Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தப்புமா தமிழகம் ?

Featured Replies

தப்புமா தமிழகம் ?

 

இரும்புக் கோட்டை என வர்­ணிக்­க­ப்படும் அ.தி.­மு.க.வின் அஸ்­தி­வா­ரத்தை அக்­கட்­சி­யி னரே தற்­போது ஆட்டம் காண வைத்­துக்­ கொண்­டி­ருக்­கின்­றனர். பதவி மோகம், அதி­கார ஆசை என்­பன ஜெய­ல­லி­தாவின் கனவு உழைப்பு வலிமை என்­ப­ன­வற்றால் கட்­ட­மைக்­கப்­பட்ட அ.தி.­மு.க. ஆட்­சியை சீர­ழித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றது. தமி­ழக முதல்வர் எடப்­பாடி பழ­னிச்­சா­மிக்கு ஆத­ர­வாக உள்ள சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­களைவிட அவ­ருக்கு எதி­ராக உள்ள சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ள­மை­யினால் எதிர்­த்த­ரப்பு சரி­யான காய்­ந­கர்த்­தல்­களை தற்­போது மேற்­கொண்டால் எடப்­பாடி தலை­மை­யி­லான ஆட்சி எப்­போது வேண்­டு­மா­னாலும் கவிழ்க்­கப்­ப­டலாம் என்ற நிலை தமி­ழ­கத் தில் உரு­வா­கி­யுள்­ளது.

ஒரு காலத்தில் இரா­ணுவக் கட்­டுப்­பா­டு­டைய கட்சி என்­ற­ழைக்­கப்­பட்ட அ.தி.­மு.க. இன்று கட்­சிக்­குள்­ளேயே ஒரு­வரை ஒருவர் விமர்­சிக்கும் அள­வுக்கு சென்­றுள்­ளது. ஜெய­ல­லி­தாவின் மறை­வுக்கு பின்னர் தனது கட்­டுக்­கோப்பை இழந்த அ.தி.மு. க. 3 அணி­க­ளாக பிரிந்­தது. முதல்­வ­ராக இருந்த பன்னீர் செல்வம் தன் பத­வியை இரா­ஜி­னாமா செய்த நிலையில் அவ்­வி­டத்­துக்கு சசி­க­லாவை கட்­சி­யினர் ஏற்­றுக்­கொண்­டனர். ஜெய­ல­லி­தா­விடம் காட்­டிய பவ்­யத்தை சசி­க­லா­வி­டமும் காட்­டினர், இந்­நி­லையில், சொத்­துக்­கு­விப்பு வழக்கின் தீர்ப்பு கார­ண­மாக சசி­கலா சிறைக்கு செல்ல வேண்டி ஏற்­பட்­ட­மை­யினால் எடப்­பாடி பழ­னிச்­சா­மிக்கு முதல்­வ­ராகும் வாய்ப்பு கிடைத்­தது. அப்­போதும் சசி­கலா மீது காட்­டிய பவ்யம் அவர்­க­ளுக்கு குறை­யவில்லை. அத­னால்தான் சசி­கலா கை காட்­டிய எடப்­பாடி பழ­னி­சா­மியை முதல்­வ­ராக தேர்வு செய்­தனர். சசி­க­லாவின் விருப்பு மற்றும் ஆத­ர­வு­ட­னேயே அவர் முதல்­வ­ராக்­கப்­பட்டார்

