Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு மாகாண சபை - ஓர் பார்வை

Featured Replies

இலங்கை : கடந்த ஐந்து ஆண்டுகளில் கிழக்கு மாகாண சபை - ஓர் பார்வை

 

இலங்கையில் கிழக்கு மாகாண சபையின் 5 ஆண்டு பதவிக்காலம் சனிக்கிழமை நள்ளிரவுடன் முடிவுக்கு வந்த நிலையில் சபை உறுப்பினர்களில் ஓருவரான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் இரண்டு ஆண்டுகளை சிறையிலே கழித்துள்ளார்.

இலங்கை : கிழக்கு மாகாண சபை கடந்த ஐந்து ஆண்டுகளில் - ஓரு பார்வை

தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான குற்றச்சாட்டின் பேரிலே கைதாகி நீதிமன்ற உத்தரவின் பேரில் மட்டக்களப்பு சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண சபையின் முதலாவது முதலமைச்சர் என்ற அடையாளத்தை பெற்றுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தன், 2015-ஆம் ஆண்டு அக்டோபர் 11-ஆம் தேதியன்று குற்றப்புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இவர் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் சட்ட மா அதிபதியினால் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இவருக்கு மாகாண சபை அமர்வுகளில் கலந்து கொள்ள நீதிமன்றம் அனுமதியளித்திருந்தது. அமர்வு நடைபெறும் நாட்களில் சிறை அதிகாரிகளினால் அழைத்து வரப்படும் இவர் அமர்வு முடிந்த பின்னர் மீண்டும் அழைத்து செல்லப்படுவார்.

இறுதியாக கடந்த திங்கட்கிழமை அமர்வில் சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டார். வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதி அமர்வில் கலந்து கொள்ளவில்லை.

2012ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ஆம் தேதி இறுதியாக நடைபெற்ற கிழக்கு மாகாண சபை தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 14 உறுப்பினர்களை பெற்றிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி 7 உறுப்பினர்களை கொண்டிருந்த ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸையும் இணைத்து ஆட்சியை அமைத்துக் கொண்டது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு -11 பேர் , ஐக்கிய தேசிய கட்சி - 4 பேர் தேசிய சுதந்திர முன்னனி - ஒருவர் என்ற எண்ணிக்கையில் ஏனையோர் தேர்வாகியிருந்தனர்.மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 37 ஆகும்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியை சேர்ந்த நஜீப் ஏ.மஜீத் முதலமைச்சரானார். 5 பேர் கொண்ட அமைச்சர்கள் வாரியத்தில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை இருவர் உள்ளிட்ட நான்கு முஸ்லிம்களும் ஓரு சிங்களவரும் இடம்பெற்றிருந்தனர்.

இவ்வேளையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் தலைமை பொறுப்பில் இருந்தார்.

இலங்கை : கிழக்கு மாகாண சபை கடந்த ஐந்து ஆண்டுகளில் - ஓரு பார்வை

ஐக்கிய மக்கள் சதந்திர முன்னனி சார்பில் முன்னாள் முதலமைச்சரான சிவநேசதுரை சந்திகாந்தன் உள்பட இரு தமிழர்கள் தேர்வாகியிருந்தாலும் தமிழர்களுக்கு அதில் இடமளிக்கப்படவில்லை .

2015-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்தார். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானார் . இதனையடுத்து மத்திய அரசில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைமைப் பொறுப்பும் மைத்திரிபால சிறிசேனவிடம் மாறியது.

அதே ஆண்டு ஏப்ரல் மாதம் கிழக்கு மாகாண சபை ஆட்சியிலும் மாற்றம் ஏற்பட்டது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி , ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் , தமிழ் தேசிய கூட்டமைப்பு , ஐக்கிய தேசிய கட்சி ஆகியன இணைந்ததாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மாகாண முதலமைச்சராக ஹாபிஸ் நசீர் அகமட் தேர்வானார்.

முதலமைச்சர் உட்பட ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த இருவர் ( முஸ்லிம்கள் ) தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த இருவர் ( தமிழர்கள் ) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியை சேர்ந்த ஒருவர் ( சிங்களவர்) என அமைச்சர்கள் வாரியம் மாற்றியமைக்கப்பட்டது.

