Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போயஸ் கார்டனில் என்ன நடந்தது? ஜெயலலிதா மருத்துவ அறிக்கை விவரம்

Featured Replies

போயஸ் கார்டனில் என்ன நடந்தது? ஜெயலலிதா மருத்துவ அறிக்கை விவரம்

 
 

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சி புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள தகவலின் விவரங்கள் வருமாறு.. 

jayalalithaa
 

 

''2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி இரவு 10.15க்கு போயஸ் கார்டனில் இருந்து ஜெயலலிதா உடல்நிலை சரியில்லை என்று தொலைப்பேசி அழைப்பு வந்ததும் அப்போலோ மருத்துவமனையில் இருந்து 3 பேர் கொண்ட குழு போயஸ் கார்டன் சென்றுள்ளது. முதல் தளத்தில் இருந்த ஜெயலலிதா மயங்கிய நிலையில் படுக்கையில் இருந்துள்ளார். அவரை தட்டி எழுப்பியபோது எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. உடலில் அசைவு மட்டுமே இருந்துள்ளது. பின்னர் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அப்போது அவருக்கு சராசரியாக 120/80 ஆக இருக்க வேண்டிய ரத்த அழுத்தமானது 140/70 ஆக அதிகரிக்கரித்திருக்கிறது. 120 எம்.ஜி. ஆக இருக்க வேண்டிய சர்க்கரை அளவும் 508 எம்.ஜி என்ற அபாய நிலையில் இருந்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு மூன்று நாள்கள் முன்னதாகவே ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. ஆக்சிஜன் அளவு 100% பதில் 45% மட்டுமே இருந்திருக்கிறது'' என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

புதிய தலைமுறை தொலைக்காட்சி வெளியிட்டுள்ள தகவல்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் ஆம்புலன்ஸ் உடன் செல்வது வழக்கம். அப்படி இருக்கும்போது அவருக்கு உடல்நிலை மோசமடைந்தபோது போயஸ் இல்லத்தில் ஆம்புலன்ஸ் இல்லாதது ஏன்? ஒரு மாநில முதல்வரின் உடலில் சர்ச்சரையின் அளவு அதீத அளவு அதிகரிக்கும்வரை அவருக்கு சிகிச்சை வழங்கப்படாதது ஏன்? போன்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. 

http://www.vikatan.com/news/tamilnadu/103526-puthiya-thalaimurai-released-important-details-about-jayalalithaa-treatment.html

  • தொடங்கியவர்

அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட போது ஜெயலலிதா உடல்நிலை எப்படி இருந்தது?

 

 
jaya


சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவரது உடல்நிலை குறித்து பதிவு செய்யப்பட்ட அதிகாரப்பூர்வ ஆவணங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி, அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அன்றைய தினம் முதல், அவரது உடல்நிலை குறித்தும், டிசம்பர் 5ம் தேதி அவர் மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்ட பிறகு, அவரது மரணம் தொடர்பாகவும் பல்வேறு சந்தேகங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில், அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவரை மருத்துவர்கள் பரிசோதித்து பதிவு செய்த அதிகாரப்பூர்வ அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அதில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பது பல சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.

jaya_med2.jpg

அதாவது, ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி இரவு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவருக்கு என்னென்ன பிரச்னைகள் இருந்தன என்று அந்த ஆவணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதாவது, ஒருவருக்கு சராசரியாக இருக்க வேண்டிய  ரத்த அழுத்தம் 120/80. ஆனால், ஜெயலலிதாவுக்கு அப்போது 140/70 என்ற அளவில் இருந்துள்ளது.

ஜெயலலிதாவுக்கு வழக்கமாக இருக்க வேண்டிய இதயத் துடிப்பின் அளவு 72க்கு பதில் 88 ஆக அதிகரித்துள்ளது.

உடலில் 120 எம்.ஜி.யாக இருக்க வேண்டிய சர்க்கரை அளவு 508 என்ற அபாய அளவில் இருந்துள்ளது. திடீரென அவரது உடலில் சர்க்கரை அளவு இந்த அளவுக்கு அதிகரிக்கக் காரணம் என்ன என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.

ஜெயலலிதாவின் உடலில் ஆக்ஸிஜன் அளவு 100% பதிலாக  45 சதவீதம் மட்டுமே இருந்திருக்கிறது. அதோடு, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது, அவருக்கு நிமோனியா காய்ச்சல், ரத்த அழுத்தம், தைராய்டு, சரக்கரை அதிகரிப்பு போன்ற பிரச்னைகளும் இருந்துள்ளன என்று அந்த மருத்துவ ஆவணத்தில் பதிவாகியுள்ளது.

jaya_med.jpg

http://www.dinamani.com/tamilnadu/2017/sep/28/அப்பல்லோவில்-அனுமதிக்கப்பட்ட-போது-ஜெயலலிதா-உடல்நிலை-எப்படி-இருந்தது-2781313.html

  • தொடங்கியவர்

ஜெயலலிதாவின் அப்போலோ வீடியோவும்... விடைதெரியா சரச்சைகளும்!

 
 

ஜெயலலிதா

ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அப்போலோ நிர்வாகத்தின் சார்பில் எந்த வீடியோவும் எடுக்கப்படவில்லை. அவர் சிகிச்சை பெற்ற அறையிலும் சிசிடிவி கேமரா பொறுத்தவில்லை” என அப்போலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மறைந்து பத்து மாதங்கள் கழித்து இப்போது வீடியோ வடிவில் அவர் மரணம் குறித்த சர்ச்சை கிளம்பியுள்ளது.