அதே நேரம் சசி­க­லா­வுக்கு நான்­காண்டு கள் சிறைத் தண்­டனை கிடைத்­த­வுடன் இந்த வலிமை குறையும். அடுத்த கட்ட தலைவர்கள் தலை­யெ­டுப்­பார்கள் என்று நினைத்த நேரத்­தில்தான் தின­கரன் கட்­சிக் குள் கொண்­டு­வ­ரப்­பட்டு துணை பொதுச் செய­லாளர் ஆக்­கப்­பட்டார். அந்த நேரத்தில் தின­கரன் பற்றி அறிந்­த­வர்கள் கூறி­யது இனி கட்­சியை அவர் பார்த்துக் கொள்வார் என்­பதே. அதன்­பின்னர் நடந்த அடுத்­த­டுத்த நிகழ்­வு­களில் தின­கரன் தொண்­டர்கள் மத்­தி­யிலும், மக்கள் மத்­தி­யிலும் ஏற்­றுக்­கொள்­ளப்­படும் அர­சியல் தலை­வ­ரானார். அத்­தோடு சசி­க­லா­வுக்கு பதி­லாக கட்சிப் பணி­களை நிர்­வ­கிக்க அவ்­வி­டத்­துக்கு தின­கரன் நிய­மிக்­கப்­பட்டார். இத­னை­ய­டுத்து ஆர்.கே.நகர் தேர்­தல்­வ­ரையில் தின­க­ர­னுடன் இணைந்­தி­ருந்த எடப்­பாடி உள்­ளிட்ட அமைச்­சர்கள் இரட்டை இலை சின்­னத்­துக்கு இலஞ்சம் கொடுத்­த­தாக தின­கரன் சிறைக்கு சென்­றதும் சசி­கலா குடும்­பத்­து­ட­னான தொடர்பை துண்­டித்­தனர். ஆயினும் திஹார் சிறைவாசத்­துக்குப் பின்னர் உறுதி குலை­யாமல் மேலும் வேகம் காட்டி வரு­கின்­ற­மையால் அடுத்து அ.தி.மு.க.வில் உள்ள ஆளுமை மிக்க தலைவர் தின­கரன் மட்­டுமே என்ற கருத்தும் நில­வு­கின்­றது.

இதே­வேளை முதல்வர் பத­வியை இழந்த பன்னீர் ஜெய­ல­லிதா மர­ணத்­துக்கு நீதி விசா­ரணை மற்றும் சசி­கலா குடும்­பத்தை கட்­சி­யிலி­ருந்து நீக்க வேண்டும் உள்­ளிட்ட கோரிக்­கை­களை வலி­யு­றுத்தி தர்­ம­யுத்­தத்தை தொடங்­கப்­போ­வ­தாக அறி­வித்தார். ஜெய­ல­லிதா 75 நாட்கள் மருத்­து­வ­ம­னை யில் இருந்து மர­ண­ம­டைந்த போது அது தொடர்பில் எந்த சந்­தே­கத்­தையும் வெளிப் ப­டுத்­தாத பன்­னீர்­செல்வம் சசி­க­லா­வினால் தனது பத­விக்கு ஆபத்து வந்து விட்­டது என்­ற­துமே அவ­ருக்கு எதி­ராக ஜெ. மர­ணத்­துக்கு நீதி வேண்­டு­மென்று தர்­ம­யுத்­தத்தை தொடங்­கினார். இத­னை­ய­டுத்து தன் பத­வியை இழந்த பன்­னீரும் அந்த பத­வியை பிடித்த எடப்­பாடி தரப்பும் ஒரு­வரை ஒருவர் விமர்­சனம் செய்து வந்­தனர்.

நாய் கதை, நரிக் கதை சொல்லி ஓ.பன்­னீர்­செல்­வத்தைக் கிண்டல் அடித்தார் எடப்­பாடி. ‘‘இந்த ஆட்சி ஊழல்­ம­ய­மா­கி­விட்­டது என்று சொல்லி ஆர்ப்­பாட்­டத்­துக்குத் திகதி குறித்தார் பன்னீர். இந்­நி­லையில் முடக்­கப்­பட்ட அ.தி.மு.க. வின் இரட்டை இலை சின்­னத்தை மீளப்­பெற வேண்­டு­மானால் இரு அணி­களும் இணைய வேண்­டிய தேவை ஏற்­பட்­டது. இதற்­கி­ணங்க எடப்­பாடி மற்றும் பன்னீர் அணிகள் இணைப்­புக்­கான பேச்­சு­வார்த்­தைகள் பல மாதங்­க­ளாக இழு­ப­றி­யுடன் நடை­பெற்று வந்த நிலையில் தற்­போது இணைந்­துள்­ளன.இன்று ஊழல் ஆட்­சியின் துணை முதல்வர் ஆகி­விட்டார் பன்னீர். ஊழல் பட்டம் கொடுத்த பன்­னீரைப் பக்­கத்தில் சேர்த்துக் கொண்டார் எடப்­பாடி. இவை அனைத்தும் நான்­கைந்து மாதங்­க­ளுக்குள் நடந்து முடிந்­து­விட்­டன. இருவருக்கும் முகத்தில் கூச்­சமோ, வெட்­கமோ இல்லை. கடந்த ஏப்ரல் மாதத்­தி­லி­ருந்து சசி­க­லாவை எடப்­பாடி அணி மெல்ல மெல்ல ஒதுக்கி வைக்க ஆரம்­பித்­தது. ‘‘நான் வைத்த கோரிக்­கை­யால்தான் ஒதுக்கி வைத்­துள்­ளார்கள் என்று பன்னீர் மகிழ்ந்தார். அப்­போது அமைச்சர் ஜெயக்­குமார், ‘‘போகிற போக்கைப் பார்த்தால் அமெ­ரிக்­காவில் ட்ரம்ப் ஜெயித்­த­தற்கும் தான்தான் காரணம் என்று பன்னீர் சொன்­னாலும் சொல்வார் என்று கிண்டல் அடித்தார். இதோ இப்­போது ட்ரம்ப் நகைச்­சு­வையை விட இந்­த­ இ­ணைப்பு பெரிய நகைச்­சுவை என்று இந்­திய ஊட­கங்கள் விமர்­சிக்­கின்­றன.

