Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'நான் வேறு ரஜினி வேறு...' - கமல் பரபரப்புப் பேட்டி!

Featured Replies

'நான் வேறு ரஜினி வேறு...' - கமல் பரபரப்புப் பேட்டி!

பிக் பாஸ் நிகழ்ச்சி, ட்விட்டர் கருத்துகள் என்று கமல் பரபரப்பாக இயங்கிவருகிறார். தமிழக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துவரும் அவர், 'மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வருவேன்' என்று கூறினார். இதனிடையே, கடந்த வாரம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கமலைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ஊழலுக்கு எதிராக இணைந்து செயல்படப்போவதாக அவர் தெரிவித்தார். மேலும், 'தனிக்கட்சி தொடங்குவேன், முதல்வர் ஆக விரும்புகிறேன்' என்றும் கருத்து தெரிவித்து பரபரப்பைக் கிளப்பினார்.

கமல்ஹாசன்
 

இந்நிலையில், நியூஸ் 18 ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் கமல், "மாநில சுயாட்சிகுறித்து அண்ணா கோரிக்கையை முன்வைத்து, பின்னர் அந்தக் கோரிக்கையைக் கைவிட்டார். ஆனால், மாநில சுயாட்சிக்கான தேவைகள் இன்னும் இருக்கின்றன. எனக்கு, என் நாடு மிகவும் பிடிக்கும். என் வீட்டில் இருந்தும், மாநிலத்தில் இருந்தும்தான் என் நாடு தொடங்கும். வட இந்தியாவுக்கும் தென் இந்தியாவுக்கும் கண்டிப்பாக பிரிவினை உள்ளது. டெல்லிக்கு, தமிழகப் பிரச்னைகள்குறித்து தெரியாது. இதனால்தான், தேசியக் கட்சிகளால் அங்கு ஜெயிக்க முடிவதில்லை.

 

'ரஜினி ஆன்மிகவாதி. அதனால், பா.ஜ.க-வுக்கு அவர் நண்பராகலாம். ஆனால், நான் பகுத்தறிவுவாதி. எந்தக் கட்சிகளுடனும் நான் சேர மாட்டேன். அனைத்துக் கட்சிகளுமே ஊழல்கறை படிந்தவைதான். ரஜினியுடன் நான் அவ்வப்போது பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். என்னுடைய அரசியல் நிலைப்பாடுகுறித்தும் நான் அவரிடம் கூறியுள்ளேன். நான் அரசியல் கட்சி தொடங்குவது உறுதி. அடுத்த ஆண்டில் புதுக்கட்சி தொடங்குவேன்" என்று கூறியுள்ளார். 

http://www.vikatan.com/news/tamilnadu/103242-kamal-haasan-talks-about-rajinikanth.html

  • தொடங்கியவர்

அரசியல் என்பது 100 நாள் ஓடும் சினிமா அல்ல: கமல்ஹாசன் மீது தமிழக அமைச்சர் பாய்ச்சல்

 

அரசியல் என்பது 100 நாள் ஓடும் சினிமாப்படம் அல்ல, அரசியல் கட்சி தொடங்கிய நடிகர் சிவாஜி கணேசனால் எம்.எல்.ஏ.வாக கூட வர முடியவில்லை என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

 
அரசியல் என்பது 100 நாள் ஓடும் சினிமா அல்ல: கமல்ஹாசன் மீது தமிழக அமைச்சர் பாய்ச்சல்
 
சென்னை:

சமீபகாலமாக தமிழக அரசியலுக்கு எதிராக பல்வேறு கருத்துகளை நடிகர் கமல்ஹாசன் கூறி வருகிறார். நீட் தேர்வை எதிர்த்து போராடிய அரியலூர் மாணவி அனிதாவின் மறைவுக்கு பின்னர் தமிழக அரசியல் நிகழ்வுகளை மிகவும் நெருக்கமாக கவனித்து வருகிறார்.

