Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஸ்ரீலங்கா மீது சர்வதேச விசாரணை வரும் என ஐ.நா எச்சரிக்கை

Featured Replies

ஸ்ரீலங்கா மீது சர்வதேச விசாரணை வரும் என ஐ.நா எச்சரிக்கை

 
ஸ்ரீலங்கா மீது சர்வதேச விசாரணை வரும் என ஐ.நா எச்சரிக்கை

ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் உட்பட மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஸ்ரீலங்காஅரசு நீதியை நிலைநாட்டத் தொடர்ந்தும் தவறினால் அந்த சம்பவங்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றத்தின் ஊடாக விசாரணை செய்ய வேண்டிய அவசியம் எழுந்துவிடும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயீத் ராத் அல் உசைன் ஸ்ரீலங்காவிற்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்திருக்கின்றார்.

ஜெனீவாவிலுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 36 ஆவது கூட்டத் தொடரை முன்னிட்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் சமர்ப்பித்துள்ள அவரது எழுத்து மூல உரையிலேயே இந்த விடயம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 36 ஆவது கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய மனித உரிமைகள் ஆணையாளர் செயீத் ராத் அல் உசைன் தனது உரையில்  ஸ்ரீலங்கா தொடர்பில் எந்தக் கருத்தையும் குறிப்பிட்டிருக்கவில்லை.

எனினும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் ஆணையாளர் செயீத் ராத் அல் உசைனின் இன்றைய உரையின் எழுத்து வடிவம் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இதில் ஸ்ரீலங்கா தொடர்பில் சில விடயங்கள் கோடி காட்டப்பட்டுள்ளன. குறிப்பாக ஸ்ரீலங்கா அரசாங்கம் நிறைவேற்றியுள்ள காணாமல் போனோர் அலுவலகத்தை தாமதமின்றி நடைமுறைப்படுத்துமாறும் ஸ்ரீலங்கா இராணுவம் உட்பட அரச படையினர் கையகப்படுத்தி வைத்துள்ள மக்களின் காணிகளை விடுவிப்பதை துரிதப்படுத்துமாறும் ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் வழக்குகளை துரிதமாக முடிவுக்கு கொண்டவருமாறும் கோரிக்கை விடுத்துள்ள ஆணையாளர் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை மதித்து அவற்றுக்கு மதிப்பளிக்கும் வகையில் பதிய சட்டத்தை இயங்குமாறும் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு பரிந்துரைத்துள்ளார்.

அதேவேளை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய நிலைமாறுகால நீதிப் பொறிமுறையை உருவாக்குவது உள்ளிட்ட ஏனைய பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு குறிப்பிட்ட கால வரையரையொன்றை வகுத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வலியுறுத்தியிருக்கின்றார்.

சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் மற்றும் மனிதாபிமானச் சட்டங்களை மீறியது தொடர்பில் பொறுப்புக்கூறும் கடப்பாட்டை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க ஸ்ரீலங்கா அரசு தொடர்ந்தும் தவறினால் அந்தக் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்ற விசாரணைப் பொறிமுறையின் கீழ் அதனை நிறைவேற்ற வேண்டிய தேவையின் அவசியம் எழுவதை தடுக்க முடியாது போய்விடும் என்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் ஸ்ரீலங்காஅரசாங்கத்தை எச்சரித்துள்ளார். 

https://news.ibctamil.com/ta/internal-affairs/Zeid-warn-sri-lanka-about-international-inquiry

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை விடயத்தில் சீனன் எவ்வளவுக்கு எவ்வளவு உள்ள வர்றானோ அவ்வளவுக்கு அவ்வளவு இவை நல்லாய் கரையினம் நடக்கட்டும் எல்லாம் நல்லதுக்கே .

  • தொடங்கியவர்

அல் ஹுசைன் கடும் எச்­ச­ரிக்கை.!

 

 

இலங்­கை­யா­னது  சர்­வ­தேச  மனி­தா­பி­மான சட்டம்,  மற்றும் சர்­வ­தேச  மனித உரிமை சட்­டங்கள் மீறப்­பட்­ட­தாக கூறப்­படும் விட­யத்தில்  நம்­ப­க­ர­மான  பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை முன்­னெ­டுக்­கா­விடின் இந்த விவ­காரம் சர்­வ­தேச நியா­யா­திக்­கத்தை நோக்கிப் பய­ணிக்கும் என்று  ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹுசைன் கடு­மை­யாக  எச்­ச­ரித்­துள்ளார். 