‘‘அம்­மாவின் ஆன்­மாதான் எங்­களை இணைத்­துள்­ளது என்று பன்னீர் கண்ணீர் விட்­டுள்ளார். அம்மா கொடுத்­து­விட்டுப் போன அனைத்­திந்­திய அண்ணா திரா­விட முன்­னேற்றக் கழகம் என்ற பெய­ரையும், இரட்டை இலைச் சின்­னத்­தையும் டில்லி தேர்தல் ஆணை­யகத்தின் 'ட்ரங்க்' பெட்­டி யில் முடக்­கிய மனி­தர்­கள்தான் பன்­னீரும் எடப்­பா­டியும். இவர்­களை ஜெய­ல­லி­தாவின் ஆன்மா எப்­படி மன்­னிக்கும்? 136 சட்­ட­மன்ற உறுப்­பி­னர்கள் ஆத­ரவு கொண்ட பெரும்­பான்மை அரசைக் கொடு த்துச் சென்றார் ஜெய­ல­லிதா. லட்டு போல அதை வைத்துக் காப்­பாற்றத் தெரி­யாமல், பூந்­தி­யாக உடைத்­து­விட்­டனர்.

ஜெய­ல­லிதா முத­ல­மைச்­ச­ராக இருந்த காலத்தில் பிர­தமர் மோடியை எத்­தனை முறை போய் பார்த்தார்? ‘மோடியா, லேடியா? என்று அகில இந்­திய அளவில் தனி­ம­னு­ஷி­யாக பா.ஜ.க.வை எதிர்த்து நின்­றவர் ஜெய­ல­லிதா. அவ­ரிடம் நான்கு பாரா­ளு­மன்றத் தொகு­திகளை வாங்கி விட ­லாமா என்று போயஸ் கார்டன் தேடி வந்த மோடியை, அந்தத் தலைப்­பையே தொட விடாமல் திருப்பி அனுப்­பி­யவர் ஜெய­ல­லிதா. அவர் இறந்­ததும் மொத்தக் கட்­சி­யையும் ஆட்­சி­யையும் மோடி, அமித் ஷா கால­டியில் கொண்டு போய் வைத்த எடப்­பா­டியும் பன்­னீரும் ஜெய­ல­லி­தாவின் ஆன்­மாவைப் பற்றி இப்­போது பேசு­கின்­றனர்.

