Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க்குற்றவாளிகளை புத்தபெருமானும் மன்னிக்கமாட்டார்

Featured Replies

போர்க்குற்றவாளிகளை புத்தபெருமானும் மன்னிக்கமாட்டார்

 

ஜென­ரல் ஜகத் ஜய­சூ­ரிய உட்­படப் படை­யி­னர் அனை­வ­ரை­யும் போர்க்­குற்ற விசா­ர­ணை­ யி­லி­ருந்து பாது­காப்­பேன்’’ என அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன கூறி­யுள்­ளமை தெற்­கில் பெரும் வர­வேற்­பைப் பெற்­றி­ருக்­கும் என்­ப­தில் சிறி­த­ள­வும் ஐய­மில்லை.

 

தெற்­கில் நில­வு­கின்ற தற்­போ­தைய சூழ்­நி­லை­யில் அவர் அப்­ப­டித்­தான் கூறி­யி­ருக்க வேண்­டும். அவ்­வாறு கூறி­யி­ருக்­காது விட்­டால், அவ­ரால் ஆட்­சி­யில் தொட­ர­மு­டி­யாத நிலை­தான் உரு­வா­கி­யி­ருக்­கும்.

முன்­னாள் இரா­ணு­வத் தள­பதி ஜகத் ஜய­சூ­ரிய மீதான குற்­றச்­சாட்­டுக்­கள் தற்­போது தீவி­ர­ம­டைந்­துள்­ளன. இவர் போர்க்­குற்­றங்­கள் புரிந்­த­தற்­கான ஆதா­ரங்­கள் தம்­மி­டம் உள்­ள­தா­க­வும், அவற்­றைத் தம்­மால் வெளி­யி­ட­மு­டி­யு­மெ­ன­வும் இறு­திப்­போர் வேளைய இரா­ணு­வத் தள­ப­தி­யும், தற்­போ­தைய கூட்டு அர­சின் அமைச்­ச­ரு­மான சரத்­பொன்­சேகா கூறி­யுள்­ளமை பெரும் அதிர்­வ­லை­களை ஏற்­ப­டுத்­தி­விட்­டது.

இந்த நிலை­யில் அரச தலை­வ­ரின் மேற்­படி அறி­விப்பு வெளி­வந்­தமை முக்­கி­யத்­து­வம் பெறு­கின்­றது.
இறு­திப் போரின் இறுதி நாள்­க­ளில் போர்­மு­னை­யில் இடம்­பெற்ற சம்­ப­வங்­கள் மிகக் கொடி­யவை. இவற்­றுக்கு அப்­போ­தைய அரச தலை­வர், பாது­காப்­புச் செய­லர், இரா­ணுவத்­த­ள­பதி ஆகி­யோர் பொறுப்­புக் கூற வேண்­டும்.

முன்­னாள் அரச தலை­வ­ரும், பாது­காப்­புச் செய­ல­ரும் போர்க்­குற்­றங்­கள் எது­வும் இடம்­பெ­ற­வில்­லை­யென அடித்­துக் கூறி வரு­கின்­ற­னர். சரத்­பொன்­சே­கா­வும் இந்த நிலைப்­பாட்­டையே பின்­பற்றி வந்­தார்.

தற்­போது திடீ­ரென தூக்­கத்­தில் இருந்து விழித்தவர் போன்று ஜகத் ஜய­சூ­ரிய போர்க்­குற்­றத்­தில் ஈடு­பட்­ட­தா­கக் கூறு­கி­றார். ஆனால் ஜகத் ஜய­சூ­ரிய இதை முற்­றா­கவே மறுக்­கி­றார்.

போர் முனை­யில் நடந்த சக­ல­வற்­றை­யும் தாம் தெரிந்து வைத்துள்­ள­தா­க­வும், அப்­போ­தைய இரா­ணு­வத் தள­ப­தி­யின் உத்­த­ர­வின் பேரி­லேயே அனைத்­துச் செயற்­பா­டு­க­ளும் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­
தா­க­வும் அவர் கூறு­கின்­றார்.

போர்க்­குற்ற விசா­ர­ணை­களை மேற்­கொள்­ளும் நோக்­கம் இலங்கை அர­சி­டம் இல்லை

 

இறு­திப்­போர் முடி­வ­டைந்து எட்டு ஆண்­டு­க­ளா­கி­விட்­டன. போர்க்­குற்­றங்­கள் தொடர்­பாக ஐ.நா.மனித உரி­மை­கள் சபை­யில் இலங்­கைக்கு எதி­ரான தீர்­மா­ன­மும் நிறை­வேற்­றப்­பட்டு விட்­டது.

