Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசின் காய் நகர்த்தல்களும் தமிழ் தேசிய இனத்தின் இருப்பும்

Featured Replies

அரசின் காய் நகர்த்தல்களும் தமிழ் தேசிய இனத்தின் இருப்பும்

 

புதிய அர­சி­ய­ல­மைப்பை நடை­மு­றைப்­ப­டுத்தி அதில், இனப்­பி­ரச்சினைக்­கான நிரந்­தர தீர்வு வழங்­கப்­பட்டு விட்­ட­தாக சர்­வ­தேச சமூ­கத்­திற்கு காட்ட இந்த அர­சாங்கம் எத்­த­னிக்­கின்­றது. அதன் மூலம் சர்­வ­தேச அழுத்­தத்தை இல்­லாமல் செய்­வ­துடன், தமிழ் தேசிய இனத்தின் பிரச்­சி­னையை தீர்த்து விட்­ட­தாக கூறி சர்­வ­தேச மட்­டத்தில் தமிழ் மக்கள் சார்­பா­க­வுள்ள ஆத­ரவு நிலையை இல்­லாமல் செய்­வ­தற்­கான முயற்­சிகள் இடம்­பெ­று­கிக்­றது. தமிழ் மக்களது அபிலாஷைகளை புறக்கணித்த அரசாங்கம் தீர்வுத் திட்டம் என புதிய அரசியலமைப்பை திணிக்க முயல்வது என்பது எதிர்காலத்தில் தமிழ் இனத்தின் தனித்துவ அடையாளங்களையும், இருப்பையும் கேள்விக்குட்படுத்துவதாகவே அமையும். அப்போது தமிழ் மக்களுக்காக யாரும் வர மாட்டார்கள். இன்று கண்முன்னே மியன்மாரின் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படும் இனச்சுத்திகரிப்பை பலநாடுகளும் வேடிக்கை தான் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை நாம் மறந்துவிடமுடியாது. 

 

ஐக்­கிய நாடுகள் சபையின் 36 ஆவது கூட்­டத்­தொடர் ஆரம்­ப­மா­கி­யி­ருக்­கி­றது. கூட்­டத்­தொடர் ஆரம்­பிப்­ப­தற்கு முன்­ன­தா­கவே ஐ.நா.வின் விசேட அறிக்­கை­யா­ளர்கள், நிபுணர் குழு­வினர் இலங்­கைக்கு விஜயம் செய்து பல்­வேறு தரப்­புக்­க­ளையும் சந்­தித்து பேசி­யி­ருந்­தனர். ஆட்சி மாற்றம் ஏற்­பட்ட கையுடன் ஐ.நாவில் இலங்­கைக்கு எதி­ராக கொண்டு வரப்­பட்ட தீர்­மா­னத்­திற்கு இலங்கை அர­சாங்­கமும் இணை அணு­ச­ரணை வழங்கும் வகையில் மாற்­றங்கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. அந்த தீர்­மா­னங்கள் நடை­மு­றைப்­ப­டுத்தப்­ப­டாத நிலையில் மீண்டும் இவ்­வாண்டு இலங்கை அர­சாங்­கத்­திற்கு இரண்டு வருட கால நீடிப்பும் வழங்­கப்­பட்­டி­ருந்­தது. சர்­வ­தேச ரீதியில் இலங்கை அர­சாங்­கத்­திற்கு இருந்த நெருக்­கு­வா­ரத்தை மைத்­திரி - ரணில் கூட்­ட­ர­சாங்கம் தளர்த்­தி­யுள்­ள­துடன், சர்­வ­தேச சமூ­கத்தின் அபி­மா­ன­த்தைப் பெறு­வ­தற்கும் இரா­ஜ­தந்­திர நகர்­வு­களை மேற்­கொண்­டுள்­ளது. அர­சாங்கம் தனது இந்த நகர்­வு­க­ளுக்கு தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­மை­யு­ட­னான உற­வையும் சரி­யாக பயன்­ப­டுத்திக் கொண்­டது. 

