Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் மயானங்கள் : புதிய திசைகள்

Featured Replies

மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் மயானங்கள்

தேச உருவாக்கமானது  பல்வேறு அடையாளங்களைக் கொண்ட மக்கள் கூட்டின் பரிமாணங்களை தன்னகத்தே கொண்டு தான் வளர்ச்சி பெறுகிறது. ஒரு தேசத்தின் அங்கமாக இருக்கும் வெவ்வேறு மக்கள் திரளின் தனித்துவங்களும் அவர்களது அடையாளங்களும் அவர்கள் சார்ந்த தேசத்திற்குட் பட்டதாக மட்டுமே எப்போதும் பார்க்கப் படவேண்டுமென்ற ஒற்றைப் பரிமாணப் பார்வையானது அடிப்படையில் அந்த மக்களின் உரிமையை மறுக்கும் சிந்தனையே; ஒரு தேசத்தின் பன்முகத் தன்மையை மறுக்கும் இறுக்கமான போக்காகவே பார்க்கப் பட வேண்டும்.

தமிழ் தேசத்தின் அக முரண்பாடுகளைப் பற்றிப் பேசுவது அல்லது ஒடுக்கப் பட்ட மக்கள் தமது உரிமைப் போராட்டங்களை முன்னெடுப்பது தமிழ் தேசத்தை பலவீனப் படுத்தும் செயலாக பொதுப் புத்தி மட்டத்தில் தவறாகப் புரிந்து கொள்ளப் பட்ட நிலையில், அக ஒடுக்குமுறை பற்றி பேசுவோரையும் குரல் எழுப்புவோரையும் நோக்கி "தமிழன்" எனும் ஏக பரிமாணத்தை மட்டும் ஏற்கும் படி வற்புறுத்துவது ஒரு மக்கள் கூட்டம் தனது அடையாளம் என்னவென்பதை தானே தீர்மானிக்கும் உரிமையை மறுதலிப்பதாகும்.

இந்த பின்னணியில், மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ள மயானங்கள் அகற்றப்படும் வரை பல்வேறு தரப்பின் ஆதரவுடன் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினரால் பல வகைகளில் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதன் விளைவாக புத்தூர் மேற்கு கிந்துசிட்டி மயானத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளுக்கும், இறந்தவர்களின் உடல்களை குறித்த மயானத்தில் எரிப்பதற்கும் யாழ் மேல் நீதிமன்றத்தால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புத்தூர் மேற்கு கிந்துசிட்டி மயானத்தைச் சுற்றி மக்கள் குடியிருப்புகள் இருப்பதைப் போன்ற நிலை யாழ் குடா நாட்டின் ஏனைய பகுதிகளிலும் உள்ளமையைக் கருத்தில் கொண்டு இந்தப் பிரச்சனைகளுக்கான பொதுத் தீர்வை எட்ட வேண்டிய தேவை உள்ளது. மயானம் அருகே குடியிருப்புகள் என்பது வேறு வழியில்லாத விளிம்பு நிலை மக்களின் தெரிவாகவே உள்ளமையைப் புரிந்து கொண்டு இவ்விடயத்தை வெறுமனே சட்டப் பிரச்சனையாக அல்லாமல் மனிதாபிமான அடிப்படையில் அணுகுவதே தமிழ் தேசத்தின் நலனில் அக்கறை கொண்ட அனைத்து சக்திகளின் செயலாக இருக்க முடியும். மயானங்கள் நவீன மயப் படுத்தப் பட்டு மக்கள் குடியிருப்புகள் இல்லாத பகுதிகளில் அமைக்கப் படுவதன் மூலம் சுமுகமான தீர்வு சாத்தியமாகும். இந்த வகை நவீன மயானங்களைப் பயன்படுதுவதன் மூலம் தேவைக்கதிகமாக உள்ள, அரிதாக இயங்கி வரும் அல்லது கைவிடப் பட்ட  மயானங்கள் சார்ந்த நிலப் பகுதிகள் மக்கள் குடியிருப்பு நிலங்களாக மாற்றப் படலாம்.

இதற்கு மாறாக தமிழ் தலைமைகளின் பாராமுகமும் புத்தூர் மக்களின் போராட்டம் குறித்த வடமாகாண சபையின் அக்கறையற்ற போக்கும் கண்டனத்திற்குரியவை. "மயானம் முதல் வந்ததா அல்லது குடியிருப்புகள் முதல் வந்தனவா" என்ற விவாதங்களுக்குள் சிக்குண்டு போகாமல் தேச அக்கறையுடன் கூடிய மனிதாபிமான முறையிலான அணுகுமுறையே இங்கு பொருத்தமாக இருக்கும். தமிழர்களின் கல்வி, பொருளாதார வளங்கள் மட்டுமல்லாது பெருமளவிலான தமிழர் நிலங்கள் இனவாத அரசினாலும் அவர்களது பங்காளிகளாலும் திட்டமிட்ட வகையில் சூறையாடப் படும் நிலையில் தேசமாக எமது கவனம் அவ்விடயங்கள் குறித்து குவிவதை திசை திருப்பும் வகையில் பெருந்தேசிய வாதிகள் தமது கைங்காரியங்களைச் செய்வார்கள் என்ற அவதானம் எமக்குத் தேவை. 

