Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் முதற் காதலி

Featured Replies

இந்த அமாவாசை

உன் பௌர்ணமிக்காக

ஏங்குகிறது - உன்

இரத்தத்தினால் நெய்யப்பட்ட

என் இதயம்

உன் பெயர் சொல்லித்தான்

துடிக்கின்றது - நான்

சுவாசிப்பதே நீ

விட்டுச் சென்ற

மூச்சுக் காற்றினால் தான்...

என் கண்கள்

உன்னைக் காண்பதற்காக தான்

இரவில் விழி மூடுகின்றது...

உன் விரல்கள்

பிடித்து நடக்காததால் - என்

கை விரல்கள் நடக்கும் போது

விரிய மறுக்கின்றன...

நீ இல்லாது - நான்

தனித்துப் போவேனென்று

தெரிந்திருந்தால்

உன் கருவிலேயே

உன்னுடன் கலந்திருப்பேன்..!!

நீ எனக்கு

காட்ட வேண்டிய

நம் உறவுகள்

எல்லாம்

உன்னை எனக்குக்

காட்டுகின்றார்கள் - என்

தவிப்புக்கள்

உனக்குத் தெரியவில்லையா....?

என்

முதன் முதற் காதலியே..........

உன் பெயரை

முதற் தடவை

உச்சரிக்கின்றேன்...

என் கனவிலாவது

என்னிடம் ஓர் தடவை

வா.............

அம்மா...........!

Edited by Prashanna

anna....realy super kavithaida.... very good....

  • கருத்துக்கள உறவுகள்

காதலிக்காக இவ்வளவு தவிக்கிறிங்க காதலி வர வாழ்த்துக்கள்.

உங்கள் கவிதை அழகு

  • தொடங்கியவர்

காதலிக்காக இவ்வளவு தவிக்கிறிங்க காதலி வர வாழ்த்துக்கள்.

உங்கள் கவிதை அழகு

நான் கவிதையில் கூறிய காதலி வரமாட்டங்க கறுப்பி வேணும் என்றால் நாந்தான் அவரிடம் போகவேண்டும்

  • தொடங்கியவர்

anna....realy super kavithaida.... very good....

ஏன்மா த்ங்கச்சி இதுக்காகவா 6மாசமா ஒன்னுமே எழுதாம வெயிட் பண்னினீங்களாக்கும் :D:D:D

நீர் உமது அம்மாவுக்கு எழுதிய கவிதை போல் அல்லவா இருக்கிறது? அல்லது காதலின் வேதனை தாங்கமுடியாது கடைசியில் காதல் தோல்வியினால் துவண்டு வழமையாக எல்லோரும் துன்பம் வரும் போது உச்சரிக்கும் வார்த்தையான அம்மாவைக் கூறி அழைக்கிறீரா?

  • தொடங்கியவர்

நீர் உமது அம்மாவுக்கு எழுதிய கவிதை போல் அல்லவா இருக்கிறது? அல்லது காதலின் வேதனை தாங்கமுடியாது கடைசியில் காதல் தோல்வியினால் துவண்டு வழமையாக எல்லோரும் துன்பம் வரும் போது உச்சரிக்கும் வார்த்தையான அம்மாவைக் கூறி அழைக்கிறீரா?

மாப்பிள்ளை இது என் கண் காணத என் முதற் காதலிக்காக எழுதியது, என் அன்னைதான் என் முதற்காதலி எனக்கு மட்டுமில்லை இந்த உலகத்தில் உள்ள எல்லோருக்கும் முதற்காதலர்கள் அவர்கள் பெற்றோர்தான்

பிரசன்னா நல்ல அம்மா கவிதை.

கவிதை அருமை கடைசியில் நச்சின்னு ரொம்பநல்லா முடித்திருக்கின்றீங்க.... பாராட்டுக்கள்

  • தொடங்கியவர்

பிரசன்னா நல்ல அம்மா கவிதை.