இலங்கை அரசு, போர்க்­குற்­றங்­கள் தொடர்­பான விசா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தற்­குப் பதி­லாக, கால அவ­கா­சம் கேட்­டுக் காலத்­தைக் கடத்­திக் கொண் டி­ருக்­கி­றது.

விசா­ர­ணை­களை நடத்­து­வ­தற்­கான விருப்­பம் இலங்கை அர­சி­டம் அற­வே­இல்­லை­யென்­பது மட்­டும் தெளி­வா­கத் தெரி­கின்­றது. தற்­போது அரச தலை­வ­ரும் இதை உறுதி செய்து விட்­டார்.

தற்­போது மியன்­மா­ரில் சிறு­பான்மை முஸ்­லிம் மக்­க­ளுக்கு எதி­ரான வன்­செ­யல்­கள் அதி­க­ரித்­துக் காணப்­ப­டு­கின்­றன.

முஸ்­லிம் மக்­கள் வகைதொகை­யின்றிக் கொலை செய்­யப்­ப­டு­கின்­ற­னர்.இதுவோர் இனச் சுத்­தி­க­ரிப்பு நட­வ­டிக்­கை­யென விமர்­சிக்­கப்­ப­டு­கின்­றது.

நீண்­ட­கா­ல­மாக இரா­ணுவ ஆட்­சி­யி­ன­ரால் வீட்­டுக் காவ­லில் வைக்­கப்­பட்­டி­ருந்­த­வ­ரும், மனித உரி­மை­கள் செயற்­பாட்­டா­ள­ரு­மான ஆங் சாங் சூகி­யின் ஆத­ர­வி­லான மியன்­மார் அரசு முஸ்­லிம் மக்­க­ளுக்கு எதி­ரான கொடு­மை­க­ளைத் தடுப்­ப­தற்­குத் தவ­றி­யுள்­ளது.

மேலும் வெளி­யாள்­கள் மியன்­மா­ருக்­குள் வந்து விசா­ர­ணை­யில் ஈடு­ப­டு­வ­தை­யும் ஆட்­சி­யா­ளர்­கள் ஏற்­றுக் கொள்­ள­வில்லை. உள்­நாட்­டில் வகுக்­கப்­ப­டு­கின்ற பொறி­மு­றை­க­ளுக்கு அமை­யவே விசா­ர­ணை­கள் இடம்­பெ­று­மெ­ன அரசு கூறி வரு­கின்­றது.

சிறு­பான்மை இனத்­த­வர்  பெரும்­பான்­மைத் தரப்­புக்­க­ளால் ஒடுக்­கப்­ப­டு­வது உலக வழக்கமே

 

இலங்­கை­யும் மியன்­மார் அரசு போன்றே நடந்து கொள்­கின்­றது.
இன்று உல­க­ளா­விய ரீதி­யில் சிறு­பான்­மை­ யின மக்­கள் பெரும்­பான்­மை­யின மக்­க­ளா­லும் ஆட்­சி­யா­ளர்­க­ளா­லும் கொடு­மை­க­ளுக்கு உள்­ளாக்­கப்­ப­டு­வது வழக்­க­மா­ன­தொன்­றா­கி­யுள்­ளது.

இறு­திப் போரின் இறு­திக்­கட்­டத்­தில் அப்­போ­தைய அரச தலை­வ­ரான மகிந்த ராஜ­பக்ச நாட்­டில் இருக்­க­வில்லை. இத­னால் தற்­போ­தைய அரச தலை­வ­ரான மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே பதில் பாது­காப்பு அமைச்­ச­ரா­கப் பொறுப்­பேற்­றி­ருந்­தார்.

இந்த வகை­யில் படை­யி­னர் அனை­வ­ரது செயற்­பா­டு­க­ளுக்­கும் இவரே பொறுப்­பாக இருந்­துள்­ளார். ஆனால் அப்­போ­தைய நிலை­யில் பாது­காப்­புச் செய­லர் பத­வி­யில் அமர்ந்­தி­ருந்த கோத்­த­பாய ராஜ­பக்­சவே பாது­காப்­புத் தொடர்­பான முழு அதி­கா­ரத்­தை­யும் கொண்­டி­ருந்­தார்.

அரச தலை­வ­ரை­விட இவ­ரது கட்­ட­ளை­க­ளையே படை­யி­னர் பெரி­தும் மதித்­தார்­கள். அவற்­றுக்கு ஏற்­பவே செயற்­பட்­டார்­கள்.

