Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயிர் ஆபத்தையும் எதிர்நோக்கியுள்ள ஈழ அகதிகள்

Featured Replies

உயிர் ஆபத்தையும் எதிர்நோக்கியுள்ள ஈழ அகதிகள்

 

ஐக்கிய நாடுகள் சபையினால் அகதி அந்தஸ்து ஏற்றுக்கொள்ளப்பட்டு தம்மை மற்றுமொரு நாட்டில் குடியேற்றுவதாக உறுதியளிக்கப்பட்டுள்ள போதிலும் வேறு நாடுகளில் குடியேற்றப்படாது தாம் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுவதாக இந்தோனேசியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகள் கவலை வெளியிட்டுள்ளனர். 

இதனால் இறுதி கட்ட யுத்தத்தில் காயமடைந்தவர்கள் உரிய மருத்துவ சிகிச்சைகள் இன்றி உயிர் ஆபத்தையும் எதிர்நோக்கியுள்ளதாக இந்தோனேசிய அகதிகள் தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர். 

இறுதிக்கட்ட யுத்தத்தின் போதும், அதன் பின்னரும் உயிர் அச்சுறுத்தல் காரணமாக ஸ்ரீலங்காவை விட்டு வெளியேறிய முன்னாள் போராளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பலர் ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொண்டு அவுஸ்ரேலியா சென்ற நிலையில் இந்தோனேசிய கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டு அங்குள்ள அகதிகள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

உயிர் ஆபத்தையும் எதிர்நோக்கியுள்ள ஈழ அகதிகள்

இதற்கமைய இந்தோனேஷியாவின் வட சுமத்திரா மாகாணத்தின் தலைநகரமான மெடானில் உள்ள அகதிகள் தடுப்பு முகாமில் 300ற்கும் மேற்பட்ட ஈழத் தமிழ் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களால் மீண்டும் ஸ்ரீலங்கா திரும்ப முடியாது என்பதை உறுதிப்படுத்தி அவர்கள் அனைவரும் அகதி அந்தஸ்த்து பெறுவதற்கு தகுதியானவர்கள் என்பதை ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் உறுதிப்படுத்தியும் உள்ளது.

எனினும் தாம் தமிழர் என்ற காரணத்திற்காக அகதி அந்தஸ்து வழங்கப்பட்ட தம்மை வேறு நாடுகளுக்கு அனுப்பி வைக்க இந்தோனேசிய அரசாங்கம் மறுப்பதாக ஈழத் தமிழ் அகதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

ஆனால் தம்மைப் போன்று தஞ்சம்கோரி படகுப் பயணத்தை மேற்கொண்ட நிலையில் இந்தோனேசிய கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட ஏனைய நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் அகதிகளை விரைவாக இந்தோனேசிய அரசாங்கம் வெளி நாடுகளில் குடியமர்த்த நடவடிக்கை மேற்கொள்வதாகவும் ஈழத் தமிழ் அகதிகள் சுட்டிக்காட்டுகின்றார்.

உயிர் ஆபத்தையும் எதிர்நோக்கியுள்ள ஈழ அகதிகள்

அதேவேளை. 5 ஆறு வருடங்களாக அனாதரவான நிலையில் தாம் நிர்கதியாகியுள்ளமையினால் தமது குடும்பங்கள் சிதைவடைந்துள்ளதாகவும் ஈழத் தமிழ் அகதிகள் கவலைத் தெரிவிக்கின்றனர்.

 இறுதிக்கட்ட யுத்தத்தில் படுகாயமடைந்த பலரும் இந்தோனேசிய அரசினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகள் மத்தியில் இருக்கின்றனர்.

அரசியல் தஞ்சம் கோரி பல வருடங்களுக்கு முன்னதாக நாட்டை விட்டு வெளியேறிய தமக்கு அகதி அந்தஸ்த்து ஏற்றுக்கொள்ளப்பட்டும் தம்மை வேறு நாடுகளில் குடியேற்றாததன் காரணமாக உரிய சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடியாததால் தமது எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் இறுதிக்கட்ட போரின் போது காயமடைந்த ஈழத் தமிழ் அகதியான அசோகராசா ரஞ்சித் தெரிவிக்கின்றார்.

உயிர் ஆபத்தையும் எதிர்நோக்கியுள்ள ஈழ அகதிகள்

இதேவேளை இறுதிக்கட்ட போரின் போது படுகாயமடைந்த நிலையில் நாட்டை விட்டு வெளியேறி அரசியல் தஞசம் கோரும் நோக்கில் ஆபத்தானப் படகுப் பயணத்தை மேற்கொண்ட நிலையில் இந்தோனேஸிய கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த ஈழத் தமிழ் அகதியொருவர் உரிய சிகிச்சைகள் இன்றி கடந்த இரண்டாம் திகதி உயிரிழந்திருந்தார்.

இந்தோனேசியத் தலைநகர் ஜகர்தாவிலுள்ள அகதிகள் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் மாலதி படையணியின் முன்னாள் போராளியான சந்தியா என்றழைக்கப்படும் ரமணன் சியாமலா என்பவரே உரிய சிகிச்சைகள் இன்றி பரிதாபகரமாக உயிரிழந்திருந்தார்.

