Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அந்நிய நாட்டின் படைகள் இலங்கையை தளமாக பயன்படுத்த முடியாது இந்து சமுத்திர மாநாட்டில் பிரதமர் தெரிவிப்பு

Featured Replies

அந்நிய நாட்டின் படைகள் இலங்கையை தளமாக பயன்படுத்த முடியாது

 

இந்து சமுத்திர மாநாட்டில் பிரதமர் தெரிவிப்பு

(லியோ நிரோஷ தர்ஷன்)

எந்­த­வொரு அந்­நிய நாட்டின் படை­களும் இலங்­கையில் செயற்­பட அனு­மதி கிடை­யாது. ஹம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தில் இலங்கை படை­களே முழு­மை­யான பாது­காப்பு நட­வ­டிக்­கைக­ளிலும் ஈடு­படும் என தெரி­வித்த பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்க, சமா­தா­னத்­தையும் நிலை­யான அபி­வி­ருத்­தி­யையும் ஏற்­ப­டுத்­து­வ­தற்கு பிராந்­திய  ரீதி­யி­லான கட்­ட­மைப்பு உரு­வாக்­கப்­பட இந்து சமுத்­தி­ரத்தில் உரு­வாக்­கப்­பட வேண்டும் எனவும் தெரி­வித்தார்.  

அலரி மாளி­கையில் இடம்­பெ­று­கின்ற இந்து சமுத்­திர மாநாட்டில் நேற்று கலந்­து­கொண்டு உரை­யாற்றும்போதே பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் கூறு­கை­யில் சமா­தானம், செயற்­திறன், நல்­வாழ்வு எனும் தொனிப்­பொ­ருளில் நடை­பெறும் 2 ஆவது இந்து சமுத்­திர மாநாடு இலங்­கைக்கு பெரும் முக்­கி­யத்­து­வ­மிக்­கது. இம்­மா­நாட்டில் எமது நல்ல நண்­ப­னாக திகழும் இந்­திய உள்­ளிட்ட முக்­கி­யத்­துவம் மிக்க அர­சியல் தலை­மை­களும் தொழில்­வாண்­மை­யா­ளர்­களும் கலந்­துக்­கொள்­வ­தை­யிட்டு மகிழ்ச்­சி­ய­டை­கின்றேன்.

இந்­நே­ரத்தில் உலக பொரு­ளா­தார சக்­திகள் அனைத்தும் ஆசிய பக்கம் திரும்­பி­ய­தை­யிட்டு நான் மிகவும் மகிழ்ச்­சி­ய­டை­கின்றேன். வட அமெ­ரிக்க மற்றும் ஐரோப்­பா­வுக்கு இடை­யி­லான அதி­கார சம­நி­லை­யின்மை தொடர்ந்­துக்­கொண்­டி­ருக்­கின்­றது. ஆனால் ஆசி­யாவை பொறுத்­த­மட்டில் கடந்த 50 வரு­டங்­க­ளாக காட்­டி­வரும் பொரு­ளா­தார வளர்ச்­சிகள் மிகவும் மெச்­சத்­தக்­க­வை­யாகும்.

2050 ஆகும் போது உலகின் மிக முக்­கிய பொரு­ளா­தார கட்­ட­மைப்­புள்ள நாடு­க­ளாக இந்து சமுத்­தி­ரத்­தி­லுள்ள 32 நாடுகள் பெய­ரி­டப்­படும் என அறிக்­கைகள் கூறு­கின்­றன. நடை­மு­றையில் ஆசி­யாவில் சீனாவே முதன்மை பொரு­ளா­தார நாடாக கரு­தப்­ப­டு­கின்­றது. மேற்­கு­லக நாடு­களின் மத்­தியில் சீனாவின் ஆதிக்கம் 2028 ஆகும் போது மித­மிஞ்­சி­ய­தாக காணப்­படும். இதேபோன்று இந்­தியா 2050 ஆகும் போது பலம் வாய்ந்த பொருளா­தார வள­மிக்க நாடாக மாற்­ற­ம­டையும்.

