Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியலுக்கு புதியவர்கள் கூட்டமைப்பை விமர்சிக்க தகுதியில்லை, சீறும் மாவை

Featured Replies

அரசியலுக்கு புதியவர்கள் கூட்டமைப்பை விமர்சிக்க தகுதியில்லை, சீறும் மாவை

தமிழ் தேசியக் கூட்டமைப்பு சமஷ்டியையும் வடகிழக்கு இணைப்பையும் கைவிட்டுள்ளதாக இந்த மண்ணுக்கு புதியவர்கள், அரசியலுக்கு புதியவர்கள் விமர்சிக்கிறார்கள் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா விசனம் வெளியிட்டுள்ளார்.

கோப்பாய் கோமான் அமரர் கு.வன்னியசிங்கத்தின் 58 ஆவது நினைவு தினம் நேற்று மாலை கோப்பாயில் இடம்பெற்றது.

அரசியலுக்கு புதியவர்கள் கூட்டமைப்பை விமர்சிக்க தகுதியில்லை, சீறும் மாவை

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் மக்கள் பல சந்தர்ப்பங்களில் பல இணக்கப்பாட்டுக்கு வந்திருப்பதாகவும் வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பாக முஸ்லிம் மக்களுடன் கலந்துரையாடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலுக்கு புதியவர்கள் கூட்டமைப்பை விமர்சிக்க தகுதியில்லை, சீறும் மாவை

அத்துடன் முஸ்லிம் மக்களை ஓரளவுக்கேனும் திருப்தி படுத்தி முஸ்லிம் மக்களின் அரசியல் அபிலாஷைகளை உள்வாங்கி வடகிழக்கை தமிழ்பேசும் மக்களின் தாயகமாக மாற்றவேண்டும் எனவும் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் வடமாகாணசபை அவைதலைவர் சீ.வி.கே.சிவஞானம் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களான ஆ.பரஞ்சோதி, இ.ஆனோல்ட், எஸ்.சிவயோகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அரசியலுக்கு புதியவர்கள் கூட்டமைப்பை விமர்சிக்க தகுதியில்லை, சீறும் மாவை

 

https://news.ibctamil.com/ta/internal-affairs/-TNA--is-the-federal-and-the-North-East

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

பழையவர்கள் சரியாய் நடந்திருந்தால் புதியவர்கள் பழையவர்களை  விமர்சிக்க வேண்டிய தேவையே வந்திருக்காதே ஐயா. 

  • தொடங்கியவர்

பத்திரிகைகளில் பெயர் வரவேண்டுமென்பதற்காக விளங்காமல் சிலர் அரசியலில் கொக்கரிப்பு

மாவை எம்.பி. விசனம்

 

“இங்­குள்ள சிலர் பத்­தி­ரி­கை­க­ளில் தமது பெயர்­கள் வர­வேண்­டும் என்­ப­தற்­காக ஒன்­றுமே தெரி­யா­மல் எமக்கு அ,ஆ, படிப்­பிப்­ப­து­போல கருத்­துக்­க­ளைக் கூறி­வ­ரு­கின்­ற­னர். இளை­யோர் சில­ரும் இவ்­வாறு நடந்­து­கொள்­கின்­ற­னர்.

இது­தான் எமது அர­சி­ய­லில் உள்ள பிரச்­சினை. நாம் கூட்­டாட்சி­யைக் கைவிட்­டு­ விட்­டோம், வடக்கு– – கிழக்கு இணைப்பை கைவிட்­டு­விட்­டோம், தலை­மை­யைத் தூக்கி எறிய வேண்­டும் என்­றும் ஒன்­றுமே விளங்­கா­மல் சிலர் கொக்­க­ரிக்­கின்­ற­னர்” இவ்­வாறு இலங்­கைத் தமி­ழ­ர­சுக் கட்­சி­யின் தலை­வ­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை.சோ.சோனா­தி­ராசா சீற்­றத்­து­டன் தெரி­வித்­தார்.

