Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆசிய கண்டத்தில் அதிக பட்டினியாளர்களைக் கொண்ட நாடாக இந்தியா..

Featured Replies

ஆசிய கண்டத்தில் அதிக பட்டினியாளர்களைக் கொண்ட நாடாக இந்தியா..

India-100th-on-global-hunger-300x171.jpg

இந்தியா பட்டினியால் வாடுபவர்களின் பட்டியலில் 100வது இடத்துக்கு சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தியா மேலும் 3 இடங்கள் பின் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் வளர்ந்து வரும் நாடுகள் பட்டியலில் உள்ள 119 நாடுகளில்  சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி கழகம் மேற்கொண்ட ஆய்வுகளின் இது தெரிய வந்துள்ளது. இந்தநாடுகளில்  பெரும்பாலானவற்றில் உணவு தானியங்கள் உற்பத்தி குறைவு காரணமாக   பட்டினி  நிலை தோன்றியுள்ளது.

நேற்றையதினம் வெளியிடப்பட்ட இந்த ஆய்வுகளின் முடிவுகளின்படி  இந்தியாவில் பட்டினியாக கிடப்பவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளமையானது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுகளின் அடிப்படையில் ஆசிய கண்டத்தில் இந்தியா அதிக பட்டினியாளர்களைக் கொண்டதாக இருப்பது தெரிய வந்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா, இலங்கை, நேபாளம், மியான்மர்,  பங்களாதேஸ்  ஆகியவை இந்தியாவை விட குறைவான சராசரி பட்டினியாளர்களைக் கொண்டுள்ளன. இதன் படி இலங்கை 84வது இடத்திலும்  சீனா 29வது இடத்திலும், நேபாளம் 72, மியான்மர் 77, பங்களாதேஸ் 88-வது இடங்களில் உள்ளன.

பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் மட்டுமே இந்தியாவையும் விட பின்னால் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

http://globaltamilnews.net/archives/45118

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்

பட்டினியால் வாடுவோர் பட்டியல்: வடகொரியா, வங்கதேசம், சீனா, இலங்கைக்குப் பின்னால் 100வது இடத்தில் இந்தியா

 

 
 
hunger
26TH-MALNUTRITION%201

பட்டினியால் வாடும் நாடுகளில் இந்தியா கடந்த ஆண்டைக் காட்டிலும் 3 இடங்கள் பின் தங்கி, 100-வது இடத்துக்குத் தள்ளப்பட்டு மோசமான நிலையில் உள்ளது.

பட்டினியால் வாடும் நாடுகள் பற்றிய குறியீட்டுப் பட்டியலை சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன் ஆய்வு முடிவுகள் பின்வருமாறு:

''உலகம் முழுவதும் உள்ள 119 நாடுகள் இந்த ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் தீவிரமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடாகவும், அதிகளவில் பட்டினியால் வாடுவோரைக் கொண்ட நாடாகவும் 100-வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது.

பொருளாதார தடைகளால் பாதிக்கப்பட்டுள்ள வடகொரியா, வங்கதேசம் மற்றும் ஈராக் ஆகிய நாடுகள் கூட இந்தப் பட்டியலில் இந்தியாவை விட முன்னேறி உள்ளன.

ஆசிய நாடுகளின் பட்டியலில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது. முதல் மற்றும் இரண்டாம் இடங்களில் முறையே ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகியவை உள்ளன.

பட்டினியால் வாடுவோர் கொண்ட நாடுகளின் பட்டியலில் 2017-ல் 31.4 புள்ளிகளோடு இந்தியா தீவிரமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.அதே நேரம் நம்முடைய அண்டை நாடுகளில் பலவற்றில், நம்மை விட பட்டினியால் வாடுவோர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளன.

குறிப்பாக சீனா (29-வது இடம்), நேபாளம் (72), மியான்மர் (77), இலங்கை (84) மற்றும் வங்கதேசம் (88) ஆகியவை இதில் முன்னேற்றம் கண்டுள்ளன. ஆனால் பாகிஸ்தான் (106) மற்றும் ஆப்கானிஸ்தான் (107) ஆகிய நாடுகள் மட்டும் இந்தியாவை விடப் பின்தங்கி உள்ளன.

பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்பட்டுள்ள வட கொரியா 93-வது இடத்தையும், ஈராக் 78-வது இடத்தையும் பிடித்துள்ளது.

வரிசை எண்

நாடு

இடம்

1

சீனா

29

2

நேபாளம்

72

3

மியான்மர்

77

4

இலங்கை

84

5

வங்கதேசம்

88

6

இந்தியா

100

7

பாகிஸ்தான்

106

8

ஆப்கானிஸ்தான்

107

பட்டினியால் வாடுவோர் பட்டியலில் இந்தியா பிடித்துள்ள உயர் தரவரிசை (100வது இடம்), ஊட்டச்சத்து விவகாரத்தில் நாட்டின் உண்மைத் தன்மையைக் காட்டுகிறது.

