Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்துசமுத்திர மாநாடு சீனாவுக்கு எதிரான நகர்வா?

Featured Replies

இந்துசமுத்திர மாநாடு சீனாவுக்கு எதிரான நகர்வா?

 

கடந்த ஆவணி மாதம் 30ஆம் திக­தியும் புரட்­டாதி 1ஆம் திக­தியும் கொழும்பு நகரில் இலங்கைப் பிர­த­மரின் உத்­தி­யோகபூர்வ வாசஸ்­த­லத்தில் நடை­பெற்ற இந்­து­ ச­முத்­திர மா­நாடு இந்து சமுத்­திர ஓரத்தில் அமைந்­துள்ள நாடு­க­ளி­னதும் இந்து சமுத்­திர நாடு­க­ளி­னதும் அவ­தா­னத்­தையும் கரி­ச­னை­யையும் பெற்­றுள்­ளது. இந்து சமுத்­திர மா­நாட்­டினை 1970களில் இலங்கை முன்னாள் பிர­தமர் சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்காவின் இந்து சமுத்­தி­ரத்தை யுத்த சூன்­ய­மற்ற வல­ய­மாக்க வேண்டும் என்ற திட்­டத்­துடன் குழப்பக் கூடாது. இரண்டும் சாரம்­சத்­திலும் உள்­ள­டக்­கத்­திலும் வேறு­பட்­டவை இந்து சமுத்­திர மா­நாடு தனி­யொரு அர­சாங்­கத்­தி­னாலோ அல்லது அர­சு­களின் கூட்­டா­கவோ ஏற்­பாடு செய்­யப்­பட்­ட­தல்ல. மாறாக இந்­தியா நிறு­வனம் (India foundation) என்ற சர்­வ­தேச கற்­கை­நெறி, ஆய்வு நிறு­வனம் மற்றும் இரா­ச­ரத்­தினம் சர்­வ­தேச அறி­வியல் கழகம், சிங்­கப்பூர், இலங்கை அடிப்­படை கற்­கை­நெ­றிகள் நிறு­வ­னங்­களின் ஏற்­பாட்டில் நடை­பெற்­றது. இலங்­கையில் நடை­பெற்ற மகா­நாடு இரண்­டா­வது மகா­நா­டாகும். முத­லா­வது மகா­நாடு சிங்­கப்­பூ­ரில் 2016 இல் நடை­பெற்­றன. இலங்கை தலை­நகர் கொழும்பில் நடை­பெற்ற 2ஆவது மகா­நாட்டை சீசெல்ஸ் நாட்டின் உப ஜனா­தி­பதி, இலங்கை பிர­தமர், இந்­திய வெளிவி­வ­கார அமைச்சர் ஆகியோர் வைப­வ­ரீ­தி­யாக அங்­கு­ரார்ப்­பணம் செய்து வைத்­தனர். இந்த மகா­நாட்டில் 35 நாடு­களின் பிர­தி­நி­திகள் பங்­கு­பற்­றினர். அவுஸ்­தி­ரே­லியா, பிரான்ஸ், ஜேர்மனி, பிரிட்டன், இந்­தோ­னே­சியா, வங்­க­ாள­தேசம், ஆப்­கா­னிஸ்தான், சிங்­கப்பூர், சீசெல்ஸ், மொரீ­சியஸ், மலே­சியா, சீனா, பாகிஸ்தான், உள்­ள­டங்­க­ளாக 35 நாடுகள் பங்­கு­பற்­றின. சீன பாகிஸ்தான் பிர­தி­நிதிக் குழுக்கள் தாழ்ந்­த­மட்ட முக்­கி­யஸ்­தர்­களால் பிர­தி­நி­தித்­து­வப்­பட்­டது. இந்த இரண்டு நாட்கள் நடை­பெற்ற மகா­நாட்டின் தொனிப்­பொ­ரு­ளாக சமா­தானம், அபி­வி­ருத்தி, செழிப்பு இடம் பெற்­றது.  

