Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் இலாபத்துக்காக நாடுமுழுவதும் பரவலாக இனவாதக் கருத்துக்கள் வடக்கு ஆளுநர் குரே 

Featured Replies

அரசியல் இலாபத்துக்காக நாடுமுழுவதும் பரவலாக இனவாதக் கருத்துக்கள்

வடக்கு ஆளுநர் குரே 

 
அரசியல் இலாபத்துக்காக நாடுமுழுவதும் பரவலாக இனவாதக் கருத்துக்கள்
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

எவர் செய்­தா­லும் குற்­றம், குற்­றம் தான். அதைப் புலி­கள் செய்­தா­லும் குற்­றம்­தான். படை­யி­னர் செய்­தா­லும் குற்­றம்­தான் என்­கி­றார் வடக்கு ஆளு­நர் றெஜி­னோல்ட் குரே. சிங்­க­ளத் தொலைக்­காட்சி ஒன்­றுக்கு வழங்­கிய செவ்­வி­யிலே அவர் வட­ப­குதி நிலைமை குறித்து விளக்­கி­யி­ருந்­தார்.
செவ்வி யின் விவ­ரங்­கள் கீழே தரப்­பட்­டுள்­ளன.

கேள்வி:வடக்­கின் தற்­போ­தைய நிலைமை எப்­படி உள்­ளது?

பதில்:30 வருடகாலப் போரி­னால் பாதிக்­கப்­பட்ட மக்­கள் இப்­போது நிம்­ம­தி­யாக உள்­ள­னர். நிலை­யான சமா­தா­னத்தை அவர்­கள் விரும்­பு­ கின்­ற­னர்.மீண்­டும் போர் ஒன்று ஏற்­பட்­டு­வி­டக்­கூ­டாது என்­ப­தில் கவ­ன­மாக உள்­ள­னர்.

கே:ஆனால்,வடக்கு அர­சி­யல்­வா­தி­கள் அவ்­வா­றான நிலைப்­பாட்­டில் இருப்­ப­தா­கத் தெரி­ய­வில்­லையே?

ப:90 வீத­மான மக்­க­ளின் நிலைப்­பாடு வெளியே தெரிய வரு­வ­தில்லை.ஊட­கங்­க­ளும் செய்­தி­யின் முக்­கி­யத்­து­ வம் கருதி சில அர­சி­யல்­வா­தி­கள் வெளி­யி­டும் பார­தூ­ர­மான செய்­தி­க­ளுக்கே முன்­னு­ரிமை வழங்­கு­கின்­றன.அந்த 10 வீத­மான நிலைப்­பாட்­டு­டன் 90 வீத­மான நிலைப்­பாடு ஒத்­துப்­போ­வ­தில்லை.

கே:சமா­தா­னத்தை விரும் பும் அந்த மக்­க­ளின் நிலைப்பாட்டை நிரா­க­ரித்து தமது நிலைப்­பாட் டைத் திணிப்­ப­தற்கு இந்த அர­சி­யல்­வா­தி­கள் முயற்சி செய்­கி­றார்­கள் அல்­லவா?

ப:நாடு சுதந்­தி­ரம் அடைந்­த­தில் இருந்து இது நடக்­கி­றது.வடக்­குக்கு மாத்­தி­ரம் இந்­தச் செயற்­பாட்டை மட்­டுப்­ப­டுத்­த இயலாது. அ ர­சி­யல்­வா­தி­கள் தமது அர­சி­யல் இலா­பநோக்கு டன் இருந்து கருத்து வெளியிடு கின்றனர். இது வடக்­கி­லும் உண்டு; தெற்­கி­லும் உண்டு.

அரசியல் இலாபத்துக்காக தூண்டப்படுகிறது இனவாதம்

கே:அந்த வகை­யில், வடக்கு முத­ல­மைச் சரது செயற்­பா­டு­கள் சமா­
தா­னத்­துக்­கும் இனங்­க­ளுக்கு இடை­யி­லான நல்­லு­ற­வுக்­கும் குந்­த­கம் விளை­விக்­கும் ஒன்­றல்லவா?

ப:வடக்கு என்று தனி­யா­கப் பிரித்­துப் பேசு­வ­தற்கு நான் தயா­ராக இல்லை.வடக்கு ஆளு­ந­ராக நான் நிய­மிக்­கப்­பட் டிருப்­பது நாட்டை ஒன்­றி­ணைத் துச் செயற்பட வைப்பிக்கும் நோக்கத்துடனாகும்.