‘இவர்கள் இது­வரை செய்­துள்ள ஊழலை அமைச்சர் விஜ­ய­பாஸ்­க­ருக்கு சிக்க வைத்த வரு­மான வரி­த்து­றை­சோ­தனை இவர்­க­ளுக்கு எதி­ரா­கவும் திரும்­பலாம் என டில்லி மிரட்­டி­யது’ என்று காரணம் சொல்­லலாம்.ஆனால் ஜெய­ல­லிதா ஆட்­சியில் இருந்த போது அவ­ரது தலைக்கு மேல் சொத்­துக்­கு­விப்பு என்ற கத்தி தொங்­கிக்­கொண்­டுதான் இருந்­தது. அதைப் பற்றி அவர் கவ­லைப்­ப­ட­வில்லை. பயப்­ப­ட­வில்லை. யாரையும் எதிர்­கொள்ளும் ஆளுமைத் திறன் ஜெய­ல­லி­தா­வுக்கு இருந்­தது. இவர்­களோ, எல்லா நிழ­லையும் பார்த்து நடுங்­கு­ப­வர்­க­ளாக இருந்­தார்கள். அத­னால்தான் ‘ஒரு காலத்தில் சேர்ந்து செய்த காரி­யங்கள் வெளிச்­சத்­துக்கு வந்­து­விடக் கூடாது’ என்­ப­தற்­காகச் சேர்­கி­றார்கள். மானம், அவ­ மானம் பற்றி கவ­லையே பட­வில்லை. ஒரு­வரை ஒருவர் திட்­டி­யது அனைத்­தையும் துடைத்துப் போட்­டு­விட்டு தோள் சேர்ந்­து­விட்­டார்கள், அல்­லது திட்­டு­வது மன­சுக்குள் இறங்­காத அள­வுக்குத் தடித்­து­விட்­டது தோல். கடந்த 6 மாதங்­க­ளாக பன்னீர் நடத்­திய தர்­ம­யுத்தம் இப்­போது முதல்­வ­ருக்கு நிக­ரான பதவி கிடைத்­ததும் என்ன ஆயிற்று என்ற கேள்வி எழும்­பு­கி­றது. ஜெய­ல­லி­தாவின் ஆன்மா என்று மெரி­னாவில் அவர் தொடர்ந்த குரல் இன்று அம்­மாவின் ஆன்மா எங்­களை இணைத்­துள்­ளது என மாறி­யுள்­ளது.

இவை அனைத்­தையும் விட, புதிய இந்­தி­யாவைப் படைக்க புறப்­பட்­டுள்ள பிர­தமர் மோடி, ‘முதல்வர் எடப்­பாடி பழ­னி­சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் இரு­வ­ருக்கும் வாழ்த்­துகள். உங்­க­ளது இணைப்பால் புதிய உய­ரங்­களைத் தமிழ்­நாடு தொடும் என நம்­பு­கிறேன் என தெரி­வித்­துள்ளார். இது நேர­டி­யா­கவே பா.ஜ.க.வின்கீழ் எடப்­பாடி மற்­றும் பன்னீர் தலை­மை­யி­லான அ.தி.­மு.க. செயற்­ப­டு­கின்­றது என்ற விமர்­ச­னங்­களை மேலும் வலுப்­ப­டுத்­தி­யுள்­ளது.

ஜெய­ல­லிதா மாநில உரி­மையை எப்­போதும் மத்­திய அர­சிடம் விட்­டுக்­கொ­டு­த்­த­தில்லை. மருத்­துவ பொதுத் தேர்வு (நீட்), காவேரி, 7 தமிழர் விடு­தலை என அனைத்­திலும் மத்­திய அரசை எதிர்த்து துணி­வோடு போரா­டி­னார். அத­னால்தான் எதிர்­க்கட்­சி­கள்­ கூட அவர் இறந்த பின்னும் அவரை பாராட்­டு­கின்­றன. ஆனால் ஜெய­ல­லி­தாவின் மர­ணத்­துக்குப் பின், அவர் எதை எதை எதிர்­த்தாரோ அதை­யெல்லாம் தமி­ழக தலை­மைகள் ஏற்று மக்கள் மீது திணிக்­கின்­றனர். அதி­கார வெறியில் தங்­க­ளு­டைய பத­விக்­காக அடுத்­த­டுத்து மாநி­லங்­களின் உரி­மை­களைப் பணயம் வைத்து சூதா­டி­வந்­த­வர்­களின் கையா­லா­காத்­த­னத்தின் உச்­சமே இன்­றைக்கு, ‘மருத்­துவப் பொது நுழைவுத் தேர்வு’ விவ­கா­ரத்தில் தமி­ழ­கத்­துக்குக் கிடைத்­தி­ருக்கும் அர­சியல் தோல்வி. ஜெய­ல­லி­தாவின் வார்த்­தை­க­ளின்­ப­டியே தமி­ழக மாண­வர்­க­ளுக்கு இழைக்­கப்­பட்­டி­ருக்கும் அநீதி. மிகப் பெரிய சமூக அநீ­திக்கு இன்­றைய ஆட்­சி­யா­ளர்கள் துணை போயி­ருக்­கி­றார்கள். இத்­தோடு முடி­யப்­போ­வ­தில்லை; இவர்கள் தங்கள் அதி­கார சுகத்­துக்­காக எதையும் இழக்கத் தயங்க மாட்­டார்கள் என்­ப­தையே நடக்கும் காட்­சிகள் பகி­ரங்­கப்­ப­டுத்­து­கின்­றன.

