Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுறாங்கனி பாடலின் சொந்தக்காரர் யார்? இளையராஜாவா? மனோகரனா?

Featured Replies

சுறாங்கனி பாடலின் சொந்தக்காரர் யார்? இளையராஜாவா? மனோகரனா? ஆதாரம் இதோ!

 

சுறாங்கனி பாடல் இலங்கை மற்றும் தமிழகம் மட்டுமன்றி இந்திய அழவிலேயே இளையோர் மத்தியில் பாரிய தாக்கத்தினைச் செலுத்திய ஒரு பாடலாகும். பல கல்லூரி மாணவர்களின் எவர்கிறீன் பாடலாகக் கூட இன்றும் இருந்துவருகிறது.

இந்த நிலையில் சுறாங்கனி பாடலுக்கு சொந்தக்காரர் யார்? அந்தப் பாடலின் முதலாவது சொந்த மொழி எது என்ற கேள்வி இப்பொழுது பலரிடையேயும் எழுகின்றது. அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை.

சுறாங்கனி பாடலின் சொந்தக்காரர் யார்? இளையராஜாவா? மனோகரனா? ஆதாரம் இதோ!

ஏனெனில் சுறாங்கனி பாடல் தமிழ், சிங்களம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய பல மொழிகளில் காலம் காலமாக பல இசையமைப்பாளர்களால் மீளிசைப்படுத்தப்பட்டு பல பாடகர்களால் பாடப்பட்டுள்ளது.

சுறாங்கனி பாடலுக்கு சொந்தக்காரர் சிலோன் மனோகர் எனப்படும் பொப் இசைச் சக்கரவர்த்தி ஏ.இ மனோகரனா? அல்லது இசைஞானி இளையராஜாவா? முதன் முதலாக சிங்களத்தில் பாடப்பட்டதா? அல்லது தமிழில் பாடப்பட்டதா?

உண்மையில் இந்தப் பாடலின் சொந்தக்காரர், தமிழரான பொப் இசைச் சக்கரவர்த்தி ஏ.இ மனோகரன் தான். 1972ஆம் ஆணடு சிங்களத்தில் தானே பாடலை எழுதி தானே இசையும் அமைத்து தானே இந்தப்பாடலைப் பாடியிருந்தார்.

சுறாங்கனி பாடலின் சொந்தக்காரர் யார்? இளையராஜாவா? மனோகரனா? ஆதாரம் இதோ!

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பாடல் வெளியான சில நாட்களைலேயே அனைவர் மத்தியிலும் பெரிய வரவேற்பினைப் பெற்றுவிட்டது. முக்கியமாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மாபெரும் இரசிகர்களாக இருந்த தமிழகத்தைச் சேர்ந்தோர் இந்தச் சிங்கள பைலாப் பாடலால் கட்டுண்டுபோயினர்.

தமிழ் திரை இசையின் ஜாம்பவான்களில் ஒருவரான ராகதேவன் இசைஞானி இளையராஜாவும் இதற்கு விதிவிலக்கானவரில்லை. 1977ஆம் ஆண்டு வெளியான ’அவர் எனக்கே சொந்தம்’ என்ற திரைப்படத்தில் சுறாங்கனி பாடலின் முதலாவது தமிழ் வடிவம் வெளியானது. பாடலின் சொந்தக்காரரான ஏ.இ மனோகரனின் அனுமதியுடன் இசைஞானி இளையராஜா குறித்த பாடலுக்கான தமிழ் வடிவத்தைக் கொடுத்து குறித்த திரைப்படத்தில் இணைத்திருந்தார்.

சுறாங்கனி பாடலின் சொந்தக்காரர் யார்? இளையராஜாவா? மனோகரனா? ஆதாரம் இதோ!

ஜெய்சங்கர் மற்றும் ஸ்ரீவித்தியா ஆகியோரின் நடிப்பில் வெளியான குறித்த திரைப்படத்தில் மலேசியா வாசுதேவன் மற்றும் ரேணுகா ஆகியோர் குறித்த பாடலினைப் பாடியிருந்தனர். அன்றிலிருந்தே சுறாங்கனி இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பினைப் பெற்றதோடு ஏனைய மொழிகளிலும் வெளியானது. அண்மைக் காலத்தில்கூட சுறாங்கனி பாடல் மீளமைத்து சில திரைப்படங்களில் சேர்க்கப்பட்டுள்ளது.

சுறாங்கனி பாடலின் சொந்தக்காரர் யார்? இளையராஜாவா? மனோகரனா? ஆதாரம் இதோ!

ஆக இலங்கையைச் சேர்ந்த தமிழரான பொப் இசைச் சக்கரவர்த்தியினால் முதன்முதலாக சிங்களத்தில் பாடப்பட்டதே இந்தப் பாடல். இந்தப் பாடலினைத் தொடர்ந்துதான் 1973ஆம் ஆண்டளவில் யாழ்ப்பாணத்தில் வைத்து ஏ.இ மனோகரனுக்கு பொப் இசைச் சக்கரவர்த்தி என்ற பட்டம் சூட்டப்பட்டது.

இசைஞானி இளையராஜாவினால் முதன்முதலில் தமிழில் மீளமைக்கப்பட்ட சுறாங்கனி பாடலின் காணொளியினை இங்கே இணைக்கிறோம்.

 

https://news.ibctamil.com/ta/celeberities/surangani-manokaran-ilaiyaraja

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.