Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தீர்வுகளை இனவாதிகளே குழப்புகிறார்கள் : தீபாவளி விழாவில் ஜனாதிபதி

Featured Replies

தேரர்­க­ளை­ சிலர் தவ­றாக வழி நடத்­தல்

 
தேரர்­க­ளை­ சிலர்  தவ­றாக வழி நடத்­தல்
 

மகா­நா­யக்க தேரர்­க­ளை­யும்- பௌத்த பீடங்­க­ளை­யும் ஒரு குழு தவ­றாக வழி­ந­டத்­து­கின்­றது, புதிய அர­ச­மைப்­புத் தொடர்­பில் அவர்­க­ளுக்குத் தவ­றான தக­வல்­கள் வழங்­கப்­ப­டு­கின்­றன என்று நேற்­றுத் தெரி­வித்­தார் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன.

நாங்­கள் அதி­கா­ரப் பகிர்வு என்ற கோட்­பாட்­டுக்கு அமைய பிள­வு­ப­டாத நாட்­டுக்­குள் தீர்­வைக் காண்­ப­தில் உறு­தி­யாக உள்­ளோம். நாங்­கள் அதி­கா­ரப் பகிர்வுக் கோட்­பாட்டை ஏற்­க­வேண்­டும் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

தேசிய தீபா­வளி தின நிகழ்வு அரச தலை­வர் மாளி­கை­யில் நேற்­றி­ரவு நடை­பெற்­றது. இங்கு உரை­யாற்­றும்­போதே அரச தலை­வர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டார்.

புதிய அர­ச­மைப்­புத் தேவை­யில்லை. இந்த முயற்­சி­களை உட­ன­டி­யாக நிறுத்­த­வும். தற்­போது இருக்­கின்ற அர­ச­மைப்­பி­லும் திருத்­தங்­க­ளும் தேவை­யில்லை.

1978ஆம் ஆண்டு கொண்­டு­வ­ரப்­பட்ட – தற்­போது நடை­மு­றை­யில் இருக்­கின்ற அர­ச­மைப்பே அப்­ப­டியே தொட­ரட்­டும் என்று மல்­வத்த, அஸ்­கி­ரிய பீடங்­க­ளின் இணைந்த காரக மகா சங்க சபா உறுப்­பி­னர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

அவர்­கள் தமது முடிவை நேற்று முன்­தி­னம் கூடி ஆராய்ந்த பின்­னர் வெளி­யிட்­டி­ருந்­த­னர்.
இவ்­வா­றா­ன­தொரு நிலை­யி­லேயே அரச தலை­வர் மைத்­தி­ரி­பால நேற்று இரவு நடை­பெற்ற நிகழ்­வில் மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்­ளார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

வடக்­கில் ஒரு பகுதி மக்­கள் தென்­ப­குதி மக்­க­ளைத் துவே­சத்­து­டன் பார்க்­கின்­ற­னர். தெற்­கில் உள்ள ஒரு பகுதி மக்­க­ளும் வடக்கு மக்­களை துவே­சத்­து­டன் பார்க்­கின்­ற­னர். இந்த முரண்­பாடு களை­யப்­ப­ட­வேண்­டும்.

இன்று (நேற்று) வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கம், யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளைச் சந்­தித்­தேன். அவர்­கள் முன்­வைத்த கோரிக்கை முக்­கி­யத்­து­வ­மா­னது. பேசு­வ­தன் ஊடா­கத் தீர்க்­க­லாம் என்று கூறி­னேன்.

தற்­போது வெளி­வந்­துள்ள இடைக்­கால அறிக்கை புதிய அர­ச­மைப்­பைத் தயா­ரிப்­ப­தற்­கான ஆரம்­பக்­கட்ட ஆவ­ணம். அத­னைப் பிரச்­சி­னைக்­கு­ரி­ய­தாக்­கு­வ­தில் அர்த்­த­மில்லை.

நான் வெளி­நாட்­டுக்­குப் பணிந்து அர­ச­மைப்­பைத் தயா­ரிப்­ப­தாக சிலர் குற்­றம் சுமத்­து­கின்­ற­னர். செல்வா பண்­டா-­ ஒப்­பந்­தம், செல்­வா-­டட்லி ஒப்­பந்­தங்­கள் கடந்த காலங்­க­ளில் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தது.

இவை எல்­லாம் வெளி­நாட்டு அழுத்­தத்­துக்கு அடி­ப­ணிந்தா மேற்­கொள்­ளப்­பட்­டது என்­பதை இங்கே கேட்க விரும்­பு­கின்­றேன் – -என்­றார்.

http://newuthayan.com/story/38559.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

