Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் குரலின் செய்மதி ஒலிபரப்பு தொடங்கியது

Featured Replies

புலிகளின் குரலின் செய்மதி ஒலிபரப்பு தொடங்கியது

'தேசத்தின் குரல்' அன்ரன் பாலசிங்கத்தின் 69 ஆவது பிறந்த நாளான இன்று 'புலிகளின் குரல்' வானொலி தனது செய்மதி வழியிலான ஒலிபரப்பை தொடங்கியுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு 'புலிகளின் குரல்' அமலன் அரங்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் செய்மதி வழியிலான ஒலிபரப்பை தொடக்கி வைத்தார்.

இந்த தொடக்க நிகழ்வு இன்று மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகியது.

நிகழ்வின் பொதுச்சுடரினை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் ஏற்றினார்.

20070304001.jpg

'தேசத்தின் குரல்' அன்ரன் பாலசிங்கத்தின் திருவுருவப்படத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் கல்விக் கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன் ஈகச்சுடரேற்ற, மலர்மாலையை 'விடுதலைப் புலிகள்' ஏட்டின் பிரதம ஆசிரியர் ரவி அணிவித்தார்.

'புலிகளின் குரல்' நிறுவனப் பொறுப்பாளர் நா.தமிழன்பன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வரவேற்புரையை தமிழீழ வானொலி இணைப்பாளர் திருமாறன் நிகழ்த்தினார்.

தொடக்கவுரையை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் நிகழ்த்தினார்.

அவர் தனதுரையில் தெரிவித்துள்ளதாவது:

"புலிகளின் குரல் செய்மதி வழியிலான ஒலிபரப்பு ஆரம்பிக்கப்படுவதற்கு தமிழீழ தேசியத் தலைவர் வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஊடகங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றவையாகிவிட்டன.

இன்று மிகவும் மகிழ்ச்சியான நாள் அதுவும் எங்களுடைய விடுதலைப் போராட்டத்தின் எமது விடுதலை இயக்கத்தின் அரசியல் ஆசானாகவும், எமக்கு எல்லோருக்கும் பல்வேறு வழிகளில் அரசியல் அறிவையும் ஊடகத்துறை சார்ந்த நிபுணத்துவத்தினையும் அது சார்ந்த நுட்பங்களையும் எமக்கு கற்று தந்தவராகவும் விளங்கிய எங்களுடைய 'தேசத்தின் குரல்' பாலா அண்ணனின் பிறந்த நாளில் இதனை தொடக்கி வைப்பதிலே நாங்கள் பெரும் மகிழ்வும் நிறைவும் அடைகின்றோம்.

உண்மையில் எமது ஊடகங்களைப் பொறுத்த வரையில் எந்த ஊடகங்களாக இருந்தாலும் எங்களுடைய விடுதலை அமைப்பினது ஆரம்ப கால கட்டத்திலிருந்தே எமது தேசியத் தலைவரினால் பணிக்கப்பட்டு, எமது பாலா அண்ணனால் நிருவகிக்கப்பட்டதும் கட்டியெழுப்பப்பட்டதும்தான்.

அவர் ஒவ்வொரு ஊடகங்களினுடைய செயற்பாட்டின் போதும் அது சார்ந்த நுட்பங்களையும் விடயங்களையும் எங்களினுடைய போராளிகளுக்கு ஊட்டுவதில் எப்போதும் முன்னின்று உழைத்திருக்கின்றார். அந்த வகையில் எங்களினுடைய பாலா அண்ணனின் பிறந்த நாளில் இந்த செய்மதி வழியிலான ஒலிபரப்பு ஆரம்பிக்கப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகின்றது.

20070304005.jpg

சிங்கள இனவாத அரசு சகல வழிகளிலும் தமிழ்மக்களுக்கு எதிராக தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது. இதற்காகவே 'புலிகளின் குரல்' ஒலிபரப்புக் கோபுரத்தை சிறிலங்கா வான்படை தகர்த்தது. தொடக்க காலத்திலிருந்தே சிறிலங்கா படைத்துறை புலிகளின்குரலை அழிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இன்று எதிரியின் சவால்களுக்கு மத்தியில் 'புலிகளின் குரல்' பிரமாண்டமான அடுத்த கட்டத் தொழில்நுட்பத்துக்குள் நுழைகின்றது. இது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

மட்டக்களப்பில் வெளிநாட்டு இராஜதந்திரிகளை போர்க்களத்துக்குள் சிறிலங்கா அரசு அழைத்து வந்து விடுதலைப் புலிகளுக்கு அவப்பெயரை ஏற்படுத்த முனைந்தார்கள். ஆனால் அன்றைய சம்பவத்தில் சிறிலங்கா அரசின் உண்மையை உடனடியாக எமது ஊடகங்கள் வெளிப்படுத்தியதால்தான் அரசாங்கத்தின் திட்டம் முறியடிக்கப்பட்டது. இதில் எமது ஊடகங்களின் பணி என்பதுதான் முக்கியமானதாக இருந்தது" என்றார் அவர்.

