Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போர்க்குற்ற விசாரணை: ஜகத் ஜயசூரிய மீது வழக்குத் தாக்கல்

Featured Replies

போர்க்குற்ற விசாரணை: ஜகத் ஜயசூரிய மீது வழக்குத் தாக்கல்
 

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது போர்க்குற்றம் புரிந்ததாகக் குற்றஞ்சுமத்தி, முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய மீது பிரேஸில் மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகளில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தற்போது பிரேஸிலுக்கான இலங்கைத் தூதுவராகக் கடமையாற்றிக்கொண்டிருக்கும் ஜகத் ஜயசூரிய மீது தென் அமெரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மனித உரிமை அமைப்புகள் இணைந்து வழக்குத் தாக்கல் செய்துள்ளனவென, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/போர்க்குற்ற-விசாரணை-ஜகத்-ஜயசூரிய-மீது-வழக்குத்-தாக்கல்/150-203002

  • தொடங்கியவர்

ஜெனரல். ஜெகத் ஜெயசூரிய மீது பிரேசிலில் யுத்தகுற்ற வழக்கு தாக்கல் 

 

 

பிரேசிலுக்கான இலங்கைத்தூதுவர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரியாவுக்கு எதிராக பிரேசிலில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது வன்னிப்பகுதியில் இராணுவத்திற்கு தலைமை வகித்த, இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய பிரேசில் நாட்டிற்கான தூதுவராகவுள்ளார். அது மட்டுமின்றி கொலம்பியா, பெரு, ஆர்ஜென்டீனா, சிலி உட்பட ஐந்து நாடுகளில் அவருக்கு இராஜதந்திர பாதுகாப்பும்  வழங்கப்பட்டிருந்தது. 

 

இந்நிலையில் இவரது காலப்பகுதியில் சித்திரவதைக்கு உள்ளான 14 பேர் வழங்கிய சாட்சிகள் அடிப்படையில், சர்வதேச உண்மை மற்றும் சமாதானத்திற்கான திட்ட அமைப்பு  தென் அமெரிக்காவில் உள்ள மனித உரிமை அமைப்பு ஒன்றின் ஊடாக, பிரேசிலில் அவருக்கு எதிராக வழக்கொன்ளை தாக்கல் செய்துள்ளனர். 

 

இதனை தொடர்ந்து, உடனடியாக பிரேசில் தூதுவரான ஜெகத்  ஜெயசூரிய தலைமறைவாகியுள்ளார்.

இது குறித்து  இந்த வழக்கில் ஆஜரான, சட்டத்தரணி கார்லஸ் கஸ்ரெஸ்னா பெர்னாண்டஸ் கருத்து தெரிவிக்கிக்கையில்,

"இது ஒரு மறக்கப்பட்ட இனப்படுகொலை" எனவும் "இந்த வழக்கு ஒரு ஆரம்பம் மட்டுமே எனவும் தெரிவித்தார். 

இந்த முயற்சியில் பெரும் பங்கு வகித்த, ஐ.நா. முன்னாள் நிபுணர் ஜஸ்மின் சூகா மற்றும் ஊடகவியலாளரான பிரான்சிஸ் கரிசன்  ஆகியோர், இது போன்ற வழக்குகள் சிலி, பெரு மற்றும் ஆர்ஜென்டீனா ஆகிய நாடுகளிலும் தொடரும் என தெரிவித்துள்னர்.

இதனிடையே  இந்த முயற்சிகளை ஒருக்கிணைத்து வரும் மனித உரிமை சட்டத்தரணியாகிய  கீத் குலசேகரம், இந்த வழக்கை அடுத்தகட்ட நடவடிக்கைக்கு முன்னெடுத்து செல்லவுள்ளதாக தெரிவிதுள்ளார்.

http://www.virakesari.lk/article/23742

  • தொடங்கியவர்

ஜெகத் ஜயசூரிய தூதுவரல்ல; அவர் தப்பியோடவும் இல்லை

 

ஜெகத் ஜயசூரிய தூதுவரல்ல; அவர் தப்பியோடவும் இல்லை

ஸ்ரீலங்கா தூதுவராக இருந்த ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிராக, மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்துள்ள, போர்க்குற்ற வழக்குத் தொடர்பாக கருத்து வெளியிட பிரேசிலில் உள்ள ஸ்ரீலங்கா தூதுரகம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

பிரேசில், கொலம்பியா உள்ளிட்ட நாடுகளில் ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிராக, போர்க்குற்ற வழக்குகள் நேற்றுமுன்தினம் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட முன்னரே, ஜெனரல் ஜகத் ஜயசூரிய பிரேசிலை விட்டு வெளியேறி விட்டதாக பிரேசிலில் உள்ள ஸ்ரீலங்கா தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

