Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கைதிகளின் உடல்நிலை மோசம்; பாராமுகமாக சம்பந்தன்! - வேதனை என ஆனந்தன் எம்.பி சாடல்

Featured Replies

15501.jpg
உண்ணாவிரதமிருக்கும் அர சியல் கைதிகளின் உடல்நிலை மோசமடைந்திருக்கும் நிலையில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், கைதிகளின் நிலைமை குறித்து பாராமுகமாக இருப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றஞ்சாட் டியுள்ளார்.
 
இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த சிவசக்தி ஆனந்தன்,
 
தமிழ் அரசியல் கைதிகள் தங்களுடைய வழக்கை வவுனியா நீதிமன்றத்திலேயே விசாரிக்க வேண்டும் அனுராதபுரம் நீதிமன் றத்திற்கு மாற்றக் கூடாது மற்றும் பொது மன்னிப்பளித்து விடுதலை செய்ய வேண்டும் என தெரிவித்து அநுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த பல நாட்களாக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ள நிலையில் கைதிகளில் இருவரின் உடல் நிலை மோசமடைந்து அநுராதபுரம் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப் பட்டுள்ளனர். 
 
கைதிகளின் சிறுநீரகங்கள் செயலிழக் கும் நிலையை அடைந்துள்ளதாக மருத்து வர்கள் தெரிவித்திருக்கும் நிலையில் குறிப்பிட்ட கைதிகள் நீர் அருந்த மறுத்து உண்ணாவிரதத்தை தொடர்ந்து கொண்டுள்ளனர்.
 
உண்ணா விரதமிருக்கும் தமிழ் அரசி யல் கைதிகளின் நிலைமை குறித்து ஜனாதி பதியுடன் இரண்டு தடவைகள் பேசியுள் ளேன். சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். 
 
அத்துடன் கடந்த காலத்தில் தமிழ் அரசி யல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட் டத்தை பொய்யான வாக்குறுதி வழங்கி தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன்   முடிவுக்கு கொண்டு வந்திருந்தார். எனினும் அவர் வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமை வாக எந்த சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை அரசியல்கைதிகளும் விடுதலை செய்யப்படவில்லை.
 
இப்போதும் தொடர் உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளின் உடல் உறுப்பு க்கள் செயலிழக்கும் நிலையை அடைந்து ள்ள நிலையில் கூட எதிர்க்கட்சி தலைவர் மௌனம் சாதிப்பது வேதனையளிக்கிறது என குறிப்பிட்டார்.
 
மேலும் அரசியல்கைதிகளின் உண்ணா விரதத்திற்கு ஆதரவாக நாளை மறுதினம் திங்கட்கிழமை வவுனியா மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் தமிழ் அரசியல்கைதிகளின் கோரிக்கை நிறைவேற்ற ப்படும்வரை தொடர்ச்சியான மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.                   

http://www.valampurii.lk/valampurii/content.php?id=15501&ctype=news

 

  • கருத்துக்கள உறவுகள்

 அவர் இப்போ  மியன்மார் அகதிகளின் பாகாப்பு நடவடிக்கையில் சரியான பிசி. கொஞ்சம் பொறுங்கோ அது முடிஞ்ச கையோட  வேர்த்து விறுவிறுக்க ஓடோடி வருவார்.

  • கருத்துக்கள உறவுகள்

அவர் சிங்களத்தை போர்குற்றம்களில் இருந்து தப்புவிப்பதுக்கு கடும் முயட்ச்சியில் இருக்கிறார் அவருக்கு தமிழ்மக்களை கவனிக்க நேரம் கிடைக்காது 

  • தொடங்கியவர்

பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து த.தே.கூ பல தடவை ஏமாற்றிவிட்டது! - 11-வது தடவையாக உண்ணாவிரதம் இருக்கிறோம் என தமிழ் அரசியல் கைதிகள் ஆதங்கம்

எமது நியாயமான கோரிக்கை களை முன்வைத்து 10 தடவைகள் உண்ணாவிரதம் இருந்தோம். ஆனால் அரசாங்கமும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமைக ளும் பொய்யான வாக்குறுதிகளை தந்து எமது உண்ணாவிரதத்தை பல தடவைகள் நிறுத்திவிட்டன. 
 
இனிமேலும் பொய்யான வாக் குறுதிகளை நம்பி எமது உண் ணாவிரத போராட்டத்தை கைவிட தயாரில்லை என வேதனையுடன் தெரிவித்த தமிழ் அரசியல் கைதிகள், வடக்கு மாகாண சபை உறுப்பினர் கள் விடுத்த போராட்ட ஒத்திவை ப்பு கோரிக்கையையும் நிராகரித்துள்ளனர்.
 
அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல்கைதிகளில் ம. சுலக்சன், க.தர்சன், இ.திருவருள் ஆகிய மூவரும் கடந்த 13 நாட்களாக தொடர் உண்ணா விரதத்தை மேற்கொண்டு வருகின்றனர். வவுனியா மேல்நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அநுராதபுரம் நீதி மன்றுக்கு மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரி வித்தும், மீளவும் வவுனியா நீதிமன்றி லேயே வழக்கு விசாரணைகள் நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தும்,
பொது மன்னிப்பின் அடிப்படையில் விடு தலை செய்யப்பட வேண்டும் எனவும் கோரி க்கையை முன்வைத்தே மேற்படி தொடர் உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகின்றனர். 
 
இந்த நிலையில் தொடர் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளு டைய உடல் நிலையை கருத்திற்கொண்டு வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான மகளிர் விவகார அமைச்சர் திருமதி அன ந்தி சசிதரன், உறுப்பினர்களான சுகிர்தன், தவநாதன், சத்தியலிங்கம் ஆகியோர் கொண்ட குழு ஒன்று அவைத்தலைவர்  சீ. வீ.கே.தலைமையில் நேற்றையதினம் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று கைதிக ளைச் சந்தித்து அங்கு உண்ணாவிரத போரா ட்டத்தை கைவிடுமாறு கோரியிருந்தனர். 
 
எனினும் உறுதிமொழிகள் எதனையும் இனி நாங்கள் நம்ப தயாரில்லை. 
 
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்ப ந்தனும் கடந்த முறை எமக்கு வாக்குறுதி தந்து ஏமாற்றிவிட்டார். எம்மை நீதிக்கு புறம்பாக இந்த அரசாங்கம் நடத்துகின்றது. 
 
குற்றம் சாட்க்கு நீதியை வழங்க கோரி 10ஆவது தடவை உண்ணாவிரதம் இருந்தோம் ஆனால் பொய்யான வாக்குறுதிகளை தந்து அரசும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் ஏமாற்றி விட்எமக்கு நீதியை வழங்க கோரி 10ஆவது தடவை உண்ணாவிரதம் இருந்தோம் ஆனால் பொய்யான வாக்குறுதிகளை தந்து அரசும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் ஏமாற்றி விட்டது. 
 
பதினோராவது தடவையும் நாங்கள் ஏமாற தயாரில்லை. அநுராதபுரத்திற்கு வழக்கு மாற்றப்பட்டமையால் எமது குடும்பங்கள் பெரும் துன்பங்களை எதிர்நோக்கி வருகின் றது எனவும் கவலை தெரிவித்த அரசியல் கைதிகள், வடக்கு மாகாண சபை உறுப்பி னர் விடுத்த கோரிக்கையையும் நிராகரித்துள்ளனர்.                  

http://www.valampurii.lk/valampurii/content.php?id=15502&ctype=news

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.