியிலிருந்து எடப்பாடி அணிக்குத் தாவி மீண்டும் தினகரன் அணிக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹோட்டலுக்கு வந்த பின், செய்தியாளர்களைச் சந்தித்த தங்க தமிழ்ச்செல்வன், “நாங்கள் தங்கியிருந்த ரிசார்ட்டில் வாரவிடுமுறை காரணமாக அறைகள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டுவிட்டது. அதனால்தான் இங்கு தங்க வந்திருக்கிறோம் என்றவரிடம், புதுச்சேரிக்கு வந்து நான்கு நாள்களாகியும் உங்கள் தரப்பின் எண்ணிக்க உயரவில்லையே என்ற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு, ''எங்களின் எண்ணிக்கை விரைவில் 80-ஐ தாண்டும். பெரும்பான்மையான எம்.எல்.ஏ-க்கள் எங்களிடம்தான் இருக்கின்றனர் என்பதை நிரூபிப்போம். பல எம்.எல்.ஏ-க்கள் மனதளவில் எங்களோடு இருக்கின்றனர். விரைவில் அது வெளிப்படும்” என்றார்.

thangathamizhchelvan

 

தொடர்ந்து பேசிய செந்தில்பாலாஜி, ''எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு ஜெயலலிதாவால் காப்பாற்றப்பட்ட கட்சியைக் கைப்பற்றுவதே எங்கள் லட்சியம் என்றவரிடம், மூன்று நாள்களாகியும் தினகரன் புதுச்சேரிக்கு வரவில்லையே என்ற கேள்விக்கு, “தினகரன் வருவதாக உங்களுக்குச் சொல்லப்பட்ட தகவல் தவறு. அவர் வருவதாக இருந்தால் உங்களுக்குத் தெரிவிக்கப்படும்” என்றார்.

senthil balaji
 

தொடர்ந்து சட்டப்பேரவைத் தலைவர் தனபால் உங்களுக்கு அனுப்பிய நோட்டீஸ் குறித்து என்ன சொல்கிறீர்கள் என்ற கேள்விக்கு, “முதலில் எங்களுக்கு நோட்டீஸ் வரட்டும். அதன் பின்னர், சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்துவிட்டு உரிய பதில் அளிப்போம்” என்றார். அதேபோல உங்கள் தொகுதியில் உங்களைக் காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்களே என்று கேட்டதற்கு, “எனக்கு வேண்டாதவர்களால் பரப்பப்படும் செய்தி அது. இரண்டு முறை நான் கரூர் தொகுதியிலும், ஒரு முறை அரவக்குறிச்சி தொகுதியிலும் எம்.எல்.ஏ-வாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறேன். தொகுதி மக்களுக்கு என்னைப் பற்றித் தெரியும். சட்டமன்றத்தில் வாதாடி, மக்களுக்கு அடிப்படை பணிகளைச் செய்திருக்கிறேன்” என்று பதிலளித்தார்.

http://www.vikatan.com/news/tamilnadu/100313-ttv-dinakaran-support-mlas-challenges-ops-eps-team.html

 

 

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் விடுதி மாறினர்

 

 
resortjpg

புதுச்சேரியில் தங்கியிருந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கடந்த நான்கு நாட்களாக தங்கியிருந்த விடுதியை விட்டு வேறு விடுதிக்கு இடம் மாறினர்.

கடந்த வாரம் ஓபிஎஸ் அணியும் எடப்பாடி அணியும் இணைந்தது. ஓபிஎஸ் துணை முதல்வர் மற்றும் நிதி அமைச்சர் ஆனார் . கட்சியில் வழிக்காட்டுதல் குழு ஓபிஎஸ் தலைமையில் அமைக்கப்பட்டது.

அடுத்த கட்டமாக சசிகலாவை பொதுச்செயலாளர் மற்றும் கட்சியை விட்டு நீக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக வழிகாட்டுதல் குழு துணை தலைவர் வைத்தியலிங்கம் தெரிவித்தார்.

இந்த அரசியல் சூழ்நிலையில் முதல்வர் எடப்பாடிக்கு எதிர்ப்பு தெரிவித்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுனர் வித்யாசாகர் ராவை சந்தித்து கடிதம் அளித்தனர். பின்னர் அனைத்து எம்.எல்.ஏக்களும் பாதுகாப்பாக புதுச்சேரி அருகில் உள்ள சின்னவீரம் பட்டினம் என்ற இடத்தில் உள்ள விண்ட்பிளவர் தங்கும் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.

இதில் 16 ஆண் எம்.எல்.ஏக்கள் 2 பெண் எம்.எல்.ஏக்கள் அடக்கம். பெரம்பூர் எம்.எல்.ஏ வெற்றிவேல் சென்னையில் இருக்கிறார். இந்நிலையில் கடந்த 4 நாட்களாக தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்த எம்.எல்.ஏக்கள் அனைவரும் இன்று முதலியார் பேட்டையில் உள்ள சன்வே நட்சத்திர விடுதிக்கு மாறினர்.

தற்போது தங்கியுள்ள விடுதியில் ஏற்கனவே விடுமுறைக்கு முன் பதிவு செய்தவர்கள் தங்க வருவதால் இந்த மாற்றம் என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தெரிவித்தனர். தற்போது சன்வே நட்சத்திர விடுதியில் 10 அறைகளில் இவர்கள் தங்குகின்றனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/article19559531.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.