Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலையகமும் உள்ளூராட்சி மன்றங்களும்

Featured Replies

மலையகமும் உள்ளூராட்சி மன்றங்களும்

 

 இவ்­வாரம் பேசு­பொ­ரு­ளாக தொடர்ந்து பல தரப்­பி­னாலும் 'உள்­ளூ­ராட்சி மன்ற' விட­யங்கள் பற்றி அழுத்தம் கொடுக்­கப்­பட்டு வந்­துள்­ளது. இந்த வருட இறு­திக்குள் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் தேர்­தல்­களை விகி­தா­சார, வட்­டார முறை என்ற கலப்பு முறையில் நடத்­து­வ­தற்கும் தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்­தது. இது இவ்­வா­றி­ருக்க உள்­ளூ­ராட்சி தேர் தல்கள் சட்டமூலமும் பாரா­ளு­மன்­றத்தில் ேநற்று 120 வாக்­கு­களால் நிறை­வேற்று பட்­டு­விட்­டது.  

இது உள்­ளூ­ராட்சி தேர்தல் திருத்த சட்­ட­மூ­லமே தவிர 'பிர­தேச சபைக்­கான திருத்த சட்டமூலம்' அல்ல. பிர­தேச சபை திருத்தம் தொடர்பில் இன்னும் சரி­யான முடிவு எட்­டப்­ப­ட­வில்லை.

இந்­நி­லையில் மலை­ய­கத்­த­லை­மைகள் பிர­தே­ச­சபை திருத்தம் குறித்து இவ்­வாரம் அழுத்தம் கொடுத்­தி­ருந்­தனர் என்­ப­தையும் சுட்­டிக்­காட்ட வேண்டும்.

மலை­ய­கத்­திற்கு இந்த பிர­தேச சபை எந்­த­வ­கையில் முக்­கி­யத்­துவம்? இது குறித்து ஏன் தொடர்ந்து அழுத்­தங்கள் கொடுக்­கப்­பட்டு வரு­கின்­றன அதன் பின்­னணி என்ன என்­பது பற்றி இத்­த­ரு­ணத்தில் ஆரா­யவும் வேண்­டி­யுள்­ளது.

பிர­தேச சபைகள் முறை­யற்ற விதத்தில் இருக்­கின்­ற­மையால் 'மலை­யகம்' இழந்தி ருக்கும் விட­யங்­களோ எண்­ணற்­றவை. பிர­தேச செய­ல­கங்­களை நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் அதி­க­ரிப்­பதன் ஊடாக பிர­தேச சபை­களை அதி­க­ரித்து விட முடியும் என்ற கோரிக்­கையே ஆரம்­பத்தில் முன்­வைக்­கப்­பட்டு தொடர்ச்­சி­யாக பேசப்பட்டு வந்­தது.

இந்­நி­லையில் அமைச்சர் மனோ­க­ணேசன் தலை­மை­யி­லான தமிழ் முற்­போக்குக் கூட்­டணி இவ்­வா­ரத்தில் இது பற்றி பல்­வேறு அழுத்­தங்­க­ளையும் கொடுத்து வந்­தி­ருந்­தது.

அத்­துடன், கடந்த 21ஆம் திகதி இடம்­பெற்ற கட்­சித்­த­லை­வர்கள் கூட் டத்தில் தேர்­தல்கள் முடிந்த பின்­னரே பிர­தேச சபை­களை அதி­க­ரிக்க முடியும் என பிர­தமர் தெரி­விக்க அதற்கு எதிர்ப்பு தெரி­வித்த த.மு. கூட்­டணி தலைவர் மனோ கணேசன் கூட்­டத்தில் இருந்து வெளி­யே­றிய சம்­பவம் பிர­தேச சபை­அதிகரிப்பின்தேவையின் முக்­கி­யத்­து­வத்தை பிர­தி­ப­லித்­தி­ருந்­தது.

 இத­னை­ய­டுத்து பிர­தேச சபை அதி­க­ரிப்பை தேர்­த­லுக்கு முன்னர் மேற்­கொள்ள வேண்டும் என எடுத்­து­ரைத்து ஜனா­தி­பதி, பிர­தமர் உள்­ளிட்ட கட்­சித்­த­லை­வர்கள் சாத­க­மான முடி­வெ­டுக்க வேண்டும் என்றும் அறி­விக்­கப்­பட்­டு­விட்­டது.