நன்றிகள் விஷால்

  • தொடங்கியவர்

கவிதை அருமை கடைசியில் நச்சின்னு ரொம்பநல்லா முடித்திருக்கின்றீங்க.... பாராட்டுக்கள்

நன்றி பாலன் உங்கள் விமர்சணங்கள்தான் எனது முயற்ச்சிக்காண வெற்றிகள்

ஏன்மா த்ங்கச்சி இதுக்காகவா 6மாசமா ஒன்னுமே எழுதாம வெயிட் பண்னினீங்களாக்கும் :mellow::unsure::lol:

ஆமா...அண்ணாக்குத்தான் முதல் கருத்து எழுதணும் என்று வெயிட் பண்ணினேன்.

தமிழில் திருத்தப்பட்டுள்ளது.-யாழ்பிரியா

பல கவிதைகள் போல் இதுவும்

காதலின் வேதனை தாங்கமுடியாது

எழுதிய கவிதை என்று .......

கவிதை முடிவில் தான் புரிந்தது............ இது வேதனை கவிதை அல்ல ............... வாழ்த்துக்கள்

இனியவள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனிசா ,

இது தமிழ்கருத்துக்களம். தயவு செய்து தமிழில் எழுதுங்கள் . தமிழில் எழுத முடியாவிட்டால் கேளுங்கள் .உதவி செய்கின்றோம்.

தமிழில் எழுத இந்த இணைப்பை பாருங்கள்:: http://www.yarl.com/forum3/index.php?autom...amp;showentry=1

அல்லது கீமோன் தறவிறக்கம் செய்து எழுதுங்கள். இங்கு சென்று :> www.suratha.com/vanni.zip

  • தொடங்கியவர்

பல கவிதைகள் போல் இதுவும்

காதலின் வேதனை தாங்கமுடியாது

எழுதிய கவிதை என்று .......

கவிதை முடிவில் தான் புரிந்தது............ இது வேதனை கவிதை அல்ல ............... வாழ்த்துக்கள்

இனியவள்

இதுவும் ஒரு காதல் வலிதான் தாய் மீது கொண்ட காதல் வலி

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை அருமை தொடரட்டும் உங்கள் கவி பணி.....

  • தொடங்கியவர்

கவிதை அருமை தொடரட்டும் உங்கள் கவி பணி.....

நன்றிகள் புத்தா

நான்

சுவாசிப்பதே நீ

விட்டுச் சென்ற

மூச்சுக் காற்றினால் தான்...

என் கண்கள்

உன்னைக் காண்பதற்காக தான்

இரவில் விழி மூடுகின்றது...

உன் விரல்கள்

பிடித்து நடக்காததால் - என்

கை விரல்கள் நடக்கும் போது

விரிய மறுக்கின்றன...

நீ இல்லாது - நான்

தனித்துப் போவேனென்று

தெரிந்திருந்தால்

உன் கருவிலேயே

உன்னுடன் கலந்திருப்பேன்..!!

கவிதை அருமை தொடரட்டும் உங்கள் கவி பணி

  • தொடங்கியவர்

நன்றிகள் ஆத்தியன் உங்கள் கருத்துகளிற்க்கு

நன்றிகள் ஆத்தியன் உங்கள் கருத்துகளிற்க்கு

பின்னீட்டீங்கள்,அதிலையும் கடைசியா கொண்டு வந்து சென்டிமன்டா போட்டு வைரமுத்து ரேஞ்சுக்கு கவிதையை கொண்டு போயிட்டீங்க தலை..

  • தொடங்கியவர்

பின்னீட்டீங்கள்,அதிலையும் கடைசியா கொண்டு வந்து சென்டிமன்டா போட்டு வைரமுத்து ரேஞ்சுக்கு கவிதையை கொண்டு போயிட்டீங்க தலை..

hehehe.... :P நன்றிகள் ஜமுனா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.