தம்­மைப் புனி­த­மா­ன­வர்களாக நிலை நிறுத்த முய­லும் ஆட்­சி­யா­ளர்­க­ளும் பாது­காப்­புப் படை­யி­ன­ரும்

தற்­போது அர­சின் சார்­பில் போரில் ஈடு­பட்ட அனை­வ­ருமே குற்­ற­மற்­ற­வர்­க­ளா­கத் தம்­மைச் சித்தி­ரிப்­ப­தற்கு முயற்சி செய்­கின்­ற­னர். அர­சின் முழு ஆத­ர­வும் இவர்­க­ளுக்­குக் கிடைத்து வரு­வ­தால் அது குறித்து அச்­சம் இவர்­க­ளி­டம் கிடை­யாது.

ஐக்­கிய நாடு­கள் சபை பெய­ர­ள­வில் மட்­டுமே ஒரு பன்­னாட்டு நிறு­வ­ன­மா­கக் காட்சி தரு­கின்­றது. அதன் செயற்­பா­டு­கள் திருப்தி தரு­வ­தா­கக் காணப்­ப­ட­வில்லை.

பாது­காப்­புச் சபை­யில் நிரந்­தர உறுப்­பு­ரி­மை­யைக் கொண்­டி­ருக்­கும் அமெ­ரிக்கா, ரஷ்யா, பிரிட்­டன், பிரான்ஸ், சீனா ஆகிய வல்­ல­ரசு நாடு­கள் தமது விருப்­பம் போன்று ஐ.நா.அமைப்­பைப் பயன்­ப­டுத்தி வரு­கின்­றன.

இந்த நாடு­கள் தமக்கு வழங்­கப்­பட்ட வீட்டோ அதி­கா­ரத்­தைக் கையில் எடுத்­துக் கொண்டு தமது எண்­ணம் போன்று செயற்­பட்டு வரு­கின்­றன.

ஈழத்­த­மி­ழர் விட­யத்­தி­லும் கூட ரஷ்­யா­வும், சீனா­வும் இலங்கை அர­சுக்கு முண்டு கொடுக்­கின்­றன. இத­னால் தம­ழர்­க­ளுக்கு உத­வ­மு­டி­யாத பரி­தா­ப­க­ர­மான நிலை­யில் ஐ.நா.காணப்­ப­டு­கின்­றது. இலங்­கைக்கு எதி­ரான தீர்­மா­னங்­கள் வரும்­போது அவற்­றைச் செய­லி­ழக்­கச் செய்­வ­தற்கு வீட்டோ அதி­கா­ரம் காத்­தி­ருக்­கின்­றது.

இலங்­கை­யொரு பௌத்த நாடு எனக் கூ­றிக் கொள்­கி­றார்­கள். புத்­த­பெ­ரு­மான அன்பு, அகிம்சை, இரக்­கம், பிற உயிர்­களை வருத்­தாமை ஆகிய உயர்ந்த தத்­து­வங்­க­ளையே தமது போத­னை­க­ளா­கக் கொண்­டி­ருந்­தார். தமது அரச வாழ்­வைத்­து­றந்து அரச மரத்­த­டி­யில் ஆண்­டி­யாக அமர்ந்­தி­ருந்த மிகப்­பெ­ரிய மகான் அவர்.

ஆனால் அவ­ரது வழி­யைப் பின்­பற்றி பெளத்த மதத்தைக் கைக்கொள்ளும் இலங்கையில் அடிக்­கடி மனித உயிர்­கள் வதைக்­கப்­ப­டுதையும் குருதி ஆறு பெருக்­கோ­டும் நிலை ஏற்­ப­டு­வதையும் எந்த வகை­யி­லும் ஏற்­றுக் கொள்ள முடி­யாது. புத்­த­பகவானும் இதை ஒரு போதுமே ஏற்­றுக் கொள்­ள­மாட்­டார்.

இறு­திப் போரின்போது தமி­ழர்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட கொடு­மை­க­ளைக் கண்டு அவ­ரது கண்­க­ளி­லி­ருந்து கண்­ணீ­ருக்­குப் பதி­லாக குரு­தியே ஆறா­கப் பாய்ந்­தோ­டி­யி­ருக்­கும். ஆனால் அவ­ரைப் பின்­பற்றி நடப்­ப­தா­கக் கூறு­ப­வர்­கள் பொய்­க­ளைக் கூறி அவற்றை உண்­மை­யாக்­கு­வ­தற்­காக முயன்று கொண்­டி­ருக்­கின்­ற­னர்.

எவ­ரது அழுத்­தங்­க­ளுக்­கும் வளைந்து கொடாது இலங்­கை­யின் அரச தலை­வர் போர்க்­குற்­ற­வா­ளி­க­ளுக்­குத் தண்­டனை பெற்­றுக் கொடுப்­பா­ரா­யின், அவர் புத்­த­பகவானுக்கு நிக­ராக வைத்­துக் கணிக்­கப்­ப­டு­வார்.

http://newuthayan.com/story/27509.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.