பிரேசிலியாவில் உள்ள ஸ்ரீலங்கா தூதரகத்தின் பதில் தூதுவர் பிரேமதிலக ஜெயக்கொடி, இதுகுறித்து சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

தனது இரண்டு ஆண்டு சேவைக்காலம் முடிந்து, ஜனரல் ஜெகத் ஜயசூரிய, பிரேசிலில் இருந்து ஸ்ரீலங்கா திரும்பிவிட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளதோடு, அவர் தற்போது அந்த தூதுவராக செயற்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அவருக்கு எதிராக, மனித உரிமை அமைப்புகளால் தொடரப்பட்டுள்ள வழக்குத் தொடர்பாக கருத்து எதையும் வெளியிட முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

இறுதிக் கட்ட போரின்போது இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் மற்றும் மனி குலத்திற்கு எதிரான கொடூரங்களுக்கு அப்போதைய வன்னி கட்டளைத் தளபதியாக இருந்த ஜகத் ஜயசூரியவும் பொறுப்பு கூற வேண்டும் என குற்றஞ்சாட்டி, நீதிக்கும் நியாயத்திற்குமான சர்வதேச செயற்றிட்டம் பிரேசிலின் வழக்கொன்றை தொடர்ந்துள்ளது.

இந்நிலையில், போர்க் குற்ற வழக்கிற்கு அஞ்சி, பிரேசிலுக்கான ஸ்ரீலங்காவின் தூதுவரான முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய பிரேசிலை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக நேற்றைய தினம் தகவல்கள் வெளியாகியிருந்தன.

ஜெனரல் ஜகத் ஜெயசூரிய கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரேசிலை விட்டு வெளியேறியுள்ளதாக பிரேசிலின் சட்டமா அதிபர் திணைக்களம் உறுதிப்படுத்தியிருந்தது.  

இதேவேளை, ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக பிரேசிலில் போர்க்குற்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை தொடர்பாக, இன்னமும் அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் கிடைக்கவில்லை என ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரேசில், கொலம்பியா, பெரு, சிலி, ஆஜென்ரீனா, சுரினாம் ஆகிய நாடுகளுக்கான தூதுவராக கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பணியாற்றிய அவர், நேற்றுமுன்தினம் பிரேசிலை விட்டுப் புறப்பட்டுவிட்டதாகவும் அவர் இன்று கொழும்பை வந்தடைவார் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த மாதத்துடன் அவரது பதவிக்காலம் முடிவடையும் நிலையிலேயே  அவர் நாடு திரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர்க்குற்ற வழக்கினால் அவர், பிரேசிலை விட்டு வெளியேறியுள்ளதாக வெளியான செய்திகள் தவறு எனவும், அவரது பயணம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது எனவும் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Jayasuriya-is-not-an-ambassador-He-did-not-escape

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனரல் ஜெகத் ஜயசூரிய மீது கொலம்பியா, பிரேசிலில் போர்க்குற்ற வழக்குத் தாக்கல்

 

general jegath-jeyasooryaசிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், பிரேசிலுக்கான சிறிலங்காவின் தற்போதைய தூதுவருமான, ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிராக, பிரேசிலில் போர்க்குற்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தலைமையிலான, மனித உரிமை அமைப்புகள் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாக அல்-ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

2007ஆம் ஆண்டு தொடக்கம், 2009ஆம் ஆண்டு வரை, ஜெனரல் ஜெகத் ஜயசூரிய வன்னி படைகளின் தளபதியாக இருந்தார்.

வவுனியாவில் உள்ள ஜோசப் முகாமில் இருந்து இவர் இராணுவ நடவடிக்கையை மேற்பார்வை செய்தார்..

2009ஆம் ஆண்டு போரின் இறுதிக்கட்டத்தில், ஜெனரல் ஜெகத் ஜயசூரியவின் மேற்பார்வையில் இருந்த இராணுவப் பிரிவுகளால், மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாகவும், காணாமல் ஆக்கப்பட்டதாகவும், சித்திரவதை செய்யப்பட்டதாகவும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

பிரேசிலுக்கான தூதுவரான ஜெனரல் ஜெகத் ஜயசூரிய, கொலம்பியா, பெரு, சிலி, ஆஜென்ரீனா, சுரினாம் ஆகிய நாடுகளுக்கான தூதுவராகவும் பணியாற்றுகிறார். இவருக்கு பிரேசிலில் இராஜதந்திர விலக்குரிமை உள்ளது.