இந்­தோ­னே­சியா, மலே­சியா ஆகிய நாடு­களும் 2030 க்கு பின்னர் மேற்­கு­லக நாடு­க­ளுக்கு சவால் விடுக்கும் வகையில் பொரு­ளா­தா­ரத்தில் வளர்ச்­சி­ய­டையும். உலக மொத்த தேசிய உற்­பத்­தியில் 30 சத­வீத்­திற்கும் மேற்­பட்ட பொரு­ளா­தார வர்­த்தக உடன்­ப­டிக்­கைகள் ஆசிய நாடு­க­ளி­லேயே மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

ஆனால் இந்து சமுத்­தி­ரத்தின் வலை­குடா நாடு­களில் குறித்த வளர்ச்சி மட்­டு­ப்ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­யினும் பொரு­ளா­தார வளர்ச்சி சக்­தி­மிக்­க­தா­கவே காணப்­ப­டு­கின்­றது. 2017 தொடக்கம் 2027 வரை­யி­லான வர்த்­தக மற்றும் முத­லீட்­டுக்­கான முன்­மொ­ழி­வுகள் பிர­தா­ன­மானவை­யாக கரு­தப்­ப­டு­கின்­றன.

அதன்­படி அடுத்த நான்கு வரு­டங்­களில் முத­லீட்­டுக்­கான வாய்ப்­புக்­களை அதி­க­ரித்­துக்­கொள்ள முடியும். உலகில் மீன்­பிடி வர்­த்­தகத்தை தங்­கி­யுள்ள பெரும்­பான்­மை­யான நாடுகள் இந்து சமுத்­தி­ரத்தை மையப்­ப­டுத்­தியே அமைந்­துள்­ளது. உலகில் 40 சத­வீ­த­மான எண்ணெய் உற்­பத்தி இந்­திய கடற்­ப­ரப்பை நம்­பியே உள்­ளது. சவுதி அரே­பியா, ஈரான், இந்­தியா மேற்கு அவுஸ்­தி­ரே­லியா ஆகி­ய கனியவளத்­துக்கு பிர­தான நாடுகள் ஆகும்.

கட்­ட­மை­ப்பு ரீதி­யான அபி­வி­ருத்­தியின் இந்­திய கடற்­ப­ரப்பில் காணப்­படும் நீரேந்து பிர­தே­சங்­களும் முக்­கி­யத்­துவம் உடை­ய­தாக காணப்­ப­டு­கின்­றன. வளை­கு­டா ­நாட்டு முரண்­பா­டுகள், ஈராக் ஆப்­கா­னிஸ்தான் யுத்தம், தென்­கி­ழக்­கா­சிய மேற்­கா­சிய நாடு­க­ளுக்­கி­டை­யி­லான அதி­கா­ரப்­போட்டா போட்டி போன்­ற­னவும் இந்து சமுத்­திர பிராந்­தி­யத்தில் அதிக தாக்­கத்தை செலுத்­து­கின்­றன.

சமா­தா­னத்­தையும் நிலை­யான அபி­வி­ருத்­தி­யையும் ஏற்­ப­டுத்­து­வ­தற்கு பிராந்­திய ரீதி­யி­லான கட்­ட­மைப்பு உரு­வாக்­கப்­பட வேண்டும். இந்து சமுத்­தி­ரத்தில் இந்­தியா, அவுஸ்­தி­ரே­லியா, ஐக்­கிய அமெ­ரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடு­களின் ஆதிக்கம் அதி­க­மா­க­வுள்­ளது.

கடற் பாது­காப்பு மற்றும் பிரந்­திய கடல்சார் அலு­வல்­க­ளுக்கு அதி­க­மான போட்டி காணப்­ப­டு­கின்­றது. பாரம்­ப­ரிய மற்றும் நவீன பாது­காப்பு தொடர்­பாடல் கருத்­தாடல் சர்­வ­தேச அளவில் இன்று வியா­பித்­துள்­ளன. இலங்கை அனைத்து தரப்­பி­ன­ரி­டை­யேயும் பொது­வான இலக்­கு­களை உள்­வாங்கி பொரு­ளா­தார மற்றும் பாது­காப்பு தொடர்­பா­டலை விருத்தி செய்­துள்­ளது.

கடல்சார் பாது­காப்பில் நாம் தொடர்ந்தும் சட்ட வரை­ய­றைக்­குட்­பட்டே செயற்­ப­டு­கின்றோம். எமது இலக்­குகள் முரண்­பா­டுகள் அற்ற தலை­யீ­டுகள் இல்­லாத முறை­மையை கைய­ாளுவ­தி­லேயே அதிகம் கவனம் செலு­த்தப்­ப­டு­கின்­றது. இலங்கை தற்­போது பல அபி­வி­ருத்தி திட்­டங்­களை மேற்­கொண்டு வரு­கின்­றது.

