Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜப்பான் மீது பறந்த வட கொரிய ஏவுகணை : கடும் கோபத்தில் ஜப்பான் அரசு

Featured Replies

ஜப்பான் மீது பறந்த வட கொரிய ஏவுகணை : கடும் கோபத்தில் ஜப்பான் அரசு

வட கொரியா ஏவிய ஏவுகணையொன்று வடக்கு ஜப்பான் மீது பறந்து இறுதியில் கடலில் விழுந்தது.

இம்முறை: ஜப்பான் பிராந்தியத்தை தாண்டி பறந்த வட கொரிய ஏவுகணைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

தங்கள் பிராந்தியம் மீது பறந்த இந்த ஏவுகணையை சுட்டு வீழ்த்த ஜப்பான் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ஏவப்பட்ட இந்த ஏவுகணை பாதுகாப்பு எச்சரிக்கைகளை தூண்டியுள்ளது.

வட கொரியாவின் இந்த ஏவுகணை முயற்சியை ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, ''முன்னெப்போதும் இல்லாத ஒரு ஆபத்து'' என்று வர்ணித்துள்ளார்.

அண்மைகாலமாக தொடர்ச்சியாக பல ஏவுகணை முயற்சிகளை வடகொரியா மேற்கொண்ட போதிலும், ஜப்பான் பிராந்தியம் மீது பறந்த இந்த ஏவுகணை முயற்சி மிகவும் அரிதான ஒன்றாகும்.

வட கொரியாபடத்தின் காப்புரிமைREUTERS

கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமையன்று, தனது கிழக்கு கடற்கரை பகுதியில் இருந்து மூன்று குறைந்த தூரம் செல்லும் ஏவுகணைகளை வடகொரியா ஏவியது குறிப்பிடத்தக்கது.

வடக்கு ஜப்பானுக்கு அப்பால் இந்த அண்மைய ஏவுகணை பறந்ததால் அப்பகுதி முழுவதும் எச்சரிக்கைகளை உண்டாக்கிய போதிலும், ஜப்பானின் பிரதான ஒலிபரப்பு நிறுவனமான என்ஹெச்கே, இந்த ஏவுகணை முயற்சியால் எந்த சேதமும் இருந்ததற்கான அறிகுறியும் இல்லையென தெரிவித்துள்ளது.

வட கொரியாவின் இந்த ஏவுகணை சோதனையை ''மூர்க்கத்தனமான செயல்'' என்றும், தங்கள் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு, முன்னெப்போதும் இல்லாத வகையில் நிலவும் ஒரு தீவிரமான மற்றும் மோசமான ஆபத்து என்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மேலும் கூறியுள்ளார்.

தனது அரசு மக்களின் உயிர்களை பாதுகாக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.

http://www.bbc.com/tamil/global-41078906

  • தொடங்கியவர்

'இது ஆரம்பம்தான்': ஜப்பான் மீது பறந்த ஏவுகணை பற்றி வட கொரியா

ஜப்பான் மீது பறந்து சென்ற ஏவுகணைதான் பசிஃபிக் பிராந்தியத்தில் தங்கள் நாடு மேற்கொள்ளவுள்ள ராணுவ நடவடிக்கைகளின் ஆரம்பம் என்று வட கொரியா கூறியுள்ளது.

வட கொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி முகமை வெளியிட்ட, ஏவுகணை சோதனையின்போது எடுக்கப்பட்டதாக கருதப்படும் படம்படத்தின் காப்புரிமைKCNA Image captionவட கொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி முகமை வெளியிட்ட ஏவுகணை சோதனையின்போது எடுக்கப்பட்டதாக கருதப்படும் படம்

வட கொரியாவின் அரசு ஊடகமும் பசிஃபிக் பகுதியில் உள்ள அமெரிக்காவுக்குச் சொந்தமான குவாம் தீவு மீது தாக்குதல் நடத்தப்படும் என்று மீண்டும் கூறியுள்ளது. அத்தீவை 'நவீன ஆக்கிரமிப்புத் தளம்' என்று வட கொரியா வர்ணித்துள்ளது.

செவ்வாயன்று வட கொரியா ஏவிய ஏவுகணை, கடலில் சென்று விழுவதற்கு முன்பு ஜப்பானின் வடக்கே உள்ள ஹொக்கைடோ தீவைக் கடந்து சென்றது பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று பொது மக்களிடையே ஒரு எச்சரிக்கையை உணர்வைத் தூண்டியது.

நியூ யார்க்கில் செவ்வாய் இரவு கூடிய ஐ.நா பாதுகாப்பு சபையும் இந்தச் செயலுக்காக வட கொரியாவை ஒருமனதாகக் கண்டித்துள்ளது. இத்தகைய 'மூர்க்கத்தனமான' சோதனைகளை வட கொரியா நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஐ.நா பாதுகாப்பு சபை கூறியுள்ளது.