தெற்­கி­லும் விக்­னேஸ்­வ­ரன் போன்­ற­வர்­கள் இருப்­ப­தால், இது பொது­வா­கப் பேசப்­பட வேண்­டிய விட­யம்.இந்த விட­யத்­தில் விக்­கியை மாத்­தி­ரம் குற்­றஞ்­சாட்ட முடி­யாது.விக்­கி­யின் கூற்றுப் போன்றே, தெற்­கில் உள்ள அர­சி­யல்­வா­தி­கள் சில­ரது கூற்­றுக்­க­ளும் ஆபத்­தா­னவை.

அவர்­க­ள் தமது அர­சி­யல் பய­ணத்­துக்­காக இன­வா­தம்,மத­வா­தம் போன்­ற­வற்­றைத் தூண்­டு­கின்­ற­னர்.இது முழு நாட்­டி­லும் காணப்­ப­டு­கி­றது.

கே:விக்கி தெற்­கில் வந்து மகா­நா­யக்க தேரர்­களை சந்­தித்து கூட்­டாட்­சித் தீர்­வைக் கேட்­கின்­றார். இதை நீங் கள் எவ்­வாறு நோக்­கு­கி­றீர்­கள்?

ப:வடக்­கு-­ கி­ழக்கை இணைக் கு­மா­றும் , கூட்­டாட்சி முறை­யி­லான தீர்வை வழங்­கு­மா­றும் வடக்கு முத­ல­மைச் சர் விக்­னேஸ் வ­ரன் தொடர்ச்­சி­யா­கக் கூறி வரு­கின்­றார்.

இதை நாம் கணக்­கில் எடுக்­கத் தேவை இல்லை.வடக்­குத் தமி­ ழர்­கள் நாட்டை பிள­வு­ப­டுத் தவோ, மீண்­டும் ஒரு போருக்­குச் செல்­லவோ தயா­ரில்லை.தமிழ் அர­சி­யல்­வா­தி­க­ளின் தாளத்­துக்கு ஆடு­வ­தற்கு தமி­ழர்­கள் ஒரு­போ­தும் தயா­ரில்லை.

ஒரு சிலர் மாத்­தி­ரமே நாட்­டுக்கு விரோ­த­மான சிந்­த­னை­யில் மூழ்­கி­யுள்­ள­னர். விக்­னேஸ்­வ­ரன் போன்­ற ­வர்­க­ளின் கருத்­துக்­கள் பன்­னாட்­டுத் தரப்­பு­க­ளுக்­குச் செல்­வ­தால், அவை முக்­கி­யத்­து­வம் பெற்றாலும், அந்தக் கருத்து நிலைப் பாட்டை முறி­ய­டிப்­பதில் நாம் பல­வீ­ன­மாக இருக்­கின்­றோம்.

வெளி­நாட்­டுப் பிர­தி­நி­தி ­கள் வடக்­குக்கு வந்து என்­னைச் சந்­திக்­கும்­போ­தெல்­லாம் நான் உண்­மை­யான நிலைப்பாட்டைத் தெளி­வு­ப­டுத்­தியே வரு­கின்­றேன்.

நாங்­கள் தமி­ழர்­க­ளின் உள்­ளங்­களை வெற்­றி­கொள்­வ­தற்­கான வேலைத் திட்­டங்­களை முன்­னெ­டுக்க வேண்­டும்.அவர்­க­ளின் பிரச்­சி­னை­களை முழு­மை­யா­கத் தீர்க்க வேண்­டும்.

அப்­போ­து­தான் நாட்­டுக்கு விரோ­த­மான கோட்­பா­டு­க­ளைத் தோற்­க­டிக்க முடி­யும்.இதை­விட்­டு­விட்டு அப்­பா­வித் தமி­ழர்­க­ளைக் குற்­றஞ்­சாட்­டு­வ­தில் அர்த்­த­மில்லை

கே:புலி­கள் பெரிய அள­வுக்கு வளர்­வ­தற்கு முன்­னர், இவ்­வா­றான ஒரு குழு தோன்­றி­யுள்­ளது என்று அப்­போது புல­னாய்­வுப் பிரி­வி­னர் கூறி­னர்.அப்­போ­தைய ஆட்­சி­யா­ளர்­கள் அதனைக் கணக்­கில் எடுக்­க­வில்லை.அதன் விளைவு பெரும் போராக மாறி நாட்டை அழித்­தது.அது­போ­லவே இப்­போ­தும் நாம் பாரா­மு­க­மாக இருக்க முடி­யுமா?