இரு தமிழர்களுக்கு அதில் இடமளிக்கப்பட்ட நிலையில் முஸ்லிம் அமைச்சர்களின் எண்ணிக்கை 2 ஆக குறைந்தது. ஏற்கனவே முதலமைச்சராகவிருந்த நஜீப் ஏ. மஜித் , அமைச்சராகவிருந்த எம்.எஸ் உதுமாலெப்பை ஆகியோருக்கு அதில் இடமளிக்கப்படவில்லை.

கிழக்கு மாகாண சபையின் முதலாவது தேர்தலிலே தெரிவாகி முதலாவது பெண் உறுப்பினர் என்ற பெருமையை பெற்றவர் ஆரியவதி கலப்பதி. கலைக்கப்பட்ட மாகாண சபையின் முதல் பகுதியில் முதலாவது பெண் அவைத் தலைவர் என்ற அடையாளத்தை பெற்றிருந்தார். 2015ல் இடம் பெற்ற அமைச்சர்கள் வாரிய மாற்றத்தின் போது முதலாவது பெண் அமைச்சரானார்

மாகாண ஆளும் தரப்பில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக எதிர்க்கட்சியிலும் மாற்றம் எற்பட்டது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் அமைச்சர் எம்.எஸ். உதுமா லெப்பை உட்பட சிலர் தனித்து இயங்க முடிவு செய்து எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து கொண்டனர்.

எதிர்க்கட்சி தலைவராகவிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினரான சி. தண்டாயுதபாணி அமைச்சரான நிலையில் ஏற்கனவே அமைச்சராகவிருந்த எம்.எஸ். உதுமாலெப்பை எதிர்க்கட்சி தலைவரானார்.

2012-ஆம் ஆண்டு கிழக்கு மாகாண தேர்தலில் தேர்வான உறுப்பினர்களில் 10ற்கும் மேற்பட்டவர்கள் 2015ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிட்டனர். விமலவீர திஸாநாயக்கா , எம்.ஐ.எம். மன்சூர் , தயா கமகே ,இம்ரான் மஹ்றூப் ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்வானர். இவர்களில் தயா கமமே அமைச்சராகவும் பதவி வகிக்கின்றார்.

இலங்கை : கிழக்கு மாகாண சபை கடந்த ஐந்து ஆண்டுகளில் - ஓரு பார்வை

சனிக்கிழமை நள்ளிரவுடன் பதவிக் காலம் முடிவடைந்த கிழக்கு மாகாண சபையின் 86 கூட்டத் தொடர்கள் இதுவரையில் நடைபெற்றுள்ளன. குறிப்பாக மாதத்தில் இரு நாட்கள் தொடர்ச்சியான அமர்வு என நிகழ்ச்சி நிரலில் கூறப்பட்டிருந்தாலும் அநேகமான ஒரு நாளுடன் அமர்வு முடிவடைந்து விடுகின்றது.

அரசியலமைப்பு 13-ஆவது திருத்தத்தின் கீழ் சபையொன்றின் பதவிக் காலம் 5 ஆண்டுகளாகும். முதலாவது கூட்டம் நடைபெற்ற நாளிலிருந்து அது கணக்கிடப்படுகின்றது.

மாகாண சபையின் முதலாவது கூட்டம் 2012 அக்டோபர் முதலாம் தேதி நடைபெற்ற நிலையில் சனிக்கிழமை நள்ளிரவுடன் கிழக்கு மாகாண சபை கலைந்தது.. அடுத்த சபை கூடும் வரை ஆளுநரின் கீழ் நிர்வாகம் இருக்கும்.

மாகாண சபை கலைந்தாலும் அரசியலமைப்பு 13-ஆவது திருத்தம் பிரகாரம் அடுத்த அடுத்த சபை அமையும் வரை அவைத் தலைவர் சந்திரதாஸ கலப்பதி மட்டும் தொடர்ந்து பதவியில் இருப்பார்.

http://www.bbc.com/tamil/sri-lanka-41457573

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நவீனன். இந்த வருடம் யாழில் வாசித்த முக்கியமான பதிவுகளில் ஒன்று. எனக்கும் பயனுள்ளதாக அமைந்தது. நன்றி

  • தொடங்கியவர்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.