இலங்­கைக்கு விஜயம் செய்த ஐ.நா. விசேட குழு­வி­னர்கள் வெளி­யிட்ட அறிக்­கைளின் அடிப்­ப­டையில் ஐ.நா.வின் மனி­த­வு­ரிமை ஆணை­யாளர் செயிட் அல்­ஹுசைன், கூட்­டத்தை ஆரம்­பித்து வைத்து உரை­யாற்றும் போது  சர்­வ­தேச மனித உரிமை மற்றும் மனி­தா­பி­மானச் சட்­ட­மீ­றல்கள் குறித்த குற்­றச்­சாட்­டு­க­ளுக்குப் பொறுப்­புக்­கூ­றலை உறு­தி ­செய்ய நம்­ப­க­மான நட­வ­டிக்­கை­களை இலங்கை எடுக்­கா­தது சர்­வ­தேச சட்ட நட­வ­டிக்­கை­க­ளுக்கு இன்னும் அவ­சி­யத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது என்று தெரி­வித்­தி­ருக்­கிறார். இத­னை­ய­டுத்து வலிந்து காணா­மல் ஆக்­கப்­பட்டோர் தொடர்­பான அலு­வ­ல­கத்தை அமைப்­ப­தற்­கான வர்த்­த­­மானி அர­சாங்­கத்தால் உட­ன­டி­யா­கவே வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.  மனி­த­வு­ரிமை ஆணை­யா­ளரின் கடும் தொனி­யு­ட­னான உரையை அடுத்து அவ­சர அவ­ச­ர­மாக வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்டோர் அலு­வ­லகச் செயற்­பா­டுகள் வெள்­ளிக்­கி­ழமை முதல் ஆரம்­பா­கி­யுள்­ளது.

கால அவ­காசம் வழங்கி 6 மாதங்கள் கடந்­துள்ள நிலையில் ஐ.நா. குழு­வினர் இலங்­கையின் செயற்­பா­டுகள் குறித்து அதி­ருப்தி அடைந்­தி­ருக்­கின்­றனர். பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்கள் காணாமல் ஆக்­கப்­பட்­டோ­ருக்கு நீதி­ வேண்­டியும், தமது காணி­களை விடு­விக்கக் கோரியும் ஆரம்­பித்த போராட்­டங்கள் இன்று 200 நாட்­களைக் கடந்தும் தொடர்­கின்­றது. அந்த போராட்­டங்­களை முடித்து வைப்­ப­தற்கோ அல்­லது அந்த மக்­க­ளது கோரிக்­கை­களை நிறை­வேற்­று­வ­தற்கோ மைத்­திரி - ரணில் அர­சாங்கம் காத்­தி­ர­மான எந்­த­வொரு நட­வ­டிக்­கை­யையும் இதய சுத்­தி­யுடன் முன்­னெ­டுக்­க­வில்லை. தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­மையும் இந்த விட­யத்தில் காத்­தி­ர­மாக செயற்­பட்­ட­தாக தெரி­ய­வில்லை. ஐ.நாவின் அதி­ருப்­தி­யை­ய­டுத்து தமக்கு வழ­கங்­கப்­பட்ட கால எல்­லைக்குள் வழங்­கிய வாக்­கு­று­தி­களை செய்­வோம் என புதிய வெளி­வி­வ­கார அமைச்சர் உறு­தி­ய­ளித்­துள்ளார். இலங்கை ஜனா­தி­ப­தியும் இது தொடர்பில் தெளி­வு­ப­டுத்­தத­வுள்ளார். இந்­நி­லையில் இழு­ப­றியில் இருந்த புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான இடைக்­கால அறிக்­கையும் அடுத்த வாரம் பாரா­ளு­மன்­றத்­திற்கு வர இருக்­கின்­றது. அர­சாங்­கத்தின் இத்­த­கைய நகர்­வு­களின் பின்­ன­ணியில் சர்­வ­தேச அழுத்தம் இருப்­பதை மறுத்து விட முடி­யாது.