தீர்வுகளை இனவாதிகளே குழப்புகிறார்கள் : தீபாவளி விழாவில் ஜனாதிபதி

தீர்வுகளை இனவாதிகளே குழப்புகிறார்கள் : தீபாவளி விழாவில் ஜனாதிபதி

பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற நடவடிக்கையெடுக்கும் போது இனவாதிகள் அதனை குழப்புகின்றனர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மாளிகையில் நேற்று மாலை நடைபெற்ற தீபாவளி விழா நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நல்லிணக்கத்தை இலக்காக கொண்டு நாங்கள் பலமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து செல்லும் பாதையில் பல்வேறு தவறான கருத்துக்களை ஒரு சில இனவாத சக்திகள் வெளிப்படுத்தி வருகின்றது. நாம் கடந்த மூன்று தசாப்தகாலம் நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தில் எமது சமூகத்தில் ஒற்றுமை இல்லாமல் போனது மட்டுமல்லாது எமது நாட்டின் பொருளாதாரமும் வீழ்ச்சி கண்டது. சர்வதேச நாடுகளுடனான எமது நட்புறவில் வீழ்ச்சிகண்டது. அவ்வாறான நிலையில் அனைத்தையும் தோற்கடித்து சகல மக்களையும் ஒரு அடையாளத்தில் கொண்டு நாட்டினை கட்டியெழுப்ப வேண்டிய தேவை எமக்கு உள்ளது.
இதேவேளை கடந்த காலங்களில் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்த சிவாஜிலிங்கம் உள்ளிட்ட சிலர் இன்று (நேற்று) என்னுடன் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர். எனக்கு எதிராக யாழ்ப்பணத்தில் இவர்கள் போராட்டம் நடத்திய போது அவர்களிடம் சென்று என்னுடன் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்தேன். அதற்கமையவே அவர்கள் ஜனாதிபதி செயலகத்தில் என்னை வந்து சந்தித்தனர். அதேபோல் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிலரும் என்னை சந்தித்தனர். இந்த இரு சாராரும் பிரச்சினைகள் குறித்து என்னுடன் கலந்துரையாடினர் . அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். இதில் சில விடயங்களை எம்மால் நிறைவேற்ற முடியும்இ ஆனால் சில விடயங்களை எம்மால் நிறைவேற்ற இயலாது. ஆனால் இவர்கள் என்னுடன் வந்து கலந்துரையாடி அவர்களின் நிலைப்பட்டினை என்னிடம் தெரிவித்தனர். இது வரவேற்கத்தக்க ஒன்றாகவே நான் கருத்துகின்றேன்.
போதுவாகவே தென்னிலங்கையில் வடக்கு மக்கள் குறித்து தவறான கண்ணோட்டமே உள்ளது. அதேபோல் வடக்கிலும் இந்த நிலைப்பாடே உள்ளது. குழப்பங்களை ஏற்படுத்தும் தரப்பாகவும்இ குழப்பக்காரர்களாகவும் சித்தரிக்கப்படுகின்றனர். ஆனால் இவ்வாறான கலந்துரையாடல்களை முன்னெடுத்த பின்னர் நாம் ஒவ்வொருவரும் எமது நிலைப்பாடுகளை சரியாக விளங்கிக்கொள்ள கூடியதாக உள்ளது.
அரசாங்கமாக நாம் செயற்படும் போது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்கும் பயணத்தில் நாட்டில் ஐக்கியத்தை உருவாக்கவும்இ மக்களின் தீர்வு ஒன்றை பெற்றுக்கொள்ளவும் மக்கள் மத்தியில் சகவாழ்வினை உருவாக்க இ எந்த வகையிலும் நாடு பிளவுபடாதுஇ முரண்பாடுகள் அதிகரிக்காது அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் கொள்கையில் நாட்டினுள் அமைதியினை உருவாக்கும் நகர்வில் தவறான கருத்துக்களை சிலர் மக்கள் மத்தியில் முன்வைத்து வருகின்றனர். மக்களை தவறான பக்கம் கொண்டுசெல்ல பொய்யான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர் . மாநாயக தேரர்களுக்கு தவறான கருத்துக்களை முன்வைத்து அவர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அத்துடன் இந்த அரசியலமைப்பு சர்வதேச சூழ்ச்சியென கூறுகின்றனர். சர்வதேசம் சொல்வதற்கு அமையவே இங்கு அரசியல் அமைப்பு உருவாக்கப்படுவதாகவும் கூறுகின்றனர். ஆனால் நான் ஒன்றை கேட்க விரும்புகின்றேன் 1957ஆம் ஆண்டுகளில் எஸ்.டபிள்யூ ஆர்.டி பண்டாரநாயக செல்வநாயகத்துடன் பேச்சுவாரத்தை ஒன்றை முன்னெடுத்தார்இ அன்று அதிகார பகிர்வு தொடர்பில் உடன்படிக்கை ஒன்றை செய்துகொள்ள முயன்ற நேரத்தில் இவர்கள் சர்வதேச சூழ்ச்சியிலா சிக்கியிருந்தனர் ?
இந்த நாட்டில் யுத்தம் ஒன்று உருவாக்க விடுதலைப்புலிகள் உருவாக பிரபாகரன் உருவாக சர்வதேச சூழ்ச்சியா கரணம்? தேவையான நேரத்தில் தேவையான தீர்வு ஒன்றினை பெற்றுக்கொள்ள சரியான தீர்மானம் எடுக்காதமையே இந்த முரண்பாடுகள் ஏற்பட்டன. பிரபாகரன் உருவாகவும் விடுதலைப்புலிகள் உருவாகவும் அப்போதைய தவறான அரசியல் தீர்மானங்களே காரணமாகும். மீண்டும் ஒரு யுத்தத்தினை தவிர்க்கவும் பிரபாகரன் போன்று இன்னொரு பயங்கரவாதி உருவாகாது இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை அறிவு மட்டத்தில் சிந்தித்து தெளிவாக தீமானம் எடுக்க வேண்டும். அனைத்து தரப்பினரும் ஒன்றாக அமர்ந்து ஒரு அறையில் இருந்து கலந்துரையாடி தீர்மானம் எடுக்க முடியும்இ சமூக பிரச்சினைகள்இ மக்கள் மத்தியில் பிரதான பிரச்சினைகள் என்ன என்பதை நாம் கண்டறிய இது சாத்தியமாக அமையும். அதுவே சமூக அமைதிக்கும் ஒற்றுமைக்கும் தீர்வாக அமையும். உண்மைகளை சரியாக கண்டறிய வேண்டும். நாம் இன்னும் அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்கவில்லை. கட்சிகளின் கருத்துக்களையே நாம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளோம். இதில் முக்கியமான காரணிகளை கருத்தில் கொண்டு அதன் பின்னர் அனைவரும் ஏற்றுகொள்ளக் கூடிய ஒரு அரசியல் அமைப்பினை உருவாக்க முடியும். ஆனால் இதனை வேறு விதத்தில் சிலர் கையில் எடுத்துக்கொண்டு மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களை பரப்பி அரசாங்கத்தை குழப்ப முயற்சித்து வருகின்றனர்.
இத்தனை காலமாக தீர்வை பெற்றுக்கொள்ள முயதித்த போதும் இனவாத குழப்பகாரர்கள் காரணமாகவே நாட்டில் யுத்தம் ஒன்று உருவாகியது. ஆகவே இப்போதாவது நாம் பிரச்சினைகளை சரியாக விளங்க்கிக்கொண்டு தீர்வை நோக்கி பயணிக்க வேண்டும். நாம் மக்களின் எதிர்காலத்தை காலத்தை கருத்தில் கொண்டு யுத்தம் ஒன்று உருவாவதை தடுக்கும் வகையில் நாம் தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும்.
எமது நாட்டின் பிரதான பிரச்சினைகளை தீர்க்கும் நகர்வில் பிரதானமாக இனங்கள் இடையில் சமாதானத்தை கட்டியெழுப்ப வேண்டிய தேவை உள்ளது. அதன் மூலமாக பலமிக்க சமுதாயம் ஒன்றினை நாம் உருவாக்க வேண்டும். சகல மத கோட்பாடுகளிலும் வெளிப்படுத்துவது சமூகத்தை சரியாக கட்டியெழுப்ப வேண்டும் என்பதையேயாகும். ஆகவே அரசாங்கமாக செயற்படும் போதும் நாம் மத கோட்பாடுகள் எமக்கு காட்டியுள்ள வழிகாட்டலை பின்பற்றி அதன் மூலம் இலங்கையின் கலாசாரத்தை தெளிவாக விளங்கிக்கொண்டு அதற்கமைய செயற்பட வேண்டிய தேவை உள்ளது. என அவர் தெரிவித்துள்ளார். -(3)

