Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொன்று குவிப்பைக் கண்டு கதறியோருக்கு ‘ஆறுதலையாவது வழங்க முடியும்’

Featured Replies

கொன்று குவிப்பைக் கண்டு கதறியோருக்கு ‘ஆறுதலையாவது வழங்க முடியும்’
 

“இளைஞர், யுவதிகள், வயதுவந்தவர்கள், குழந்தைகள் என்று, எதுவித வேறுபாடும் இன்றி பல்லாயிரக் கணக்கில் கொன்று குவிக்கப்பட்ட இந்த மண்ணில் நின்று, அந்த நிகழ்வுகளை நேரடியாகக் கண்டும் கலங்கியும் கதறியும் அனுபவித்த மக்களுக்குச் சற்று ஆறுதலையாவது வழங்க முடியும் என்ற எண்ணத்தில் இந்த அகமானது அமைக்கப்பட்டமை வரவேற்புக்குரியது” என்று, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.   

முல்லைத்தீவு, வட்டுவாகலில் நிர்மாணிக்கப்பட்ட, பிரம்ம குமாரிகள் இராஜ யோகா நிலையம் திறப்பு விழாவில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.   

இந்த நிகழ்வில், சிறப்பு விருந்தினராக, பிரம்ம குமாரிகள் இராஜ யோகா நிலையத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் இராஜயோகினி டொக்டர் நிர்மலா கஜாரியா, பிரதேச செயலாளர் குணபாலன், பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.   

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “இறுதி யுத்தம் நடைபெற்று முடிவடைந்த வட்டுவாகல் பகுதியில் இந்த விஸ்வ சாந்தி அகம் என்ற தியான மண்டப திறப்பு விழாவில் உங்கள் முன் உரையாற்றக் கிடைத்தமையையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன்.  

இளைஞர், யுவதிகள், வயதுவந்தவர்கள், குழந்தைகள் என்று எதுவித வேறுபாடும் இன்றி பல்லாயிரக் கணக்கில் கொன்று குவிக்கப்பட்ட இந்த மண்ணில் நின்று, அந்த நிகழ்வுகளை நேரடியாகக் கண்டும் கலங்கியும் கதறியும் அனுபவித்த மக்களுக்கு சற்று ஆறுதலையாவது வழங்க முடியும் என்ற எண்ணத்தில் இந்த அகமானது அமைக்கப்பட்டது வரவேற்புக்குரியது.   

பல்லாயிரம் துன்பச் சுமைகளை மனங்களில் தாங்கிக் கொண்டு நடைபிணங்களாக உலாவிக் கொண்டிருக்கின்ற எம்மக்களின் மனங்கள் சற்று அமைதி பெறவேண்டுமென்ற நல்லெண்ணத்தில் இவ்வகம் இன்று (நேற்று) திறந்து வைக்கப்படுகிறது” என்றார்.  

http://www.tamilmirror.lk/வன்னி/கொன்று-குவிப்பைக்-கண்டு-கதறியோருக்கு-ஆறுதலையாவது-வழங்க-முடியும்/72-204132

  • தொடங்கியவர்

தியானங்கள் உளவியல்மாற்றத்தை  ஏற்படுத்தும்

 

தியா­னங்­கள் உள­வி­யல் ரீதி­யான மாற்­றத்­தைத் தரும். அதன் மூலம்  பல்­லா­யி­ரம் துன்­பச் சுமை­களை மனங்­க­ளில் தாங்­கிக் கொண்டு, நடைப்­பி­ணங்­க­ளாக உலா­விக் கொண்­டி­ருக்­கும் மக்­க­ளின் மனங்­கள் சற்று அமைதி பெறும்.  இவ்­வாறு வடக்கு மாகாண முத­ல­மைச்­சா் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தாா்.

பிரம்­ம­கு­மா­ரி­கள் இரா­ஜ­யோ­கத்­தின் விஸ்வ சாந்தி அகம் நிலை­யத் திறப்பு விழா முல்­லைத்­தீவு வட்­டு­வா­க­லில் நேற்று நடை­பெற்­றது. அதில்  கலந்து கொண்டு உரை­யாற்­றும் போதே அவா் இத­னைத் தெரி­வித்­தாா்.அவா் தெரி­வித்­த­தா­வது;

தியான முறை­மை­கள் காலாதிகால­மாக இந்­திய ஆன்மி­கக் கலா­சா­ரத்­தில் இடம் பெற்று வந்­துள்­ளன. எமது சித்­தர்­க­ளும், முனி­வர்­க­ளும், யோகி­க­ளும் அவ்­வா­றான தியான முறை­மை­க­ளி­லேயே தமது உள்­ளத்­தை­யும் உணர்­வை­யும் ஒரு முகப்­ப­டுத்தி ஏகாந்த நிலை­யில் நின்று யோக நிலைக்­குச் சென்­றார்­கள்.

ஆனா­லும் அவ்­வா­றான தியான முறை­மை­கள் பாமர மக்­க­ளுக்­கும் மற்­றும் இறை­பக்­தி­யா­ளர்­க­ளுக்­கும் முறை­யாக பயிற்­று­விக்­கப்­ப­டா­மை­யால் அவர்­கள் அந்­தத் தியான முறை­மை­க­ளைக் கைக்­கொள்ள முடி­ய­வில்லை. அத­னால் தான் சம­யத்­தின் ஆழத்தை முறை­யாக அறி­யாத பலர் அது பற்றி விமர்­சிக்­கத் தலைப்­ப­டு­கின்­ற­னர்.

பிரம்ம குமா­ரி­கள் மிக­வும் கட்­டுப்­பாட்­டு­டன் கூடிய ஒரு அமைப்பு. எனி­னும் அவர்­க­ளின் அணு­கு­முறை மக்­க­ளுக்கு உகந்­தது, இல­கு­வா­னது. உங்­களை மதம் மாற்­றவோ தமது அமைப்­பில் கட்­டா­ய­மா­கச் சேர்க்­கவோ அவர்­கள் முனை­வ­தில்லை.

மாறாக மக்­க­ளின் மனக்­கி­லே­சங்­க­ளைப் போக்கி அமை­தி­யைப் பெற வழி­வ­குப்­பதே அவர்­க­ளின் குறிக்­கோள். அன்­பும் அர­வ­ணைப்­புமே அவர்­க­ளின் அன்­றா­டக் கரு­வி­கள். மென் சொற்­க­ளே­அ­வர்­க­ளின் மின்­னா­யு­தம்.
இன்­னொ­ரு­ம­தம் மாற்­றும் அமைப்பு எம்­மி­டையே வந்து விட்­டது என்று நீங்­கள் எவ­ரும் சிந்­திக்­கத் தேவை­யில்லை. அவர்­கள் மதம் மாற்­ற­வ­ர­வில்லை. மனச் சஞ்­ச­லங்­களை எப்­ப­டிக் குறைப்­பது, நீக்­கு­வது போன்ற விட­யங்­க­ளைக் கற்­றுத்­த­ரவே  வந்­துள்­ளார்­கள்.

விஸ்வ சாந்தி அகம் என்­பது மக்­க­ளுக்கு அமைதி நிலை­யைக் கொடுக்­கும் இடம் எனப் பொருள்­ப­டும்.  அத­னால் தானோ என்­னவோ இந்த நிலை­யத்தை மக்­கள் மிக­வும் குழப்­ப­ம­டைந்த வேத­னைக்­குள்­ளா­கிய வட்­டு­வா­கல் பகு­தி­யில் அமைத்­தி­ருக்­கின்­றார்­கள் என்­றாா்.

http://newuthayan.com/story/30168.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.