Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நுணாவில் பகுதியில் வாள்வெட்டு : இருவர் படுகாயம்

Featured Replies

நுணாவில் பகுதியில் வாள்வெட்டு : இருவர் படுகாயம்

 

 

யாழ்ப்பாணம்- சாவகச்சேரி-  நுணாவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதல் சம்பவத்தில்  இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்த இருவரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் காலை இடம்பெற்றதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

இனம்தெரியாத நபர்களே இவ்வாறு இரு இளைஞர்கள் மீது சரமாரியாக வாள்களால் வெட்டிய தாக்கியுள்ளதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.  

குறித்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Two-persons-injured-swamp-attack-Nunavil-area

  • தொடங்கியவர்

சாவகச்சேரியில் துரத்தித் துரத்தி வாள்வெட்டு;ஒருவர் காயம்

 

சாவகச்சேரியில் துரத்தித் துரத்தி வாள்வெட்டு;ஒருவர் காயம்

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி– நுணாவில் பகுதியில் ஓட்டுத் தொழிலகம் ஒன்றினுள் புகுந்த இனந்தெரியாத குழுவினர் நடத்திய வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று முற்பகலில் இடம்பெற்றதாக சாவக்கச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த ஓட்டுத் தொழிலகத்தின் உரிமையாளரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்தவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

சாவகச்சேரியில் துரத்தித் துரத்தி வாள்வெட்டு;ஒருவர் காயம்

சாவகச்சேரியில் துரத்தித் துரத்தி வாள்வெட்டு;ஒருவர் காயம்

சாவகச்சேரியில் துரத்தித் துரத்தி வாள்வெட்டு;ஒருவர் காயம்

 

https://news.ibctamil.com/ta/internal-affairs/knife-attack-at-chavakachery

  • தொடங்கியவர்

நீதிமன்றுக்குச் சென்றவர்களே இடைவேளையின் போது வெட்டினார்கள்

சாவ­கச்­சேரி வாள்­வெட்­டுத் தொடர்­பில் சிசி­ரி­வியை வைத்து பொலி­ஸார் குற்­றச்­சாட்டு

நீதிமன்றுக்குச் சென்றவர்களே இடைவேளையின் போது வெட்டினார்கள்
0
SHARES
 

சாவ­கச்­சேரி நீதி­மன்ற வழக்­குக்­குச் சென்­றி­ருந்த மூவர் நீதி­மன்ற இடை­வேளை நேரத்­தில் நீதி­மன்­றி­லி­ருந்து வௌியேறி நுணா­வி­லில் ஒரு­வரை வாளால் வெட்­டிக் காயப்­ப­டுத்­தி­விட்டு மீண்­டும் நீதி­ மன்­றுக்­குச் சென்­றுள்­ள­னர் என்று குற்­றஞ்­சாட்­டப்­படு­ கிறது.

தலை மற்­றும் கையில் வெட்­டுக்­கா­யங்­க­ளுக்கு இலக்­கான நுணா­வில் மேற்­கைச் சேர்ந்த அ. அபு­தன் (வயது – 27) சாவ­கச்­சேரி மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டார்.

குறித்த மூவ­ரும் ஏற்­க­னவே குற்­றச்­செ­யல் சம்­பந்­த­மான வழக்­கில் உள்­ள­னர் என்று கூறப்­ப­டு­கி­றது. அந்த வழக்கு நேற்­று­முன்­தி­னம் சாவ­கச்­சேரி நீதி­மன்­றில் விசா­ர­ணைக்கு வந்­தது.

குறித்த வழக்கு தாம­த­மாக விசா­ர­ணைக்கு எடுப்­ப­தா­கக்­கூ­றப்­பட்­டது. அந்த இடை­வேளை நேரத்­தி­லேயே குறித்த மூவ­ரும் மோட்­டார் சைக்­கி­ளில் சென்று நுணா­வில் மத்­தி­யில் உள்ள மின்­வாயு ஒட்டு நிலைய உரி­மை­யா­ளரை கூரிய ஆயு­தத்­தால் வெட்­டிக் காயப்­ப­டுத்­தி­விட்டு மீண்­டும் நீதி­மன்­றுக்கு வந்­துள்­ள­னர் என்று குற்­றஞ்­சாட்­டப்­படு ­கிறது.