ப: போருக்கு முன்­னர் இது போன்ற அனு­ப­வம் எமது அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு இருக்­க­வில்லை. இந்த அனு­ப­வம் இப்­போது அர­சி­யல்­வா­தி­க­ளுக்­கும் படை­யி­ன­ருக்­கும் அதி­க­மாக உண்டு.

கே:நீங்­கள் சொல்­கின்ற அந்த 90 வீத­மான மக்­க­ளின் நிலைப்­பாட்டை மாற்றி, ஆபத்­தான நிலைப் பாட்­டுக்கு விக்­னேஸ்­வ­ரனை அழைத்­துச் செல்­வதை நீங்­கள் உண­ர­வில்­லையா?

ப:நாங்­கள் விழிப்­பா­கத்­தான் இருக்க வேண்­டும்.ஆனால்,சிறிய சிறிய விட­யங்­க­ளை­யெல்­லாம் பெரி­தாக்கி நாம் குழம்பிக் கொண்டால் நுளம்பை சுத்­தி­ய­லால் அடித்­த­து­போல் அமைந்­து­வி­டும்.அள­வுக்கு ஏற்­பவே நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்.ஆகவே,சரி­யான தக­வல்­க­ளைத் திரட்டி அதற்கு ஏற்­பவே செயற்­பட வேண்­டும்.

தெற்­கில் குற்­றச் செயல் ஒன்று இடம்­பெற்­றால் அதை ஒரு சாதா­ரண குற்­றச் செய­லா­கவே பார்க்­கி­றோம்.ஆனால், அதுவே வடக்­கில் இடம்­பெற்­றால் அதனை இன­வாத செயற்­பா­டா­க­வும், பயங்­க­ர­வா­தச் செயற்­பா­டா­க­வும் நாம் பார்க்­கின்­றோம்.அதனை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.

விக்­கி­யின் பிரி­வி­னை­வா­தக் கொள்­கையை முறி­ய­டிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கையை அரசு முன்­னெ­டுத்­துச் செல்­கி­றது.தமி­ழர்­க­ளு­ட­னும் பன்­னாட்­டுச் சமூ­கத்­து­ட­னும் நெருங்­கிய உற­வைப் பேணு­வ­தன்­மூ­லம் அரசு இதை வெற்­றி­க­ர­மா­கச் செய்­கி­றது.

மீண்­டும் போர் ஒன்று இடம்­பெ­றா­மல் இருக்க வேண்­டு­மென்­றால் சிங்­கள மக்­க­ளுக்­கும் தமிழ் மக்­க­ளுக்­கும் இடை­யி­லான நட்பு பலப்­ப­டுத்­தப்­பட வேண்­டும்.

மக்களின் இடங்களில் இராணுவம் இருத்தலாகாது

கே:அர­சி­யல்­வா­தி­கள் கூறும் காணி மற்­றும் பொலிஸ் அதி­கா­ரம்,இரா­ணுவ முகாம்­கள் நீக்­கப்­பட வேண்­டும் என்ற கோரிக்கை வடக்கு மக்­க­ளின் நிலைப்­பாடா?

ப:மக்­கள் இரா­ணு­வத்­தி­னரை எதிர்க்­க­வில்லை.ஆனால்,அவர்­க­ளின் இடங்­க­ளில் இரா­ணு­வம் இருப்­பது அவர்­க­ளுக்கு வேத­னை­யைக் கொடுக்­கின்­றது.மனி­தன் என்ற வகை­யில் ஒரு­வ­ரின் சொத்தை மற்­றொ­ரு­வர் கைய­கப்­ப­டுத்­தி­யி­ருந்­தால் அத்­த­கைய வேதனை ஏற்படவே செய்­யும்.

அந்த வேதனை தமது இடத்தை மீளக் கைப்­பற்ற வேண்­டும் என்ற வேதனை மட்­டும்­தான்.ஆனால்,படை­யி­னரை அங்­கி­ருந்து விரட்ட வேண்­டும் என்ற நோக்­கம் அவர்­க­ளுக்கு இல்லை.

கல்வி,வைத்­தி­யம் மற்­றும் டெங்கு ஒழிப்பு என எல்லா விட­யங்­க­ளி­லும் படை­யி­னர் பங்­கெ­டுத்­து வருகின்றனர்.வடக்­கில் ஏதா­வது ஒரு வேலைத் திட்­டம் வெற்­றி­க­ர­மாக அமைய வேண்­டு­மென்­றால் அதற்கு படை­யி­ன­ரின் உதவி தேவை என்ற நிலை அங்கு ஏற்­பட்­டுள்­ளது.