ஆனால், ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிரான விசாரணைகளை ஆரம்பித்து, அவரது இராஜதந்திர விலக்குரிமையை நீக்கி, வெளியேற்றுவதற்கு பிராந்திய அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

பிரேசில் மற்றும் கொலம்பியாவில், ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிரான வழக்குகள் நேற்று தாக்கல் செய்யப்பட்டன என்று, இந்த முயற்சியை மேற்கொண்டுள்ள சட்டவாளர் கார்லோஸ் காஸ்ரேசனா பெர்னான்டஸ் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

“வரும் நாட்களில் ஆஜென்ரீனா, பெரு, சிலி ஆகிய நாடுகளிலும் வழக்குகள் தாக்கல் செய்யப்படும். சுரினாம் அதிகாரிகள் இந்த மனுவை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டனர்.

இது மறக்கப்பட்டு விட்ட ஒரு இனப்படுகொலை. ஆனால், இந்த முயற்சி ஜனநாயக நாடுகளை ஏதோ ஒன்றைச் செய்ய கட்டாயப்படுத்தும், இது போரின் ஆரம்பம் தான்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரேசிலில் உள்ள சிறிலங்கா தூதரகத்துக்கு தொடர்பு கொண்ட போது யாரும் பதிலளிக்கவில்லை என்று அல் ஜசீரா தெரிவித்துள்ளது.

http://www.puthinappalakai.net/2017/08/29/news/25561

  • தொடங்கியவர்

நாடு திரும்பினார்  ஜகத் ஜயசூரிய : பதவிக் காலம் முடிந்தது என்கிறது வெளிவிவகார அமைச்சு

Published by Priyatharshan on 2017-08-31 09:47:45

பிரேசில், கொலம்பியா, ஆர்ஜென்டீனா, பேரு, சிலி, சூரினாம் ஆகிய  லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கான இலங்கை தூதுவரான முன்னாள் இராணுவத் தளபதியும் கூட்டுப் படைகளின் பிரதானியுமான ஜெனரால் ஜகத் ஜயசூரிய பிரேசிலில் இருந்து வெளியேறியுள்ளார்.

jagath-jayasuriya.jpg

நேற்று முன் தினம் அவர் டுபாய் ஊடாக இலங்கை வரும் நோக்குடன் பிரேசிலில் இருந்து டுபாய்க்கு சென்றுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவித்தன. நேற்று அவர் இலங்கையை வந்தடைய தீர்மானிக்கப்பட்டிருந்ததாக அறிய முடிகின்றது.

2009 ம் ஆண்டு நிறைவடைந்த இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும்  வைத்தியசாலைகள் மீதான தொடர் தககுதல்கள், பாலியல் வல்லுறவுக்கள், வலுக்கட்டாய காணாமல் ஆக்குதல்கள், இனப் படுகொலை உள்ளிட்ட யுத்தக்குற்றங்களில் அவர் ஈடுபட்டதாக தெரிவித்து, தென் அமெரிக்காவின் மனித உரிமைகள் அமைப்புகளால் கடந்த திங்கட்கிழமை வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பிரேசில், கொலம்பியா ஆகிய நாடுகளில் ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், ஆர்ஜன்டீனா, சிலி மற்றும் பெரு ஆகிய நாடுகளிலும் எதிர்வரும் தினங்களில் வழக்குத் தொடரவிருப்பதாக, அது தொப்டர்பில் செயற்படும்  சட்டத்தரணி கார்லோஸ் கெஸ்டரீனா பெர்ணாண்டெஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சூரினாம் அதிகாரிகள் தங்களது மனுவை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந் நிலையிலேயே வழக்குத் தாக்கலை அடுத்தே ஜகத் ஜெயசூரிய பிரேசிலில் இருந்து வெளியேறியதாக  தகவல்கள் தெரிவித்தன.

எனினும் இதனை மறுத்துள்ள வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹேசினி கொலன்னே, தமது இரண்டு வருட பதவிக் காலம் நிறைவடைந்த நிலையிலேயே அவர் நாடு திரும்பியதாக அறிவித்துள்ளார்.

நேற்று முன் தினம் பிரேசிலில் இருந்து வெளியேறியதாகவும், நேற்று கொழும்பை அவர் வந்தடைய இருந்தார் என்றும் அவர் சுட்டிக்கடடியுள்ளார்.

இதேவேளை, பிரேசில் நீதிமன்றத்தில் யுத்தக்குற்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை தொடர்பான ஆவணங்கள், இன்னும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும் வெளிவிவிகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனிடையே புலம்பெயர் தமிழர்களின் தேவைக்கு அமையவே, முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக போர்க்குற்ற வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக பிரேஸிலில் போர்க்குற்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறித்து  அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக தனிப் பொறுப்பு போர்க்குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

http://www.virakesari.lk/article/23793

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.