20070304009.jpg

20070304007.jpg

தொடர்ந்து 6 மணிக்கு 'புலிகளின் குரல்' செய்மதி வழியிலான ஒலிபரப்பினை ஆழியை இயக்கி தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தொடக்கி வைத்தார்.

தொடக்க நிகழ்வின் சிறப்புரையை விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் நிகழ்த்தினார்.

"ஊடகம் அதிலும் இன்று வானொலிதான் மக்கள் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் தமிழ் மக்களின் மனங்களில் எல்லாம் 'புலிகளின் குரல்' ஊடுருவி நிற்கின்றது.

விடுதலைப் போராட்டத்தின் கருத்துக்களை நிகழ்வுகளை உடனடியாக மக்களிடம் கொண்டு சென்று எதிரிகளின் பொய்ப்பரப்புரையை 'புலிகளின் குரல்' முறியடித்து நிற்கின்றது. இப்போது சிறிலங்கா அரசாங்கம் ஊடகத்தில் தான் பெரும்போர் நடத்துகின்றது. இதனை நாம் எதிர்கொண்டு உடைத்தெறிகின்றோம்" என்றார்.

நன்றியுரையை 'புலிகளின் குரல்' நிர்வாக இணைப்பாளர் இ.இராஜேஸ்வரன் நிகழ்த்தினார்.

20070304010.jpg

http://www.eelampage.com/?cn=30978

  • கருத்துக்கள உறவுகள்

'தேசத்தின் குரல்' அன்ரன் பாலசிங்கத்தின் 69 ஆவது பிறந்த நாளான இன்று 'புலிகளின் குரல்' வானொலி தனது செய்மதி வழியிலான ஒலிபரப்பை தொடங்கியுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு 'புலிகளின் குரல்' அமலன் அரங்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் செய்மதி வழியிலான ஒலிபரப்பை தொடக்கி வைத்தார்.

இந்த தொடக்க நிகழ்வு இன்று மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகியது.

நிகழ்வின் பொதுச்சுடரினை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் ஏற்றினார்.

தேசத்தின் குரல்' அன்ரன் பாலசிங்கத்தின் திருவுருவப்படத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் கல்விக் கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன் ஈகச்சுடரேற்ற, மலர்மாலையை 'விடுதலைப் புலிகள்' ஏட்டின் பிரதம ஆசிரியர் ரவி அணிவித்தார்.

'புலிகளின் குரல்' நிறுவனப் பொறுப்பாளர் நா.தமிழன்பன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வரவேற்புரையை தமிழீழ வானொலி இணைப்பாளர் திருமாறன் நிகழ்த்தினார்.

தொடக்கவுரையை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் நிகழ்த்தினார்.

அவர் தனதுரையில் தெரிவித்துள்ளதாவது:

"புலிகளின் குரல் செய்மதி வழியிலான ஒலிபரப்பு ஆரம்பிக்கப்படுவதற்கு தமிழீழ தேசியத் தலைவர் வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஊடகங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றவையாகிவிட்டன.

இன்று மிகவும் மகிழ்ச்சியான நாள் அதுவும் எங்களுடைய விடுதலைப் போராட்டத்தின் எமது விடுதலை இயக்கத்தின் அரசியல் ஆசானாகவும், எமக்கு எல்லோருக்கும் பல்வேறு வழிகளில் அரசியல் அறிவையும் ஊடகத்துறை சார்ந்த நிபுணத்துவத்தினையும் அது சார்ந்த நுட்பங்களையும் எமக்கு கற்று தந்தவராகவும் விளங்கிய எங்களுடைய 'தேசத்தின் குரல்' பாலா அண்ணனின் பிறந்த நாளில் இதனை தொடக்கி வைப்பதிலே நாங்கள் பெரும் மகிழ்வும் நிறைவும் அடைகின்றோம்.

உண்மையில் எமது ஊடகங்களைப் பொறுத்த வரையில் எந்த ஊடகங்களாக இருந்தாலும் எங்களுடைய விடுதலை அமைப்பினது ஆரம்ப கால கட்டத்திலிருந்தே எமது தேசியத் தலைவரினால் பணிக்கப்பட்டு, எமது பாலா அண்ணனால் நிருவகிக்கப்பட்டதும் கட்டியெழுப்பப்பட்டதும்தான்.