இலங்கைத் தீர்வைப் பொறுத்­த­வரை தமிழ் தேசிய இனம் சுதந்­திரம் பெறு­வ­தற்கு முன்­பி­ருந்த பௌத்த சிங்­கள அடிப்­ப­டை­வா­தி­களின் சிந்­த­னை­களால் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளா­கவும், ஒடுக்­கு­மு­றைக்கு உள்­ளாக்­கப்­பட்­ட­வர்­க­ளா­கவும் உள்­ளனர். தமிழ் தேசிய இனமும் இந்த நாட்டில் சமத்­து­வ­மா­கவும், சகல உரி­மை­க­ளு­டனும், ஏனைய இனங்­க­ளுடன் கைகோர்த்து வாழவே விரும்­பு­கி­றது. அதனை தென்­னி­லங்­கையின் பௌத்த சிங்­கள அடிப்­ப­டை­வா­திகள் புரிந்து கொள்ள வேண்டும். குறிப்­பாக வடக்கு முத­ல­மைச்சர் அவர்கள் ஒடுக்­கப்­பட்ட மக்­களின் குர­லா­கவும், அவர்­களின் பிர­தி­நி­தி­யா­கவும் அஸ்­கி­ரிய மற்றும் மல்­வத்து பீட மகா­நா­யக்­கர்­களை சந்­தித்து பேசி­யி­ருந்தார். அதன்­போது அவர் தமிழ் மக்­க­ளது அபி­லா­ஷைகள் குறித்தும், தமிழ் தேசிய இனம் எதிர்­நோக்கும் பிரச்­சினைகள் குறித்தும் தெரி­வித்­தி­ருந்­த­துடன், தமிழ் மக்­க­ளது பிரச்­ச­ினை­க­ளுக்கு சமஸ்டி அடிப்­ப­டை­யி­லான தீர்வே பொருத்­த­மா­னது என்­ப­தையும் வலி­யு­றுத்­தி­யுள்ளார். ஆனால் பௌத்த மகா­நா­யக்­கர்கள் சமஸ்­டியை ஏற்றுக் கொள்ள மறுத்­துள்­ள­துடன், அதனை பிரி­வினை வாத­மா­கவும் காட்ட முயல்­கின்­றனர். 

இத்­த­கைய மதத்­த­லை­வர்­களை பின்­பு­ல­மாகக் கொண்ட பெரும்­பான்மை சிங்­கள மக்­களும், தென்­னி­லங்­கையின் ஆட்­சி­யா­ளர்­களும் தமிழ் மக்­க­ளது கோரிக்கை தொடர்­பிலோ அல்­லது அவர்­க­ளது அபி­லாஷை தொடர்­பிலோ கரி­சனை கொண்­டுள்­ள­தாக தெரி­ய­வில்லை. அவர்­க­ளது மன­நி­லையில் மாற்றம் ஏற்­பட்­டுள்­ள­தாக தெரி­ய­வில்லை. இந்த நாட்டில் புரை­யோடிப் போயி­ருக்கும் இனப்­பி­ரச்­ச­னைக்கு நிரந்­தர தீர்வை எட்­டு­வ­தற்கு விட்­டுக்­கொ­டுப்­புடன் செல்ல தமிழ் தேசிய இனம் தயா­ரா­க­வுள்ள போதும் சிங்­கள தேசிய இனம் தமது பௌத்த தேசிய அடிப்­ப­டை­வாத மன­நி­லையில் இருந்து இறங்கி வர தயார் இல்­லாத நிலையே காணப்­ப­டு­கின்­றது. இந்தப் பின்­ன­ணியில் கொண்­டு­வ­ரப்­பட இருக்கும் புதிய அர­சி­ய­ல­மைப்பு எவ்­வ­கையில் தமிழ் மக்­களின் அபி­லா­ஷைகளை நி­றை­வேற்­றப்­போ­கி­றது என்ற கேள்வி எழு­கி­றது. 

இலங்கை அர­சாங்­கத்தைப் பொறுத்­த­வரை சர்­வ­தேச ரீதியில் தற்போதுள்ள அழுத்­தத்தை இல்­லாமல் செய்­வதே அவர்­க­ளது நோக்­க­மா­க­வுள்­ளது. அதற்­கான காய் நகர்த்­தல்­க­ளையே மிகவும் சூட்­சு­மாக நகர்த்தி வரு­கின்­றது. இந்த நாட்டின் பிரச்­ச­னையை தீர்க்க வேண்டும் என்ற மன­நி­லையில் இல்­லாது சர்­வ­தேச அழுத்­தத்தை தணிப்­ப­தற்­காக வரு­கின்ற அர­சி­ய­ல­மைப்­பா­னது தமிழ் தேசிய இனத்தின் கோரிக்­கை­களை ஒரு­போதும் பிர­தி­ப­லிக்க போவ­தில்லை. மறு­புறம் இரத்தம் சிந்தி போரா­டி­யதன் விளை­வாக தமிழ் தேசிய இனத்­தினை முன்­னி­றுத்தி உரு­வாக்­கப்­பட்ட மாகா­ண­ ச­பை­களின் உடைய அதி­கா­ரத்தை பறிப்­ப­தற்­கான அல்­லது மாகா­ண­ச­பை­களை தென்­னி­லங்­கையின் பிர­தான ஆட்­சி­யா­ளர்கள் கையாளக் கூடிய வகை­யி­லான திருத்தம் ஒன்­றினை 20 ஆவது திருத்தச் சட்டம் மூலம் நடை­மு­றைப்­ப­டுத்த முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கி­றது. 