கோப்­பாய் கோமான் வன்­னி­ய­சிங்­கத்­தின் 57ஆவது நினை­வுப் பேருரை கோப்­பாய் வடக்கு சித்­தி­ர­வே­லா­யு­தர் கோவில் மண்­ட­பத்­தில் நேற்று இடம்­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யில் அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:
இளை­யோ­ருக்கு சில விளக்­கங்­களை நாம் வழங்க வேண்­டிய தேவை உள்­ளது. அர­சி­யல் என்­பது எமது மண்­ணில் எவ்­வாறு அர்ப்­ப­ணிப்­பு­டன் பய­ணிக்­கின்­றது என்­ப­தற்கு தமிழ் அர­சுக் கட்சி சிறந்த உத­ாரண­மாக இருக்­கும்.

எமது மக்­க­ளின் விடு­த­லைக்­கா­கவே கட்சி ஆரம்­ப­கா­லத்­தி­லி­ருந்து பய­ணித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றது. அதில் வன்­னி­ய­சிங்­கம் முக்­கிய பங்கு வகிக்­கின்­றார். தந்தை செல்வா நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் தோற்­ற­போ­தி­லும் வன்­னி­ய­சிங்­கம் கோப்­பாய் தொகு­தி­யில் வெற்றி பெற்­றி­ருந்­தார்.

முன்­னைய காலத்­தில் தமிழ் அர­சுக் கட்­சி­யின் கூட்­டங்­க­ளில் சிலர் விச­மத்­த­ன­மான குழப்­பங்­களை செய்ய முயற்­சித்­த­ துண்டு. அந்­தச் செயற்­பா­டு­கள் இப்­போ­தும் அதி­க­மா­கக் காணப்­ப­டு­கின்­றன. அது ஒரு பிரச்­சி­னை­யல்ல.

இலங்­கை­யில் தனிச் சிங்­க­ளச் சட்­டம் கொண்­டு­வ­ரப்­பட்ட போது கொழும்­பில் நாடா­ளு­மன்ற வளா­கத்­துக்கு முன்­பா­க­வும் காலி முகத்­தி­ட­லி­லும் குருதி சிந்­திப் போராட்­டம் செய்­த­வர்­கள் தமிழ் அர­சுக் கட்­சி­க்காரர்­கள் என்­பதை மக்­கள் அறி­வார்­கள்.

மிகக்­கு­றைந்த எண்­ணிக்­கையைக் கொண்ட ஒரே தேசிய இனம் ஈழத்­த­மி­ழர்­கள்­தான். அவர்­க­ளில் ஏரா­ள­மா­னோர் சுய நிர்­ணய உரி­மை­யு­டன் வாழ வேண்­டும் என்­ப­தற்­காக அகிம்சைப் போராட்­டங்­க­ளை­யும் ஆயு­தப் போராட்­டங்­க­ளை­யும் நடத்தி தமது இன்­னு­யிர்­க­ளைத் தியா­கம் செய்­துள்­ள­னர்.

வன்­னி­ய­சிங்­கம் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்­த­போது குருதி சிந்­திய நிலை­யில் தனது உள்­ளா­டை­யு­டன் நாடா­ளு­மன்­றில் உரை­யாற்­றி­னார். காலி முகத்­தி­ட­லில் அவர்­கள் கடு­மை­யாகத் தாக்­கப்­பட்­ட­னர்.

தமி­ழர்­க­ளின் விடு­த­லைப் போராட்­டத்­தில் எமது உச்­சப் பலம் விடு­த­லைப்­பு­லி­ கள் ஆயு­தம் ஏந்­திப்­போ­ரா­டிய காலத்­தி­லேயே இருந்­தது. அதனை யாரா­லும் மறுக்க முடி­யாது. நாம் அதில் நேர­டி­யா­கப் பங்கு பற்­றா­விட்­டா­லும் நாம் அவர்­க­ளு­டன் புரிந்­து­ணர்­வு­டன் பய­ணித்­தோம்.

தற்­போது நாம் பன்­னாட்­டின் உத­வி­யு­டன் பய­ணித்து வரு­கின்­றோம். தமி­ழர்­க­ளுக்­கான சுய உரிமை விட­யத்­தில் இந்த அர­சும் ஏமாற்­றும் வகை­யில் செயற்­பட்­டால் வடக்கு – கிழக்கு ரீதி­யாக இந்த நாட்­டில் கூட்டு அரசு மட்­டு­மல்ல எந்த ஆட்­சி­யும் நடை­பெ­றாத நிலமை ஏற்­ப­டும். அந்­த­வே­ளை­யில் ஐ.நாவும் வெளி­நா­டு­க­ளும் எமக்­குப் பக்­க­ப­ல­மாக இருக்க வேண்­டும் என்று கோரி­யுள்­ளோம்.

