Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவல் விமர்சனம் : யவன ராணி - சாண்டில்யன்

Featured Replies

யவன ராணி

yavanarani.jpg

ரித்திர நாவல் படிப்பதில் ஒரு மகிழ்ச்சி என்னவென்றால் நம் தமிழகத்தின் பெருமையை அதன் வீரத்தை படிக்கப் படிக்க நாம் எவ்வளவு சிறப்பு வாய்ந்த இடத்தில் பிறந்து இருக்கிறோம் வரலாற்று சிறப்புமிக்க இடத்தில் வாழ்கிறோம் என்று பெருமையாக உள்ளது.

Image Credit – blaftblog.blogspot.com

இதற்காகவாவது வரலாற்று நாவல்களைப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. சாண்டில்யன் வரலாற்று நூல்களைப் பற்றிச் சிறு வயதில் இருந்தே அறிந்து இருக்கிறேன் என்றாலும் தற்போது தான் படிக்க வாய்ப்புக் கிடைத்தது.

சாண்டில்யன் யவன ராணி, கடற்புறா நாவல்கள் பலரிடையே பாராட்டுப் பெற்ற நாவல்களாக உள்ளன.

இனி யவன ராணி

சோழநாட்டில் யவனர்களின் (கிரேக்கர்கள்) ஆட்சியை அமைக்க அந்த நாட்டு சோதிடர்களால் கணிக்கப்பட்டு யவன ராணியை அவர்களின் போர் தலைவன் டைபீரியஸ் உதவியுடன் சோழ நாட்டுக்கு அனுப்புகிறார்கள்.

அவர்கள் வரும் கப்பல் உடைந்து அதில் இருந்து தப்பிக்கும் யவனராணி கரையோரம் ஒதுங்குகிறாள். இக்கதையின் நாயகன் சோழர் படைத் தலைவன் இளஞ்செழியன் இவளை கரையில் கண்டு காப்பாற்றி அழைத்துச் செல்கிறான்.

இதன் பிறகு என்ன நடக்கிறது? யவனராணி டைபீரியஸ் உதவியுடன் ஆட்சியைப் பிடித்தாளா? தமிழகம் என்ன ஆனது? இளஞ்செழியன் என்ன ஆனான்? என்பதே யவன ராணி கதை.

நீண்ட விளக்கங்கள்

உண்மையில் எனக்குத் துவக்கத்தில் யவனராணி படிக்கச் சுவாரசியத்தைத் தரவில்லை.

இந்நாவல் குமுதம் வார பத்திரிகையில் வந்துள்ளது. ஒவ்வொரு நாளும் சீரியலில் இறுதியில் ஒரு பரபரப்பை கூட்ட ஏதாவது செய்வார்கள் ஆனால் அடுத்த நாள் பார்த்தால் அப்படி ஒன்றும் பெரியளவில் இருக்காது.

அது போல இதிலும் ஏதாவது ஒரு பரபரப்பை ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் கொடுக்கிறார் ஆனால், பரபரப்பு இருந்தாலும் அந்தப் பரபரப்புக்கு சென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சியாகச் சில வர்ணனைகளையும் விளக்கங்களையும் கொடுத்து பிறகு தான் விசயத்திற்கு வருகிறார்.

படிக்கும் போது சீக்கிரமாக விசயத்துக்கு வாங்க என்பது போல இருக்கிறது. இக்குறை இரண்டாவது பாகத்தில் இல்லை அல்லது வெகு குறைவு. ஒரு பதிலை கூறுவதற்கு இரண்டு பக்க வர்ணனைகள் சில நேரங்களில் சலிப்பைத் தருகின்றன.

வர்ணனைகள்

சரித்திர கதை என்பதாலும் சாண்டில்யன் நாவலுக்கே உரிய பெண்களுக்கான வர்ணனைகளும் நிரம்பி உள்ளது. அதற்கேற்றார் போலத் தலைப்பே “யவன ராணி” என்பதால் சொல்லவே வேண்டியதில்லை

இதிலும் யவன ராணி, பூவழகி, அலிமா போன்ற அழகுப் பெண்கள் இருக்கும் போது வர்ணனைகளுக்குப் பஞ்சமா இருக்கும்?!