அவர் ஒவ்வொரு ஊடகங்களினுடைய செயற்பாட்டின் போதும் அது சார்ந்த நுட்பங்களையும் விடயங்களையும் எங்களினுடைய போராளிகளுக்கு ஊட்டுவதில் எப்போதும் முன்னின்று உழைத்திருக்கின்றார். அந்த வகையில் எங்களினுடைய பாலா அண்ணனின் பிறந்த நாளில் இந்த செய்மதி வழியிலான ஒலிபரப்பு ஆரம்பிக்கப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகின்றது.

சிங்கள இனவாத அரசு சகல வழிகளிலும் தமிழ்மக்களுக்கு எதிராக தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது. இதற்காகவே 'புலிகளின் குரல்' ஒலிபரப்புக் கோபுரத்தை சிறிலங்கா வான்படை தகர்த்தது. தொடக்க காலத்திலிருந்தே சிறிலங்கா படைத்துறை புலிகளின்குரலை அழிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இன்று எதிரியின் சவால்களுக்கு மத்தியில் 'புலிகளின் குரல்' பிரமாண்டமான அடுத்த கட்டத் தொழில்நுட்பத்துக்குள் நுழைகின்றது. இது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

மட்டக்களப்பில் வெளிநாட்டு இராஜதந்திரிகளை போர்க்களத்துக்குள் சிறிலங்கா அரசு அழைத்து வந்து விடுதலைப் புலிகளுக்கு அவப்பெயரை ஏற்படுத்த முனைந்தார்கள். ஆனால் அன்றைய சம்பவத்தில் சிறிலங்கா அரசின் உண்மையை உடனடியாக எமது ஊடகங்கள் வெளிப்படுத்தியதால்தான் அரசாங்கத்தின் திட்டம் முறியடிக்கப்பட்டது. இதில் எமது ஊடகங்களின் பணி என்பதுதான் முக்கியமானதாக இருந்தது" என்றார் அவர்.

தொடர்ந்து 6 மணிக்கு 'புலிகளின் குரல்' செய்மதி வழியிலான ஒலிபரப்பினை ஆழியை இயக்கி தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தொடக்கி வைத்தார். தொடக்க நிகழ்வின் சிறப்புரையை விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் நிகழ்த்தினார்.

"ஊடகம் அதிலும் இன்று வானொலிதான் மக்கள் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் தமிழ் மக்களின் மனங்களில் எல்லாம் 'புலிகளின் குரல்' ஊடுருவி நிற்கின்றது.

விடுதலைப் போராட்டத்தின் கருத்துக்களை நிகழ்வுகளை உடனடியாக மக்களிடம் கொண்டு சென்று எதிரிகளின் பொய்ப்பரப்புரையை 'புலிகளின் குரல்' முறியடித்து நிற்கின்றது. இப்போது சிறிலங்கா அரசாங்கம் ஊடகத்தில் தான் பெரும்போர் நடத்துகின்றது. இதனை நாம் எதிர்கொண்டு உடைத்தெறிகின்றோம்" என்றார்.

நன்றியுரையை 'புலிகளின் குரல்' நிர்வாக இணைப்பாளர் இ.இராஜேஸ்வரன் நிகழ்த்தினார்.

http://puthinam.com

©

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதிய தொழில் நுட்பங்களுக்குள்ளே நுழைவதுபோன்று.. புலிகளின் குரலின் இணையவழி ஒலிபரப்பையும் சீர்செய்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்..

அதற்கான வழிகளில் ஈடுபட்டுள்ளார்களா என யாருக்காவது தெரியுமா+?

  • கருத்துக்கள உறவுகள்

"ஊடகம் அதிலும் இன்று வானொலிதான் மக்கள் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் தமிழ் மக்களின் மனங்களில் எல்லாம் 'புலிகளின் குரல்' ஊடுருவி நிற்கின்றது.

'' புலிகளின் குரலின் செய்மதி ஒலிபரப்பு தொடங்கியது "

நான் ஊடகத்துறையில் ஆர்வமும், ஓரளவு ஈடுபாடும் உள்ளவன் என்ற வகையில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்சியடைகின்றேன்.

அலைவரிசை

செய்மதி - யூரோஸ்ரார்.

11.506 GHz.

Symbol Rate - 2894.

Polarization - Vertical.

-Pathivu-

Edited by யாழ்வினோ

ஜரோப்பா வில் எந்த வானொலி மீள் ஒலிபரப்பு செய்வதற்கு அனுமதி பெற்றுள்ளது?

அலைவரிசை

செய்மதி - யூரோஸ்ரார்.

11.506 GHz.

Symbol Rate - 2894.

Polarization - Vertical.

-Pathivu-

குண்டு வீசி அழிக்க முனைந்த போதும் அழிவிலிருந்து ஆக்ரோசமாக அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தோடு வெளிவரும் புலிகளின் குரலுக்கு என் வாழ்த்துக்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.