மாநி­லத்தில் உள்ள பலம் மட்டும் இன்றி, மக்­க­ள­வை­யிலும் 37 உறுப்­பி­னர்­க­ளுடன் நாட்டின் மூன்­றா­வது பெரிய கட்­சி­யாக அமர்ந்­தி­ருக்­கி­றது அ.தி.­மு.க. இவ்­வ­ளவு பல­மான சூழ­லி­லி­ருந்தும் மாநி­லத்தின் உரி­மையைப் பாது­காக்க முடி­யா­த­வர்­க­ளுக்கு, டில்­லி­யிடம் பேரம் பேசத் தெரி­யா­த­வர்­க­ளுக்கு, திரா­விட இயக்­கத்தின் மைய ஆதாரக் கொள்­கை­யையே பறி­கொ­டுத்து நிற்­ப­வர்­க­ளுக்குப் பதவி எதற்கு? என்ற கேள்வி எல்லோர் மன­திலும் எழு­கின்­றது.

இந்­நி­லையில் இவ் இணைப்­புக்கு தின­கரன் தரப்­பினர் எதிர்ப்பு தெரி­வித்து வரு­கின்­றனர். தமி­ழக முதல்­வ­ருக்­கான தங்­க­ளது ஆத­ரவை மீள பெறு­வ­தா­கவும் உட­ன­டி­யாக சட்­ட­மன்­றத்தை கூட்ட வேண்டும், முதல்வர் தங்­க­ளது நம்­பிக்கை இழந்து விட்­ட­மையால் அவரை மாற்றம் செய்ய வேண்டும் எனவும் தின­கரன் தரப்பை சேர்ந்த 19 சட்­ட­மன்ற உறுப்­பி­னர்கள் தமி­ழக ஆளுநர் வித்­யா­சாகர் ராவிடம் தனித்­தனி கடி­தங்கள் மூல­மாக கோரிக்கை விடுத்­தனர். இதே­போல தமி­ழக எதிர்க்­கட்சி தலைவர் ஸ்டாலின் சட்­ட­மன்­றத்தை கூட்டி எடப்­பாடி அரசு நம்­பிக்கை வாக்­கெ­டுப்பு நடத்த வேண்டும் என ஆளு­ந­ருக்கு கடிதம் அனுப்­பி­யுள்ளார். காங்­கிரஸ் உள்­ளிட்ட ஏனைய கட்­சி­களும் இத­னையே வலி­யு­றுத்­து­கின்­றன. ஏற்­க­னவே தமி­ழக அர­சுக்கு எதி­ராக நம்­பிக்கையில்லா தீர்­மானம் தேவைப்­பட்டால் கொண்­டு­வ­ரப்­படும் என்று முன்­ன­தாக ஸ்டாலின் தெரி­வித்­தி­ருந்தார். தின­கரன் தரப்பும் தாங்கள் நினைத்தால் முதல்­வரை மாற்­றுவோம் என வெளிப்­ப­டை­யாக மிரட்டல் விடு­கின்­றனர். அத்­தோடு பா.ஜ.க.வின் விருப்­புக்கு இணங்­கவே அ.தி.மு.க. அணிகள் இணைந்­துள்­ள­தா­கவும் தொடர்ந்து மத்­திய அர­சுக்கு எடப்­பாடி மற்றும் பன்னீர் செல்வம் ஆகியோர் அடி­மை­க­ளாக இருப்­பார்கள், உட­ன­டி­யாக இவ் அர­சுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா தீர்­மானம் கொண்­டு­வர வேண்டும் என்ற விமர்­சனம் அனைத்து எதிர்­க்கட்­சி­க­ளி­னாலும் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. இத்­த­கைய கார­ணங்கள் தமி­ழக அர­சுக்கு எதி­ராக நம்­பிக்கை இல்லா தீர்­மானம் ஒன்று கொண்டு வரப்­பட வாய்ப்பு உள்­ளது என்­பதை பறை­சாற்­று­கின்­றது. இதனால் எடப்­பாடி ஆட்சி தப்­புமா என்ற கேள்வி எழுந்­துள்­ளது.