யவன ராணி பற்றிய சாண்டில்யனின் வர்ணனைகளைப் படிப்பவர்கள் சூர்யா கிட்ட சென்று அவரிடம் உள்ள கால இயந்திர கடிகாரத்தை வாங்கிச் சோழ நாட்டுக்குச் சென்று யவன ராணியைப் பார்த்துட்டு வந்துடலாம் என்று நினைத்தாலும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை

யவனர்கள் என்பவர்கள் கிரேக்கர்களா சீனர்களா?

முதலில் எனக்கு யவனர்கள் என்பவர்கள் யார்? எந்த நாட்டைச் சார்ந்தவர்கள்? கிரேக்கமா சீனர்களா?! என்ற குழப்பம் இருந்தது. என்னுடைய Blog FB Page ல் கூட நண்பர்களிடம் கேட்டேன். எல்லோரும் கிரேக்கர்கள் என்று கூறினார்கள்.

பின்னர் முழுவதும் படிக்கும் போது நமக்கே அது கிரேக்கர்கள் என்று தெரிய வருகிறது.

தமிழகத்தில் கிரேக்கர்கள் நம் தமிழர்களிடையே பணி புரிந்து இருக்கிறார்கள் என்பதையும் நம் சொல்படி கேட்டு நடந்து இருக்கிறார்கள் என்பதையும் அறியும் போது தமிழகம் எவ்வளவு பெருமை கொண்ட நாடாக இருந்துள்ளது என்று நமக்குப் தெரியவருகிறது.

எப்படி இருந்த தமிழகம் இப்படி ஆகி விட்டதே என்று வருத்தமும் வருகிறது.

இது எப்படி?

தமிழ்ப் படம் போல யவன ராணியில் ஒரு காட்சி. இளஞ்செழியன், பூவழகி மற்றும் பலர் வரும் போது டைபீரியஸ் பாதுகாப்புக் கெடுபிடியில் மாட்டிக் கொள்வார்கள் ஆனால், இளஞ்செழியன் மட்டும் தப்பித்து விடுவான்.

எப்படித் தப்பித்தான் என்று சொல்வார் என்று எதிர்பார்த்தால் இறுதிவரை கூறவே இல்லை.

தமிழ்ப் படங்களில் சண்டைக் காட்சியில் நாயகன் வில்லனுடன் சண்டைப் போடும் போது வில்லன் நாயகனிடம் இருந்து தப்பித்து வேறு பக்கம் ஓடுவான், பார்த்தால் திடீர் என்று நாயகன் முன்னே நிற்பார். எப்படி அங்கே வந்தார் என்று யாருக்குமே தெரியாது!

மந்திரவாதி மாண்ட்ரேக் மாதிரி நாயகன் வந்து நிற்பார். இது போல இளஞ்செழியன் எப்படி மறைந்து போனான் என்றே தெரியவில்லை!

இது போல நாவல் முழுக்கச் சில இடங்களில் “இது எப்படி?” என்ற கேள்வி வருகிறது.

போர்

வரலாற்று நாவல்கள் என்றாலே போர் காட்சிகள் இல்லாமல் இருக்காது, இதிலும் அற்புதமான வர்ணனைகளுடன் போர் காட்சிகள் உள்ளது.

இதில் வரும் போர் திட்டங்களும் அதற்கான முன்னேற்பாடுகளும் நம்மைப் பிரம்மிக்க வைக்கின்றன. இந்தத் திட்டங்கள் எல்லாம் முந்தைய வரலாற்று நூல்களில் இருந்து எடுக்கப்பட்டதா அல்லது சாண்டில்யன் புனைவா என்று தெரியவில்லை. அசத்தல்!

இலி ஆஸ்

சாம்பிராணி நாட்டு மன்னன் இலி ஆஸ் பற்றிய பகுதியான இரண்டாம் பாகம் படிக்கப் படு வேகமாகச் செல்கிறது. இலி ஆஸ் உடல் குறித்த வர்ணனைகளும் அவரின் மிகக் கடுமையான தண்டனை முறைகளும் படிக்கும் போது திகிலை கூட்டுகின்றன.