இந்­நி­லையில் தமிழ் முற்­போக்கு கூட்­டணி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் குழு மாகா­ண­ச­பைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைசர் முஸ்­த­பாவை சந்­தித்து கோரிக்­கைகள் அடங்­கிய ஆவ­ணத்தை சமர்­பித்­துள்­ளனர். இத­னை­ய­டுத்து இது­பற்றி விரி­வாக இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­டலின் விளை­வாக நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் தற்­போது ஐந்து பிர­தேச சபை­க­ளாக இருக்கும் அம்­ப­க­முவ, நுவ­ரெ­லியா, வலப்­பனை, கொத்­மலை, ஹங்­கு­ராங்­கெத்தை ஆகிய பிர­தேச சபை­களை பன்­னிரெண்­டாக உயர்த்­து­வ­தற்கு இணக்கம் காணப்­பட்­டது.

இதன்­படி அம்­ப­க­முவ-–3, நுவ­ரெ­லியா –-3 என பிரிக்­கப்­ப­டு­வ­தோடு ஏனைய மூன்று பிர­தேச சபை­களும் இவ்­வி­ரண்­டாக பிரிக்­கப்­படல் வேண்டும் என்­பதும் கோரிக்­கை­யாக அமைந்­துள்­ளது. ஏற்­க­னவே பிர­தேச செய­ல­கங்கள் 12 ஆக உய­ர்த்­தப்­படல் வேண்டும் என்­பதே கோரிக்­கை­யா­கவும் அமைந்­திருந்தது. மலை­யக கட்­சிகள் அனைத்தும் 5 பிர­தேச சபை­களை 12 பிர­தேச சபை­க­ளாக அதி­க­ரிப்­ப­தற்கு உடன்­பாடு கண்­டுள்­ளன. இந்த வாரம் அமைச்­ச­ர­வைக்கு குறித்த பிரே­ர­ணையை தான் முன்­வைத்து இந்த கோரிக்­கையை நிறை­வேற்­று­வ­தாக அமைச்சர் முஸ்­தபா உறு­தி­ய­ளித்தும் இருந்தார்.

 

 நுவ­ரெ­லியா மாவட்­டத்தில்  உள்­ளூ­ராட்சி மன்­றங்கள்  அதி­க­ரிப்பு 

நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் 12 ஆக அதி­க­ரிப்­ப­தற்கு அமைச்சர் பைஸர் முஸ்­த­பா­விடம் த.மு.கூ கொடுத்த திட்டத்திற்கு------ சாத­க­மான பதில் கிடைக்­கப்­பெற்ற விடயம் வர­வேற்­கத்­தக்­க­தாகும்.

தொடர்ச்­சி­யாக பல வரு­டங்­க­ளாக கொடுத்து வந்த அழுத்­தங்­களே இந்த வெற்­றிக்கு பறை­சாற்­றி­யுள்­ளது. உண்­மையில் மலை­ய­கத்தில் உள்ள பிர­தான கட்­சி­க­ளான இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ், தொழி­லாளர் தேசிய சங்கம், மலை­யக மக்கள் முன்­னணி ஆகியன உள்­ளூ­ராட்சி சபைகள் விட­யத்தில் கருத்து வேறு­பா­டின்றி ஒரே நிலைப்­பாட்டில் அழுத்தம் கொடுத்­த­மையும் இந்த வெற்­றிக்கு காரணம் எனலாம்.

இது போலவே மலை­யக மக்­களின் சகல விட­யத்­திலும் மலை­யக மக்கள் பிர­தி­நி­திகள் ஒன்­றி­ணைந்து செயற்­பட்டால் அவர்கள் 'தனித்­து­வ­மான ' இன­மாக அடை­யா­ளப்­படுத்தப்படுவார்கள். இவ்வாறு அடையாளப்படுத்தப்பட வேண்டுமாயின் பொது­நிர்­வாக முறை­மைக்குள் மலை­யகம் முழு­மை­யாக உள்­ள­வாங்கப் படா­தி­ருந்­த­மையே பிர­தான காரணம்.

அபி­வி­ருத்தி உட்­பட மக்­களின் நலன்சார் பல விட­யங்­களில் முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாக உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் இருக்­கின்ற போதிலும் அது மலை­ய­கத்­துக்கு எவ்­வா­றான முறையில் கட்­ட­மைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது என்­பது பற்றி அறிய வேண்­டி­யது இன்­றி­ய­மை­யா­தது.