 

இலங்கை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன விசேட அதி­தி­யாக சிறப்­பித்து உரை­யாற்­றினார். இலங்கை இந்து சமுத்­தி­ரத்தில் கேந்­திர முக்­கி­யத்­துவம் வாய்ந்த இடத்தில் அமைந்­துள்­ளது என்­றும் இந்த வலயம் சர்­வ­தேச சமா­தா­னத்­துக்கும், நல்­லி­ணக்­கத்­துக்கும், சகல நாடு­க­ளு­டனும் நட்­பு­றவை மேம்­ப­டுத்­து­வ­தற்கும் பயன்­ப­டுத்­தப்­படும் என்றும் யுத்­த முஸ்தீபு­கள், போதை­வஸ்து கடத்தல், சட்­ட­வி­ரோத முறையில் ஆட்­க­டத்தல் போன்ற தீங்­கான காரி­யங்­க­ளுக்கு பயன்­ப­டுத்தக் கூடாது என்றும் சர்­வ­தேச வர்த்­தக விருத்­திக்கும் பயன்­தரு கடல் நட­வ­டிக்­கை­கட்கும் பயன்­படும் என்றார். இலங்கை பிர­தமர் உரை­யாற்­று­கையில் இந்து சமுத்­திர கேந்­திர ஸ்தானத்தில் இலங்கை அமைந்­துள்­ளதால் இலங்கை இப் பிராந்­தி­யத்தில் ஒரு அச்­சாணி என்றும் இலங்­கையின் துறை­மு­கங்­களோ வேறு பகு­தி­களோ இரா­ணுவ நோக்­கங்­கட்கு பயன்­ப­டுத்­தவோ இரா­ணுவ கூட்­டு­க­ளுக்கோ அனு­ம­திக்­கப்­பட மாட்­டாது என்னும் பொரு­ளா­தார வர்த்­தக அபி­வி­ருத்­தியே எமது நோக்கம் என்றார்.

இந்­திய வெளிவி­வ­கார அமைச்சர் சுஸ்மா அவர்கள் இந்­திய குழு­வுக்கு தலை­மை­தாங்கி மகா­நாட்டை இந்­தி­யாவின் சார்பில் சிறப்­பித்தார். இந்து சமுத்­திரம் உல­கத்தை இணைக்கும் ஒரு வாசல் என்றார். வரு­டாந்தம் ஒரு இலட்சம் கப்பல் வரை இந்து சமுத்­திர பாதை­களைப் பயன்­ப­டுத்­து­கின்­றது என்றும் உலக சரக்குப் பொதி­களில் அரை­வாசிப் பங்கு கடற்­கப்­பல்கள் மூலம் இப்­பா­தை­களால் பய­ணிக்­கின்­றன என்றும் உலக எண்ணெய் சரக்­கு­களை எடுத்துக் கொண்டால் மூன்றில் இரண்டு பங்கு இப்­பா­தை­களில் செல்­கின்­றன என்றும் இந்து சமுத்­திர நாடுகள் பொரு­ளா­தா­ரத்தை மேம்­ப­டுத்­து­வ­தற்கு ஏரா­ள­மான வாய்ப்­புக்கள் இருக்­கின்­றன என்றும் கூறினர்.

இந்­திய பிர­தமர் மோடியின் (Seaurity and growth for all in the region- sagar) பிராந்­தி­யத்தில் அமைந்த சக­லருக்கும் பாது­காப்பும் வளர்ச்­சியும் என்ற தரி­ச­னத்தை மா­நாட்டில் எடுத்­து­ரைத்தார். 2015இல் மோடி முன்­வைத்த தரி­ச­னத்தை எய்­து­வ­தற்கு இந்து சமுத்­திரம் ஒரு வரப்­பி­ர­சாதம் என்றார். அத்­துடன் நீலப் பொரு­ளா­தாரம் என்­கின்ற இலக்கை அடை­வ­தற்கு சமுத்­தி­ரத்தை வினைத்­தி­ற­னாக பயன்­ப­டுத்த வேண்டும் என்றார். இச்­சந்­தர்ப்­பத்தில் நீலப் பொரு­ளா­தாரம் என்றால் என்ன என்­பதை வாச­கர்­களுக்கு விளங்­கப்­ப­டுத்த வேண்டும் நீலக்­க­டலில் (சமுத்­திரம்) அள­வற்ற வளங்கள் இயற்­கை­யா­கவே கிடைக்­கின்­றது. இந்த நீலக்­கடல் வளங்­களை சகல மக்கள் பிரி­வி­ன­ரையும் உள்­ள­டக்­கி­ய­தா­கவும் சுற்­றா­டலை நிலைத்துப் பேண­லூ­டா­கவும் புத்­தாக்க புதிய வணி­க­ வர்த்­தக சிந்­த­னை­க­ளுடன் ஒன்­றி­ணைப்­பதே நீலப் பொரு­ளா­தா­ர­மாகும். இன்று பர­வ­லாக பேசப்­படும் பூலோக வெப்­ப­ம­டைதல் பிரச்­சி­னை­யி­லி­ருந்து விடு­ப­டு­வ­தற்கும் நீலப்­பொ­ரு­ளா­தாரம் கைகொ­டுப்­ப­து­மாத்­தி­ர­மன்றி மில்­லியன் கணக்­கான மக்­க­ளுக்கு வேலை­வாய்ப்­பையும் நாடு­க­ளுக்கு பொரு­ளா­தார செழு­மையும் அளிக்­கக்­கூ­டிய வல்­லமை நீலப்­பொ­ரு­ளா­தா­ரத்­திற்­குண்டு என்று அஸ்மா வலி­யு­றுத்திக் கூறினார்.