கடந்த 2016ஆம் ஆம் ஆண்டு தமி­ழக சட்­ட­மன்ற தேர்­தலில் அ.தி.மு.க., தி.மு.க., மக்கள் நலக்­கூட்­டணி கட்­சிகள் போட்­டி­யிட்­டன. இதில் அ.தி.மு.க. கூட்­ட­ணியில் போட்­டி­யிட்ட கட்­சிகள் அனைத்­துமே இரட்டை இலை சின்­னத்தில் போட்­டி­யிட்­டன. தேர்தல் முடிவில் அ.தி.மு.க 136 தொகு­தி­க­ளிலும், தி.மு.க. 89 தொகு­தி­க ளிலும், கூட்­டணி காங்­கிரஸ் கட்சி 8 தொகு­திகளிலும், முஸ்லீம் லீக் ஒரு தொகு­திளி லும் வெற்றி பெற்­றன.

இந்­நி­லையில் தற்­போ­தைய நிலையில் தமி­ழக சட்­ட­ச­பையில் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­களின் (எம்.எல்.ஏ.க்கள்) மொத்த எண்­ணிக்கை 234 ஆகும். இதில் அ.தி.மு.க. கூட்­ட­ணியில் ஜெய­ல­லிதா மறைவு மற்றும் சபா­நா­ய­கரை கணக்கில் சேர்க்க முடி­யாத நிலை என்­ப­ன­வற்றால் அ.தி.மு.க.வின் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை 134 ஆக உள்­ளது.

இதில் எடப்­பாடி அணி - 112, அ.தி.மு.க. ஆத­ரவு சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளான கருணாஸ், தனி­ய­ரசு, தமிமுன் அன்­சாரி- 3 தின­கரன் அணி- 19 , தி.மு.க. - 89 , காங்­கிரஸ்- 8, இந்­திய யூனியன் முஸ்லிம் லீக்- 1 என்ற நிலையில் உள்­ளனர். பெரும்­பான்மை நிரூ­பிக்க 117 உறுப்­பி­னர்கள் தேவை. 122 எம்.எல்.ஏக்கள் ஆத­ரவு இருந்த நிலையில் தற்­போது 20 எம்.எல்.ஏக்கள் தின­கரன் பக்கம் சென்­றதால் 102 ஆக குறைந்­துள்­ளது. இதில் ஆறு­குட்டி எம்.எல்.ஏ.மற்றும் பன்னீர் ஆத­ரவு எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் சேர்ந்தால் 113 ஆக உயர வாய்ப்பு உள்­ளது. நடு­நிலை வகித்த மயி­லாப்பூர் எம்.எல்.ஏ. நட்ராஜ் ஆத­ர­வையும் சேர்த்தால் 114 பேர் எடப்­பாடி பக்கம் உள்­ளனர். இந்த நிலையில் அ.தி.மு.க. சின்­னத்தில் நின்ற தனி­ய­ரசு, கருணாஸ், தமீமுன் அன் ­சாரி ஆகிய மூவரின் நிலை என்ன என்­பது கேள்­விக்­குறி. ஏற்­க­னவே இவர்கள் தின­கரன் அணியை ஆத­ரித்து வரும் நிலையில் அதே நிலை தொடர்ந்தால் எடப்­பாடி அணியின் எம்.எல்.ஏ.க்கள் பலம் மேலும் குறையும். எடப்­பாடி ஆட்­சிக்கு எதி­ராக குரல் கொடுத்து மிரட்டும் தின­கரன் தரப்பு அ.தி.மு.க. ஆட்­சியை மாற்ற திரள் ­வார்­களா என்­பது முதலில் உள்ள கேள்வி. ஒரு­வேளை எடப்­பா­டியை மாற்­ற­வேண் டும் என்ற கோரிக்­கையின் அடிப்­ப­டையில் சம­ர­சத்­திற்கு வரும் வாய்ப்பு உள்­ள­தா­கவும் பார்க்­கலாம். தினகரன் தரப்பு கூறு­வது போல தன­பா­லையோ செங்­கோ­டை­ய­னையோ முதல்­வ­ராக்­கலாம் என்ற சம­ர­ச­த்­துக்கு வரலாம். ஏ­னெனில் சில வேளை நம்­பிக்­கை­யில்லா தீர்மானம் கொண்­டு­வ­ரப்­பட்டு தற்­போ­தைய ஆட்சி கவிழ்ந்தால் அதற்கு தின­கரன் தரப்­பினர் பொறுப்­பேற்க வேண்டி இருக்கும். ஆட்சி இருக்கும் வரைதான் அவர்­களால் மிரட்ட முடியும். ஆட்சி கவிழ்ந்து மீண்டும் தேர்தல் வந்தால் அனை­வ­ரது நிலையும் கேள்­விக்­கு­றி­யாகும். தி.மு.க. ஆட்­சிக்கு வரு­வ­தற்­கான வாய்ப்பே அதிகம். அப்­படி ஒரு நிலையை கொண்­டு­வர தின­கரன் தரப்­பினர் முயற்­சிக்க மாட்­டார்கள். ஜெய­ல­லி­தாவின் உழைப்பால் வந்த ஆட்­சியை கவிழ்த்­தார்கள் என்ற கெட்ட பெயரை யாரும் சம்­பா­திக்க விரும்­ப­மாட்­டார்கள். தின­க­ரனும் திவா­க­ரனும் தாங்கள் இந்த ஆட்­சியை கவிழ்க்க விரும்­ப­வில்லை என தெளி­வாக கூறி­யுள்ள அடிப்­ப­டையில் தின­கரன் தரப்­பினர் தங்கள் தரப்பை பலப்­ப­டுத்­தவே இத்­த­கைய எதிர்ப்பு நட­வ­டிக்­கையில் ஈடு­ப­டு­கி­றார்கள் என்று எடுத்­துக்­கொண்டால் ஆட்­சி­க­விழ வாய்ப்­பில்லை.