http://www.samakalam.com

 

  • கருத்துக்கள உறவுகள்

தீர்வா..அடப்பாவிகளா..

ஒரு யோசனை.. அதையே உருப்படியா பரிசீலிக்க வக்கில்ல..

சிங்கள பெளத்த இனவாதிகளை அடக்க.. பயங்கரவாதிகளை அடக்கி ஒடுக்க உதவினவையை.. ஏன் உதவிக்க அழைக்க மனசு வரல்லையாம்.. இவருக்கு..??!

ஏன்னா இனவாதத்தின் மூலஸ்தானமே.... சிங்கள ஆட்சிப்பீடம் தான்.  :rolleyes:tw_angry:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

ஜனாதிபதி மாளிகையில் நடந்த தீபாவளி விழா : (படங்கள்)

 

 

ஜனாதிபதி மாளிகையில் நடந்த தீபாவளி விழா : (படங்கள்)

ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற தீபாவளி விழா நேற்று மாலை கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைமத்திரிபால சிறிசேன , பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டிருந்தனர். -(3)01040710

http://www.samakalam.com

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, நவீனன் said:

தேசிய தீபா­வளி தின நிகழ்வு

அதென்னப்பா "தேசிய தீபாவளி" .....இப்ப தான் நான் கேள்விப்படுகிறேன்...

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, putthan said:

அதென்னப்பா "தேசிய தீபாவளி" .....இப்ப தான் நான் கேள்விப்படுகிறேன்...

எஜமானன் காலடியில் எல்லாரும் கூடி இருந்து நக்கினா.. அது தேசியம்.

அதே தனியத் தனிய போய் நக்கினா.. சுய தேவை வசியம். tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.