 

பொது ­நிர்­வாக முறை­மைக்குள் இல்­லாத மலை­யகம்  

என்­னதான் நாட்டில் உய­ரிய சபை என பாரா­ளு­மன்றம் பிர­தி­ப­லித்­தி­ருந்­தாலும் அச்­ச­பைக்கு இம்­மக்­க­ளது பிர­தி­நி­திகள் அவர்­களால் தெரி­வு­செய்­யப்­பட்டு அனுப்­பி­னாலும், ஆக அடிப்­ப­டை­யான 'உள்­ளூ­ராட்சி மன்றம்' என்ற ஒரு அடிப்­படை நிர்­வா­கத்­திற்குள் உள்­­வாங்­கப்­ப­டாத நிலை­யி­லுள்­ளனர். சாதா­ரண அடிப்­படை வச­திகள் சில­வற்றை பெற்­றுக்­கொ­டுக்கும் உள்­ளூ­ராட்சி சபை­களே உறு­தி­யாக மலை­ய­கத்தில் இல்­லாத நிலையில் அவர்கள் எக்­கா­லத்தில் தேசிய நீரோட்­டத்தில் உள்­வாங்­கப்­ப­டு­வார்கள்.

சுமார் 15 இலட்சம் இந்திய வம்சாவளி மக்கள் தொகை­யி­னரை தேசிய நீரோட்­டத்­துக்கு உள்­­வாங்­காமல் 'மலை­ய­கத்­த­வர்கள் பின்­தங்­கிய சமூ­கத்­தினர்' என்று கூவிக்­கொள்­வதில் எவ்­வித அர்­த்­தமும் இல்லை. தேசிய நீரோட்­டத்தில் முழு­மை­பெ­றாத சமூ­க­மாக இல்­லா­த­போதும் இன்று பல­து­றை­க­ளிலும் சாதித்துக் கொண்­டி­ருக்­கின்­றனர் என்­பதும் இங்கு சுட்­டிக்­காட்­டப்­பட வேண்டும்.

உள்­ளூ­ராட்­சி மன்றங்களின் அதிகரிப்பின் அவ­சியம்

மலை­ய­கத்­திற்கு உள்­ளூ­ராட்­சி மன்ற அதிகரிப்பின் அவ­சியம் குறித்து 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மலை­ய­கத்தின் பிர­தான மாவட்­ட­மான நுவ­ரெ­லியா மாவட்­ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம். தில­கராஜ் ஒத்­தி­வைப்­பு­வேளை பிரே­ர­ணை­யொன்றை முன்­வைத்து உரை­யாற்­றி­யி­ருந்தார். அதில் இது பற்றி அழுத்தம் கொடுக்­கப்­பட்­டது.

இது தொடர்ச்­சி­யாக பேசப்­பட்டு வந்த நிலையில் புதிய அர­சியல் அமைப்பு திருத்த விட­யத்தில் மலை­ய­கத்தில் உள்ள பிர­தான தொழிற்­சங்­க­கங்­களும் ஒன்­றி­ணைத்தாற் போல 'மலை­ய­கத்­திற்கு உள்­ளூ­ராட்­சி மன்ற அதிகரிப்பின்' அவ­சியம் குறித்து அழுத்தம் கொடுத்து இன்று வெற்­றி­யையும் எட்டும் நிலையும் எற்­பட்­டுள்­ளது.

எண்­ணிக்கை அடிப்­ப­டையில்

 7 இலட்­சத்து 20 ஆயிரம் சனத்­தொ­கைக்கு 5 பிர­தேச செய­ல­கங்­களே இயங்­கு­கின்­றன. குறிப்­பாக அம்­ப­க­முவ , நுவ­ரெ­லியா பிர­தேச செய­ல­கங்­களில் நான்கு இலட்­சத்­துக்கு மேற்­பட்ட சனத்­தொ­கைக்கு இரண்டு பிர­தேச செய­ல­கங்­களே காணப்­ப­டு­கின்­றன. இதனால் நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் மக்கள் அரச நிர்­வா­கத்தைப் பெற்­றுக்­கொள்­வதில் பாரிய சிக்­கல்கள் நில­வு­கின்­றன .

இந்த உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் தொடர்­பிலும் அதன் எல்லை மீள்­நிர்­ணயம் தொடர்­பிலும் கடந்த ஐந்து வரு­டங்­க­ளாக பல தரப்­பிலும் விதந்­து­ரைப்­புக்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றது. ஆனால், அது பற்றி முழு­மை­யான முடிவு இல்லை என்­பது வருந்­தக்­கூ­டிய விடயம்.