இதே­வேளை பன்னீர் பழ­னிச்­சாமி இணைப்பு மக்­க­ளி­டையே எதிர்­ம­றை­யான தாக்­கத்­தையே ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. ஒரு சுய­நல அர­சியல் நிகழ்வு என்றே பார்க்­கப்­ப­டு­கின்­றது. மேலும் தற்­போது தேர்தல் வந்தால் தி.மு.க. வெற்­றி­பெற வாய்ப்­பு­களே அதிகம் என கருத்து கணிப்­புகள் கூறு­கின்­றன. எனவே தங்கள் மீதான விமர்­ச­னத்தை போக்கும் வகை­யிலும் மக்­களை திசை திருப்­பும் வகையிலும் தற்­போது எடப்­பாடி தரப்பு எடுத்­து ள்ள ஆயுதம் பேரறிவாளன் பரோல்... இந்திய முன்னாள் பிரதமரின் கொலை வழக்கில் சிறை தண்டணை பெற்று வரும் பேரறிவாளன் தற்போது முதல்முறையாக வெளியே வந்துள்ளமையால் ஊட கங்களின் வெளிச்சம் அவர் பக்கம் திரும் பியுள்ளது. இதனால் எடப்பாடியும் பன்னீரையும் சிறிது காலம் மக்களும் விமர்சகர்களும் மறந்திருப்பர் என்று அவர்கள் நினைக்கலாம். ஆனால் மத் திய பா.ஜ.க. வின் கைப்பாவையாக செயற்படும் தற்போதைய அ.தி.­மு.க. தங்களது சுயநலத்துக்காக இந்த பரோலை வழங்கியுள்ளனர் என்பது வெட்ட வெளிச் சம்.

இதேவேளை தினகரன் தரப்பு தம்மால் ஆட்சிக்கு வந்தவர்கள் தமக்கே துரோகம் செய்வதை பார்த்துக்கொண்டு நிச்சயம் அமைதியாக இருக்காது. மேலூரில் போல மீண்டும் ஒரு பொது கூட்டத்தை வைத்து மிரட்டலாம். மறுபுறம் தி.மு.க.வின் நிலைப்பாடு இதில் என்னவென்பது கவனிக்கப்படவேண்டிய ஒன்று. தற்போது தி.மு.க. கூட்டணிக்கு 97 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இது போன்ற நிலையில் கருணாநிதி மட்டும் உயிர்ப்புடன் இருந்திருந்தால் ஆட்சி கவிழ்க்கப்பட்டு அவர் முதல்வராகியிருப்பார். அந்த ஆளுமை ஸ்டாலினிடம் இல்லை என்ற போதிலும், இந்த வாய்ப்பை தி.மு.க. பயன்படுத்துமா? அல்லது ஆட்சியை மாற்ற ரஜினி கமல் உள்ளிட்ட யாரேனும் களமிறங்குவரா?.. ஆட்சி மாற்றம் ஏற்பட் டால் மட்டுமே மத்தியிலிருந்து தமிழகம் தப்பும்... பார்க்கலாம் தப்புமா தமிழக மென்று...

குமார் சுகுணா

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-08-26#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.