 

ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட இரண்டு தினங்களிலே அவர் வீட்டிற்கு அனுப்படுவார் என்ற சொல்லபட்டது. அதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது தொடர்பான படங்கள் குறித்த பேச்சு அப்போது எழவில்லை. ஆனால், நாட்கள் செல்ல செல்ல ஜெயலலிதாவின் நிலை என்ன என்று பலதரப்பிலும் கேள்வி எழுந்தது. ஆளுநர், ராகுல் காந்தி, என பலரும் மருத்துவமனைக்கு வந்தாலும் ஜெயலலிதாவினை பார்க்க முடியாத நிலை இருந்தது. அப்போதுதான் ஜெயலலிதாவின் புகைப்படத்தையாவது வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. ஆனால், அப்போது அதைபற்றி அலட்டிக்கொள்ளவே இல்லை சசிகலா குடும்பத்தினர். 

மேலும், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட இரவு நேரத்தில் அப்போலோ மருத்துவமனையின் சிசிடிவி.கேமராக்களும் செயல் இழக்க செய்யப்பட்டதாக குற்றசாட்டு எழுந்தது. அதேநேரம் அ.தி.முக. வின் செய்தித்தொடர்பாளர்கள் அனைவருமே ஜெயலலிதா உண்கிறார் உறங்கினார் இட்லி சாப்பிட்டார் என்பதாக முரண்பாடான பேட்டிகளை அளித்துவந்தனர். ஜெயலலிதா மரணம் வரை நீரு பூத்த நெருப்பாக இருந்த இந்த விவகாரம் அவர் மரணத்திற்கு பிறகு உசச்திற்கு சென்றது. குறிப்பாக பி.ஹெச்.பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்து இந்த விவகாரம் பற்றி வெளிப்படையாக பேசினார். பன்னீர் தீடீர் என சசிகலாவிற்கு எதிராக போர்க்கொடி துாக்கியபோதுதான் யாரையும் ஜெயலலிதாவை பார்க்கவிடவில்லை என்று கூறி அதிரவைத்தார்.

அப்போதும் தமிழக அமைச்சர்கள் அமைதியாகவே இருந்தார்கள். ஆனால், பத்து மாதம் கழித்து இப்போது திண்டுக்கல் சீனிவாசன் “யாருமே ஜெயலலிதாவைப் பார்க்கவில்லை. இட்லி சாப்பிடுகிறார் என்று சொன்னதெல்லாம் பொய்” என்று போட்டு உடைக்க, ஜெயலலிதாவின் மரணம் பற்றிய விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. 

ஜெயலலிதா

ஜெயலலிதாவின் வீடியோ தங்களிடம் இருக்கிறது எனவும் அதை தக்கநேரத்தில் வெளியிடுவோம் என்றும் முதலில் சொன்னது திவாகரன் மகன் ஜெய்ஆனந்த். ஜெயலலிதாவின் மரணம் குறித்து சரச்சை வெளியான ஆரம்பத்தில் இதை தெரிவித்தார். பன்னீர்செல்வத்தின் புகாருக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் ஜெய் ஆன்ந்த் இந்த பதிலை தெரிவித்தார். அதன்பிறகு ஜெயலலிதா பற்றி வீடியோ விவகாரம் ஓய்ந்திருந்த நிலையில், விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு செய்த பிறகு இப்போது வில்லங்கமாகி வருகிறது.

தினகரன் “ஜெயலலிதா டி.வி. பார்க்கும் காட்சியை சின்னம்மா வீடியோவாக எடுத்துள்ளார். அதை விசாரணை ஆணையத்திடம் கொடுப்போம்” என்று சொல்லியுள்ளார். அதன் தொடர்ச்சியாகத்தான் இது குறித்து விளக்கம் அளிக்கும் விதமாக அப்போலோ மருத்துவமனை குழுமங்களின் தலைவர் பிரதாப் சி.ரெட்டி “ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையில் சிசிடிவி கேமிரா ஏதும் பொறுத்தவில்லை” என்று கூறியுள்ளார்.

உண்மையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது வீடியோ எடுக்கப்பட்டதா என்ற கேள்விக்கு முழுமையான விடை இதுவரை கிடைக்கவில்லை. ஆனால், அப்போலோவில் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது அந்த அறைக்குள் சென்று வரும் உரிமை சசிகலாவிற்கு மட்டுமே இருந்தது. ஜெயலலிதா இருந்த அறையின் அருகே இரண்டு சோபாக்கள் போடப்பட்டு இருந்தன. ஒரு டீபாய் ஒன்றும் இருந்துள்ளது. சசிகலா மருத்துவமனையிலேயே இருந்த நேரத்தில் அவர் கையில் இரண்டு செல்போன்களும், ஒரு டேப்லட்டும் இருந்துள்ளது.  சசிகலா அதில் ஜெயலலிதாவை வீடியோ எடுத்திருக்க வாய்ப்புகள் அதிகம். அதே நேரம் மருத்துமவனையில் ஜெயலலிதா சேர்க்கப்பட்டு ஒருமாதத்தில் அவர் தோற்றத்தில் பல்வேறு மாற்றங்கள் இருந்ததை அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தரப்பிலிருந்தே சொல்லபட்டது. இதுகுறித்து சசிகலாவிற்கு நெருக்கமான வட்டாரங்களில் பேசியபோது “ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது சில படங்கள் எடுக்கப்பட்டது உண்மை. அது சசிகலா குடும்பத்தில் உள்ள முக்கியமான ஒருவரிடம் உள்ளது. சசிகலாவின் ஐபோனில்தான் இந்த படங்கள் எடுக்கபட்டது” என்று சொல்கிறார்கள்.

 

ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்கள் நீண்டுகொண்டே செல்கின்றன. விசாரணை ஆணையமாவது இதை மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும்.

http://www.vikatan.com/news/tamilnadu/103532-jayalalithaas-apollo-video-raises-issues-in-tn-politics.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.