தமிழ் தேசமானது இனவாதம், சாதிய ஒடுக்குமுறை, பிரதேசவாதம், மதவாதம் இன்னும் பல அக முரண்பாடுகளை தன்னகத்தே கொண்டிருக்க, இம்முரண்பாடுகளில் ஒன்றை அல்லது சிலவற்றை தேசிய ஒடுக்குமுறைக்கு எதிராக நிறுத்தி பெளத்த சிங்கள பெருந்தேசியத்திற்கு மறைமுகமாக வழிசமைத்து கொடுக்கும் அடையாள அரசியல் இத்தேசத்தில் அரங்கேற்றப்படுகிறது. இது தலித்தியமாக, சாதியமாக, பிரதேசவாதமாக, மதவாதமாக முன்னிறுத்தப்படுகின்றது; குறிப்பான நிகழ்வுகளை பொது உண்மையாக காட்டும் இவ்வகை கவர்ச்சி அரசியலும் சரியாக அடையாளம் காணப்பட வேண்டும்.

இந்த சூழ்நிலையில் ஆதிக்க சக்திகள்  தமிழ் தேசத்தைப் பிளவு படுத்துவதிலும் ஏற்கனவே இருக்கக் கூடிய உள் முரண்பாடுகளை மேலும் கூர்மையடையச் செய்வதிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை இனவாத அரசின் அங்கமாக இருந்து தமிழ் மக்களை அழிப்பதில் எல்லா வகையிலும் முன்னின்ற ஜேவிபி  அணிகள் கூட அதே தமிழ் மக்களின் நலனிற்காக குரல் கொடுக்கிறோம் என்று ஓடிவருவதன் பின்னணி புரிந்து கொள்ளத் தக்கதே. ஆனால் அதையே காரணமாக வைத்து கலைமதிக் கிராம மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தரப் பின்னிற்பதாகக் கூறும் தமிழ் சக்திகளின் வாதம் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. 

சாதியம் சில அரசியல் தலைமைகளின் வாக்கு வங்கியாக உள்ளமையால் அந்தக் கட்டமைப்பை அப்படியே காப்பாற்றுவதிலும் தாமே அம்மக்களின் ஏகபிரதிநிதிகள் என்று நிறுவ முயல்வதும் அந்த சக்திகளின் நடைமுறையாக உள்ளது. இந்த வகை தலைமைகளால் ஒரு தரப்பு மக்கள் மற்றைய மக்களின் நலன்களுக்கு எப்போதும் நேரெதிரானவர்கள் என்ற தோற்றப்பாடு ஏற்படுத்தப் படுகிறது. இதனை விட இனவாத அரசின் நேரடி மற்றும் மறைமுக முகவர்கள் சமூக வலைத் தளங்களிலும் ஏனைய ஊடகங்களிலும் வெவ்வேறு மக்கள் பிரிவிற்கு கொம்பு சீவிவிடும் வேலையைக் கச்சிதமாகச் செய்து வருகின்றனர். 

ஒரு தேசம் தனக்குள் இருக்கும் அக ஒடுக்குமுறைகளைக் களையாமல் தனக்குள் ஐக்கியப் படுவதென்பது சாத்தியமில்லை என்ற புரிதலுடன் தமிழ் தேசத்தில் புரையோடிப் போயிருக்கும் அனைத்து அகமுரண்பாடுகளையும் பேசு பொருளாக்குவோம். அக ஒடுக்கு முறைக்குள்ளாகும் மக்கள் மத்தியில் எழும் போராட்டங்கள் எமது சமூகத்தை அடுத்த நிலைக்கு வளர்த்துச்  செல்லும் பண்புகளைக் கொண்டிராத பட்சத்தில் அவை பேரினவாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்குள் விழக் கூடிய ஆபத்தையும் இங்கு குறித்துக் கொள்வது பொருத்தமாக இருக்கும்.

நன்றி
புதிய திசைகள்

25 - 09 -2017

  • கருத்துக்கள உறவுகள்

யேர்மனி சுற்காட் நகரில் சுடுகாடு அல்ல இடுகாட்டின் அருகிலேயே விநாயகருக்கு ஆலயம் அமைத்து வழிபாடு செய்கின்றனர். அடாத்தானது என்றாலும் ஒருவரிடம் அதிகாரம் இருக்குமேயானால் எதுவும் செய்யலாம். கடவுளும் அதற்குக் கட்டுப்பட்டுத்தான் ஆகவேண்டிய நிலையில் மனிதர்களால் என்ன செய்யமுடியும்...?? :shocked:

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.