5 வயதுக்கும் குறைவான ஐந்து இந்தியக் குழந்தைகளில் 1-க்கும் மேற்பட்ட குழந்தை, தன்னுடைய உயரத்துக்கு ஏற்ற எடையில் இருப்பதில்லை. 3-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களின் வயதுக்கு ஏற்ற உயரத்தில் இருப்பதில்லை.

இந்தியக் குழந்தைகளின் எடைக் குறைபாட்டு விகிதம் கடந்த 25 ஆண்டுகளில் எந்தவித குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் ஏற்படாததைக் காட்டுகிறது''.

இவ்வாறு ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியல் ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தைகள் இறப்பு, குழந்தைகளின் வளர்ச்சி (உயரம்) குறைபாடு, குழந்தைகளின் எடை குறைபாடு ஆகிய 4 காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

http://tamil.thehindu.com/world/article19853567.ece?homepage=true

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்
பட்டினியில்லா நாடுகளின் பட்டியலை வெளியிட்ட உலக உணவு கொள்கை ஆய்வு மையம்! 
[Saturday 2017-10-14 17:00]
பட்டினியில்லா நாடுகளின் பட்டிலை உலக உணவு கொள்கை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. வாஷிங்டன் நகரை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வரும் உலக உணவு கொள்கை ஆராய்ச்சி கழகம் பட்டினியில்லாத நாடுகள் குறித்த ஆய்வை நடத்தியது. இதன் ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இந்தப்பட்டியலில் 119 வளரும் நாடுகள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் சிலி, கியூபா, துருக்கி ஆகிய நாடுகள் 5க்கும் குறைவான மதிப்பெண்களுடன் பட்டினியில்லா நாடுகள் மற்றும் சிறந்த வளரும் நாடுகள் என பெருமையைப் பெற்றுள்ளன.

பட்டினியில்லா நாடுகளின் பட்டிலை உலக உணவு கொள்கை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. வாஷிங்டன் நகரை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வரும் உலக உணவு கொள்கை ஆராய்ச்சி கழகம் பட்டினியில்லாத நாடுகள் குறித்த ஆய்வை நடத்தியது. இதன் ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இந்தப்பட்டியலில் 119 வளரும் நாடுகள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் சிலி, கியூபா, துருக்கி ஆகிய நாடுகள் 5க்கும் குறைவான மதிப்பெண்களுடன் பட்டினியில்லா நாடுகள் மற்றும் சிறந்த வளரும் நாடுகள் என பெருமையைப் பெற்றுள்ளன. 

ஆப்பிரிக்க குடியரசு நாடுகள் 43.5 முதல் 50.9 மதிப்பெண்கள் பெற்றுள்ளன. இதனால் மோசமான பட்டினி கொடுமையால் அவதிப்படும் நாடுகள் என பட்டியலில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன

இந்தப் பட்டியலில் 31.4 மதிப்பெண்களுடன் இந்தியா 100வது இடத்தைப் பிடித்துள்ளது. உலகிலேயே அதிக உணவுப்பொருள் உற்பத்தி செய்யும் நாடு என்ற பெருமையைப் பெற்றுள்ள இந்தியா பட்டினியில்லா நாடுகளின் பட்டியலில் 100வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 97வது இடத்தைப் பிடித்திருந்தது

உலக உணவு கொள்கை ஆய்வு கழகம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையின்படி, இந்தியாவில் பட்டினியால் அதிக அளவிலான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். பட்டினியில் அதிகம் வாடுவோர் உள்ள ஆசிய நாடுகளின் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார தடை உள்ளிட்டப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ள வடகொரியாக்கூட இந்தியாவுக்கு முன் 93 வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாள் 72வது இடத்தையும், மியான்மர் 77வது இடத்தையும் பங்களாதேஷ் 88வது இடத்தையும் இலங்கை 84வது இடத்தையும் சீனா 29வது இடத்தையும் பிடித்துள்ளது.

போரால் பாதிக்கப்பட்ட ஈராக்கில் கூட இந்தியாவை விட பட்டினியால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. பட்டியில்லா நாடுகளின் பட்டியலில் ஈராக் 78 வது இடத்தை பிடித்துள்ளது. நமது பங்காளி நாடான பாகிஸ்தான் இந்தப் பட்டியலில் 106வது இடத்தைப் பிடித்துள்ளது.

2000வது ஆண்டிலிருந்ததைவிட தற்போது 27 சதவீதம் பட்டினி எண்ணிக்கை குறைந்துள்ளதாக கூறியுள்ள உலக உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனம், தற்போது உலகம் முழுவதும் 9 பேரில் ஒருவர் உணவில்லாமல் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.http://www.seithy.com/breifNews.php?newsID=192005&category=WorldNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.