Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுமத்ராவில் பயங்கர பூகம்பம்; பலர் பலி சிங்கப்பூர், மலேசியாவிலும் நிலநடுக்கம்

Featured Replies

http://earthquake.usgs.gov/eqcenter/recent.../us2007zpah.php

நடுக்கம் மலேசியா வரை உணரப்பட்டதாம்.

http://earthquake.usgs.gov/eqcenter/recent.../us2007zpal.php

after shocks உம் உணரப்பட்டுள்ளது.

Edited by kurukaalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆபத்தில்லை என்றபடியால்தான் இந்த செய்தியை நான் இங்கு இணைக்கவிலை. :o:o:unsure::o:o

ஆபத்தில்லை என்றபடியால்தான் இந்த செய்தியை நான் இங்கு இணைக்கவிலை. :o:o:unsure::o:o

சுனாமிய விட மோசமாஅனவன் உம்மலைதன் முதலில் அடக்கனும் :o

  • கருத்துக்கள உறவுகள்

சுமத்ராவில் பயங்கர பூகம்பம்; பலர் பலி சிங்கப்பூர், மலேசியாவிலும் நிலநடுக்கம்

மார்ச் 06, 2007

சுமத்ரா: இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் இன்று காலை பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேசியாவில் ஏற்பட்ட பூகம்பத்திற்குப் பலர் பலியாகி விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று காலை பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6.3 ஆக இருந்தது. இதில் பல கட்டடங்கள், வீடுகள் இடிந்து விட்டன. பலர் உயி>ழந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

கட்டட இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க ராணுவமும், காவல்துறையும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல மலேசியா, சிங்கப்பூரிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் பூகம்பம் ஏற்பட்ட அதே நேரத்தில் சிங்கப்பூர், மலேசியாவிலும் பூகம்பம் ஏற்பட்டது.

சிங்கப்பூரிலுள்ள உயரமான சில கட்டிடங்கள் லேசாக ஆடியதாக கட்டங்களில் இருந்தவர்கள் தெரிவித்தனர். சிங்கப்பூரைச் சுற்றிலும் உள்ள தீவுகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

இதுகுறித்துசிங்கப்பூர் பாதுகாப்பு துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பாதுகாப்புத் துறை அலுவலக கட்டிடத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறினார்.

கட்டடங்கள் ஆடியதால் பலர் பீதியடைந்து மயக்கமடைந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் சிங்கப்பூர், மலேசியாவில் உயிரிழப்பு ஏதும் இருப்பதாக தகவல் இல்லை.

சிங்கப்பூர் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல்கள் நிலநடுக்கம் காரணமாக ஆடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://thatstamil.oneindia.in/

இதே செய்தி தழிழீழம் செய்திகள் இணைக்கப்பட்டதால் கவனிக்கத் தவறிவிட்டேன்

இந்தோனேஷியாவை துரத்தும் நிலநடுக்கம் : நுõற்றுக்கணக்கான கட்டிடங்கள் சாய்ந்தன

ஜகார்ட்டா: இந்தோனேஷியாவை தொடர்ப்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்தோனேஷியாவில் கடந்த சில ஆண்டுகளாக நில நடுக்கம் ஏற்பட்டு வருகிறது. நேற்று முன்தினம், நேற்று லேசான அளவில் நடுக்கம் இருந்தது. இன்று ( 6 ம் தேதி ) காலை நில நடுக்கம் இருந்தது. ரிக்டர் அளவு 6. 3 ஆக இருந்தது. 5 ரிக்டர் அளவுக்கு மேல் போனால் பாதிப்பு கூடுதலாக இருக்கும் என்பது புவியியல் வல்லுனர்கள் கருத்து . இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 5 பேர் இறந்து போனதாக முதல்கட்ட தகவல் தெரிவிக்கிறது. நுõற்றுக்கணக்கான கட்டிடங்கள் சாய்ந்தன. இதன் எதிரொலியாக மலேசியா , சிங்கப்பூரிலும் லேசான நடுக்கம் ஏற்பட்டது. இங்கு பெரும் சேதம் ஏதும் இல்லை.

தினமலர்.

Edited by கறுப்பி

  • கருத்துக்கள உறவுகள்

இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்: 30 பேர் பலி

ஜகார்தா, மார்ச். 6-

இந்தோனேசியா நாட்டை கடந்த 3 ஆண்டுகளாக அடிக்கடி நிலநடுக்கம் தாக்கி வருகிறது.