ஒரு­புறம்  பொறுப்புக் கூறல், நீதி­யான விசா­ரணை, மீள நிக­ழா­மையை உறு­திப்­ப­டுத்தும் வகையில் நிரந்­தர தீர்வு எனக் கூறிக்கொண்டு மறு­புறம், தற்­போது உள்ள அதி­கா­ரங்­க­ளையும் பறித்து குறி­ப்பாக 13 ஆவது திருத்­தச்­சட்டம் மூலம் வழங்­கி­யதை 20 ஆவது திருத்தச் சட்­டத்தின் மூலம் பறித்து தமிழர் தாயகப் பகு­தி­க­ளிலும் தென்­னி­லங்­கையின் கரங்­களை ஓங்கச் செய்­வ­தற்­கான முயற்­சிகள் நடை­பெ­று­கின்­றது. இதன் யதார்த்த நிலை­மைகளை தமிழ் தேசிய இனமும், அதன் தலை­மை­களும் புரிந்து கொள்ள வேண்டும். 

2002 ஆம் ஆண்டு விடு­த­லைப்­பு­லி­க­ளுடன் இலங்கை அர­சாங்கம் சமா­தான உடன்­ப­டிக்கை மேற்­கொள்­ள­ப்பட்ட நிலையில் விடு­தலைப் புலிகள் அமைப்­புக்குள் பிள­வுகள் ஏற்­பட்டு, முள்­ளி­ய­வாய்க்கால் வரை தமிழ் தேசிய இனம் செல்ல வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. தமிழ் மக்­க­ளுக்­கான தீர்வு எனக் கூறி தமிழ் மக்­களை நட்­டாற்றில் விடு­வ­தற்­கான முயற்­சி­களே நல்­லாட்சி என்னும் இந்த இணக்க அர­சியல் ஆட்­சியில் இடம்­பெ­று­கி­றது. புதிய அர­சி­ய­ல­மைப்பை நடை­மு­றைப்­ப­டுத்தி அதில், இனப்­பி­ரச்சினைக்­கான நிரந்­தர தீர்வு வழங்­கப்­பட்டு விட்­ட­தாக சர்­வ­தேச சமூ­கத்­திற்கு காட்ட இந்த அர­சாங்கம் எத்­த­னிக்­கின்­றது. அதன் மூலம் சர்­வ­தேச அழுத்­தத்தை இல்­லாமல் செய்­வ­துடன், தமிழ் தேசிய இனத்தின் பிரச்­சி­னையை தீர்த்து விட்­ட­தாக கூறி சர்­வ­தேச மட்­டத்தில் தமிழ் மக்கள் சார்­பா­க­வுள்ள ஆத­ரவு நிலையை இல்­லாமல் செய்­வ­தற்­கான முயற்­சிகள் இடம்­பெ­று­கிக்­றது. தமிழ் மக்களது அபிலாஷைகளை புறக்கணித்த அரசாங்கம் தீர்வுத் திட்டம் என புதிய அரசியலமைப்பை திணிக்க முயல்வது என்பது எதிர்காலத்தில் தமிழ் இனத்தின் தனித்துவ அடையாளங்களையும், இருப்பையும் கேள்விக்குட்படுத்துவதாகவே அமையும். அப்போது தமிழ் மக்களுக்காக யாரும் வர மாட்டார்கள். இன்று கண்முன்னே மியன்மாரின் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படும் இனச்சுத்திகரிப்பை பலநாடுகளும் வேடிக்கை தான் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை நாம் மறந்துவிடமுடியாது. 

இந்த நிலையில் தமிழ் தேசிய இனமும், அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தலைமைகளும் அரசாங்கத்தின் காய்நகர்த்தல்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும். இணக்க அரசியல் என்ற போர்வையில் அரசின் காய் நகர்த்தலுக்கு துணைபோவது என்பது இருக்கின்ற துணியையும் பறிகொடுத்து விட்டு, தமிழ் தேசிய இனத்தை ஒட்டுத்துணி கூட இல்லாமல் நடுவீதியில் நிற்கும் நிலையையே உருவாக்கும். 

ருத்­திரன்

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-09-16#page-7

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.