அமெரிக்­காவின் சார்பில் தென், மத்­திய ஆசிய விட­யங்­க­ளுக்கு பொறுப்­பான உதவி அமைச்சர் அலிஸ்வெல்ஸ் பங்­கு­பற்­றினார். அமெரிக்கா இந்து சமுத்­திர நாடு­க­ளுடன் தந்­தி­ரோ­பாய நலன்­களை பங்­கு­போ­டு­வ­தா­கவும், பொது இலக்கை அடை­வ­தற்கு வெளிப்­படைத் தன்மை மயப்­பட்ட கூட்­டு­றவு அவ­சியம் என்றும், இரு­த­ரப்பு, பல்­த­ரப்பு உற­வுகள் ஊடாக பிராந்­திய கட்­ட­மைப்பை ஏற்­ப­டுத்த வேண்டும் என்றும் இப்­பி­ராந்­தி­யத்தில் ஒன்­றி­ணைந்த இலக்­கு­க­ளான சமா­தா­னத்தை மேம்­ப­டுத்தல், பாது­காப்பு, கடல் பயண சுதந்­திரம். இந்­து ­ச­முத்­தி­ரத்­தூ­டாக நிலைத்­து­நிற்கும் கட்­ட­மைப்பை ஏற்­ப­டுத்தல் ஆகி­ய­வற்றை அமெரிக்கா அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­டு­வ­தாக கூறினார். இம்­ம­ா­நாடு இந்­து­ச­முத்­திர பிராந்­தி­யத்தில் பாது­காப்பு திறந்த தன்மை பொரு­ளா­தார விருத்தி ஆகி­ய­வற்றை அடை­வ­தற்­கான மேலும் ஒரு படி என்றார்.

1970ஆம் ஆண்டு முன்னாள் இலங்கைப் பிர­தமர் சிறி­மாவோ அம்­மையார் லூசாக்கா கூட்­டுச்­சேர உச்­சி­ம­ா­நாட்டின் இந்­து­ ச­முத்­திர பிராந்­தியம் சமா­தான வல­ய­மாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்ற சிந்­த­னையை வெளியிட்டார். என்­பதை இத்­த­ரு­ணத்தில் குறிப்­பிட வேண்டும். கூட்­டுச்­சேரா நாடுகள் மத்­தியில் இக்­கோ­ரிக்கை பிர­பலம் பெற்­றது. லூசாக்கா உச்­சி­ம­ா­நாட்டின் இறுதி பிர­க­ட­னத்தில் இடம் பெற்­றது. அக்­கா­லத்தில் நில­விய பனிப்போர் கார­ண­மாக உலக வல்­ல­ர­சு­க­ளான அமெரிக்கா சோவியத் யூனியன் ஆகி­ய­வற்றின் வல்­லா­திக்கப் பகைமைப் போட்­டியில் சிக்­காமல் இந்து சமுத்­திர பிராந்­தி­யத்தை சமா­தான வல­ய­மாக மாற்­ற­வேண்­டு­மென்­பதே சிறி­மாவோ அம்­மை­யாரின் கோரிக்­கையின் உட்­பொ­ரு­ளாகும். அன்­றைய கால­கட்­டத்தில் நிகழ்ந்த ஒரு சம்­பவம் சிறி­மாவோ அம்­மை­யாரின் கோரிக்­கைக்கு வலு­வூட்­டி­யது டியாகோ கார்­சியா தீவில் அமெரிக்கா இரா­ணு­வத்­தளம் அமைத்­த­துவே அந்தச் சம்­ப­வ­மாகும். சிறி­மாவோ அம்­மை­யாரின் கூட்­டு­சேரா இயக்­கத்தின் இக்­கோ­ரிக்­கைக்கு பல­மான ஆட்­சே­பனை அெம­ரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய ஐ.நா. பாது­காப்­பு­சபை நிரந்­தர அங்­கத்­துவ நாடு­க­ளி­டையே இருந்து கிளம்­பி­யது என்­பது மனதில் இருத்­திக்­கொள்ள வேண்­டிய செய்­தி­யாகும். எனினும் ஐ.நா. பொதுச் சபையால் 1970ஆம் ஆண்டு 2832 இலக்க தீர்­மானம் மூலம் இக்­கோ­ரிக்கை ஏற்­கப்­பட்­டது.