ஓனம் பண்டிகையையொட்டி, கேரள முதல் மந்திரி பினராயி விஜயனை சந்தித்த கமல்ஹாசன், சென்னையில் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்த பின்னர், அவர் தனிக்கட்சி தொடங்குவது உறுதியாகி விட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

அதற்கேற்ப, முதல் மந்திரியாக விருப்பம் இருப்பதாக சமீபத்தில் தெரிவித்திருந்த கமல்ஹாசன், இன்னும் 100 நாட்களுக்குள் தேர்தல் நடந்தால் போட்டியிட தாயாராக இருப்பதாகவும் கூறினார். இதற்கிடையில், டெங்கு காய்ச்சலால் சென்னை மாணவன் பலியான சம்பவத்தை சுட்டிக்காட்டி, இந்த அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என தனது டுவிட்டரில் நேற்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், அரசியலை சினிமாவைப்போல் கமல்ஹாசன் நினைக்கிறார். அரசியல் என்பது 100 நாள் ஓடும் சினிமாப்படம் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
201709251720513595_1_j-kumar._L_styvpf.j
ஒருவருக்கு கூடும் கூட்டத்தை அரசியலுக்கான அளவுக்கோலாக மதிப்பிட முடியாது. கூடும் கூட்டத்தை எல்லாம் ஓட்டுகளாக மாற்றிவிட முடியாது. முதலமைச்சர் பதவி என்பது சந்தையில் வாங்கிக் கொள்ளும் பொம்மை அல்ல. நடிகர் சிவாஜி கணேசனும் அரசியல் கட்சி ஆரம்பித்தார். ஆனால், அவரால் எம்.எல்.ஏ.வாக முடியவில்லை.  

டுவிட்டரில் அவ்வப்போது கருத்து தெரிவிக்கும் கமலின் போக்கை கண்டிக்கும் வகையில் அரசியலுக்கு வர வேண்டும் என்றால் டுவிட்டரில் இருந்து பயனில்லை, மக்கள் மத்தியில் இருக்க வேண்டும் என்றும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/09/25172049/1109874/TN-minister-flays-actor-Kamal-Haasan-s-political-ambitions.vpf

  • தொடங்கியவர்

அரசியல் பிரவேசம் ரஜினிக்கு போட்டியா?- கமல் சொன்ன பதில்

 

 
KAMALHAASAN12432131f

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர ஆலோசித்துவரும் வேளையில் அவருக்கு போட்டியாக நீங்களும் அரசியலுக்கு வருகிறீர்களா என்ற கேள்விக்கு நடிகர் கமல்ஹாசன் விரிவாக விளக்கமளித்திருக்கிறார்.

நடிகர் கமல்ஹாசன் தீவிரமாக அரசியல் பாதையில் சென்றுகொண்டிருக்கும் நிலையில் நேற்று (திங்கள்கிழமை) ஒரே நாளில் பல்வேறு ஊடகங்களுக்கும் சுழல் பேட்டி அளித்தார்.

அவர் அளித்த் பேட்டிகளின் தொகுப்பு:

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர ஆலோசித்துவருவதால் நான் அரசியலுக்கு வர நினைக்கவில்லை. எனக்கு தேவை என்று நான் நினைப்பதனால்; தமிழகத்துக்கு தேவை என்று நினைப்பதனால் நான் வருகிறேன். தமிழக மக்கள் கொடுத்திருக்கும் நம்பிக்கையில் தொடர்ந்து பேசி வருகிறேன்.

ஒரு நடிகனாக மக்களை மகிழ்வித்தேன் ஓர் அரசியல்வாதியாக மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியும் என நம்புகிறேன். மக்கள் எனை விரும்புவதாகவே எனக்கு செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

அரசியலுக்கு இத்தனை நாட்களுக்குள் வருவேன் நான் எந்த கால நிர்ணயமும் செய்யவில்லை. ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு நான் அளித்த பேட்டியில் 100 நாட்களில் வருவீர்களா என்று எனக்கு முன்வைக்கப்பட்ட கேள்விக்கு அப்படி வைத்துக்கொள்ளலாம் என்றே கூறினேன்.

அரசியலில் முழுமையாக ஈடுபடும் சூழலில் சினிமாவை விட்டு விலகி விடுவேன். அதுதான் நியாயமாக இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது. இரண்டு படகுகளில் கால் வைத்துக்கொண்டு இருக்க முடியாது.