Image result for அல் ஹுசைன் virakesari

அத்­துடன் இது ஐ.நா. மனித உரிமை பேர­வையை தணிப்­ப­தற்­காக  அர­சாங்கம்  மேற்­கொள்ளும் முயற்­சி­யாக இருக்­கக்­கூ­டாது. மாறாக பாதிக்­கப்­ பட்ட மக்­களின் வேத­னையை   ஆராய்­வ­தாக அமை­ய­வேண்டும் என்றும் ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர்  சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கிறார்.   

 ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை பேர­வையின் 36 ஆவது கூட்டத் தொடர் நேற்று ஜெனி­வாவில் ஆரம்­பித்­த­தை­ய­டுத்து முத­லா­வது அமர்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே  ஐ.நா.  மனித உரிமை ஆணை­யாளர்  செயிட் அல் ஹுசைன்  மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

இதன்­போது 40 நாடு­களின் நிலைமை தொடர்­பாக  பேர­வையின்  அமர்வில்  உறுப்பு நாடு­க­ளுக்கு விளக்­க­ம­ளித்த    செயிட் அல் ஹுசைன் இலங்கை தொடர்பில் முக்­கி­ய­மான சில விட­யங்­களை  குறிப்­பிட்­டி­ருக்­கின்றார்.   

அவர் நேற்­றைய ஜெனிவா அமர்வில் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்; 

இலங்கை அர­சாங்கம் காணா­மல்­போனோர்  தொடர்­பான  அலு­வ­ல­கத்தை  உட­ன­டி­யாக நிறு­வ­வேண்டும் என்று அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­து­கின்றேன்.  அது­மட்­டு­மன்றி மக்­க­ளுக்­கி­டையில் நம்­பிக்­கையை கட்­டி­யெ­ழுப்பும்  வேலைத்­திட்­டங்­க­ளையும் அர­சாங்கம் உட­ன­டி­யாக முன்­னெ­டுக்­க­வேண்டும்.  

விசே­ட­மாக இரா­ணு­வத்­தினால் கைய­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள   காணி­களை உட­ன­டி­யாக விடு­விக்­க­வேண்டும்.  பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்­தினால் பதி­வு­செய்­யப்­பட்­டுள்ள வழக்­கு­களை  உட­ன­டி­யாக  தீர்க்­க­வேண்டும்.  இந்த  வழக்­குகள் நீண்­ட­கா­ல­மாக  தேங்­கிக்­கி­டக்­கின்­றன. 

அது­மட்­டு­மன்றி பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை உட­ன­டி­யாக நீக்­க­வேண்டும் என்றும் அதற்குப் பதி­லாக கொண்­டு­வ­ரப்­படும்   சட்­ட­மா­னது சர்­வ­தேச தரத்­திற்கு அமை­வாக இருக்­க­வேண்டும் என்று அர­சாங்­கத்­திடம் கோரிக்கை விடுக்­கின்றேன். மேலும் வடக்கில் பாதிக்­கப்­பட்ட மக்கள் தொடர்ச்­சி­யாக போராட்­டங்­களை நடத்தி வரு­கின்­றனர். இதன்­மூலம் அர­சாங்­கத்தின் தாம­த­மான மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கை­யினால்  பாதிக்­கப்­பட்ட மக்கள் விரக்­தி­ய­டைந்­துள்­ளனர் என்­பது  தெளி­வா­கின்­றது.

அது­மட்­டு­மன்றி  ஐ.நா. மனித உரிமை பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட 30/1 பிரே­ர­ணையை  முழு­மை­யாக  அமுல்­ப­டுத்­த­வேண்­டு­மென்று அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­து­கின்றேன். அத­னூ­டாக பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை அர­சாங்கம் உரு­வாக்கி  அதன்   செயற்­பா­டு­களை ஒரு கால­நேர அட்­ட­வ­ணைக்குள் செயற்­ப­டுத்­த­வேண்டும் என்றும்   குறிப்­பி­டு­கின்றேன்.  

இதே­வேளை இந்த செயற்­பா­டு­க­ளா­னது  ஐக்கிய நாடுகள் மனித உரிமைபேரவையை தணிப்பதற்காக முன்னெடுக்கும் செயற்பாடுகளாக வெளிக்காட்டப்படக்கூடாது.  மேலும் இலங்கையானது  சர்வதேச  மனிதாபிமான சட்டம்,  மற்றும் சர்வதேச  மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டதாக கூறப்படும் விடயத்தில்  நம்பகரமான  பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுக்காவிடின் இந்த விவகாரம் சர்வதேச நியாயாதிக்கத்தை நோக்கிப் பயணிக்கும் என்பதையும் தெரிவிக்கின்றேன் என்றார். 

http://www.virakesari.lk/article/24289

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.