இத்­தீர்­மா­னத்தின் பிர­காரம் இந்­து­ச­முத்­திர பிராந்­தி­யத்தில் இரா­ணுவ பிர­சன்­னத்தை மேலும் விஸ்­த­ரிக்­கவோ பதட்­டத்தை அதி­க­ரிக்­கவோ கூடா­தென்றும் பிராந்­திய நாடு­களின் சுதந்­திரம் இறைமை ஆள்­புல ஒரு­மைப்­பாடு மதிக்­கப்­பட வேண்­டு­மென்றும், பிராந்­திய நாடுகள் தமக்குள் ஏற்­படும் பிணக்­கு­களை சமா­தான பாது­காப்பு நிலவும் சூழலில் தீர்க்கப்­ப­ட­வேண்­டு­மென்ற அம்­சங்கள் உள்­வாங்­கப்­பட்­டன. மேற்­கொண்டு கலந்­தா­லோ­சனை நட­வ­டிக்­கை­களை ஆராய்ந்து சமர்ப்­பிப்­ப­தற்கு ஐ.நா.வால் ஒரு ஆலோ­சனை குழு அமைக்­கப்­பட்­டது. இக் குழு­வுக்கு தலை­வ­ராக ஐ.நா.­வுக்­கான இலங்­கையின் நிரந்­தரப் பிர­தி­நி­தி­ தேர்வு செய்­யப்­பட்டார். ஐ.நா. இந்து சமுத்­திரம் தொடர்­பான குழு இன்­று­வரை காத்­தி­ர­மான தீர்­மா­னங்­களை நோக்கி நக­ர­வில்லை. இந்த யோசனை, முன்­வைத்த போது உல­க­போக்கு இரண்டு வல்­ல­ர­சு­களால் ஆதிக்கம் செலுத்­தப்­பட்ட நிலை காணப்­பட்­டது.