கோவில் திரு­வி­ழாக்­க­ளின்­போது படை­யி­னர் தேர் இழுக்­கின்­ற­னர்.இதை நான் பன்­னாட்டு சமூ­கத்­துக்­குத் தெரி­யப்­ப­டுத்தி வரு­கின்­றேன். இத­னால்­தான் இந்த நாட்­டுக்கு எதி­ரான பன்­னாட்டு அழுத்­தங்­கள் குறைந் துள்­ளன.

மின்­சா­ரக் கதிரை பற்­றி­யும் போர்க்­குற்ற நீதி­மன்­றம் பற்­றி­யும் கூறப்­பட்டு வரு­கின்­றது.இவை பற்றி தேவை­யற்ற அச்­சம் வெளி­யி­டப்­ப­டு­கி­றது.

வெளி­நா­டு­க­ளில் இருந்து யாழ்ப்­பா­ணத்­துக்கு வரும் தமி­ழர்­கள் நல்ல செய்­தி­யையே வெளி­நா­டு­க­ளுக்கு எடுத்துச் செல்­கின்­ற­னர்.

பொன்சேகாவுக்குக் கண்டனம்

கே:முன்­னாள் இரா­ணு­வத் தள­பதி ஜகத் ஜய­சூ­ரி­யா­வுக்கு எதி­ராக போர்க்­குற்ற வழக்கு தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளது.அவ­ருக்கு எதி­ராக சாட்­சி­ய­ம­ளிக்­கப் போவ­தாக சரத் பொன்­சேகா கூறி­யுள்­ளார்.பொன்­சே­கா­வின் அந்த நிலைப்­பாடு சரியா?

ப:தலை­வர்­கள் பேசும்­போது நிதா­ன­மா­கப் பேச வேண்­டும்.சில நேரங்­க­ளில் உண்மை இருந்­தா­லும், அந்த உண்­மை­யைச் சொல்­லப் போய் அது பி­ரி­வி­னை­வா­தி­க­ளுக்கு நன்­மை­ய­ளிக்­கு­மாக இருந்­தால் அந்த உண்­மையை மறைப்­ப­தே­மேல்.

பொன்­சே­கா­வின் கூற்றை நான் வன்­மை­யா­கக் கண்­டிக்­கி­றேன்.அவர் இரா­ணு­வத் தள­ப­தி­யாக இருக்­கும்­போ­து­தான் ஜகத் குற்­ற­மி­ழைத்­தார் என்று பொன்­சேகா சொல்­கி­றார்.அந்­தக் குற்­றம் நிக­ழா­மல் பொன்­சேகா தடுத்­தி­ருக்க வேண்­டும்.

குற்­றம் நிக­ழ­விட்­டு­விட்டு ஏன் பார்த்­துக்­கொண்­டி­ருந்­தார் என்ற குற்­றச்­சாட்டு பொன்­சே­கா­வுக்கு எதி­ராக முன்­வைக்­கப்­ப­டு­ வ­தற்­கும் வாய்ப்­பு­கள் உண்டு.

உதா­ர­ண­மாக,மக்­க­ளுக்­குப் புலி­க­ளால் ஏற்­ப­டுத்­தப்­பட்ட அநி­யா­யங்­கள் தொடர்­பில் விக்­னேஸ்­வ­ரன் பேசு­வ­தில்லை.படை­யி­னர் மீதே குற்­றஞ் சாட்­டுகின்றார்.

தவ­றி­ழைக்­காத இரா­ணு­வம் உல­கில் எங்­கு­மில்லை.போரின்­போது சில தவ­று­கள் நடக்­கவே செய்­யும்.

எவர் செய்­தா­லும் குற்­றம் குற்­றம்­தான்.அதைப் புலி­கள் செய்­தா­லும் குற்­றம் தான்.படை­யி­னர் செய்­தா­லும் குற்­றம்­தான்.

விக்கி நியா­ய­மா­ன­வர் என்­றால் படை­யி­ன­ரின் குற்­றங்­க­ளைச் சுட்­டிக் காட்­டு­வ­து­ போல் புலி­க­ளின் தவ­றை­யும் சுட்­டிக் காட்ட வேண்­டும். அதே­போல், ஏனைய ஆயு­தக் குழுக்­கள் நிகழ்த்­திய குற்­றங்­க­ளை­யும் அவர் கூற வேண்­டும்.

