Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

திருக்குறள்

Featured Replies

திருக்குறள்

f_Thiruvalluvm_4c30ec0.gif

தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள். இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம் பொருள் இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப்பற்றி விளக்கும் நூல்.

இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர். இவருடைய இயற்பெயர் என்ன என்பதும் மேற்கண்ட விபரங்களும் சரிவரத்தெரியவில்லை. இவரைப்பற்றிச் செவிவழிமரபாகச் சில செய்திகள் விளங்குகின்றன. ஆனால் அறுதியான வரலாறு கிடையாது. அந்தச் செய்திகளின் வாயிலாகப்பெறும் தகவல்களின்படி இவர் வள்ளுவ மரபைச்சேர்ந்தவர் என்றும் மயிலப்பூரில் வசித்தவர் என்றும் தெரிகிறது. இவருடைய மனைவியார் வாசுகி அம்மையார். கற்பியலுக்கு மிகச்சிறந்த இலக்கணமாக விளங்கியவர். வள்ளுவர் தாம் எழுதிய முப்பால் நூலை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும் முடிவில் ஒளவையாரின் துணையோடு அரங்கேற்றியதாகவும் அச்செய்திகள் வாயிலாக அறிகிறோம்.

திருவள்ளுவரை நாயனார் தேவர், தெய்வப்புலவர், பெருநாவலர், பொய்யில் புலவர் என்றும் சிறப்புப்பெயர்களால் அழைப்பர்.

பிற்காலத்தில் திருவள்ளுவர் பெயரால் வேறு சிலநூல்களை வேறு சிலர் இயற்றியுள்ளனர். அவை சித்தர் இலக்கியத்தைச் சேர்ந்தவை.

திருக்குறள் இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. கிருஸ்தவ சகாப்தத்தின் முன் பகுதியைச் சேர்ந்ததாகப் பலர் கருதுவர். பழந்தமிழ் நூல்களில் நான்கு பெரும் பகுப்புக்கள் உள்ளன.

1. எட்டுத்தொகை பத்ததுப்பாட்டு ஆகியவை அடங்கிய பதினென்மேல்கணக்கு.

2. பதினென்கீழ்க்கணக்கு.

3. ஐம்பெருங்காப்பியங்கள்

4. ஐஞ்சிறு காப்பியங்கள் ஆகியவை அவை.

அவற்றில் பதினென்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் “முப்பால்’’ என்னும் பெயரோடு இந்நூல் விளங்குகின்றது.

“அறம்;, பொருள், இன்பம்’’ ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் “முப்பால்’’ எனப் பெயர்பெற்றது. முப்பால்களாகிய இவை ஒவ்வொன்றும் “இயல்’’ என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. ஒவ்வொரு அதிகாரமும் பத்துப்பாடல்களைக் தன்னுள் அடக்கியது.

இப்பாடல்கள் அனைத்மே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வெண்பாக்களாலாகிய அக்காலத்திய முதல் நூலும் ஒரே நூலும் இதுதான்.

குறள் வெண்பாக்களால் ஆனமையால் “குறள்’’ என்றும் “திருக்குறள்’’ என்றும் இது பெயர் பெற்றது.

“பாயிரம்’’ என்னும் பகுதியுடன் முதலில் “அறத்துப்பால்’’ வருகிறது. அதிலும் முதலில் காணப்படுவது “கடவுள் வாழ்த்து’’ என்னும் அதிகாரம். தொடர்ந்து வான்சிறப்புää நீத்தார் பெருமை, அறன்வலியுறுத்தல் ஆகிய அதிகாரங்கள்.

அடுத்துவரும் இல்லறவில் என்னும் இயலில் 25 அதிகாரங்கள். அடுத்துள்ள துறவறவியலில் 13 அதிகாரங்களுடன் முதற்பாலாகிய அறத்துப்பால் பகுதி முடிவுறுகிறது.

அடுத்துவரும் பொருட்பாலில் அரசு இயல், அமைச்சு இயல், ஒழிபு இயல் ஆகிய இயல்கள் இருக்கின்றன. அரசு இயலில் 25 அதிகார்கள் உள்ளன. அமைச்சு இயலில் 32 அதிகாரங்களும் ஒழிபு இயலில் 13 அதிகாரங்களும் உள்ளன.

கடைசிப்பாலாகிய இன்பத்துப்பால் அல்லது காமத்துப்பாலில் இரண்டு இயல்கள் உள்ளன. களவியலில் 7 அதிகாரங்களும், கற்பியலில் 18 அதிகாரங்களும் உள்ளன. ஆகமொத்தம் 7 இயல்கள், 133 அதிகாரங்கள், 1330 பாடல்கள்.

திருக்குறளை மொத்தம் 12000 சொற்களில் வள்ளுவர் பாடியுள்ளார். ஆனால் இவற்றில் ஐம்பதுக்கும் குறைவான வடசொற்களே உள்ளன.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

என்று தமிழ் நெடுங்கணக்கின் முதல் எழுத்தாகிய “அ’’வில் ஆரம்பித்து 1330ம் குறளாகிய

ஊடுதல் காமத்திற்கின்பம் அதற்கின்பம்

கூடி முயங்கப் பெறின்

ஏன்று தமிழ் மொழியின் கடைசி எழுத்தாகிய “ன்’’ னுடன் முடித்திருக்கிறார்.

வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால் அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர். திருக்குறள் முப்பால் உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழிää வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்களும் அதற்குரியவை.

பழங்காலத்தில் இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ்வாய்ந்ததாக விளங்குவதும், அதிகமாகப் பயன்படுத்தப்படுவதும் பரிமேலழகர் உரைதான். தற்காலத்திலும் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் தற்சமயம் சிறப்பாகக் கருதப்படுவது திருக்குறள் முனுசாமியின் உரை.

தனிமனிதனுக்கு உரிமையானது இன்பவாழ்வு. அதற்கு துணையாக உள்ளது பொருளியல்வாழ்வு. அவற்றிற்கெல்லாம் அடிப்படையாக விளங்குவது அறவாழ்வு. மனதே எல்லாவற்றிற்கும் ஆதார நிலைக்கலன். மனத்துக்கண் மாசிலன் ஆதலே அனைத்து அறம். அறத்தால் வருவதே இன்பம். அறவழியில் நின்று பொருள் ஈட்டி அதனைக்கொண்டு இன்பவாழ்வு வாழவேண்டும். அவ்வாறு உலகமாந்தரும் இன்பமுறச்செய்யவேண்டும். பொருளியலாகிய பொதுவாழ்வுக்கும் இன்ப இயலாகிய

தனிவாழ்வுக்கும் அடிப்படை அறம்தான் என்பது திருக்குறளின் மொத்தமான நோக்கு.

உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது. இதுவரை 80 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை

மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்

மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்.

நன்றி:அருள்மிகு சிவன் கோவில்

  • 2 weeks later...

தகவலுக்கு நன்றி

  • தொடங்கியவர்

தகவலுக்கு நன்றி

:P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோபுரத்தின்ரை அழகு கிட்ட நிண்டு பாத்தால் தெரியாதாம்.அது மாதிரி திருக்குறளின்ரை அருமைபெருமையெல்லாம் எங்களைவிட உந்த வெள்ளையளுக்கு நல்லாய்த்தெரியுது. :D

முதலில உந்த அருமையான திருகுரளினை வாழ்க்கையில எப்படிக்கடைpidiக்கலாம் என்பதை நீர் முதல் வாசிச்சு கடைப்பிடிக்கப்பார்க்கிறீரோ? ஊருக்கு வாசிக்க போட்டுவிட்டுட்டு கச்சான் கடலிவியாபாரி மாதிரி திருக்குறளை மற்றவைக்கு படிப்பிக்கிறதுக்கென்டே இப்ப உந்த குமாரசுவாமி என்ற பெயரில சிலர் வெளிக்கிட்டிருக்கிறீனம். வள்ளுவன் இப்ப உயிரோட இருந்திருந்தா அதிர்ச்சியிலேயே மண்டையைப்போட்டுருவார். நல்ல காலத்துக்கு அந்தால் எழுதிவைத்துவிட்டு எப்பயோ போய்ச்சேந்திட்டுது. எங்களுக்கு இப்படியான் போலிஅசாமிகளால ஒரே தொல்லையாய் இருக்குங்கோ. :D

Edited by saivan

கோபுரத்தின்ரை அழகு கிட்ட நிண்டு பாத்தால் தெரியாதாம்.அது மாதிரி திருக்குறளின்ரை அருமைபெருமையெல்லாம் எங்களைவிட உந்த வெள்ளையளுக்கு நல்லாய்த்தெரியுது. :icon_idea:

என்னா ஒரு தத்துவம்

:P

  • 3 weeks later...

வணக்கம்.

நான் ஒரு சீன மாணவி.எனக்குத் தமிழ் மொழியிலே நிறைந்த ஆர்வம் உண்டு.நான் தமிழ் முழியை 3ஆண்டுகளாகப் படித்து விட்டேன்.

சில திறுக்குறளைப் படித்தேன்.ஆனால் நன்றாகப் படிக்கவில்லை.

இந்த கருத்துக்களத்தைக் கண்டுபிடித்து பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். :P

சீன மானவி என்று சொல்லுறீயல் வடிவா முதல் தமிழ் படிச்சாத்தான் திருக்குரள் எல்லாம் விளங்கும். எதுக்கும் குமாரசாமி தான் இங்க பெரிய வாத்தியார் அவரட்ட பிரைவட்டா பாடம் எடுக்கச்சொன்னா அவர் எடுத்துட்டு போறார். கேட்டுப்பாருங்கள். :D

அது சரி குமாரசாமி நீங்கள் ஓமென்று சொன்னா நான் திருகுரளை எளிய நடையில் எழுதி விவாதத்துக்கு விடட்டா?

ஒரு நாளைக்கு ஒரு குரள். அதுவும் பொறையுடமை என்னும் தலைப்பின் கீழ் வரும் அத்தனை குரள்களினையும் நான் எழுதி கருத்தும் எழுதிறன். இங்க யாரும் அதில எம்மட அனுபவித்தைல கன்ட உண்மைகளினையும் தொகுத்து, திருக்குறள் சொன்னது உண்மையா. நாம் வாழ்க்கையில் அதை பாவிக்காம எங்கையும் குத்தன விழுந்தோமா/ என்று கதைத்தால் இந்த திருகுரள் கள உறுப்பினர்களுக்கு மண்டையில் பேமன்ட்டா ஏறி நின்றுவிடும். பின்பு அவையள் அதை மறக்கவே முடியாது. எப்படி என் ஐடியா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.