Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கின் நட்சத்திரம் அனித்தா ஜெகதீஸ்வரன் இலங்கை சாதனை

Featured Replies

வடக்கின் நட்சத்திரம் அனித்தா ஜெகதீஸ்வரன் இலங்கை சாதனை

இலங்கையின் தேசிய மட்டத்தில் நடந்த கோல் ஊன்றி பாய்தல் நிகழ்ச்சியில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த அனித்தா எனும் வீராங்கனை மீண்டும் தனது புதிய சாதனையினைப் படைத்துள்ளார்.

மஹிந்த ராஜபக்‌ஷவின் கோட்டையில் புதிய சாதனை படைத்த யாழ் தமிழச்சி!

ஏற்கனவே தன்னால் படைக்கப்பட்ட இந்தச் சாதனையை அவர் இன்று மீண்டும் புதுப்பித்துள்ளார். தியகமவில் உள்ள மஹிந்த ராஜபக்ச மைதானத்தில் இடம்பெற்ற 95வது தேசிய தடகள போட்டியிலேயே அவர் இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

அதன்படி இன்று இடம்பெற்ற இந்த பெண்களுக்கான கோல் ஊன்றி பாய்தல் போட்டியில் முதல் மூன்று இடங்களையும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த வீராங்கனைகளே பெற்றுள்ளனர்.

மஹிந்த ராஜபக்‌ஷவின் கோட்டையில் புதிய சாதனை படைத்த யாழ் தமிழச்சி!

இதற்கமைய, ஜே.அனித்தா 3.47 m உயரம்வரை பாய்ந்து முதலாம் இடத்தினையும், விமானப்படையைச் சேர்ந்த எஸ்.பீ.ரணசிங்க 3.20 m உயரம்வரை பாய்ந்து இரண்டாம் இடத்தினையும் சீ.ஹெரினா 3.00 m உயரம்வரை பாய்ந்து மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளனர்.

மஹிந்த ராஜபக்‌ஷவின் கோட்டையில் புதிய சாதனை படைத்த யாழ் தமிழச்சி!

இந்தப் போட்டிகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கோட்டை எனச் சொல்லப்படும் அம்பாந்தோட்டையில் தியகம மஹிந்த ராஜபக்‌ஷ மைதானத்தில் நடைபெற்று வருகின்றதோடு கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 42வது தேசிய விளையாட்டு விழா பெண்களுக்கான கோல் ஊன்றி பாய்தல் போட்டியில் அனித்தா சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

மஹிந்த ராஜபக்‌ஷவின் கோட்டையில் புதிய சாதனை படைத்த யாழ் தமிழச்சி!

 

https://news.ibctamil.com/ta/internal-affairs/Tamil-girl-achievement

வடக்கின் நட்சத்திரம் அனித்தா ஜெகதீஸ்வரன் இலங்கை சாதனை

 

வடக்கின் நட்சத்திரமான அனித்தா ஜெகதீஸ்வரன் மகளிருக்கான கோலூன்றிப் பாய்தலில் புதிய இலங்கை சாதனையைப் படைத்துள்ளார்.

பியகமை மஹிந்த ராஜபக்ஸ மைதானத்தில் நடைபெற்றுவரும் 95 ஆவது தேசிய சம்பியன்ஷிப் விளையாட்டு விழாவில் அவர் இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளுக்கான சம்மட்டி எறிதல் , மகளிருக்கான நீளம் பாய்தல் , மகளிருக்கான 3000 மீற்றர் தடைதாண்டல் , மகளிருக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டம் உள்ளிட்ட போட்டிகள் நேற்று (31) நடைபெற்றன.

ஆடவருக்கான சம்மட்டி எறிதலில் இலங்கை கடற்படையின் கே.பி.யூ.ஜி. ஜயவர்தன முதலிடத்தைப் பெற்றார்.

போட்டியில் அவர் 50.77 மீற்றர் தூரத்திற்கு ஆற்றலை வெளிப்படுத்தினார்.

மகளிருக்கான 10,000 மீற்றர் ஓட்டப்போட்டியில் இலங்கை கடற்படையின் எஸ். ஏ. லமாஹேவாத் முதலிடத்தை தன்வசப்படுத்தினார்.

அதற்காக அவர் 36 நிமிடங்கள் 256 செகன்ட்களை எடுத்துக்கொண்டார்.

இதேவேளை, அனைவரது எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியில் நடைபெற்ற மகளிருக்கான கோலூன்றிப் பாய்தலில் வடக்கின் நட்சத்திரமான அனித்தா ஜெகதீஸ்வரன் புதிய இலங்கை சாதனையை நிலைநாட்டினார்.

போட்டியில் அவர் 3.47 மீற்றர் தூரத்திற்குத் தாவினார்.

http://newsfirst.lk/tamil/2017/09/வடக்கின்-நட்சத்திரம்-அனி/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

 

கோலூன்றிப் பாய்தலில் மீண்டும் இன்று தேசிய சாதனை படைத்த அனித்தா ஜகதீஸ்வரன்

தேசிய சாதனை முறியடிப்பு முயற்சியில் யாழ் வீராங்கனை அனித்தா ஜகதீஸ்வரன்!