நமது நாட்டில் 14,021 கிராம சேவகர் பிரி­வு­களும் 331 பிர­தேச செய­ல­கங்­களும் தற்­போது செயற்­பாட்டில் உள்­ளன. நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் 491 கிராம சேவகர் பிரி­வு­களும் ஐந்து பிர­தேச செய­ல­கங்­களும் தற்­போது இயங்­கு­கின்­றன. இவை தேசிய ரீதி­யாக உள்ள சரா­சரி நிலை­மை­க­ளை­விட மாறு­பட்ட அளவில் சமத்­து­வ­மற்ற நிலை­யி­லேயே இருக்­கின்­றது. சாதா­ர­ண­மாக 10000 பேருக்கு ஒரு பிர­தேச செயலகம் இருக்க வேண்டும். ஆனால், மலை­ய­கத்­திலோ நிலைமை வேறாகவுள்ளது.

நமது நாட்டின் மொத்த சனத்­தொகை 2,03,59,439 ஆகும். அந்த அடிப்­ப­டையில் பார்க்­கும்­போது சரா­ச­ரி­யாக 65,000 அள­வான சனத்­தொ­கைக்கு ஒரு பிர­தேச செய­லகம் அமைதல் வேண்டும். அதே­போல 1,450 அள­வான சனத்­தொ­கைக்கு ஒரு கிராம சேவகர் பிரிவு அமைதல் வேண்டும். எனினும் நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் ஒரு கிராம சேவகர் பிரி­வுக்­கான சனத்­தொகை கிரா­மப்­ப­கு­தி­களில் ஒரு வித­மா­கவும் பெருந்­தோட்டப் பகு­தி­களில் வேறு­வி­த­மா­கவும் அமைந்து காணப்­ப­டு­கின்­றது. குறிப்­பாக அம்­ப­க­முவை பிர­தேச செய­ல­கத்­திற்கு உட்­பட்ட கேர்க்­கஸ்வேல்ட் கிராம சேவகர் பிரிவில் 10150 க்கு மேற்­பட்ட சனத்­தொகை காணப்­ப­டு­கின்­றது. அதே­நேரம் ஹங்­கு­ராங்­கத்தை பிர­தேச செய­ல­கத்­திற்கு உட்­பட்ட ஓக்­கந்­த­கல எனும் கிராம சேவகர் பிரிவின் சனத்­தொகை வெறும் 134 ஆகும். இது சமத்­து­வ­மற்ற நிலை­மை­யாகும். அரு­கி­லுள்ள அட்­ட­வ­ணையை அவ­தா­னித்தால் கிராம சேவகர் பிரி­வுகள் அதிகம் உள்ள பிர­தேச செய­லக பிரி­வு­களில் சிங்­கவர் அதி­க­மா­கவும் கிராம சேவகர் பிரி­வுகள் குறை­வாக உள்ள பிர­தேச செய­ல­கங்­களில் தமிழ் சனத்­தொகை அதி­க­மாக இருப்­ப­த­னையும் அவ­தா­னிக்­கலாம்.

மலை­யக தமிழ் மக்­களின் குறை அபி­வி­ருத்­திக்கு நாடு தழு­விய ரீதி­யாக இந்த 'கிராம சேவகர் பிரி­வு­களின் எண்­ணிக்கை குறைவு ஒரு பிர­தான கார­ண­மாகும்' இந்த நிலை­மை­களை அவ­தா­னிக்­கும்­போது பிர­தேச செய­ல­கங்கள் மாத்­தி­ர­மல்ல கிராம சேவகர் பிரி­வு­களும் அதி­க­ரிக்­கப்­படல் வேண்டும் என்­பதில் மாற்­றுக்­க­ருத்து இல்லை.

மலை­யக மக்­க­ளுடன் தொடர்­பு­டை­ய­தாக உள்­ளூ­ராட்சி மன்­றத்­தேர்­தலில் இன்­னு­மொரு குழப்பம் இருக்­கி­றது. அதுதான் அந்தத் தேர்­தலில் மக்கள் வாக்­க­ளிக்­கின்­ற­போதும் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் ஒன்­றான பிர­தேச சபை­களில் இருந்து மலை­யகப் பெருந்­தோட்ட மக்கள், சேவையைப் பெற்­றுக்­கொள்­வதில் உள்ள சிக்­க­லாகும்.

மலை­யக மக்­களின் பரம்பல் இன்று தொழி­லாளர் அல்­லா­தோரின் எண் ணிக்­கையில் அதி­க­மாக காணப்­ப­டு­கின்­றது. அண்­மைய தர­வு­களின் படி 15 இலட்சம் சனத்­தொ­கையைக் கொண்ட இந்­திய வம்­சா­வளி மலை­யக மக்­களில் சுமார் 10 வீத­மா­ன­வர்கள் மாத்­தி­ரமே அதா­வது ஒரு இலட்­சத்து ஐம்­ப­தி­னா­யிரம் அள­வா­ன­வர்­களே தோட்டத் தொழி­லா­ளர்­க­ளாக உள்­ளனர்.