அவர்­கள் நுணா­வில் மேற்கு மற்­றும் மட்­டு­வில் வடக்­கைச் சேர்ந்­த­வர்­கள் என்று கூறப்­ப­டு­கி­றது.

சம்­ப­வம் தொடர்­பா­கப் பொலி­ஸார் விசார­ ணைகளை மேற்­கொண்­ட­னர். சம்­ப­வம் நடை­பெற்ற இடத்­துக்கு அரு­கில் உள்ள வாக­னங்­கள் கழு­வும் நிலை­யத்­தில் பொருத்­தப்­பட்­டி­ருந்த இர­க­சி­யக் கண்­கா­ணிப்­புக் கம­ரா­வைப் பரி­சோ­தித்­த­போது தலைக்­க­வ­சம் அணிந்த நிலை­யில் மூவ­ரும் சம்­பவ இடத்­தில் நின்­றமை பதி­வா­கி­யுள்­ளது.

அவர்­க­ளைக் கைது செய்து பொது இடத்­தில் சட்­ட­வி­ரோ­த­மாக கூட்­டம் கூடி­ய­து­டன் வர்த்­த­கரை வெட்­டிக் காயப்­ப­டுத்­தி­ய­தா­கக் குற்­றஞ்­சாட் டப்பட்­டது. அவர்­கள் பொலி­ஸா­ரால் நீதி­மன்­றில் நேற்று முற்ப­ டுத்­தப்­பட்ட­ னர்.

விசா­ரணை நடத்­திய நீதி­வான் மூவ­ரை­யும் தலா 50 ஆயி­ரம் ரூபா பிணை­யில் செல்ல உத்­த­ர­விட்டு வழக்கை எதிர்­வ­ரும் 30 ஆம் திக­திக்கு ஒத்­தி­வைத்­தார்.

http://newuthayan.com/story/36867.html

  • கருத்துக்கள உறவுகள்

படிக்க கள்ளப்படதுகள், வேலைவெட்டியில்லாது ஊர் சுத்துறதுகளை முந்தி ஈ. பி. டி யினர், அரச புலனாய்வாளர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த இவர்களின்   நட்பு  வட்டாரத்தில் பிளவுகளை ஏற்படுத்தி அவர்களிடம் இருந்து அந்நியப்படுத்தி அவர்களை ஹீரோக்களாக்கி அவர்களை யாரும் தண்டிக்கவோ, தட்டிக்கேட்கவோ முடியாதவாறு பெரியாளாக்கி நாளடைவில் ஊர் விரோதியாக்கி, குடும்பத்தாரிடம் இருந்து பிரித்து தங்கள் வேலைகளுக்கு பயன்படுத்துவார்கள்.  சுயரூபம் இதுகளுக்கு தெரிய வரும்போது அதிலிருந்து தப்பவோ, அல்லது அதிலிருந்து விலகவோ முடியாமல் அவர்கள் இடும் கட்டளையை இவர்கள் நிறைவேற்றவே வேணும். இல்லையாயின் ஏதோ ஒரு வகையில் இவர்கள் கொல்லப் படுவார்கள். இவர்கள் சொல்வதை செய்தால் சடத்தின்முன் தண்டிக்கப் படுவார்கள். இது இராணுவக் கட்டுப்பாட்டின் போது தங்கியிருந்து களவு கொள்ளை போன்றவற்றில் ஈடு பட்டவர்களின் நிலை. அது இப்போதும் தொடருகிறது. அதற்கு இட்ட பெயர் ஆவா குரூப். தமிழர்கள் இப்படி ஒரு குழுவை இயக்குவதாயின் ஒரு தமிழ்ப் பெயர் வைக்க   அவர்களுக்கு தெரியாதா? சிங்கள பெயரை ஏன் வைக்க வேண்டும்? தலைவன் இட்ட பெயரை இவர்கள் மேல் திணித்து இவர்களை வைத்து தன் காரியத்தை சாதிக்கிறது   சிங்கள புலனாய்வுப்படை.   பெற்றோர் பிள்ளைகளை கண்டித்து ஒழுங்காக வளர்க்கவேண்டும், யாரோடு பழகுகிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். பிள்ளைகளும் பெற்றோருக்கு கீழ்ப்படிந்து பொறுப்பாக வளர்ந்து நல்ல பிரயைகளாக திகழ வேண்டும். பகைவன் தானாகவே விலகுவான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.