தமி­ழர்­க­ளுக்­குக் கிடைத்­துள்ள அர­சி­யல் சந்­தர்ப்­பத்தை மூழ்­க­டிக்க சிலர் முயற்­சித்து வரு­கின்­ற­னர். எமது கட்­சி­யின் கொள்கை மற்­றும் கடந்த மாகாண சபைத் தேர்­த­லின்­போது முன்­வைத்த அறிக்­கை­யில் கூட்­டாட்சி பற்றி பேசி­யுள்­ளோம் என்று கூறி சிங்­கள தீவி­ர­வா­தி­கள் எம்­மீது வழக்கு தாக்­கல் செய்­த­னர். ஆனால் எமக்கு நீதி­மன்­றில் நீதி கிடைத்­து­விட்­டது.

தற்­போ­தைய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­தில் தென்­னி­லங்­கைத் தலை­வர்­கள் கூட்­டாட்சியை ஏற்­க­மாட்­டார்­கள் என்று கூறி­வ­ரும் நிலை­யில் நாமும் ஒற்­றை­யாட்­சியை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்­ப­தில் வைராக்­கி­ய­மாக உள்­ளோம்.

இந்த நாட்­டில் உள்ள ஒன்­பது முத­ல­மைச்­சர்­க­ளும் அதி­கா­ரங்­கள் பகி­ரப்­பட வேண்­டும் என்­ப­தில் திட­மாக இருக்­கின்­ற­னர். ஆகவே நாம் பெற­வி­ருக்­கும் அதி­கா­ரத்­தைக் கொழும்பு அரசு மீளப்­பெ­ற­மு­டி­யாத வகை­யான ஏற்­பா­டு­கள் உள்­ளன.

சில சிங்­கள தீவி­ர­வா­தி­கள் கூட்­டாட்சியைப் பிரி­வி­னை­வா­தம் என்று கூறி வரு­கின்­ற­னர். எதிர்­வ­ரும் 21 ஆம் திகதி புதிய அர­ச­மைப்­பின் இடைக்­கால அறிக்கை வரும்­போது சொல்­லப்­ப­டும் வார்த்­தை­யில் அனை­வ­ரும் அதனை விளங்­கிக்­கொள்­வர்.

வடக்கு -– கிழக்கு இணைப்­புத் தொடர்­பில் தமிழ் முஸ்­லிம் மக்­கள் ஒரு புரிந்­து­ ணர்­வுக்கு வந்­துள்­ள­னர். முழு­மை­யாக அதனை இணைக்க நாம் அனைத்து முயற்­சி ­க­ளை­ யும் எடுத்து வரு­கின்­றோம்.

இந்த நாட்­டில் அதி­கா­ரங்­கள் பகி­ரப்­பட வேண்­டும். பகி­ரப்­பட்ட அதி­கா­ரங்­கள் கொழும்பு அர­சால் மீளப்­பெ­ற­மு­டி­யாத ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட வேண்­டும் என்­ப­தில் இந்த நாட்­டின் அனைத்து தரப்­பு­க­ளும் உறு­தி­யாக உள்­ளது.

வடக்கு – கிழக்கு இணைப்பு இடம்­பெ­ற­வேண்­டும் என்­பதை, தமிழ் அர­சுக் கட்­சிக்கு எதி­ராக தொடுக்­கப்­பட்ட வழக்­கின் தீர்ப்பு எடுத்­துக்­காட்­டு­கின்­றது – – என்­றார்.

இந்த நிகழ்­வில் வடக்கு மாகாண அவைத்­த­லை­வர் சி.வி.கே. சிவ­ஞா­னம், மாகாண சபை உறுப்­பி­னர்­கள் உள்­ளிட்ட பல­ரும் கலந்­து­கொண்­ட­னர்.

http://newuthayan.com/story/29701.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.