  • தொடங்கியவர்

மீண்டும் புதிய தேசிய சாதனையை நிலைநாட்டினா அனித்தா

95th National athletics championship Anith broke a record
TP-BB-Website-Banner-visit-the-hub-728.jpg

தற்பொழுது நடைபெற்று வரும் 95ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் யாழ். மெய்வல்லுனர் சங்கத்தைப் பிரிதிநிதித்துவப்படுத்தி பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் கலந்துகொண்ட அனித்தா ஜெகதீஸ்வரன் மீண்டுமொருமுறை புதிய தேசிய சாதனை படைத்தார்.

அவர் குறித்த போட்டியில் 3.47 மீற்றர் உயரம் தாவி, இம்முறை போட்டித் தொடரில் தேசிய சாதனை படைத்த முதல் வீரராகவும் இடம்பிடித்தார். முன்னதாக கடந்த வருடம் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டிகளில் 3.46 மீற்றர் உயரம் தாவி புதிய தேசிய சாதனை படைத்த அவர், ஒரு வருட காலப்பகுதியில் அதே சாதனையை முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

95ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகள் நேற்று தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் ஆரம்பமாகின. இந்நிலையில் போட்டிகளுக்கான 2ஆம் நாளான இன்று காலை பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் இறுதிப் போட்டி நடைபெற்றது. அண்மைக்காலமாக கோலூன்றிப் பாய்தல் போட்டியில் தமது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்ற தேசிய சாதனைக்கு சொந்தக்காரியான அனித்தா உள்ளிட்ட வட மாகாணத்தைச் சேர்ந்த 2 வீராங்கனைகள் இப்போட்டியில் போட்டியிட்டிருந்தனர்.

இதில், கடந்த சில வருடங்களாக தேசிய அரங்கில் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் சாதனைக்கு மேல் சாதனைகளைப் படைத்து வருகின்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அனித்தா ஜெகதீஸ்வரன், பாடசாலை மட்டப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு பங்குபற்றிய முதலாவது தேசிய மட்டப் போட்டியாக இது அமைந்திருந்தது.

இப்போட்டியின் ஆரம்பத்தில் 3.30 மீற்றர் உயரத்தைத் தாவிய அனித்தா, பிறகு 3.47 மீற்றர் உயரத்துக்கான முயற்சியை மேற்கொண்டார். அதன் முதல் முயற்சியில் தோல்வி கண்ட அவர், 2ஆவது முயற்சியில் வெற்றி கொண்டு புதிய சாதனை படைத்தார். எனினும் 3.50 மீற்றருக்காக அவர் மேற்கொண்ட 3 முயற்சிகளையும் அவரால் வெற்றிகொள்ள முடியாமல் போனது.

இந்நிலையில், கடந்த 2013ஆம் ஆண்டிலிருந்து யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சி.   சுபாஸ்கரனின் பயிற்றுவிப்பின் கீழ் தனது பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்ற அனித்தா, கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற தாய்லாந்து திறந்த மெய்வல்லுனர் போட்டித் தொடரில் முதற்தடவையாக இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேசிய சாதனை படைத்த பிறகு  ThePapare.com இணையளத்தளத்துக்கு அனித்தா வழங்கிய விசேட செவ்வியில்,

”தேசிய சாதனையை மீண்டும் புதுப்பிக்க முடிந்தமை மகிழ்ச்சியளிக்கிறது. எனது வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்து வருகின்ற எனது பயிற்சியாளர் பாஸ்கரன் ஆசிரியருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தகுதிபெறுவதற்கான பயிற்சிகளை தற்போது முதல் நான் முன்னெடுத்துள்ளேன். எனவே, 3.80 மீற்றராக உள்ள ஆசிய அடைவு மட்டத்தை விரைவில் எட்டுவதற்கு எண்ணியுள்ளேன். அதற்கான எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள போட்டித் தொடர்களில் சிறப்பாக விளையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.

இதேவேளை, இப்போட்டியில் இலங்கை விமானப் படையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட எஸ்.பி ரணசிங்க 3.20 மீற்றர் உயரம் தாவி 2ஆவது இடத்தையும், யாழ். மெய்வல்லுனர் சங்கத்தைப் பிரிதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட யாழ். மகாஜனாக் கல்லூரி மாணவியான சந்திரசேகர் செரீனா, 3.00 மீற்றர் உயரம் தாவி 3ஆவது இடத்தையும் பெற்று தேசிய மட்டத்தில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தார்.

முன்னதாக இவ்வருடம் நடைபெற்ற ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனரில் 18 வயதிற்குட்பட்ட பெண்களுக்காக கோலூன்றிப் பாய்தலில் 3.01 மீற்றர் உயரத்தை தாவி புதிய போட்டிச் சாதனை படைத்த செரீனா, கடந்த வருடம் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகள் போட்டிகளில் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் புதிய தேசிய சாதனை படைத்ததுடன், அதே போட்டியில் பெண்களுக்கான நீளம் பாய்தலில் 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை மாணவியான செரீனாவின் பயிற்சியாளராகவும் சி. சுபாஸ்கரன் செயற்பட்டு வருகின்றார்.

http://www.thepapare.com

Amazing, வாழ்த்துக்கள் அனித்தா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.