உயிர் ஆபத்தையும் எதிர்நோக்கியுள்ள ஈழ அகதிகள்

இந்த நிலை இறுதிக்கட்ட போரின் போது படுகாயமடைந்து உரிய சிகிச்சைகள் இன்றி இந்தோனேசிய அகதிகள் தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஏனைய ஈழத் தமிழ் அகதிகளுக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என தெரிவித்துள்ள ஈழத் தமிழ் அகதிகள், ஐ.நா வினால் அகதி அந்தஸ்த்து ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள தம்மை வேறு நாடுகளுக்கு உடனடியாக மாற்றி உரிய சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள அனுமதிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

https://news.ibctamil.com/ta/politics/Eelam-refugees-life-expectancy-in-Indonesia

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

இந்தோனிஷிய முகாம்களில் தவிக்கும் ஈழத்தமிழர்கள்- உதவி வழக்குமாறு அவலக் குரல்

 

ஈழத் தமிழர் என்ற ஒரே காரணத்தினால், இந்தோனிஷியாவின் மிலான் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் அகதிகள் பெரும் துயரங்களை எதிர்நோக்கி வருவதாக ஐ.பி.சி.தமிழ் செய்திகளிடம் அழுது புலம்பியுள்ளனர்.

ஐந்து வருடங்களுக்கும் மேலாக எந்தவிதமான உதவிகள் இல்லாமலும் கவனிப்பார் இன்றியும் தமது பிள்ளைகளுடன் தங்கள் வாழ்க்கையை தொலைத்து விட்டதாகவும் அவர்கள் கண்ணீர்மல்க கூறுகின்றனர். நோய்கள் ஏற்பட்டால் சிகிச்சைகள் கூட மறுக்கப்படுவதாக அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்தோனிஷிய முகாம்களில் தவிக்கும் ஈழத்தமிழர்கள்- உதவி வழக்குமாறு அவலக் குரல்

ஏனைய நாடுகளைச் சேர்ந்த அகதிகள், மேற்குலக நாடுகளில், ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளினால் குடியமர்த்தப்படுகின்றனர். ஆனால் ஈழத் தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக தங்களை தொடர்ந்தும் அடைத்து வைத்திருப்பதாகவும் அவர்கள் வேதனையுடன் முறையிட்டுள்ளனர்.

பலர் தாயகத்தில் தங்கள் குடும்பங்களை விட்டு தனியாக வந்துள்ளனர். அவர்கள் எந்தவிதமான தொடர்புகளும் இன்றி தவிக்கின்றனர். தங்களில் பலருக்கு மன நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்றும் வேறு சிலர் நடைப்பிணமாக திரிவதாகவும் கூறி அவர்கள் அழுது புலம்புகின்றனர்.

முதல் இரண்டு வருடங்கள் கைதிளுடன் சேர்த்து, விசேட முகாம் ஒன்றில் அடைத்து வைத்திருக்கப்பட்டதாகவும் பின்னர் அகதி அந்தஸ்த்து வழங்கப்பட்டு வெளியில் உள்ள சிறப்பு முகாம் ஒன்றில் முன்று ஆண்டுகள் தங்கவைக்கப்பட்டு சித்தரவதைக்கு உள்ளாகுவதாகவும் அவாகள் கண்ணீர்மல்க கூறுகின்றனர்.

இந்தோனிஷிய முகாம்களில் தவிக்கும் ஈழத்தமிழர்கள்- உதவி வழக்குமாறு அவலக் குரல்

ஈழத் தமிழர்களில் பலருக்கு ஐ.நா அதிகாரிகளினால் அகதி அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கும் சிகிச்சைகள் கூட மறுக்கப்படுகின்றன. பலர் காயங்களுடன் எந்தவிதமான சிகிச்சைகளும் இன்றி அவதிப்படுகின்றனர்.
அவர்கள் தாயகத்துக்குக் கூட திரும்ப முடியாத நிலையில் உள்ளனர்.

தங்களுக்கு அகதி அந்தஸ்த்து வழங்குமாறு வலியுறுத்தி அவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தியபோது, மாற்று நடவடிக்கை எடுப்பதாக ஐ.நா அதிகாரிகள் உறுதியளித்திருந்தனர். ஆனால் இதுவரையும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. ஆகவே தற்போது கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் தாங்கள் ஈடுபட்டுள்ளதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்தோனிஷிய முகாம்களில் தவிக்கும் ஈழத்தமிழர்கள்- உதவி வழக்குமாறு அவலக் குரல்

குறிப்பாக அகதி அந்தஸ்த்து வழங்கப்பட்டவர்களுக்கு வேறு நாடுகளில் தஞ்சமளிக்க வேண்டும் எனவும் அகதி அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்டவர்களுக்கும் வேறு நாடுகளில் குடியமர அனுமதிக்குமாறு வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் ஐ.பி.சி.தமிழ் செய்திகளிடம் தெரிவித்துள்ளனர்.

தங்களின் அவல வாழக்கை தொடர்பாக கவணம் செலுத்தி, தங்கள் எதிர்கால வாழ்க்கையில் ஒளியேற்றுமாறு அவர்கள் புலம்பெயர் தமிழர்களிடமும் உருக்கமான வேண்டு கோள் விடுத்துள்ளனர். சேறு சகதிகள் நிறைந்த, மலசல கூட வசதிகள் அழுக்காக உள்ள முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் ஐ.பி.சி.தமிழ் செய்திகளுக்கு வேதனைடன் கூறுகின்றனர்.

மனித சமூகம் இருக்க முடியாத இடத்தில், சுமார் ஐந்து ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்த அகதிகள் தாயகத்தில் இருந்து படகுகள் மூலம் சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தோனிஷிய முகாம்களில் தவிக்கும் ஈழத்தமிழர்கள்- உதவி வழக்குமாறு அவலக் குரல்

 

https://news.ibctamil.com/ta/internal-affairs/Tamil-refugees-in-Indonesia-srilanka

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.