2004ல் மிகப் பயங்கர நிலநடுக்கத்தால் சுனாமி பேரலைகள் உருவாகி சுமார் 1லட்சத்து30ஆயிரம் பேர் உயிரிழந்தனர். கடந்த ஆண்டும் அந்த நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு 500பேர் செத்தனர்.

நில அதிர்வுகளுக்கு மத்தி யில் அடிக்கடி அச்சத்தின் பிடியில் சிக்கி தவிக்கும் இந்தோனேசிய மக்களை இன்று காலை மீண்டும் ஒரு வலுவான நிலநடுக்கம் தாக்கியது. அந்த நில நடுக்கம் இந் தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள வடக்கு மாகாண தலைநகர் பதங் அருகில் மையம் கொண்டிருந்தது. அந்த நாட்டு நேரப்படி காலை 10.49 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 6.3 என்ற கணக்கில் அது பதிவாகி இருந்தது. மிக வலுவான இந்த நில நடுக்கத்தால் தலை நகர் பதங் குலுங்கியது. ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.

சுமத்ரா தீவை புரட்டிப்போடும் வகையில் இந்த நிலநடுக்கம் இருந்ததாக உணரப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளில் இருந்தும் அலுவலகங்களில் இருந்தும் அலறியடித்தப்படி வெளியில் ஓடி வந்தனர். தெருக்களில் திரண்ட மக்கள் பதட்டத்துடன் நடுங்கியபடி நின்றனர்.

இதற்கிடையே நிலநடுக் கத்தால் சுனாமி பேரலைகள் தாக்ககூடும் என்ற பீதி பர வியது. இதனால் மக்கள் உயரமான பகுதிகளுக்கு படை யெடுத்தனர். மக்கள் குடும்பம், குடும்பமாக பதங் நகரை விட்டு வெளியேறியதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஒரு பக்கம் மக்கள் ஓட்டம் பிடித்துக்கொண்டிருந்த நிலையில் மற்றொரு பக்கம் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்கும் பணி நடந்தது. நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயங்களுடன் மீட்கப் பட்டனர்.

மருத்துவமனைகளில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சுமார் 1 மணி நேரம் கழித்து பதங் நகர் அருகே மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுமத்ரா தீவு மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இன்று அடுத்தடுத்து ஏற்பட்ட 2 நிலநடுக்கமும் பதங் நகர் அருகே மையம் கொண்டிருந்ததால் பதங் நகரம் மிக கடுமையாக பாதிக் கப்பட்டது. ஏராளமான கட்டிடங்கள் முழுமையாக நொறுங்கி விட்டன. அதன் இடிபாடுகளுக்குள் சிக்கி பலர் செத்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

பதங் நகர் அருகில் உள்ள பதுசங்கர்நகரில்தான் நிலநடுக்கத்தின் மையப் புள்ளி இருந்தது. அந்த நகரில் நில நடுக்கத்துக்கு 30 பேர் பலியானதாக தெரிய வந்துள்ளது. உயிரிழப்புமேலும் அதிகமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பதங், பதுசங்கர் நகர இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் காயம் அடைந்தவர்கள் கூட்டம் அலை மோதுகிறது.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. பதங் நகர மருத்துவமனைகளுக்கு மற்ற பகுதிகளில் இருந்து டாக்டர்கள் விரைந்துள்ளனர்.

மீட்பு பணியில் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுனாமி தாக்காது என்று இந்தோனேசியா அறிவித்த பிறகே சுமத்ரா தீவு மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

சுமத்ரா தீவில் உருவான நிலநடுக்கம் 420 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலேசியா மற்றும் சிங்கப்பூரிலும் உண ரப்பட்டது. சிங்கப்பூரில் உள்ள உயரமான கட்டிடங்கள் பலதடவை குலுங்கின. சில கட்டிடங்கள் அங்கும் இங்கு மாக தொட்டில் போல ஆடின.

இதனால் சிங்கப்பூர், மலேசியாவில் மக்களிடம் பதட்டம் ஏற்பட்டது. வீடு, கட்டி டங்களில் இருந்து வெளியேறி தெருக்களில் நின்றனர்.

இந்த நில அதிர்வு காரணமாக சிங்கப்பூர், மலேசியாவில் எந்தவித பாதிப்பும் ஏற்பட வில்லை. சுமார் 10 நிமிடங்களில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள்.

மாலைமலர்

  • கருத்துக்கள உறவுகள்
fpn06rs0.jpg
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்திகளை உடனுக்குடன் தந்துகொண்டிருக்கும் திருமதி: கறுப்பி அவர்களுக்கு நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.