இத்தைகைய நடவடிக்கைகள் அனைத்து ஐ.நா உறுப்பு நாடுகளுக்கும் ஒரு அச்சுறுத்தல் என்று அதன் அறிக்கை கூறினாலும், வட கொரியாவுக்கு எதிராக புதிய தடைகள் விதிக்கப்படும் எந்த அச்சுறுத்தலும் விடுக்கப்படவில்லை.

ஐ.நா சபையின் விதிகளுக்கு எதிராக சமீப மாதங்களில், வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகள் செய்து வந்தாலும், வட கொரியா அமைந்துள்ள பிராந்தியத்தில் அமெரிக்கா மேற்கொள்ளும் ராணுவ நடவடிக்கைகளும் இப்பிரச்சனைக்கு காரணம் என்று ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் கூறியுள்ளன.

Map

செவ்வாயன்று கொரிய நேரப்படி அதிகாலையில் வட கொரியா ஏவிய, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வாசோங் - 12 எனும் அந்த ஏவுகணை மிகவும் தாழ்வாகப் பறந்து 2,700 கிலோ மீட்டர் தூரம் பயணித்து, ஜப்பானின் கிழக்கு கடல் எல்லையில் இருந்து 1,180 கிலோ மீட்டருக்கு அப்பால் சென்று கடலில் விழுந்தது.

முதன் முறையாக வட கொரிய தரப்பும் ஜப்பான் வான்வெளியில் வேண்டுமென்றே ஏவுகணைகளை ஏவியதை ஒப்புக்கொண்டுள்ளது. இதற்கு முன்னர் ஏவப்பட்டவற்றை செயற்கைக்கோள்கள் என்று அந்நாடு கூறிவந்தது.

அமெரிக்கா மற்றும் தென் கொரியா தற்போது நடத்திவரும் கூட்டு ராணுவப் பயிற்சிக்கு நேரடி பதில் என்றும், 1910-ஆம் ஆண்டு ஜப்பான்-கொரியா உடன்படிக்கை மூலம் கொரிய தீபகற்பத்தை ஜப்பான் இணைத்துக்கொண்ட ஆண்டு விழாவை அனுசரிக்கும் விதமாகவும் இந்த ஏவுகணை செலுத்தப்பட்டதாக வட கொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

அதிகாரிகளுடன் கிம் ஜோங்-உன்படத்தின் காப்புரிமைKCNA Image captionஇந்த ஏவுகணை வானில் செலுத்தப்பட்டதை கிம் ஜோங்-உன் மேற்பார்வையிட்டதாகக் கூறப்படுகிறது.

இது ஒரு உண்மையான யுத்தம் போன்றது என்று கூறியுள்ள அந்நாட்டு அதிபர் கிம் ஜோங்-உன் பசிஃபிக் பிராந்தியத்தில் தங்கள் நாடு மேற்கொள்ளும் ராணுவ நடவடிக்கைகளின் தொடக்கம் என்றும் குவாம் பகுதியில் அமரிக்கா மேற்கொள்ளும் ராணுவ நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கான முன்னோட்டம் என்றும் இது பற்றிக் கூறியுள்ளார்.

அந்தப் பகுதியைக் குறிவைத்து பல ஆயுத சோதனைகள் நடத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்காவின் ஒரு முக்கியமான ராணுவத் தலமான குவாமில் சுமார் 1,60,000 அமெரிக்கர்கள் வசிக்கின்றனர்.

"வட கொரியா ஆயுத சோதனைகள் மூலம் விடுத்துள்ள இச்செய்தி உலகத்துக்கு உரக்கவும், தெளிவாகவும் கேட்டுள்ளது," என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

இத்தகைய நடவடிக்கைகள் வட கொரியாவைத் தனிமைப்படுத்தும் என்றும் அந்நாடு மீதான அனைத்து சாத்தியங்களும் விவாத மேசை மீது தயாராக உள்ளதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.

http://www.bbc.com/tamil/global-41092399

  • கருத்துக்கள உறவுகள்

போலி நாடகம் போட்டு இணைத்தலைமை நாடுகள் என்று கூட்டிக்கொண்டு வந்து தமிழர்களை முள்ளிவாய்க்காலில் அழித்து.. அவர்களின் அரசியல் சமூக பொருண்மிய விடுதலையையும் நாசம் செய்து.. அவர்களை சிங்கள தேசத்துக்கு அடிமைப்படுத்தி.. இன்று தமிழர்களின் வளங்களை சுரண்ட வரும்.. ஜப்பானுக்கு இதுவும் வேணும்.. இன்னும் வேணும்.

ஜப்பான் நம்ப வைச்சு மோசம் செய்த நாடுகளில் ஒன்று.. தமிழர்களைப் பொறுத்த வரை. :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.