1991இல் சோவி­யத்­ யூ­னி­யனின் சிதை­வுக்குப் பின்னர் ஐக்­கிய அமெரிக்கா ஏக­வல்­ல­ர­சா­கவும் தொடர்ந்து பிராந்­தி­யங்­களில் பல­மான நாடு­களும் உரு­வா­கின. கூட்­டுச்­சேரா இயக்கம் முன்­வைத்த யோசனை பனிப்போர் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டாலும் இந்து சமுத்­திர பிராந்­தியம் சமா­தான வல­ய­மாக பேணப்­பட வேண்டும் என்ற எண்­ணக்­கரு இன்னும் பொருத்­தப்­பாடு உள்­ள­தா­கவே காணப்­ப­டு­கின்­றது. வித்­தி­யாசம் யாதெனில் 1970ஆம் ஆண்­டு­களில் சிறி­மாவோ அம்­மையார் முன்­மொ­ழிந்த தீர்­மானம் கூட்­டுச்­சேரா இயக்­கத்தின் முழு ஆத­ரவைப் பெற்­ற­வேளை அத்­தீர்­மா­னத்தை எதிர்த்த அமெரிக்கா பிரிட்டன் பிரான்ஸ் ஆகிய நாடுகள் தற்­போ­தைய இந்து சமுத்­திர மா­நாட்­டுக்கு அணி­சேர்க்கும் பாத்­தி­ரங்­க­ளாக மாறி­யுள்­ளன. இந்தப் பின்­னணி ஆரா­யப்­பட வேண்­டிய தொன்­றாகும். ஈராக், ஆப்­கா­னிஸ்தான் ஆகிய நாடு­களில் யுத்­தங்­களை புரிந்து அந்­நா­டு­களின் இறைமை சுதந்­திரம் ஸ்திர­மான ஆட்­சியை குழப்­பியும் ஈரான் வட­கொ­ரியா அணு ஆயுத வச­தி­களை மேம்­ப­டுத்­து­வ­தாக பல­த­டை­களை ஒரு­த­லைப்­பட்­ச­மா­கவும் ஐ.நா. மூலமும் ஏற்­ப­டுத்­தியும் சிரியா, லிபியா ஆகிய நாடு­களில் ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்த அந்­நாட்டுக் கிளர்ச்­சி­களை உரு­வாக்­கியும் எங்கும் எப்­போதும் ஒரு வல்­ல­ரசு ஆதிக்­கத்தை நிலை­நாட்ட முற்­படும் அமெரிக்கா, இந்­தியா, ஜப்பான் ஆகிய நாடு­க­ளுடன் இணைந்து உலக வல்­ல­ர­சாக முன்­னுக்கு வந்­து­கொண்­டி­ருக்கும் மக்கள் சீனாவை தற்­போ­தைய இந்­து­ ச­முத்­திர மா­நாட்டின் ஊடாக இலக்­கு­வைக்­கின்­றது என்­கின்ற வினா இரா­ஜ­தந்­தி­ரி­க­ளையும் அர­ச­றி­ஞர்­க­ளையும் கேட்­கத்­தூண்­டு­கின்­றது. சீனாவின் பட்­டுப்­பாதை, உட்­கட்­ட­மைப்பு முத­லீட்டு வங்கி ஆகி­யவை சீனாவின் உலக நாடு­களை வளைத்துப் போடும் திட்­டத்தின் மார்க்­கங்கள் ஆகும். ஆசிய ஆபி­ரிக்க ஐரோப்­பாவை ஊட­றுத்துச் செல்லும் பட்­டுப்­பாதை திட்டம் பெரும் வர­வேற்பை பெற்­றுள்­ளது என்­பதை மறுக்­க­மு­டி­யாது. இந்­தியா, அமெரிக்க உற­வுகள் பனிப்­போ­ருக்குப் பின்னர் சீர­டைந்து சிறப்­ப­ாக­வுள்­ளன. எனினும் இரு­த­ரப்பு உறவு மேம்­பாடு மூன்­றா­வது நாட்­டுக்கு தீமை­ப­யக்கும் என்றில்லை. உலகில் பொருளாதார சக்தியாக எழுச்சி பெறும் இந்தியா அமெரிக்காவுடனான உறவை மூன்றாம் நாட்டுக்கு எதிராக செயற்படும் என்று இன்றைய நிலையில் கூறமுடியாது.

Brcics மாநாட்டுக்கு இறுதி அறிக்கையில் சீனா இந்தியாவின் கரிசனைகளை கவனத்திலெடுத்து பாகிஸ்தானை தளமாகக் கொண்டு இயக்கும் இரு பயங்கரவாத இயக்கங்களின் பெயர் குறித்து பிரகடனப்படுத்தியுள்ளது. இந்தியா ஆசியப் பிராந்தியத்தை அதன் எதிர்காலத்தை வளர்ந்து வரும் இந்திய பொருளாதாரத்தை கைவிடப்போவதில்லை என்பதையும் பொருத்தமான சந்தர்ப்பங்களில் கோடிட்டு காட்டியுள்ளது. எனினும் இந்து சமுத்திர மாநாடு முன்னர் கூட்டுசேரா இயக்கத்தின் யோசனையை எதிர்த்தவர்கள் ஆதரிப்பது என்பது அரசியல் அவதானிகளை சிந்திக்கவும் வித்தியாசமான முறைகளில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் தூண்டியுள்ளது. எது எவ்வாறாயினும் இந்து சமுத்திர பிராந்தியம், இந்திய பிரதமரின் கனவுப்படி நீல பொருளாதாரத்தின் மூலம் இலட்சக்கணக்கானோர்க்கு வேலைவாய்ப்பு வசதிகளுடன் மக்களின் வாழ்க்கைத்தரத்தையும் பிராந்திய நாடுகளின் எல்லாம் உள்ளடங்கிய அபிவிருத்தியும் நிலைத்து நிற்கும் அபிவிருத்திக்கு வழிகோலும் என்கின்ற கனவு மெய்ப்படவேண்டும்.

ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம்
(இளைப்பாறிய பணிப்பாளர், இலங்கை வெளிவிவகார அமைச்சு.)

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-09-16#page-4

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீனாவை எதிர்த்துக்கொண்டு அமெரிக்கா குனிஞ்சு குப்பையைக்கூட தூக்கேலாத நிலமையிலை இருக்கு. :(

இருந்தாலும் இந்தியாவை பலப்படுத்த....வலுப்படுத்த....வல்லரசாக்க....வீட்டோ உறுப்பினராக்க அந்த சனீஸ்வரனும் விரும்பமாட்டார்.tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.