Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உத்தேச அரசியல் யாப்பு இடைக்கால அறிக்கை நாட்டை பிளவுபடுத்தும்

Featured Replies

உத்தேச அரசியல் யாப்பு இடைக்கால அறிக்கை நாட்டை பிளவுபடுத்தும்

 

உத்தேச அரசியல் யாப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை நாட்டை பிளவுபடுத்தும் என்று தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியினர், அதனால் குறித்த அறிக்கைக்கு அங்கீகாரம் அளிக்கக் கூடாது என ஸ்ரீலங்கா ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உத்தேச அரசியல் யாப்பு இடைக்கால அறிக்கை நாட்டை பிளவுபடுத்தும்

ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை, விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியினர் நேற்றைய தினம் இரவு ஜனாதிபதியின் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியபோதே இந்தக் கோரிக்கையை விடுத்திருக்கின்றனர்.

புதிய அரசியல் யாப்பை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள ஸ்ரீலங்கா பிரதமர் தலைமையிலான அரசியல் யாப்பு வழிநடத்தல் குழுவினால் கடந்த செப்டெம்பர் 21 ஆம் திகதி ஸ்ரீலங்கா நாடாளுமன்றில் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் நாட்டை பிளவுபடுத்தும் என்று குற்றம்சாட்டி அதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுவரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மீண்டும் ஆட்சிபீடம் ஏற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களில் முக்கியமானவரான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, குறித்த இடைக்கால அறிக்கைக்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் சிங்கள மக்களை அணி திரட்டும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் இடைக்கால அறிக்கை தொடர்பில் தமது எதிர்ப்பை ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு தெரியப்படுத்தும் நோக்கில் நேற்றைய தினம் அவரை வீரவன்ச தலைமையிஜலான தேசிய சுதந்திர முன்னணியினர்  சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது உத்தேச அரசியல் யாப்பு குறித்த இடைக்கால அறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கக் கூடாது என்று வீரவன்ச ஸ்ரீலங்கா ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டை பிளவுபடுத்தும் பரிந்துரைகள் இடைக்கால அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாலேயே தாம் இந்தக் கோரிக்கையை விடுப்பதாகவும் வீரவன்ச ஸ்ரீலங்கா அரச தலைவரிடம் எடுத்துரைத்துள்ளார்.

எவ்வாறாயினும் உத்தேச அரசியல் யாப்பு தொடர்பிலான இறுதி முடிவை எடுப்பதற்கு முன்னதாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளுடனும் விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு அனைவரினதும் இணக்கப்பாடு பெற்றுக்கொள்ளப்படும் என்று அரசியல் சாசான சபையாக மாற்றப்பட்டுள்ள ஸ்ரீலங்கா நாடாளுமன்றம் ஏற்கனவே உறுதி அளித்துள்ளது.

இந்த உறுதிமொழியை வீரவன்ச தலைமையிலான கட்சியினருக்கு நினைவுகூர்ந்துள்ள ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, நாட்டை பிளவுபடுத்தும் எந்தவொரு யோசனைகளுக்கும் தனது அரசாங்கமும் இடமளிக்காது என்றும் திட்டவடட்மாக அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் உத்தேச அரசியல் யாப்னால் நாடு பிளவுபடும் என்று ஆரம்பம் முதல் பிரசாரம் செய்துவரும் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியினர் உத்தேச அரசியல் யாப்புத் தயாரிப்புப் பணிகளில் இருந்தும் விலகிக்கொண்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

ஸ்ரீலங்கா பாராளுமன்றம் கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்பதாம் திகதி அரசியல் சாசான சபையாக மாற்றப்பட்டதுடன், உத்தேச அரசியல் யாப்பை தயாரிப்பதற்காக ஸ்ரீலங்கா பிரதமர் தலைமையில் அனைத்துக் கட்சிகளினதும் பிரதிநிதிகளை உள்ளடக்கிய வகையில் வழிநடத்தல் குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் முதலாவது கூட்டம் 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஐந்தாம் திகதி நடைபெற்றதுடன் அதனைத் தொடர்ந்து பல கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.

இதன்போது ஆராயப்பட்ட விடையங்களை உள்ளடக்கிய நிலையிலேயே அரசியல் அமைப்பு வழிநடத்தல் குழுவினால் தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கை கடந்த செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி ஸ்ரீலங்கா பிரதமரினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

https://news.ibctamil.com/ta/internal-affairs/The-proposed-constitution-divide-country-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.