கொள்கை என்ன; குரு யார்?

அரசியல் கொள்கை குறித்தும் அரசியல் குரு குறித்தும் கேள்வி எழுப்ப்பபட்டதற்கு, "கொள்கை விஷயத்தில் அவசரப்பட முடியாது. ஊழல் ஒழிக்கப்பட வேண்டும். அது நாடெங்கிலும் பேசப்படும் பேச்சு. தமிழ்நாட்டில் அது கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. அரசியல்வாதிகளுக்கு மெத்தனம் கூடி விட்டது, பயம் போய்விட்டது. இந்த அடிப்படையில் கொள்கை குறிப்புகள் உருவாக்கிக்கொண்டு இருக்கிறோம். அரசியல்வாதிகளுக்கான கோபம் மக்களிடம் இருக்கிறது என்பதுதான் உண்மை" என்றார்.

அரசியலில் குரு யார் என்ற கேள்விக்கு, "ஒருவரை மட்டும் குறிப்பிட்டுச் சொன்னால் என்மீது கட்சி சாயம் பூசப்படும். நிஜமாக சொல்ல வேண்டும் என்றால் பலர் இருக்கிறார்கள். புதிய அரசியல்வாதிக்கு பன்முக தன்மை தேவை என்பது எனது கருத்து. கேரள முதல்வர் பினராயி விஜயன், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் ஆகியோருடனான சந்திப்பு அரசியல் பாடம் கற்பதற்காகவே என்றால் அது மிகையாகாது" எனக் கூறினார்.

சினிமாவுக்கு முழுக்கு போடுவேன்..

அரசியலில் தீவிரமாக இறங்கிய பின்னர் சினிமாவில் நடிக்க மாட்டேன். விஸ்வரூபம்-2 படத்தை முடிக்க வேண்டும். சபாஷ் நாயுடு படத்தையும் முடிக்க வேண்டும். அதை முடிக்காமல் நான் பொதுச்சேவைக்கு போனேன் என்றால் என்னை நம்பி படத்தில் காசு போட்டு இருப்பவர்களெல்லாம் ஏமாந்து விடக்கூடாது. எனவே அந்த படங்களை முடித்து விட்டுத்தான் இங்கு வருவேன். அரசியலில் முழுமையாக ஈடுபடும் சூழலில் சினிமாவை விட்டு விலகி விடுவேன். அதுதான் நியாயமாக இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது. இரண்டு படகுகளில் கால் வைத்துக்கொண்டு இருக்க முடியாது.

'நீங்கள் முதல்வரானால் முதல் பணி..'

நீங்கள் முதல்வரானால் முதல் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு, "நான் முதல்வரானால் என்று நீங்கள் சொல்லலாமே தவிர நான் சொல்லக்கூடாது. ஏனென்றால் அதுவல்ல எனது இலக்கு. மக்களுக்கான நல்ல விஷயங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். அதற்கு நான் ஏதுவாக இருக்க வேண்டும். அப்படி வரவேண்டும் என்று சொன்னால், அதை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்" எனக் கூறினார்.

எம்ஜிஆர், என்டிஆர் வழியில் வெற்றி..

"எம்ஜிஆர், என்டிஆருக்குப் பிறகு தனிக் கட்சி தொடங்கிய நடிகர்கள் சோபிக்கவில்லை என்று கூறப்படுவதை அடையாளமாக எடுத்துக்கொள்ள முடியாது. நான் எடுத்துக்கொண்டது எம்ஜிஆர், என்டிஆர் என்ற பெரிய வெற்றியாளர்களைத்தான். அந்த உதாரணத்துடன்தான் ஆரம்பிக்க வேண்டுமே தவிர தோற்றவர்களை பார்த்து எதையும் திட்டமிடக் கூடாது" என நடிகர்கள் அரசியலுக்கு வர நிலவும் எதிர்ப்பு குறித்து கூறினார்.

இவ்வாறு அரசியல் பிரவேசம் குறித்து பல்வேறு கருத்துகளையும் கமல்ஹாசன் பகிர்ந்துகொண்டார்.

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article19755828.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.