ஐயா­யி­ரத்­துக்கும் குறை­வான தொழிலா ளர்­க­ளாக அர­சாங்­கத்­துக்கு சொந்­த­மான கூட்­டுத்­தா­பன நிர்வாக தோட்­டங்­களில் வாழ்­கின்­றனர். ஏனையோர் பிராந்­திய பெருந்­தோட்டக் கம்­ப­னிகள் எனப்­படும் தனியார் நிறு­வ­னங்­களின் முகா­மையின்கீழ் இயங்கும் தோட்­டங்­க­ளி­லேயே தொழி­லா­ளர்­க­ளாக உள்­ளனர்.

ஒட்டு மொத்­த­மாக இந்த தோட்டத் தொழி­லா­ளர்­களின் தொழில் பிரச்­சி­னைகள் ஒரு புற­மி­ருக்க அவர்­களின் நாளாந்த நிர்­வாக பிரச்­சி­னைகள் வேறா­க­வுள்­ளன.

பொது­வாக இலங்கை நாட்டின் பொது­நிர்­வாகம் என்­பது கிரா­ம­சே­வகர் மட்­டத்தில் இருந்து ஆரம்­பித்து பிர­தேச செய­லாளர் பிரிவு, மாவட்ட செய­லகம், அமைச்சு என விரி­வ­டைந்து செல்­கின்­றது. நிர்­வாக அமு­லாக்­கத்­திற்கு தேவை­யான தீர்­மா­னங்­களை நிறை­வேற்றும் மக்கள் பிர­தி­நி­திகள் கொண்ட அதி­கா­ர­மிக்க சபை­க­ளாக உள்­ளூ­ராட்சி மன்­றங்கள், மாகாண சபைகள், பாரா­ளு­மன்றம் என்­பன காணப்­ப­டு­கின்­றன. உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் பிர­தா­ன­மா­னது பிர­தேச சபைகள். அதற்­க­டுத்து நக­ர­ச­பை­களும் மாந­கர சபை­களும் அடங்­கு­கின்­றன.

பிர­தே­ச­ச­பை­களின் செயற்­பாடு

மலை­யகப் பெருந்­தோட்­டங்­க­ளைப்­பொ­றுத்­த­வ­ரையில் பெரும்­பாலும் பிர­தே­ச­சபை நிர்­வா­கத்­துக்­குள்­ளேயே அடங்­கு­கின்­றன. 1987 ஆண்டு 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டம் பெருந்தோட்டப்பகுதிகளுக்கு பிரதேச சபைகள் செயற்படுவதை அனுமதிக்கவில்லை. இந்த சட்டம் தெரியாமலேயே பெருந்தோட்டப்பகுதி மக்கள் இன்றுவரை பிரதேச சபைத் தேர்தல்களில் வாக்களித்து தமது பிரதிநிதிகளை அனுப்பி வருகின்றனர். நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ, நுவரெலியா பிரதேச சபைகளை மலையகக் கட்சிகள் தேசியக் கட்சிகளுடன் இணைந்தோ அல்லது கூட்டணியாக போட்டியிட்டோ ஆட்சிய மைத்துள் ளன.

தொகுதிவாரி முறையும் விகிதாசார முறையும் இணைந்த கலப்பு முறையில் தேர்தலை நடத்துவதற்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. மலையகப் பெருந்தோட்ட மக்களுக்கு சேவையாற்ற முடியாத பிரதேச சபைகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படாதவிடத்து எந்த முறையில் தேர்தல் நடந்தாலும் அது மலையக மக்களுக்கு நன்மை பயக்கப் போவதில்லை என நுவரெ லியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் உரையொன்றையும் நிகழ்த்தியிருந்தார் என்பது இத்தருணத்தில் சுட்டிக்காட்டவேண்டும்.

ஆக, மலையக மக்களின் தேவைகள் கருதி தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வருகின்ற மலையகத்துக்கான உள்ளூராட்சி மன்றங்களின் அதிகரிப்புவிடயத்தில் அரசாங்கம் உறுதியளிக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் மலையக அமைச்சர்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவிப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லாது போய்விடும். 

ஜீவா சதாசிவம்

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-08-26#page-7

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.