புலி­க­ளின் குற்­றங்­கள் தேடப்­ப­டும் அதே­நே­ரம் படை­யி­ன­ரின் குற்­றங்­க­ ளும் தேடப்­பட வேண்­டும் என்ற நிலைப்­பாட்டை தெற்கு மக்­கள் எடுக்க வேண்­டும்.

அப்­படி இல்­லா­மல் வடக்­குக் குற்­றம், தெற்­குக் குற்­றம் என்­றும், படை­யி­ன­ரின் குற்­றம், புலி­க­ளின் குற்­றம் என்­றும் பிரித்து பக்­கச்­சார்­பு­டன் நட­வ­டிக்கை எடுக்­கப்­போ­னால், ஒரு­போ­தும் பிரச்­சி­னை­கள் தீரா.

எவர் செய்­தி­ருந்­தா­லும் குற்­றம் குற்­றமே என்ற நிலைப்­பாட்­டுக்கு நாம் எல்­லோ­ரும் வந்­தாலே இந்­தப் பிரச்­சி­னைக்கு முற்­றுப் புள்ளி வைக்க முடி­யும்.

படையினர் திட்டமிட்டு
மக்களைத் தாக்குவதில்லை

படை­யி­னரை நோக்கி எதி­ரி­கள் தாக்­கு­தல் நடத்­தும்­போது படை­யி­னர் எதிர்த்­தாக்­கு­தல் நடத்­தி­னால் அநி­யா­ய­மாக அப்­பாவி மக்­கள் சிக்­கத்­தான் செய்­வார்­கள்.

உல­கில் இடம்­பெறும் சகல கெரில்லா தாக்­கு­தல்­க­ளி­லும் இது இடம்­பெ­றவே செய்­கி­றது.அந்த வேளையில் மக்­கள் பேர­வ­லம் என்­பது தவிர்க்க முடி­யாத ஒன்­றா­கிறது.

போர் ஒன்று இடம்­பெற்­றால் மக்­கள் பேர­வ­லம் இடம்­பெற்றே ஆகும்.படை­யி­னர் திட்­ட­மிட்டு இதைச் செய்­வ­தில்லை.எதி­ரி­க­ளைத் தேடும்­போது, -அவர்­கள்­மீது தாக்­கு­தல் நடக்­கும்­போது பேர­வ­லம் நிகழ்ந்­து ­வி­டு­கி­றது.

கே:இப்­போது வடக்­கில் ஆவாக் குழு­வின் செயற்­பா­டு­கள் எப்­படி உள்­ளன?

ப: மீண்­டும் புலி­கள் தலை தூக்­கு­வ­தற்­கான முயற்­சி­ தான் ஆவாக் குழு­வின் தோற்­றம் என்று தெற்­கில் கரு­தப்­ப­டு­கி­றது.அதற்கு நியா­ய­மான கார­ண­மும் உண்டு.

வடக்­கில் எந்­த­வொரு சம்­ப­வம் இடம்­பெற்­றா­லும் மீண்­டும் புலி­கள் வந்­து­விட்­டார்­களோ என்ற அச்­சம் ஏற்படுகி றது.

ஆவாக் குழு புலி­க­ளு­டன் சம்­பந்­தப்­பட்ட ஒன்­றல்ல. வடக்­கில் வேலை இன்­மை­தான் பெரிய பிரச்­சினை.எந்­த­வொரு தொழிற்­சா­லை­யும் கிடை­யாது.மக்­கள் வாழ்­வ­தற்கு வழி­யில்லை.இத­னால் படித்த இளை­ஞர்­கள் தீய செய­லில் ஈடு­ப­டு­கின்­ற­னர்.

வெளிநாடுகளிலிருந்த கிடைக்கும் பணத்தைக் தைக்­கொண்டு மது மற்­றும் போதைப்­பொ­ருள் பாவ­னை­யில் அவர்­கள் ஈடு­ப­டு­கின்­ற­னர்.அடி­த­டி­யில் ஈடு­ப­டு­கின்­ற­னர்.இவ்­வாறு உரு­வா­ன­து­தான் ஆவா குழு. ஆனால், அவர்­கள் புலி­க­ளு­டன் தொடர்­பு­பட்­ட­வர்­கள் அல்­லர்.

இவர்­க­ளுக்கு எதி­ரா­கச் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. இது அரசை கவிழ்ப்­ப­தற்­காக உரு­வாக்­கப்­பட்ட குழு அல்ல. அதற்­கான பல­மும் அவர்களிடம் இல்லை – என்­றார்.

http://newuthayan.com/story/34745.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.