குறிப்­பாக அம்­பாந்­தோட்டை துறை­முகம் இரா­ணுவ தளத்தை அடிப்­ப­டை­யாக கொண்டு செயற்­பட வில்லை. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை?யிலான நல்­லாட்சி அர­சாங்கம் ஒரு­போதும் சர்­வ­தேச நாடொன்றை இலங்­கைக்குள் உள்­நு­ழைய அனு­ம­திக்­காது. எமது பரப்­புக்குள் எவ்­வித அந்­நிய தலை­யீ­டு­களும் ஏற்­பட அனு­ம­திக்க முடி­யாது. எமது நட்பு நாடு­க­ளுடன் இரா­ணுவ பயிற்­சிகள், இரா­ணுவ பெ?ருட்கள் பரி­மாற்றம் போன்ற சுமு­க­மா­கவே மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.

இலங்­கைக்கு மட்­டுமே கடல் மற்றும் வான் பரப்பு இரா­ணுவ நட­வ­டிக்­கை­களில் அதி­க­ள­வி­லான பொறுப்­புக்­களை கொண்­டுள்­ளது. இவற்­றுக்கு மேல­தி­க­மாக வெளி­நாட்டு தனியார் முத­லீட்­டா­ளர்­க­ளையும் துறை­முக துறை­முக அபி­வி­ருத்­தியில் கொண்­டுள்ளோம்.

நட்­பு­றவு நாடு­க­ளுடன் சுதந்­திர வர்த்­தக உடன்­ப­டிக்­கை­க­ளிலும் நாம் கைச்சாத்­திட்­டுள்ளோம். இதுவே எமக்குள்ள ஒரே வழி. ஏற்கனவே இந்தியா பாகிஸ்தானுடன் வர்தக உடன்படிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். அடுத்தாக சிங்கப்பூர் மற்றும் வங்காள வளைகுடா நாடுகளுடனும் வர்த்தக உடன்படிக்கைகளில் கைச்சாத்திட தீர்மானித்துள்ளோம்.

எனவே இலங்கை அனைத்து வர்த்த தரப்புக்கும் மூலாதாரமாக செயற்பட்டு வருகின்றது. இந்து சமுத்திரத்தின் சுதந்திரமான செயற்பாடுகளுக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புக்களையும் இலங்கை வழங்கும். குறித்த நிகழ்ச்சி நிரலில் கொள்கைகளை அபிவிருத்தி செய்வதிலேயே எமது வளர்ச்சி தங்கியுள்ளது. அந்த பொது நோக்கை அடைவதிலேயே நாம் அதிக கவனம் செலுத்துகின்றோம் என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-09-01#page-1

17 minutes ago, நவீனன் said:

அந்நிய நாட்டின் படைகள் இலங்கையை தளமாக பயன்படுத்த முடியாது - இந்து சமுத்திர மாநாட்டில் பிரதமர் தெரிவிப்பு

ஆனால் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதத்தின் தமிழினப் இனப்படுகொலைகளுக்கு மட்டும் பயன்படுத்தலாம்.  இது வரலாற்று உண்மை. 

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் இருந்தாலும் மகிந்தாவும் இந்தியாவிடம் கெஞ்ச வேண்டிய நிலைக்கு இந்தியா காய்நகர்தியிருக்கு....இந்தியாவிற்கு கிடைத்த வெற்றிகளில் இதுவும் ஒன்று

  • தொடங்கியவர்
இந்து சமுத்திர மாநாட்டில்...
 

image_dca289c8ae.jpgimage_c78f22a3ee.jpgimage_9c2e98d225.jpgimage_42b958129a.jpgimage_5dd2bf49d2.jpgimage_65d506f664.jpgimage_dfae6d9446.jpgடெல்­லியைத் தள­மாகக் கொண்டு செயற்­படும் இந்­திய மன்­றத்தின் ஏற்­பாட்டில், இந்து சமுத்­திர  மாநாடு 2017,  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், அலரிமாளி­கையில் நேற்று வியா­ழக்­கி­ழமை, ஆரம்பமானது.

இந்த மாநாட்டில் இந்­தியா, அமெ­ரிக்கா மற்றும் அவுஸ்­தி­ரே­லியா உள்­ளிட்ட 17 நாடு­களின் பிர­தி­நி­திகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த மாநாட்டையொட்டி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட வெளிநாட்டுப் பிரதிநிதிகளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரவேற்பதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு; பிரதீப் பத்திரண)

http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/இந்து-சமுத்திர-மாநாட்டில்/46-203107

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.