நாவலிலேயே நான் ரசித்துப் படித்த பக்கங்கள் இலி ஆஸ் பகுதி தான்.

இவ்வளவு கொடுமையான இடத்தில் இருந்து தப்பிக்க இளஞ்செழியன் செய்யும் முயற்சிகளும் அப்போது ஏற்படும் பிரச்சனைகளும் பரபரப்பாக உள்ளது. இலி ஆஸ் மிகக் கொடுமையானவன் என்றால் அவனுக்கே அண்ணனாக வரும் அவர்களின் மத குரு மிரட்டுகிறார்.

கப்பல் பயணமும் கடற்கொள்ளையரும் அடிமைகளும்

கப்பல் பயணம் அழகானது சுவாரசியமானது ஆபத்து இல்லாதவரை. கடற்கொள்ளையர் கப்பல்களைத் தாக்கும் காட்சிகளும் பயமுறுத்துவனவாக உள்ளன.

அடிமையாகச் சிக்கினால் ஏற்படும் நிலையும் தப்பிக்க நினைத்து மாட்டிக்கொண்டால் என்ன கதி நமக்கு ஏற்படும் என்பதையும் அறிந்தால் உடலை சில்லிட வைக்கிறது.

மனிதத்தன்மை கொஞ்சம் கூட இல்லாதவர்களிடம் இருந்து தப்பிக்கும் காட்சிகள் த்ரில்லர் படம் பார்ப்பது போலவே இருக்கிறது.

தமிழகத்தின் சிறப்புகள் அளவிட முடியாதவை

இந்நாவலில் தமிழகத்தின் சிறப்பாக உங்களிடம் கூற பல செய்திகள் இதில் உள்ளது. எப்போதுமே படிக்கும் போது நான் ரசித்த / உங்களிடம் கூற வேண்டும் என்று நினைக்கும் செய்திகளின் பக்கத்தைக் குறித்து வைத்து இது போல எழுதும் போது அவற்றை விவரிப்பேன்.

ஆனால், இந்த முறை அவ்வாறு குறித்து வைக்க மறந்ததால் பல நல்ல தகவல்களைத் தெரிவிக்க முடியவில்லை. இது உண்மையில் எனக்கு மிக வருத்தமாக உள்ளது.

இருங்கோவேள், பிரும்மானந்தர், கரிகாலன், இரும்பிடையார் தலையார் என்று விவரிக்கப் பல கதாப்பாத்திரங்கள் உள்ளன.

புத்தகத்தில் நான் கூற நினைத்ததைத் தேடுவது கடலில் போட்ட பெருங்காயத்தைத் தேடுவதைப் போலவே உள்ளது அதனால், பொறுமை இழந்து விட்டு விட்டேன். அடுத்த முறை கவனமாக இருக்கிறேன்.

உண்மையில் இந்த யவன ராணி விமர்சனம் எனக்குத் திருப்தியளிக்கவில்லைஇன்னும் சிறப்பாகச் சுவாரசியமாக எழுதி இருக்க முடியும் குறிப்புகளை எடுத்து இருந்தால்.

அடுத்து “கடற்புறா” படிக்கலாம் என்று திட்டமிட்டு இருக்கிறேன்.

எப்போதும் என்னை பிரம்மிக்க வைக்கும் நாவல் 

http://www.giriblog.com/2016/07/yavana-rani-book-review.html

  • கருத்துக்கள உறவுகள்

சாண்டில்யனின் பெரும்பான்மையான நாவல்கள் வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட புனைவுகளே. ஆனால் அவற்றை சுவாரசியக் கோர்வையாக அற்புதமாக விளக்கியதில்தான் சாண்டில்யனின் கற்பனை வளமும், திறமையும் மேலோங்குகிறது. குறிப்பாக போர் யுக்திகள் மற்றும் பொறிமுறைகளை விளக்குவது அருமை.

கன்னி மாடம், கடல் புறா, ராஜ பேரிகை, ராஜ முத்திரை, ஜல தீபம், மூங்கில் கோட்டை ஆகிய நாவல்களை இதுவரை படித்துள்ளேன்..

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.